Thursday, August 25, 2016
காமராஜரும் பெரியாரும்
காமராஜர்
திராவிடம் என்ன செய்து என்போரே..குடியாத்தம் அரசியல் தெரியுமா ..
1953 ல் குடியாத்தம் இடைதேர்தலில் தந்தை பெரியார் காமராஜரை குடியாத்தத்தில் போட்டியிட சொல்கிறார்..பெரியாரின் நோக்கம் பார்பனர் கைகளிலிருந்த அதிகாரத்தை பறிக்கவேண்டும் அதற்கு காமராஜர் தான் சரியான கருவியென தீர்மானித்து செயல்படுகிறார்.. அப்போது காமராஜர் சொன்னார் நான் சாதாரண மிகவும் பிற்படுத்த பிரிவை சார்ந்தவன் என் குடியாத்தத்தில் நிற்க சொல்கிறீர்களே அங்கே முதலியார்களும் முஸ்லீம்களும்தானே அதிகமிருக்கிறார்கள் என தயக்கம் காட்டுகிறார்.. உன்னை எப்படி ஜெயிக்க வைக்கவேண்டுமென்று எனக்கு தெரியும்..எனச்சொல்லி தமிழர்கள் அனைவரும் காமராஜரை ஆதரியுங்கள் என்கிறார்..
..
அறிஞர் அண்ணா வும் ஒரு அறிக்கைவிடுகிறார் குணாளா மணாளா குலக்கொழுந்தே சென்று வா குடியாத்தம் வென்று வா கோட்டைக்கு .. திமுக தொண்டர்கள் காமராஜரின் வெற்றிக்கு பாடுபடவேண்டுமென கேட்டுக்கொண்டார்
காமராஜர் வெற்றிப்பெறுகிறார்..
உடனே காமராஜர் பெரியாரை சந்தித்து எதில் முதல் கையெழுத்து போடவேண்டுமென கேட்கிறார்..
அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர்
யூ.என். தேவரைபார்த்து கேட்கவில்லை... பெரியார் ஒரு தாழ்த்தப்பட்டவனை இந்து அறநிலையதுறை அமைச்சராக்கு என்றார்..
அப்போதுதான் பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவர் அறநிலைய துறை அமைச்சரானார்..
அப்போது அண்ணா பரமேஸ்வரன் வருகை கண்டு
தில்லை நடராசரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் பதறும் காட்சிக்கண்டேன் அந்த மாட்சி கண்டேன் ..என்றார்..
..
அப்போது டாக்டர் அம்பேத்கர் சொன்னார் என் இனத்திலே பிறந்தவனை குளத்தில் குளிக்கவும் விடமாட்டேன் என்கிறான் குனிந்து அள்ளி தண்ணி அள்ளி குடிக்கவும் விட மாட்டேன் என்கிறான்.. பெரியார் பிறந்த மண்ணில் தான் என் இனத்தவன் கடவுளின் மூலவிக்ரகத்துக்குள்ளே போகும் அதிகாரத்தை பெற்றான் என்றார்..
..
பெரியாரை இன்றைக்கும் சிலர் வெறுக்கிறார்கள் என்றால் காரணம் புரியுமே ஆனால் அந்த பெருங்கிழவன் பெற்று தந்த உரிமைகளை அனுபவித்துக்கொண்டே பெரியார் இல்லாவிட்டால் நாங்கள் முன்னேறி இருக்கவே முடியாதா என்கிறார்கள்..உ.பி.யிலும் குஜராத்திலும் பீகாரிலும் இருப்பதை போல இருந்திருப்பான்..
..
பெருந்தலைவரை சரியான நேரத்தில் கொண்டுவந்து பார்பனர்களின் அதிகார மையத்தையே ஆட்டிவைத்தவர் பெரியார்..
பெருந்தலைவரை உருவாக்கியதில் பெரும்பங்கு எங்கள் பெருங்கிழவனுக்குண்டு..
என்ன கிழித்தது திராவிடம்..
#புரிகிறதா..
..
ஆலஞ்சி.மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment