Wednesday, August 10, 2016
முரசொலி
#முரசொலி..
ஒரு நாளிதழ் எழுபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து வருவதென்பது சாதாரணமான காரியமல்ல..
அதுவும் தொடர்ந்து திராவிட கொள்கைகளை தாங்கி வருவேண்டுமெனில் அதில் நிச்சயம் ஈர்ப்பு வேண்டும் .. ஆம் கலைஞரின் எழுத்துக்கிருந்த வசியம் தமிழர்களை தொடர்ந்து வாசிக்க செய்தது..
மிகப்பெரிய எண்ணிக்கையிலோ அல்லது பெரிய வருமானத்தையோ தரும் ஜனரஞ்சக பத்திரிக்கையல்ல விளம்பரங்களால் பக்கத்தை நிரப்பி காசு பார்க்கவில்லை.. ஒவ்வொரு வரியும் கொள்கை,தமிழ், தமிழர்நலன் சமூகநீதியென சமூகத்தின் மீதான அக்கறையை கொண்டு நடந்தது.
..
இப்போது போல் முன்பெல்லாம் வலைதளங்களை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்வதுபோல இயக்கம்/கட்சி சார்ந்தவிடயங்களை தெரிந்துக்கொள்ள முரசொலிக்காக காத்திருந்த காலம்..
கலைஞர் என்ன எழுதபோகிறார் /சொல்லபோகிறார் என எதிர்பார்ப்போடு முரசொலியை வாங்கிய காலம்.. கவிதை கட்டுரை கருத்தென கலைஞரின் வரிகள் மயக்கியகாலம்..
எங்களுர் படிப்பகத்திற்கு சிலநாட்கள் மதியத்திற்கு பிறகுதான் வரும் சிலநாட்கள் வராது மறுநாள் சேர்த்துவரும்.. அப்போது கூட அதை படிக்கிறபோது புதிதாய் செய்தியை தருகிறதைப்போல் இருக்கும் அதுதான் முரசொலியின் பலம்..
..
திருவாரூரில் கையெழுத்து பிரதியாக தொடங்கி கட்சியின் திராவிட இயக்கத்தின் பிரதான நாளேடாக வந்திருக்கிறதென்றால் அது கலைஞர் என்ற மனிதரின் எழுத்தும் செயலும் ஆற்றலும் தான்..
இப்போது இணையத்தில் வந்துவிடுகிறது என்றாலும் காத்திருந்து வாங்கிப்படித்த போது இருந்த மயக்கம் இப்போதில்லை..
..
கட்சி பத்திரிக்கை என்பதை தாண்டி ஜனரஞ்சமாக செயல்படாமல் போனது இழப்பை தந்திருக்கும் ஆனாலும் முரசொலி மீதான பார்வை கம்பீரமாக இருக்கிறது பாருங்கள் அது ஜனரஞ்சமாக்கப்பட்டிருந்தால் குறைந்து போயிருக்கும்.. தமிழர் வாழ்வில் ஒரு குறிப்பிட்டளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. கடிமையாக உழைத்தால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் எழுத்து கம்பீரமாக ,ஈர்க்ககூடியதாக இருந்தால் வெற்றிகரமாக வலம்வரமுடியுமென்பதற்கு முரசொலி சாட்சியம் வகிக்கிறது..
..
#முரசொலி_தமிழர்களின்கம்பீரம்..
..
ஆலஞ்சி.மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment