Friday, August 26, 2016

பாரிவேந்தர்

பழைய சாராயவியாபாரி கைது இப்படி செய்தி ஏதாவது போடுவார்களா என பார்த்தேன். கல்வி வள்ளல்..? கல்வியாளர் கைது என ஊடகங்கள் செய்தி.. சரி.. இந்த பச்சைமுத்துவை பாரிவேந்தர் அளவுக்கு உயர்த்தியவர்களில் கல்வி மீது மோகம் கொண்டவர்களின் பங்கு சாதாரணமானதில்லை.. தான் கேட்ட படிப்பு வேண்டுமென்பதற்காக கேட்டதை கொடுக்க தயாரானது அவரின் அபரீத வளர்ச்சிக்கு காரணமானது.. .. அடியாட்களை சாராயம் காய்ச்சியவர்களையெல்லாம் கல்வியாளர் தகுதிக்கு உயர்த்தியதில் எம்ஜிஆருக்கு பெரும்பங்குண்டு.. தொழில்கல்வியை வியாபாரமாக்கிய பெருமை அவரையே சாரும்.. .. யார் இந்த பச்சைமுத்து.. மிகவும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஒருவர் மிகப்பெரிய கல்வியாளராக ஆக்கிய பெருமை நடுத்தர குடும்பத்தினரையே சாரும்.. கேட்டதை கடன்வாங்கியாவது கொடுத்து தங்கள் குழந்தைகளை படிக்கவைக்கவேண்டுமென்ற வெறி.. சாதாரணமானவனை .. இன்றைக்கு நிறுத்தியிருக்கிற இடம்.. இன்னும் மர்ம முடிச்சுக்கள் அவிழாமல் இருக்க இவர் செய்யபோகும் தந்திரங்களும் இலைமறைவு செயல்களும் மீண்டும் இவரை புனிதர் அளவிற்கு கொண்டுவராமல் இருக்கவேண்டும்.. .. ஊடகம் என்ற மிகப்பெரிய பலம் அதைக்கொண்டு ஆளும்தரப்பை சரிசெய்ய முடியுமென்கிற நிலைதான் இப்போதுவரை இருக்கிறது.. சிறைக்கு செல்லவேண்டியவர் .. உயர்தர சிகிச்சை என்ற பெயரில் சொகுசாக இருக்கலாம்.. வழக்கின் பின்னணியோ அல்லது இவர் மீதும் SRM கல்வி நிறுவனம் மீதும் தொடர்ந்து புகார்களும் குற்றசாட்டுகளும் வந்தபோதும்.. இதுவரை அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாத அரசும் .. நீதிமன்ற தலையீட்டிற்கு பிறகே கைது வரை வந்திருக்கிறார்கள்.. .. இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.. பள்ளி கல்லூரி அளவில் இவர்களும் கல்வியை வியாபாரமாக்கி மக்களின் ஆசையை பேராசை காட்டி படித்தவுடன் வேலையென்ற மாயதோற்றத்தை உருவாக்கி மக்களின் ஏமாளித்தனத்தை/அறியாமையை பயன்படுத்தி பணம் பார்க்கிறவர்கள்.. நிறைய பச்சைமுத்துக்கள் பாரிவேந்தர்களாக உலாவந்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.. .. சாதாரண ஆசிரியர் 15000 கோடிக்கு அதிபதியான கதை.. சாதாரணமான விடயம்தான் ஏனெனில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேரப்பது குற்றமா என கேட்கும் #நீதி..? இருக்கும் நாட்டில் பச்சைமுத்துக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.. #சாமானியனுக்கு_கல்விதந்ததெய்வம் …என போஸ்டர் வரலாம்.. #கல்வியை_காசாக்கதெரிந்தவன் .. .. ..

No comments:

Post a Comment