Monday, August 29, 2016
சிறுவாணி
#சிறுவாணி..
பழைய தமிழக எல்லையான பாலக்காட்டுக்கருகில் மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற ஆறு..
சுவைகூடிய நீர்.. மேட்டுபாளையம் அருகிலும் பவானி ஆற்றோடு கலக்கிறது.. கோவைக்கு குடிதண்ணீரின் ஆதாரமாக விளங்குகிற ஆறு..கோபி நீர்வீழ்ச்சி .. கோவை பாலக்காட்டு மக்களின் சுற்றுலாதளம்..
..
சரி விசயத்திற்கு வருவோம்
கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைகட்டுகிறது.. முறைப்படி மத்திய அரசின் அனுமதியை கேட்கிறது மத்திய அரசும் தமிழகத்திற்கு கருத்துகேட்டு கடிதம் எழுதிஅதற்கு பதில் வராததால் அனுமதியளித்திருக்கிறது..
ஜெயலலிதாவிற்கு யாராவது சொன்னால்தான் எதுவுமே தெரியும் போலியிருக்கிறது.. அவதூறு வழக்கில் கூட உச்சநீதிமன்ற நோட்டீஸ் கிடைக்கவில்லை என பொய் சொல்லியவர்..
ஆறுமாதமாகவே சிறுவாணியில் குறுக்கே அணைகட்டபோவது எல்லா ஊடகங்களும் வந்திருந்தது.. ஜெயா செய்திகளில் கூட பார்த்ததாக ஞாபகம்.. எனவே ஜெயலலிதாவிற்கு தெரியாமல் இல்லை அலட்சியம்..
காசு வாங்கிக்கொண்டு ஓட்டுபோடுகிறவனுக்கு எதற்காக உழைக்கவேண்டும் ..அவனுக்காக அவன் தேவைகளுக்காக ஏன் செயல்படவேண்டுமென்ற ஜெயலலிதாவின் சிந்தனை சரியானதுதான்..
விற்றபின் உரிமை கோரமுடியாது..
..
நதிநீர் பிரச்சனையில் ஜெயலலிதா எப்போதுமே தும்பைவிட்டு வாலை பிடிக்கிறவர் .. திமுக மீது குற்றம் சாட்டியே காலத்தை கடத்துகிறவர்.. காவிரியில் சன்டிவிக்காக கலைஞர் தயங்குவதாக குற்றம் சாட்டினார்.. ஆனால் காவிரி நடுவர்மன்றம் அமைத்தபோது அதை எதிர்த்தார்.. நடுவர்மன்ற தீர்ப்பு வந்தபோது குறைச்சொன்னார் ஆனால் அரசிதழில் வெளியிடும் போது ஜெயலலிதா ஆட்சி இருந்தது காவிரித்தாய் பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டார் காவிரிக்காக ஒரு சிறு துரும்பை கூட அசைக்காதவர்.. முல்லை எம்ஜிஆர் காலத்தில்தான் அணையை உயர்த்தவேண்டாமென்ற யோசனையை தன் இன பாசத்திற்காக விட்டுகொடுத்ததும் பின் கலைஞர் ஆட்சிக்கு வந்தபிறகு வழக்குபதிவே நடந்தது..
..
இப்போது கூட சிறுவாணி பிரச்சனையில் நித்திரை கலையாமல் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்க நினைக்கிறார்.. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் மூலமே தீர்வை கண்டுவிட முடியுமென்கிற அறியாமையை விட்டபாடில்லை.. கச்சேரிக்கு போனா உள்ளதும் போகும் என்பார்கள்.. கொங்கில் ஒரு சொல் உண்டு.. வரப்பிற்காக வயலும் போச்சு என்பார்கள்.. நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகாவும் கேரளாவும் மதிக்காது ..
ஏன் ஜெயலலிதாவே தன் சொந்த வழக்குகளில் எவ்வளவு காலதாமதத்தை ஏற்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும்..
..
கலைஞர் ஆட்சியிலிருந்தபோது கர்நாடகாவோடு பேசி தொடர்ந்து தண்ணீரை பெற்று தந்தார்.. ஜெயலலிதாவின் அகம்பாவத்தால் எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடுவதால் காலவிரயமாகி டெல்டா மாவட்டமே பாலைவனமாகிறது..
ஜெயலலிதா தயவில் டெல்டா மாவட்டம் வறண்டுபோனது இனி..
மேற்கு மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாகலாம்..
..
#தகுதியில்லாத_தலைமை…
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment