Saturday, December 31, 2016

குப்பை..

இனி.. குப்பையில்.. அவ்வளவு சீக்கிரம் கணக்கு தீர்த்தாயிற்று.. பாவம் தோன்றவில்லை மாறாக மிகப்பெரிய பாடத்தை தந்திருக்கிறது.. எதுவரை எல்லையென்பதையும் யாராகினும் கோட்டினுள் நிறுத்தப்பட்டிருக்கவேண்டுமென்பதை உணர்த்திய தருணம் இது.. அதிகார மோகம் ஆளையே கொல்லும்... அறுத்து குப்பையில் வீசுமென தெளிவாக உணரும் வகையில் செய்தி சொல்லியிருக்கிறது.. .. செல்வி ஜெயலலிதா அரசியலுக்கு வந்தவுடனே சட்டென்று ஒரு இரவில் பதவிகளை அடைந்துவிடவில்லை.. ஆணாதிக்க அரசியலில் பெண் எழுந்து நிற்பதே கடினமாக சூழலில் ஆடியது அதுவும் சலங்கை கட்டி ஆட எவ்வளவு சிரமமிருக்கும் .. அவரின் கொள்கையோடு சற்றும் உடன்படாமல் போனாலும் அவரின் அரசியல் பங்களிப்பை ஏற்றுக்கொள்ளாமல் இல்லை ஆனால் இன்றைய அதிமுக பொதுசெயலரின் அரசியல் பிரவேசத்தை செல்வி ஜெயலலிதாவோடு ஒப்பிடவே முடியாது.. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜானகியை பெரும்பாலானோர் ஆதரித்தபோது அவர்களின் நோக்கம் அதிகாரமாக மட்டுமே இருந்தது அப்போது தன் ஆதரவாளர்களிடம் பேசிய ஜெயலலிதா ஒன்றை சொன்னார்.. ஆட்சியை விட நமக்கு கட்சி முக்கியம் கட்சியை கைப்பற்றினால் போதும் ஆட்சி தானாக மக்கள் தருவார்கள் என்று சொன்னார்.. ஜெயலலிதா படிப்படியாக அதிமுகவில் வளர்ச்சியை கண்டவர்.. ஆனால் திருமதி சசிகலா திடீரென ஒரே நாளில் கட்சியின் பதவிக்கு வந்திருக்கிறார்..அப்படிதான் தோன்றும் ஆனால் மிக சாதூர்யமாக தீட்டப்பட்ட நீண்டகால திட்டம் .. மெல்ல கொல்லும் விசம் போல முழுவதுமாக செயலிழக்க செய்து ஒட்டுமொத்த ஆக்ரமிப்பை செய்திருக்கிறார்.. அதனால் தான் யாருக்கும் சசியா என ஆச்சர்யம் வரவில்லை.. மெல்ல மெல்ல படிப்படியாக உங்கள் அறிவில் சேர்ந்திருக்கிறது.. அதனால் தான் இது புது செய்தியாக தெரியவில்லை திரு.ஸ்டாலின் கூட அப்படியா என்றார் அலட்டிக்கொள்ளாமல் .. ஏற்கனவே அறிந்திருந்ததால்.. .. வரும் காலங்களில் குப்பையில் வீசப்படும் வேண்டாத பொருளாவார் ஜெயா.. .. ஆலஞ்சி மன்சூர்

2017..

வேண்டும்..வேண்டும்.. 2017 ----------------------- மனம் எனும்.. மாய பிசாசை அடக்கி ஆள வேண்டும். என்னுள் மிருகம் எழுந்திடாது காத்தல் வேண்டும் ..மன.. அமைதி வேண்டும்.. அறிவெனும் ஊற்று .. வற்றாது வேண்டும். தமிழ் மீது பற்று...என்றும்.. ஊற்றாக வேண்டும்.. என்னுள்..ஊற்றாக வேண்டும்.. என்.. கயமை ஒழிய வேண்டும்.. காமமும் களவும் .. அளவோடு வேண்டும். அளவிலா..கற்றல் வேண்டும்.. என் தேடல் பணி தீராது வேண்டும்.. அழகான ..பொய்யும்.. அளவிலா மெய்யும் வேண்டும்... முகம் மூடா.. அகம் மூடா. . அறம் தவறா.. நெறி பிறழா.. வாழ்வு வேண்டும். மதி கெடா.. மடமை தேடா .. வழி வேண்டும்.. என்றும்..நான்.. நான் ..நானாக வேண்டும்.. அன்புடன் ஆலஞ்சி மன்சூர்

Thursday, December 29, 2016

ஏறுதழுவுதல்

ஏறுதழுவுதல்.. சங்க இலக்கியத்திலேயே கலித்தொகையில் "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள். அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள்".. என்ற பாடல் வருகிறது.. அதற்கு நச்சினார்க்கினியர் கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." .. இது ஒரு ஆயர்குலம் அதாவது கோனார்கள் மாடுவளர்ப்போர் வழக்கமாக இருந்ததாக சொல்கிறது.. ஆனால் ஜல்லிக்கட்டு சிறியதொரு வேறுபாடு உண்டு.. ஏறுதழுவுதல் தெய்வ நம்பிக்கை சார்ந்ததாக இருந்ததில்லை ஆனால் ஜல்லிக்கட்டு கிராமதேவதைகளை அதாவது குலதெய்வங்களை கும்பிட்டு நடந்துவதாக இருந்தது ஏறுதழுவதல் என்ற பெயரில் சங்கஇலக்கியங்கியங்களில் அதாவது கி.மு.2000 க்கு முன்பே இருந்ததாக ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் ஆய்ந்து சொன்னார்கள்.. .. ஜல்லிக்கட்டுக்கான காளைகள் கூட புலிக்குளம் வகைகாளைகளை பயன்படுத்தினார்கள் .. ஜல்லிக்கட்டை இப்போதெல்லாம் ஒருசாராரின் விளையாட்டாக்கி ஜாதீய கூட்டுக்குள் அடைத்ததே பிற சமுதாய மக்களின் பார்வையில் அது தேவையில்லாத ஒன்றாகி ஒத்துழைக்க மறுத்தார்கள்.. ஏறுதழுவுதல் என்பதை மத நம்பிக்கையில்லாத ஒன்றாக கொண்டாடினார்கள் என நிறைய ஆய்வுகளில் சொல்லப்பட்டிருப்பதாக ஐராவதம் சொல்கிறார்.. பின்னாளிலேயே அது மதம் ஜாதிய கூட்டுக்குள் வந்ததாகவும் ஆய்வாளர் பதிவு செய்கிறார்.. .. சமகால இலக்கியங்களில் சி.செல்லப்பாவின் வாடிவாசல் குறுநாவல் ஜல்லிக்கட்டை நம் கண்முண் நிறுத்தும்.. மிக தெளிவான நடையில் இயல்பாக பதிந்திருப்பார்.. ஜல்லிக்கட்டை நேரில் காணும் உணர்வை தரும்.. .. சிலர் காலமாற்றத்திற்கேற்ப மாறிக்கொள்ளவேண்டாமா இன்னும் காட்டுமிராண்டி காலத்திலேயே இருப்பீர்களா என்கிறார்கள்.. காட்டுமிராண்டிகாலத்திலும் தாயை தாயாகதான் மதித்தோம்.. சில மாற்றங்களை ஏற்றுக்கொண்டாலும் இனத்தின் மீதான தாக்குதலை எப்படி வாய்மூடி இருக்கமுடியும்..ஒரு இனத்தை அழிக்க முற்பட்டால் முதலில் அதன் கலாச்சாரத்தை சிதைக்கவேண்டும்..என்கிறார் இலங்கையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்..கலாநிதி குணசிங்கம் .. ஒருமொழியை /இனத்தை, அதன் வளத்தை அழிக்க கலாச்சார பண்பாட்டு மீதான தாக்குதலே சிறந்தது.. அதைதான் இப்போது செய்துவருகிறார்கள்.. நமக்குள் இல்லாத ஒற்றுமையை தான் அவர்களின் பலமாக கருதி பண்பாட்டு மீதான தாக்குதலை தொடர்ந்து செய்துவருகிறார்கள்.. .. 2008 மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடைப்பெற்றார் .. ஆனாலும் திமுக ஆட்சியில் தொடர்ந்து சில நிபந்தனைகளோடு நடத்த அனுமதி கொடுத்தது.. சிலர் காங் திமுக ஆட்சியில் தான் தடை என்பது போல சித்தரிக்கிறார்கள் .. தடையை பெற்றது மேனகா தொடர்ந்த வழக்கில் என்பதும் peta அமைப்பின் அழுத்தமுமே காரணம்..மிருகவதை என்பதை ஏற்கமுடியாது ஏனெனில் யானைகளை திருவிழாக்கு தயார் செய்வதை பார்த்தால் காளை வளர்ப்பை குறைசொல்லமாட்டார்கள்.. போட்டியில் தங்கள் காளை யாரும் அடைக்கிவிட கூடாதென்பதற்காக சில ஏற்கமுடியாத செயல்களை செய்ததாகவும் மாடுபிடி வீரர்கள் மதுவை அருந்திவிட்டு வருவதாகவும் சொல்லபடுவதை மறுப்பதற்கில்லை ஆனால் இப்போதெல்லாம் மருத்துவ பரிசோதனைக்குட்பட்டே நடத்தபடுகிறது.. அனைவரும் ஒன்றுப்பட்டு நின்றால் மட்டுமே கைகூடும்.. இனி.. #வாடிவாசல்_திறக்கபடுமா.. .. ஆலஞ்சி மன்சூர்

அதிமுக பொதுக்குழு..

