Monday, August 1, 2016
துணிவு..
சசிகலா புஷ்பாவின் அரசியலோடு நமக்கு உடன்பாடில்லை நிறைய கருத்துவேறுபாடு எனக்குண்டு ..
பொதுவாழ்விற்கு வருகிறவர்களின் அவர்கள் அரசியல் சார்ந்த நிகழ்வுகளை நாம் விமர்சித்திருக்கிறோம் சிலநேரம் கடுமையாக கூட வார்த்தை பிரயோகம் செய்திருக்கிறோம் ஆனால் எல்லை மீறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறோம் தனிநபர் விருப்புவெறுப்பை நாம் விமர்சிப்பதில்லை அவர்களின் சுதந்தரத்தில் தலையிட இங்கே யாருக்கும் உரிமையில்லை..
..
பெண்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்பதில் திராவிட இயக்கம் அதிகம் விரும்புகிறது ..
அவர்களுக்கான அதிகாரத்தை அவர்கள் பெறவேண்டுமென்பதில் கவனிப்பாக இருக்கிறது..
அதற்கான வாய்ப்பை அதிகம் உருவாக்கவேண்டுமென்பதில் அதிகம் முனைப்புகாட்டுகிறது ..சமூகத்தில் பெண்கள் எல்லா நிலைகளிலும் பங்களிப்பை தரவேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை..
..
எந்தவழியை பின்பற்றி வந்தாலும் அவரின் அரசியல்சார்ந்த செயல்களை விமர்ச்சிக்கவேண்டுமே தவிர அவரையல்ல.. இங்கே சசிகலாபுஷ்பாவை தொடர்ந்து விமர்சனத்தை திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களே செய்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய செயல்..
..
சசிகலா நேரடியாகவே தமிழக முதல்வர் மீது குற்றம் சாட்டுகிறார்.. அதைவிட தன் உயிருக்கு ஆபத்தென்கிறார் இதை ஊடகங்கள் ஏன் நாடாளுமன்றம் கூட அலட்சியமாக கவனிக்கிறது.. குலாம் நபி ஆசாத் போன்றோர் குறிக்கிட்டப்பிறகு அவரின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லையென்கிறார் துணைசபாநாயகர்..
நமக்குள்ள சந்தேகமெல்லாம்
சசிகலாவை ஏன் பேச அனுமதிக்கவில்வையென்பதுதான் பேசிவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்யப்பட்டது ஏன்..ஒரு பெண் நாடாளுமன்ற அவையில் பேசியும் காம்ரேட்கள் மவுனம் அதிர்ச்சியளிக்கிறது அதைவிட முத்தரசன் பேச்சு சகிக்கவில்லை..
..
திருமதி.சசிகலா புஷ்பா வின் தைரியத்தை நாம் பாராட்டியாகவேண்டும் தம்பிதுரையும் இன்னும் பிற அதிமுக எம்பிகளும் சேர்மன் முன் அழைத்துக்கொண்டுப்போய் நிறுத்தியும் தன் ராஜினாமாவை தர மறுத்திருக்கிறார்..
அதிமுகவில் இவரைபோன்றவர்கள் இருக்கமுடியாது காரணம் சுயம் இழந்தவர்கள் தான் அங்கே இருக்கமுடியும்.. சசிகலா பழைய ஜெயலலிதாவைப்போல் செயல்படுகிறார்.. எம்ஜிஆர் ராஜினாமாவை கேட்டும் தர மறுத்தவர்தான் இந்த ஜெயலலிதா.. ..
..
சபையில் அவரை பேச அனுமதித்திருந்தால் இன்னும் நிறைய மர்மங்களுக்கு விடை கிடைத்திருக்கும்..
யாரோடு மோதுகிறோம் என்று தெரிந்தும் அதனால் பெரிய ஆபத்துக்கள் சாதாரணமாககூட நிகழலாம் என அறிந்தும் பின் விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் எதிர்த்து நிற்கிறார் பாருங்கள்
நிச்சயமாக துணிச்சலான பெண்தான்..
..
I appreciate her Boldness!!
Brave lady..
..
ஆலஞ்சி.மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment