Thursday, August 25, 2016

விஜயகாந்த்

#விஜயகாந்த் அரசியல் தெரியாத அரசியல் செய்யாத அரசியல் தலைவர்.. திடீரென்று ஒருநாள் அரசியல் கட்சியை தொடங்கி தேர்தல் வெற்றி என புதிய அத்தியாயம் தொடங்கியது.. தமிழக அரசியல் புதியதை ஏற்றுக்கொள்ள தயாராகவே இல்லை என்று கூட சொல்லலாம் திராவிட இயக்கத்தின் வேர் அவ்வளவு பலமாக வேருண்டிருக்கிறது.. .. அரசியலுக்கு தகுதியானவரா என்பதை விட சரியாக திட்டமிடாதததாலும் சிலரின் சூழ்ச்சியாலும் வேரோடு பிடிங்கியெறியப்பட்ட செடியை போல கிடக்கிறார்.. தனித்து தொடர்ந்து களம் கண்டிருப்பாரே ஆனால் ஒரளவு மெச்சப்பட்ட நிலையை எட்டியிருக்கலாம்.. அரசியல் சகுனி சோவின் பேச்சை கேட்டு ஜெயலலிதாவை ஆதரிக்க போய் கடைசியில் ஒன்றுமில்லாத நிலைக்கு வந்துவிட்டார்.. அரசியலில் சமகால நிகழ்வுகளுக்கு தகுந்தாய்போல காய் நகர்த்தப்படவேண்டும் இல்லையெனில் அடுத்தமுறை என்ற சொல்லே இல்லாமல் போய்விடும் .. .. கடந்த தேர்தலில் வைகோவோடு இணைந்தது அவரது அரசியல் வரலாற்றில் கருத்தபக்கங்களானது.. தனித்து களம் கண்டிருக்கவேண்டும் அல்லது திமுகவோடு சேர்ந்து ஜெயலலிதாவை வீழ்த்திருக்கவேண்டும்.. அப்படி வீழ்த்திருந்தால் தமிழகத்தில் வருங்காலங்களில் திமுக தேமுதிக என இருகட்சிகள் மட்டுமே இருந்திருக்கும்.. .. அரசியலில் சூழ்ச்சியறிந்து செயல்படவேண்டும் நட்டதும் பூக்கவேண்டுமென நினைப்பது அறிவீனசெயல் .. காத்திருந்து நேரம் வரும் போது அதன் பயனை அனுபவிக்கும் பொறுமை வேண்டும்.. விஜயகாந்த் எனும் தனிப்பட்ட நபரோடு தமிழக மக்கள் வெறுப்பை தரவில்லை மாறாக அவரின் செயல்பாடுகளின் மீது தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.. இன்னும் காலமிருக்கிறது.. வாழ்த்துக்கள் விஜயகாந்த்.. .. அரசியலில் #வெள்ளந்தி_வேலைக்காகாது.. ..

No comments:

Post a Comment