Wednesday, August 10, 2016
அதிமுக
நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா
கவனஈர்ப்பு தீர்மானத்தில் .. உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்கவேண்டும் வழக்கிற்காக டெல்லி வரை செல்லவேண்டிருக்கிறது காலவிரயமும் செலவும் கூடுகிறது அலைகழிக்கபடுகிறார்கள் என பேசுகிறார் அதிமுக நவநீதன் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என பாடுகிறார்..
என்ன கொடுமை..
அதிமுகவிலிருந்து சென்ற ஒருவர் கூட மிக சிறப்பாக செயல்ப்பட்டதாக தெரியவில்லை திறமையில்லாதவர்களும் செயல்படமுடியாதவர்களையும் அனுப்பினால் தமிழகத்தின் மானம் கப்பலேறும் .. நவநீதன் பாடலை பாடியதைவிட அதை எம்ஜிஆர் பாடியதாக சொன்னதுதான் உச்சகட்ட நகைச்சுவை.. எம்ஜிஆருக்கு நெடும் வசனத்தை கூட ஒழுங்காக சொல்லதெரியாது இதில் பாடினாராம்..
..
அதிமுகவிலிருந்து அனுப்படுகிறவர்கள் மந்தையாடுகளைப்போல வழிநடத்தப்படுகிறார்கள் சுயமாகவோ அல்லது தனிதிறனுடனோ செயல்படதெரியாதவர்களாக இருப்பது மிகமோசமான விளைவுகளை தருகிறது..
அறிவில் சிறந்தவர்களையெல்லாம் அனுப்பி அழகுபார்த்த தமிழகம் இன்று அரைகுறைகளை அனுப்பிகிறது ..
..
இரா.செழியன் நாஞ்சிலார், மாறன் தொடங்கி சிவா வரை திமுகவினரின் பேச்சுக்களை கவனித்தால் எவ்வளவு அழகாக ஆணித்தரமாக உறுதியோடு செயல்பட்டிருக்கிறார்கள் என தெரியும்.. ஒரு முறை மாறன் நாடாளுமன்ற நூலகத்தில் சில குறிப்புகளை எடுக்கவேண்டிருந்தது அங்கு சென்ற போது
எல்.கே. அத்வானி அங்கு அமர்ந்து சில குறிப்புகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்.. நீங்களுமா என்ற போது சபையில் சரியான தகவலை தரவேண்டும் பிழையாகிப்போனால் நாளைய சமுதாயம் நம்மை எள்ளும் என்றார்.. அதிமுக உறுப்பினர்களுக்கு அங்கொரு நூலகம் இருப்பது தெரியுமா என்றே தெரியவில்லை..
..
சிறந்த நாடாளுமன்றவாதிகள் எல்லாம் திறமையாக செயல்படுபவர்களாக சபையின் கண்ணியத்திற்கு குறைவராமல் பார்த்துக்கொண்டார்கள்.. எல்லாவற்றையும் அறிந்து சரியானதை மட்டுமே பேசினார்கள் தங்கள் நிலம் இனம் மொழி சார்ந்த விடயங்களில் போராட்ட குணத்தோடு நேர்மையாக செயல்பட்டார்கள் .. வாததிறமையும் பன்முகதன்மையும் கொண்டவர்கள் சபையின் நெறி அறிந்தவர்கள்.. இப்போது கூட திமுகவின் சார்பில் செல்கிறவர்களை கவனியுங்கள் அவர்கள் செயல்பாடுகள் மெச்சதக்கதாய் இருக்கும் ..
ஆர்.எஸ் பாரதி கூட மிக அருமையாக பேசினார்..
..
இதெல்லாம் அதிமுக தலைமைக்கு தெரியாமல் இல்லை ஆனால் அவர் நல்ல அடிமைகளை மட்டுமே அனுப்புகிறார் அறிவில் சிறந்தவரை அனுப்பினால் தன் நிஜம் வெளுத்துவிடுமென அஞ்சுகிறார். . அதுசரி அறிவாளிக்கு அவர் எங்கே போவார் ..
#அறிவுடையோர்க்கு_அதிமுகவில்_என்னவேலை…
..
ஆலஞ்சி.மன்சூர்..
..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment