Thursday, September 1, 2016

பகுத்தறிவு..

ஸ்டாலின் மனைவி கோவில் கோவிலாக போகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.. .. கொள்கையைப்பற்றி பிறகு பேசுவோம்.. ராஜூவை மக்கள் தேர்தெடுத்ததும் அமைச்சராக்கியதும்.. மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவே தவிர ஸ்டாலின் குடும்பம் கோவிலுக்கு செல்வதை கணக்கெடுக்க அல்ல.. மாறாக மக்கள் வரிப்பணத்தில் உங்க ஆத்தா புகழ்பாடவும் அல்ல.. .. சபை உறுப்பினர்களின் குடும்பங்களை பற்றி சட்டசபையில் பேசவேண்டியதில்லை அதே போல் ஜெயலலிதா வின் முந்தைய கால குடும்பவிடயங்களை பற்றி பேச அமைச்சர் தயாரா..என கேள்வி எழுந்தால் அமைச்சர் பதவி அமாவாசை வரை காத்திருக்காது... தனிநபர் விருப்பு வெறுப்புகளை பேசகூடிய இடமல்ல சபை மக்களின் உணர்வுகளின், தேவைகளின் அடிப்படையில் இயக்கவேண்டும்.. எங்கள் ஆசான் #பெரியார் தேர்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்தெடுத்தவன் முட்டாள் என்றார்.. இங்கே முட்டாள்களை அவசரகதியில் ஆலோசிக்காமல் அனுப்பியிருக்கிறோம். .. #பகுத்தறிவு.. நாத்திகம் மட்டும் பகுத்தறிவு என நினைக்கிற மடமை.. அமைச்சர் உளறலில் தெரிகிறது.. திக விலிருந்து திமுக பிரித்தபோதே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் அண்ணா.. திமுகவில் ஆரம்பம் தொட்டே இருப்பவர்களில் ஆத்திகர்களும் அடங்கும் நிறைய பேர் கடவுள் மறுப்பை ஏற்காத அதேவேளையில் பெரியார் சொன்ன கருத்தில் உடன்பட்டு செயல்படுகிறவர்கள் அதிகம் பேரை காணலாம்.. ஏன் பெரியார் கூட மத கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை புறக்கணித்ததில்லை.. ராஜாஜி கல்கி என அடுக்கி கொண்டே போகலாம்.. கல்கி கிருஷ்ணமூர்த்தி இல்லதிருமணத்திற்கு பெரியார் சடங்கெல்லாம் முடிந்தபிறகு சென்று மணமக்களை வாழ்த்தினார் எப்படி தெரியுமா குங்குமத்தை எடுத்துவரச்சொல்லி நெற்றியில் இட்டு வாழ்த்தினார்.. கல்கியின் உதவியாளர் இதை நம் பத்திரிக்கையில் படத்தோடு போட்டு பெரியாரின் இரட்டைவேடம் என தலைப்பு இடலாமென்ற போது கல்கி சொன்னார்..பெரியார் நமக்காக நம் மனம் நோக கூடாது என்பதற்கு திருமணம் எல்லாம் முடிந்து வந்து வாழ்த்துகிறார்.. பெரியார் தன் கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பவரல்ல மற்றவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பவர்.. அதே வேளை கொள்கையில் கடவுள் மறுப்பில் உறுதியானவர் என்றார்.. .. அடுத்தவரின் நம்பிக்கையை எதிர்ப்பதென்பது வேறு அவரின் நம்பிக்கைகளுக்கு /அவர்களுக்கு மதிப்பளிப்பது என்பது வேறு.. இந்த கூமுட்டைகள் எல்லாம் அமைச்சர்களாக வலம் வருவதிலிருந்தே அரசின் யோக்கியதையை அறிந்துக்கொள்ளலாம் .. #அரைகுறைகள்_அமைச்சரகலாம்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment