Tuesday, August 30, 2016

எறும்பு...

காலுக்கடியில் சிறு எறும்பு நகர்ந்துசெல்கிறது நசுக்க மனமில்லை.. நான் யார் அதை தொந்தரவு செய்து கொல்ல.. .. குளத்துநீரில் மரக்கிளையிலிருந்து தவறிவிழுந்தது எறும்பு.. எடுத்து தரையில் விட்டேன்.. அப்படியே சாகவிட ..மனமில்லை.. .. குளித்து முடித்து துண்டை கட்டி புறப்பட்டேன் இடுப்பில் கடித்து நன்றி சொன்னது எறும்பு திரும்பவும் பிடித்து தரையில் விட்டேன்.. .. டப்பாவில் போட்டுவைத்த வெல்லக்கட்டியை எறும்பு தின்றது.. எடுத்து வெளியே விட மனமில்லை.. .. அம்மா கட்டிதந்த சக்கரை பொங்கலில் எறும்பு கிடந்தது செத்து தூக்கியெறிந்தேன்.. சிறுது நேரத்தில் எறும்பு கூட்டம் பல்லக்கில் தூக்கி சென்றது.. .. எறும்பை போல் வாழவேண்டும்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment