Thursday, August 25, 2016
ஜெயலலிதாவின் நிஜமுகம்..
இன்னும் பக்குவமடையவில்லை
சபாநாயகர் தனபாலை நீக்கி பரிகாரம் தேடபோவதாக செய்திகள் வருகின்றன..
இந்தியாவே உற்றுநோக்கிய தினமானது மொத்த திமுக உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து உத்திரவிட்டார் தனபால்..
அதிகார வரம்புகளுக்குள் நின்றாலும் சபையின் தலைவர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது அவையின் மாண்பை கெடுத்துவிடும்..
..
ஜெயலலிதா இன்னும் சகிப்புதன்மையில்லாதவராக விமர்சனத்தை எதிர்கொள்ள அஞ்சுகிறவராக திரைமறைவில் செயலாற்றும் பேடித்தனத்தை உடையவராகதான் இருக்கிறார்.. இத்தனைகாலம் முதல்வராக இருந்தும் ஆணவம் அடங்காமை போன்ற செயல்களால் தானும் தலைகுனிந்து தமிழகத்தையும் தலைகுனிய வைத்திருக்கிறார்..
..
தனக்கு பிடிக்காத எதிர்மறையானவர்கள் மீது அவதூறு வழக்கு அவரை தரகுறைவாக தனக்கு விசுவாசமானவர்களை விட்டு பேசவைத்து ரசிப்பது போன்ற ஈனச்செயல்கள் இவரின் நிஜமுகத்தை நமக்கு காட்டுகிறது..
..
எம்ஜிஆர் ஆட்சியின் போது அதிமுக உறுப்பினர்கள் கலைஞரை கருணாநிதியென பேசியதற்காக கடிந்துக்கொண்டதும் சபாநாயகரிடம் சொல்லி கலைஞர் என அவைக்குறிப்பில் மாற்றியதும் அப்போதெல்லாம் சபையை மிக கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடத்தியதும் நாடறியும்.. இப்போதெல்லாம் மிகவும் புகழ்பெற்ற தமிழக சட்டசபை சிலரின் நடவடிக்கைகளால் நாறிப்போய் கிடக்கிறது..
..
சபை உறுப்பினர்களின் எண்ணங்களை பிரதிபலிக்க மக்களின் கோரிக்கைகள் தேவைகளை அவையில் எடுத்துரைக்க.. நாட்டிற்கும் மக்களுக்கும் கேடானவற்றை செய்யும் அரசை தட்டிகேட்க சரியானவையெனில் சேர்ந்து கரம்கோர்க்க .. ஆனால் நடப்பதென்ன ஜனநாயகத்தின் ஆணிவேரையே பிடிங்கி எறியும் நிலைக்கு வந்திருக்கிறது..
..
தொடர்ந்து ஊடகங்களும் மக்களும் .. நீதிமன்றமும் ஜெயலலிதாவின் உண்மையான முகத்தை தோலிரிப்பது கண்டு பலியை தனபால் மீது போட்டு தப்பிக்க முயற்சிக்கிறார்.. ஆனால்
நாடும் மக்களும் அறிவர் ..
இந்த ஜனநாயக படுகொலையின் பின்னில் ஜெயலலிதா இருப்பது..
..
என்னதான் உச்சத்தில் நின்று ஆடினால்..
ஆட்டம் பிழையானால் வீழநேரிடும்..
..
#வீழ்ந்துபோவார்
..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment