Sunday, August 21, 2016

பயந்தாங்கொள்ளி

இப்படியொரு பயந்தாங்கொள்ளி முதல்வரை இதுவரை விடுதலை இந்தியா கண்டதில்லை.. எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பயந்து ஓடியொளிந்தவர்கள் உண்டு மகோரா போன்ற தகரடப்பாக்கள் சபைக்கு வராமல் இருந்ததுண்டு ஆனால் எதிர்கட்சியினரை சபையிலிருந்து மொத்தமாக இடைநீக்கி நிம்மதி பெரும்மூச்சு விடும் முதல்வர் செல்வி.ஜெயலலிதாதான்.. .. நிறைய கேள்விகள் அடுக்கடுக்காய் மிக தெளிவாக தயார் செய்யப்பட்டதறிந்து 570 கோடி கண்டெய்னர்,சுவாதிகொலை,தொடர்ந்து நடந்துவரும் கொள்ளைகள், என நிறைய விடயங்களில் ஒட்டுமொத்தமாக தோற்றுப்போன ஒரு துறையாக உள்துறை செயலிழந்து நிற்பதை சுட்டிக்காட்டி பேச பி.டி.ஆர்.தியாகராஜன் அன்பில் மகேஷ், போன்ற இளைய தலைமுறையினர் எப்படி பேசவேண்டுமென தயார் செய்யப்பட்டார்கள் .. அவர்களுக்கு உதவ தங்கம் வேலு போன்றோர் பணிக்கப்பட்டிருந்து அறிந்து ஜெயலலிதா சரமாரியான கேள்விகள் வருமென அஞ்சி சபாநாயகரை கொண்டு ஒரு விசயமும் இல்லாத ஒன்றை கையிலெடுத்து சபாநாயகரின் அதிகாரத்தை பயன்படுத்தி காய் நகர்த்தி தனிஆவர்த்தனம் செய்கிறார்.. .. இது ஜனநாயகம் அல்ல இதை ஜனநாயகத்தின் நான்காம்தூண் பத்திரிக்கைகளும் தவறென்று சுட்டிக்காட்டவில்லை.. இந்த போக்கு சர்வாதிகாரம் மட்டுமல்ல கோழைத்தனமும் கூட.. உலகின் சர்வாதிகாரிகள் பலரும் உண்மையில் கோழைகளாகதான் இருந்தார்கள்.. .. கருணாநிதி சட்டமன்றத்திற்கு வரலாமே என்கிறார் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யபட்டபோது நான் கூட தனியாகதான் சட்டமன்றம் வந்தேன் என்கிறார் .. அப்போது ஜெயலலிதாவிற்கு இருக்கை முதல்வரிசையில் தரப்பட்டதும் அன்றைய சபாநாயகர் நடுநிலையோடு நடந்துக்கொண்டதும் நாடறிந்தது.. .. தான் பேசும் போது குறிக்கீடு வரக்கூடாது என நினைக்கும் முதல்வர் அப்படி ஏதாவது பேசினால்/செய்தால் அதை உடனே சபைகுறிப்பிலிருந்து நீக்குவது இடையில் ஆளும்கட்சி உறுப்பினர்களைக்கொண்டு ஒருமையில் தகாதவார்த்தையில் பேசவைப்பது இதுதானே நடக்கிறது.. இடைநீக்கம் செய்துவிட்டு அதற்கு நியாயம் கற்பிக்க சபாவும் மற்றவர்கள் ஏன் பேசவில்லையென்பது நாங்கள் அறியாத அரசியல் அல்ல.. குறிக்கீடில்லாமல் ஜால்ராக்களின் கைதட்டலோடு மட்டுமே சபையை நடத்தவேண்டுமென்ற ஆசை நிறைவேறியிருக்கிறது.. .. இன்றைக்கு புகழ்மாலை யாராவது பாடினால் நல்லது.. #சகிக்கல.. .. ஆலஞ்சி.மன்சூர்..

No comments:

Post a Comment