Friday, August 19, 2016

பெண்கள்...

#ஷாக்சி_சிந்து.. பெண்கள் வேலைக்கு செல்வதால்தான் திருப்பதி மலையில் பஸ் உருண்டது.. மாதவிடாய் பெண்கள் வெளியில் வருவதால்தான் தேசம் நாசமானது.. வேலைக்கு போகும் பெண்கள் விபச்சாரிகள்.. இப்படியெல்லாம் திருவாய்மலர்ந்த தேசத்திலிருந்து.. பெண்கள் பதங்கங்களை கொண்டுவருகிறார்கள் .. பெண்களை இப்படிதான் உடையணிய வேண்டுமென கட்டுபாடுகள்.. விதிகளை மீறி. இதோ இந்திய மங்கைகள் சாதித்திருக்கிறார்கள்.. மாட்டுக்கறி சாப்பிடவோ விற்கவோ கூடாது என்கிற திருநாட்டிலிருந்து.. நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதால் வெல்ல முடிந்தது எனச்சொல்லி.. போலிகாவிகளின் மூஞ்சியில் காறி உமிழ்ந்திருக்கிறார்.. சாக்ஷி .. பெண்களை போகப்பொருளாகதான் இந்த சமூகம் இதுவரை கண்டிருந்தது/கண்டுக்கொண்டுமிருக்கிறது.. நிறைய தடைகள் மதம்,ஜாதி,உறவினர் சமூகம் என பல்வேறு ஏச்சுக்களை தாண்டி சற்று வெளியே வந்தால் அரசியல்.. சிபாரிசு என தளர்ந்திட வைக்கும் ..அதையும் தாண்டி வந்தால் பொருளாதாரம் வேட்டையாடும்.... எல்லா தடைகளையும் உடைத்து சர்வதேச சமூகத்தின் முன் இந்தியா தலைநிமிர காரணம்..#பெண்கள்.. .. உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய மணித்துளிகள்.. பெண்களை எல்லா மதங்களும் வீட்டுக்குள் அடைத்து வைத்து அழகிய பொம்மையாக்கிதான் வைக்கிறது.. .. பெண்களை சம்பளமில்லாத வீட்டு வேலைகாரி பிள்ளை பெற்றுக்கொடுக்கும் மிஷின், தங்கள் காமத்தின் வடிகால் இப்படிதான் இந்த சமூகம் வைத்திருக்கிறதென்றார் பெரியார்.. பெண்கள் எல்லாதுறைகளிலும் சரிசமாக பங்கேற்கவேண்டும் என எண்ணியவர்.. ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள் ..அதற்கு உங்களூரில் வசதியில்லையென்றால் வெளியூர் சென்று கூலிவேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார் எங்கள் பெருங்கிழவன் .. பெண்களின் பங்களிப்பு இல்லாத தேசம் முன்னேற முடியாது.. பெண்கள் வெளியில் வருவதையே விரும்பாத சமூகத்திலிருந்து அதுவும் விளையாட்டில் சாதனை படைத்திருக்கிறார்கள்.. பாராட்டுவோம்.. #மகிழ்ச்சி .. மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா.. #கவிமணியின் வரிகளோடு.. .. ஆலஞ்சி.மன்சூர்..

No comments:

Post a Comment