Monday, August 1, 2016

ஜெயலலிதா நிதானமிழந்தார்

ஜெயலலிதா சசிகலாபுஷ்பா கைகலப்பு இப்படிதான் ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் .. முதலில் ஜெயலலிதாவின் முகம் இங்கே அப்பட்டமாக தெரிகிறது.. சசிகலா குற்றச்சாட்டை அவர் பொதுவெளியில் வைக்கவில்லை மாறாக நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறார்.. ஜெயலலிதா அறைந்தார் எனச்சொல்லும் போதே இவரின் இயல்பு நமக்கு தெரியுமென்பதால் ஜெயலலிதாவை திருப்பி அடித்தாரா என கேட்கவேண்டியிருக்கிறது.. தனிமையில் வைத்து அடித்ததாக சொல்லும் போது சந்தேகம் கூடவே வலுகிறது... .. சசிகலா மீது பெரிய அபிப்ராயமெல்லொம் இல்லை இவரை போன்றவர்கள் பொதுவாழ்விற்கு வருவதால் எந்த பயனுமில்லை என்பதை அறிவோம்.. ஆனால் மற்றவர்களுக்கு காலில்விழுந்து தன்மானத்தை இழந்து நிற்கிற மூடர் கூட்டத்திற்கு, மிகப்பெரிய சக்தியோடு மோதுகிறோம் என்ற அஞ்ச உணர்வே இல்லாமல் உண்மையை நாடாளுமன்றத்தில் பதிந்தார் பாருங்கள் அந்த துணிவு மற்றவர்களுக்கு இல்லாமல் அடிமையாக இருக்கிறார்களே என்று கேட்க தோன்றுகிறது.. .. இது அதிமுகவின் கலாச்சாரம் தனக்கு பிடிக்காதவர்களை ராமவரம் தோட்த்திற்கழைத்து கவனிக்கும் பழக்கும் #மகோரா காலத்திலிருந்தே தொடங்கியதுதான்.. மறைந்த ஜேப்பியார் எம்ஜிஆருக்காக பாபுவிடமிருந்து பிரித்து வலுக்கட்டாயமாக கொண்டுவந்ததாகவும் அவரை ஒருநாள் இரவு வைத்திருந்துவிட்டுதான் மக்கள்திலகத்திடம் சேர்த்தேன் என வெளிப்படையாகவே பேசினார்.. கடைசிவரை ஜேப்பியார் மீது கை வைக்காததற்கு காரணம் அதுவாகதானிருந்தது.. அதிமுகவில் இப்படியும் ரோசத்தோடு ஒருவர் இருந்திருக்கிறார் என்கிற போது இன்னும் எத்தனைப்பேர் வாய் திறக்கமுடியாமல் தைரியமின்றி கிடந்து சாகிறார்களோ.. தெரியவில்லை.. .. உண்மையில் நிதானம் தவறியது ஜெயலவிதாதான் #ஜெயலலிதாவின்முகம்_கறுத்ததினம்.. .. ஆலஞ்சி.மன்சூர்..

No comments:

Post a Comment