Sunday, July 31, 2016

அரசியல் நாகரீகம்..

பொது இடத்தில் நாகரீகமாக நடந்துக்கொள்ளாத சசிகலா பஷ்பாவை முதல்வர் கண்டித்தார் என்கிறார்கள்.. இங்கே சிவாவை குறிப்பிட வேண்டும் நாலுபேர் முன் ஒரு பெண்அறைந்தால் சாதரணமாக யாராக இருந்தாலும் கோவம் வரும் திருப்பி அடிக்க தோன்றும் .. அதை தான் செய்யதோன்றும் மாறாக அமைதிகாத்து ஏன் அடித்தார் என தெரியவில்லை என சொல்லியிருப்பதிலிருந்தே அவரின் நாகரீகம் நமக்கு தெரிகிறது.. .. நிறைய பேர் அவர் சசிகலா மீது ஏன் காவல்துறையில் புகார் அளிக்கவில்லையென்கிறார்கள் அதற்கு சிவா தந்தவிளக்கமே போதும்.. கட்சி தலைமையிடம் ஆலோசித்துவிட்டு சொல்கிறேன் என்கிறார்.. .. டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் அந்த பெண் போதையிலிருந்ததாக தகவல்கள் வர தொடங்கியிருக்கிறது..அது எந்தளவிற்கு உண்மையென சிசிடிவி யில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்..ஏனெனில் சிவாவும் சசிகலாவும் தமிழகத்தின் சார்ந்த எம்பிக்களாக இருக்கிறார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றாலே LAW MAKER OF UNDIA இந்திய சட்டதை உருவாக்குகிறவர்கள் என்று பெயர்.. இப்போதெல்லாம் தமிழகத்திலிருந்து செல்கிறவர்கள் குழாயடி சண்டை போடத்தான் அங்கே செல்கிறார்கள்.. .. சிறந்த நாடாளுமன்றவாதிகளை அனுப்பிய தமிழகம் தான் சசிகலா புஷ்பா போன்றவர்களையும் அனுப்பியிருக்கிறது.. காயிதே மில்லத், பெரும்தலைவர் காமராஜர்,சி.எஸ்,பேரறிஞர் அண்ணா, இரா.செழியன் என்.வி.என்.சோமு ,மாறன் வைகோ போன்ற தலைசிறந்த ஆளுமைகள் வீட்டிருந்த சபையில் போதையில் உளறுகிற அரைகுறைகளை அனுப்பிய பெருமை அதிமுகவையே சாரும்.. .. உண்மையிலேயே தமிழர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்.. ஜனநாயகம் என்ற பெயரில் தகுதியில்லாதவர்களிடம் ஆட்சியை தருகிற போது இதுபோன்ற நிகழ்வுகள் சர்வசாதாரணமாய் கடந்துபோகும்.. தனக்கு தரப்பட்டிருக்கும் பதவியின் மேன்மை தெரியாமல் பொதுஇடத்தில் கைகலப்பில் ஈடுபடுகிற செயல் நிச்சயமாக கண்டிக்கப்படவேண்டியது.. சிவா கைகலப்பல்ல தாக்குதல் என்கிறார் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.. மொத்தத்தில் #வெட்கப்படவேண்டும்.. .. ஆலஞ்சி.மன்சூர்..

No comments:

Post a Comment