Monday, August 29, 2016
ஜெயலலிதா எனும் மாயபிம்பம்
காவிரி பிரச்சனையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை கலைஞர்..
..
ஜெயலலிதா எந்த விடயத்திலும் /பிரச்சனையிலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டமாட்டார்.. ஆணவம் அகம்பாவம் தான்தோன்றிதனமாக நடக்கிறார் என்பதைவிட.. தனக்கு எல்லாம் தெரியும் என்று நம்பவைக்க முயற்சிக்கிறார் என்பதை விட..
உண்மையான காரணம் வேறு இருக்கிறது..
இதை எதிர்கட்சிகள் ஏன் திமுக கூட பேசுவதில்லை..
..
முக்கியமான பிரச்சனையில் கூட ஜெயலலிதா அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதில்லை.. எந்த பிரச்சனை/ விடயமானாலும் கலந்துக்கொள்ளும் கட்சிகள்/அமைப்புகள் அந்த விடயத்தில் அனுபவமுள்ள திறமையானவர்களை, புள்ளிவிபரத்தோடு பேசகூடிய நபர்களை தான் அனுப்புவார்கள்.. நதி நீரென்று வைத்துக்கொண்டால் திமுக துரைமுருகனை தான் அனுப்பும் அதே பிற கட்சிகளும் அதில் ஆரம்பம் முதலே பங்கெடுக்கிற எல்லா விசயங்களையும் விரல்நுனியில் வைத்திருக்கிற சாதகபாதகங்களை விரிவாக அலச கூடியவர்களை தான் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அனுப்பும்..
எந்தவித அடிப்படை அறிவு கூட இல்லாமல் அடுத்தவர் எழுதிக்கொடுப்பதை படித்துவிட்டு துறை செயலர்களின் கருத்தை அப்படியே மொழிகிறவராகதான் ஜெயலலிதா இருப்பார் அவரால் பிற கட்சியினரின் கேள்விகளுக்கோ கருத்துகளுக்கோ ஆலோசனைகளுக்கோ பதில் சொல்லவோ, மறுத்து பதிலளிக்கவோ தெரியாது..
அவர் மற்றவர்கள் எழுதி தருவதை படிக்கிற கூட்டத்தை சேர்ந்தவர் சுயமில்லாதவர்..
..
ஜெயலலிதா என்கிற மாய பிம்பம் பாசிசம் பேசுவோரால் கட்டமைக்கப்பட்டது அவர்களுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டார் அதனால் அவரை கொண்டுநடக்கிறார்கள்.. சோ வார்த்தையில் சொல்லவேண்டுமானால் ராஜாஜிக்கு பிறகு #வராதுவந்த_கண்மணி அவ்வளவு தான் ஜெயலலிதாவின் தகுதி..
..
பொதுக்கூட்டங்களிலேயே அடுத்தவர் எழுதிக்கொடுப்பதை பேசியும் சட்டமன்றத்தில் திமுகவினரோடு விவாதிக்க பயந்து மொத்தமாக வெளியேற்றிவிட்டு தனக்குதானே பேசுவதும் தான் ஜெயலலிதா அறிந்தது..
ஜெயலலிதா மிகப்பெரிய அறிவார்ந்தவர் intelligent என ஒரு மாயையை, இரும்புமனுசி என்ற போலியான தோற்றத்தை மீடியாக்கள் உருவாக்கியதே தவிர உண்மையில் பேசவோ செயல்படவோ சரியானதை அறிந்து விளக்கவோ சிறிதும் திறமையில்லாதவர்..
மொத்தத்தில் #தகுதியில்லாதவர்..
..
#காற்றடைத்த பலூன்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment