Tuesday, August 23, 2016

காவிரி

தமிழகம் எதை நோக்கி போய்கொண்டிருக்கிறது.. காவிரி பாலாறு முல்லை பெரியாறு என மூன்றுபக்கமும் தண்ணீரால் நனைந்த பூமி.. இப்போது கண்ணீரால் சூழ்ந்து நிற்கிறதே.. முப்போகம் கண்ட தஞ்சை குறுவை இனி எப்போதுமில்லை சம்பா கிடைக்காமல் கூட போகலாம் தாளடி மழைவந்து தரவேண்டும் இல்லையெனில் அது போச்சு.. இந்த நிலைக்கு என்ன / யார் காரணம் ஆளும் தரப்பு எதிர்கட்சியையும் எதிர்கட்சி ஆட்சியாளரின் கையாகாலாகாததனத்தையும் குறைக்கூறியே பொழுதும் விடிகிறது.. .. எல்லாவற்றையும் நீதிமன்றம் மூலமே தீர்த்துக்கொள்ளலாம் என்கிற அறிவின்மை தமிழகத்தை வறண்ட தேசமாய் மாற்றிக்கொண்டிருக்கிறது.. ஜெயலலிதா என்ற ஒருவரின் ஆணவத்தால் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்து என்ன செய்வது அடுத்தகட்ட போராட்டமென்ன .. என தீர்மானிக்க மறுத்து நாடு சுடுகாடாய் போய்க்கொண்டிருக்கிறது.. .. வாக்கை விற்கிற மனநிலைக்கு வந்துவிட்டவன் இனி நிலத்தை விற்றுவிட்டு பிழைப்பு தேடி பிறமாநிலங்களுக்கு செல்லவேண்டியதுதான்.. திமுக ஆட்சியில் வழக்கு நீதிமன்றத்திலிருந்தும் தொடர்ந்து கர்நாடகவோடு பேசி குறுவை சாகுபடிக்கே தண்ணீரை பெற்று தந்தார் கலைஞர்.. ஆனால் ஆட்சி வந்து ஆறு ஆண்டுகளாக குறுவை இல்லை இந்தவருடம் சம்பாவுமில்லை.. .. அனைத்துகட்சி கூட்டத்தை மற்ற மாநிலங்கள் கூட்டி முடிவெடுக்கும் போது ஜெயலலிதா மட்டும் நீதிமன்றத்தை மட்டுமே நம்புவதும் .. அதனால் பிற மாநிலங்கள் தமிழ்நாட்டில் பொது பிரச்சனைக்கு கூட கட்சிகளிடையே ஒற்றுமையில்லை என்பதை அறிந்து அலட்சியமாக நடந்துக்கொண்டு தண்ணீர் தர மறுப்பதும் நாம் காண முடிகிறது.. .. அண்டை மாநிலங்களோடு வெறுப்புணர்வை மட்டுமே வளர்ப்பது எதிர்காலத்திற்கு நல்லதல்ல.. ஏறக்குறைய எல்லாபுறமும் தண்ணீர் தட்டுபாட்டை சந்திக்கிற மாநிலமாக தமிழகம் இருப்பது விவசாயிகளின் நலனுக்கு மட்டுமல்ல நாட்டின் நலனுக்கும் பேராபத்தை விளைவிக்கும்.. .. அறிவு ,அறம், தெளிவு, திறமை இவையாவுமே இல்லாத ஜெயலலிதாவிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு இப்போது கதறுவதில் பயனில்லை.. பிரதான எதிர்கட்சியின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி , அனைத்துக்கட்சியினரையும் ஒருங்கிணைத்து பிற மாநில அரசோடு பேசி.. தண்ணீரை பெற முயற்சிக்கலாம்... இந்த முயற்சி நிச்சயம் பலனை தரும் அது வருங்காலங்களில் ஆளும்கட்சியின் ஆணவத்தலைமைக்கு எதிராகவும் செயலாற்றும்.. .. இது அவசிய அவசரமும் கூட.. .. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்.. .. ஆலஞ்சி மன்சூர்..

No comments:

Post a Comment