Tuesday, August 23, 2016
பத்திரிக்கை சுதந்திரம்..
பத்திரிக்கையாளர்கள் கண்டனம்..
நேற்றைய நிகழ்வை சுட்டிகாட்டி ஊடகவியலாளர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.. நல்லது..
ஏதோ நேற்றும் மட்டும் நடந்த நிகழ்வாக இதை ஒதுக்கிவைக்கும் செயலை முதலில் கண்டிக்கிறேன் .. ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தொடர்ந்து ஊடகவியலாளர்கள், தங்கள் தொடர்ந்து பணி செய்ய இயலாதவாறு தொந்தரவுகளை தருவதென்பது தொடர்கதைதானே பின் ஏன் நேற்றைய நிகழ்வை மட்டும் பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது..
..
பத்திரிக்கையாளர்களுக்கு இதொன்றும் புதிதல்ல ஆனாலும் தொடர்ந்து ஜெயலலிதா ஆதரவு நிலையை எடுக்கவேண்டி வந்திருக்கிறது .. முதலாளிகளின் சொல்படி நடக்கவேண்டி வந்திருக்கிறது.. தொடர்ந்து அவமதித்தாலும் எதிர்க்க துணிவற்று இருந்தார்கள் .. அவதூறு வழக்குகள் பின்தொடருமென்ற பயமும் காரணம்..
ஜெயலலிதாவின் ஆணவபோக்கை இவர்கள் இந்த அறிக்கையில் கூட கண்டிக்கவில்லை..
மேம்போக்காக கண்டனத்தை பதிவு செய்கிறார்கள்.. உறுப்பினர்களின் கோபத்தை கணக்கில் கொண்டு சங்கம் ..
நோகாமல் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்..
..
கலைஞரோ ஸ்டாலினோ பத்திரிக்கையாளர்ரளை புறக்கணித்ததாகவோ அல்லது அவர்கள் உரிமையில் தலையிட்டதாகவோ சொல்லமுடியுமா..
தொடர்ந்து திமுக செய்திகளை இரட்டடிப்பு செய்தும் திமுகவை தொடர்ந்து விமர்சித்தும் (ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும்) வந்தாலும் ஊடகவியலாளர்களை மதிக்கிற பண்பை கைவிட்டதில்லை.. ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமாக நடுநிலையோடு செயல்படவேண்டியவர்களின் செயல்கள் சரியாக இருக்கிறதா.. இதை இந்த தருணத்தில் ஊடகவியலாளர்கள்/பத்திரிக்கையாளர்கள் எண்ணிப்பார்பது அவசியம்..
..
இதுபோன்ற ஒரு அராஜக பாசிச சர்வாதிகார தான்தோன்றித்தனத்தோடு செயல்படும் ஆட்சியை இதுவரை விடுதலை இந்தியா கண்டதில்லை..
தற்புகழ்ச்சிகளும் புகழ்மாலை பஜனைகளும் ஆட்சியாளர்களுக்கு அழகில்லையென ஊடகங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.. சரியானதை சரியென்றும் தவறென்பதை துணிவோடு எதிர்க்கவும் செய்து .. தன் ஜனநாயக கடமையை சரியாக செய்தால் ..
இந்த கண்டனத்திற்கு அர்த்தம் உண்டு..
இல்லையெனில்..
குப்பைத்தொட்டிக்கு செல்லும் காகிதம் தான்
பத்திரிக்கை.. waste paper
..
ஆலஞ்சி மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment