Saturday, August 6, 2016
சிலநேரங்களில் சில மனிதர்கள்
சிலநேரங்களில் சில மனிதர்கள் மீது கொண்ட மரியாதை போய்விடுகிறது..
திருமா..
இன்னுமொரு ஜெயலலிதா தான் ஸ்டாலின் என திருவாய் மலர்ந்திருக்கிறார்.. ஜெயலலிதாவிடமுள்ள ஆணவம், திமிர், தான் என்கிற அகந்தை, சக தோழர்களை அடிமையைவிட கேவலமாக நடத்தும் செயல், குறுக்குவழி அரசியல், தினம்தினம் பொய், சொல்லில் நேர்மையின்மை,
எவரையும் மதிக்காத செயல், எதிர் அரசியல் செய்பவரை பழிவாங்கும் போக்கு .. மொத்தத்தில் பிற்போக்கு அரசியல் ...
இதில் எதை #தளபதிஸ்டாலினிடம் கண்டார்...
..
புதிய கல்விக்கொள்கையைப்பற்றி பேசவில்லை பெரியாரிய கருத்துக்களை முன்னெடுக்கவில்லையென்கிறார்.
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் திமுக கலந்துக்கொள்கிறது தோழர் கனிமொழி பாதபூஜைக்கெதிராக நாடாளுமன்றத்தில் ஆணியடித்தார் எனவே இவரின் குற்றசாட்டில் உண்மையில்லை..
..
எல்லாவற்றையும் மறந்து ஒவ்வொரு முறையும் மாறி மாறி சவாரி செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் கலைஞரின் பெருந்தன்மையை .. ஸ்டாலினிடமும் எதிர்பார்த்தால் அது நடக்காது.. தொடர்ந்து எங்கள் கொள்கையோடு பயணிப்பவர்களை புறம்தள்ளிவிட்டு வாக்கு அரசியல் செய்ய தயாரில்லை.. நம்பிக்கையில்லாதவர்களோடு தோழமை கொள்வதை விரும்பவில்லை ஸ்டாலின்
..
தோழர் திருமா முதலில் இதுபோன்ற அறிக்கை அரசியலை விடுவது நல்லது கடந்த தேர்தலில் தெரிந்தே ஜெயலலிதாவிற்கு உதவ விலைபோனவர்கள் கூட்டத்தில் தாமும் சேர்ந்து செய்த கூட்டுசதி அறியாமல் இல்லை அதனால் தான் #ஸ்டாலின் திமுகவின் தனித்தன்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கட்சியில் வீணர்கள் சிலரை களையெடுப்பதிலும் அக்கறை செலுத்தி வருகிறார்.. சிறிய சிறிய உதிரிகளை கொண்டு நடந்து அவர்களை வளர்த்துவிடுவதை விட மக்களிடம் நம்பிக்கையை பெற்று தனித்து களம்காண திட்டமிட்டு செயல்படுகிறார்..
..
திருமா போன்றோரை நம்ப முடியவில்லை திடீரென எந்த கொள்கை பிணக்கமும் இல்லாமல் கூட்டணியிலிருந்து வெளியேறி புதிய இயக்கம் அமைப்பதாக சொல்லி வாக்குகளை பிரித்தாளும் சூழ்ச்சியில் பங்குவைத்ததையும் தேர்தலுக்கு பிறகு நாங்கள் வெல்லமுடியாது என முன்பே தெரியும் என வாக்குமூலம் தந்ததையும் திமுக வரகூடாது என்பது மட்டுமே பிரதான கொள்கையாய் கொண்டு நடந்த வைகோ வின் கரம் கோர்த்து செயல்பட்டதை மறக்கமுடியாது அதனால் தான் அரவணைத்து செல்ல #தளபதி தயக்கம் காட்டுகிறார்.. அதை வைத்து ஜெயலலிதா போல் செயல்படுகிறார் என்கிறார் திருமா..
..
#நம்பிக்கையில்லாதவர்கள்_வேண்டாதசுமை..
..
ஆலஞ்சி.மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment