Thursday, August 4, 2016

பிராமணீயமும் எதிராளுமையும்

திராவிடர் கழகம் உயர்சாதி எதிர்ப்பு இயக்கம் என குருமூர்த்தி..ஆம் இப்போதுதான் சரியாக சொல்லியிருக்கிறார் .. தங்களை உயர்ஜாதி என்று சொல்வதன் மூலம் மற்றவர்களை வேறு தட்டில் வைக்கிறார்.. செத்த இயக்கம் என்று சொன்ன குரு இப்போது மிரளுவது புரிகிறதா.. .. இந்திய கட்டமைப்பே மதங்களை பிரித்து ஆள்வதால் அல்ல சாதிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதில் தாங்களே உயர்ந்தவர் எனும் பாசிசத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும்.. பிற சிறுபான்மையினர்கள் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான தோற்றத்தை இந்துத்துவா அமைப்புகள் உருவாக்கினாலும் அடிப்படையில் அவர்களின் பிரதான எதிராளுமைகள் எல்லா மதங்களிலுமுள்ள பிற்பட்டுப்பட்டவர்களே என்பது இதிலிருந்து விளங்கும்.. நான் ஏற்கனவே சொன்னதைப்போல பிராமணியம் மற்றும் பிறக்கானது பிறர் என்பது இங்கே பிராமணியர் அல்லாதோர் .. .. குஜராத்தில் தலித் எதிரான அரசியல் திருப்பி தாக்க தொடங்கியிருக்கும் குருவின் பேச்சில் உள்ள சூட்சமம் புரிந்துக்கொள்வது கொஞ்சம் கடினம் .. அதனால் தான் திராவிடர் கழகம் ஜாதிக்கெதிராக செயல்படவில்லையென்கிறார்.. அதில் உண்மை இருப்பதுபோல் தோன்றும்.. பிராமணர்களுக்கு எதிராக ஓட்டுமொத்த தமிழகம் கிளிர்தெழாமல் பார்த்துக்கொண்டதில் திராவிட இயக்கத்திற்குள் புகுந்த நாகம் மகோராவையே சாரும்.. முதல் முதலில் பிராமணர்களுக்கென்று சங்கம் வைத்துக்கொள்ள அனுமதி தந்தது இந்த மடையன்தான் ... .. திராவிடத்தின் வேர் பாசிசத்திற்கெதிரானதென்பதை உணர்ந்து அதற்கெதிராக செயல்பட தொடங்கியிருக்கிறார்கள் குரு போன்றவர்களின் பேச்சு அதைதான் காட்டுகிறது.. சாதிகளுக்கெதிராக திராவிட இயக்கம் போராடவிலலை என்பதிலிருந்தே புரிந்துக்கொள்ளமுடிகிறது.. பெரியாரின் சிந்தனை செயல் எல்லாமே பிராமணீயத்திற்கு எதிராக இருந்தது அதை இல்லாமல் செய்துவிட்டால் சாதீய கட்டமைப்பு தூள்தூளாகிவிடும் என சிந்தித்தார் அது தான் சரியானதும் கூட.. பிராமணீயத்தை உடைத்து உயர்ஜாதி என்பதை அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோல் இருந்து வந்த உயர்பதவிகளில் நம்மளவனையும் ஏற்ற நினைத்தார் அவர்களுக்கு மட்டுமே சலுகைகள் என்ற நிலையை உடைத்து அனைவருக்கும் சமமான நீதியை உரிமையை பெற்று தர நினைத்து சாதித்ததுதான் இவர்களின் புலம்பலுக்கு காரணம்.. .. இன்னும் இவர்கள் பல வழிகளில் வருவார்கள் இவர்களை தனிமைப்படுத்தினாலே இந்தியாவில் நிகழும் முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்ந்துவிடும் இன்னும் வரும் குருவின் புலம்பல்கள்.. .. ஆலஞ்சி.மன்சூர்..

No comments:

Post a Comment