விசுவாசம்.. அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் இறுதியாக சசிகலாவை அதாவது சின்னம்மா என்ற அடைச்சொல்லோடு விசுவாசமாக பணியாற்றுவதாக ஒப்புதல்.. அதிமுக ஆரம்பிக்கப்பட்டபோதே திரு.ம.கோ.ராமசந்திரன் கட்சிவிதிகளை தயாரிக்க திருச்சி சௌந்தரராஜன் நாஞ்சிலார் உள்ளிட்டோரை கொண்டகுழுவை அமைத்தார் அந்த குழுவின் பரிந்துரையை முழுமையாக ஏற்காமல் பொதுசெயலரை ஒருமனதாக தேர்வு செய்யவேண்டுமென்றார்.. ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் அதிமுகவின் பொதுக்குழு என்பது பேச விவாதிக்க எப்போதும் அனுமதித்ததில்லை அதைதான் ஜெயலலிதாவும் பின் தொடர்ந்தார்.. இந்தநேரத்தில் ஒன்றை பதிவு செய்யவேண்டும்..திமுகவில் ஆதித்தனார் இணைந்த நேரம் அவரை தேர்தலில் நிறுத்த முடிவுசெய்த அண்ணா அவர்கள் பொதுக்குழுவில் பேசுகிறார்.. கடைசியில் அமர்ந்திருந்த கோ.சி.மணி அவர்கள் எழுந்து நின்று ..தேர்தலில் நிற்கட்டும் பரவாயில்லை எந்த சின்னத்தில் என கேள்வி எழுப்பினார்.. உதயசூரியன் தான் உட்கார் என்றார்.. பொதுக்குழுவில் கேள்வி கேட்கும் உரிமை எல்லோருக்கும் இருந்தது.. கலைஞர் தலைமையில் நடைபெறும் பொதுக்குழுவில் எதிர்கருத்தையெல்லாம் வீரபாண்டியார்,கோ.சி.மணி... போன்றோர் வைத்திருக்கிறார்கள்.. கலைஞர் சிலவற்றை ஏற்று திருத்தம் செய்த வரலாறும் உண்டு.. எல்லா பொதுக்குழுவிலும் மணியின் ஆறுமுகத்தை கருத்தை அறியாமல் கலைஞர் இருந்ததே இல்லை.. .. விசுவாசம் என்ற வார்த்தை கூட ஜனநாயகத்தில் ஒருவகை அடிமைத்தனத்தை உண்டாக்கும் .. தலைமையை ஏற்றுக்கொள்வது தலைமையின் முடிவுக்கு கட்டுபடுவதும் ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென்ற அடிப்படையில் வேண்டுமே தவிர எதிர் கேள்விகளை எழுப்பவோ அல்லது மாற்று கருத்தை பதியவோ கூடாது எதுவானாலும் கட்டுப்பட்டு நடப்பேன் என்பது ஜனநாயக மரபல்ல ஏகாதிபத்திய சர்வாதிகார போக்கு அடிமைத்தனம். .. அப்படியே பழகிவிட்டவர்கள் தங்களின் மதிப்பை இழந்து சுயமிழந்து நிற்பவர்களிடம் உரிமைகளைப்பற்றி பேசுவதில் அர்த்தமில்லைதான் பொதுக்குழு உறுப்பினர்களின் அதிகாரமென்ன கிளைக்கழக செயலர் மாவட்ட கழகம் பரிந்துரை செய்தே பொதுக்குழு உறுப்பினர் ஆகமுடியும்.. அவர் கட்சியின் மிக முக்கிய முடிவுகளில் பேசா மடைந்தையாக அமர்ந்து கைதூக்கி விதுவாசமுள்ள அடிமையாக இருப்பதல்ல.. கருத்தை ஆலோசனைகளை விருப்பை எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் இவையாவும் அதிமுகவில் எப்போதுமே நடந்ததில்லை.. பொதுக்குழுவின் மாண்பு எப்போதும் அதிமுகவில் கடைப்பிடிப்பதில்லை.. .. #அடிமைகளுக்கெதற்கு_கருத்துரிமை… #வீணர்கள்.. .. ஆலஞ்சி மன்சூர்

Wednesday, December 28, 2016

சசிகலா நடராஜன்

அதிமுக பொதுக்குழு.. சசிகலா நடராஜன் பொதுசெயலாளராக தேர்வு செய்யபடலாம் காரணம் அதை தவிர வேறு மார்க்கம்/வழி இல்லை இருக்கிறவரை சுருட்டலாமென்கிற மனோபாவம் தான் மேலோங்கி நிற்கிறது.. தமக்குள் அடித்துக்கொண்டால் துடைத்தெறியபடுவோம் என்பதால் சிறிய சலசலப்பை கூட தராமல் எதிர்ப்பை காட்டாமல் நடந்தேறும்.. சசிகலா பௌதுசெயலராக தேர்வு செய்யபடுவார்.. தை திங்களில் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கத்தில் #முதல்வராகலாம்.. .. இதனால் கட்சிக்கு ஆட்சிக்கோ தற்காலியமாக எதுவும் பின்னடைவு ஏற்படாது ஆனால் மக்களை சந்திக்கும் போது இது போன்று பெரும்பான்மை கிடைப்பதென்பது அரிதாகும்..இதில் ஒரு சௌகரியம் உண்டாகும் மறைமுகமாக காய்நகர்த்துபவர்கள் காணாமல் போவார்கள்.. சிறிய லெட்டபேட் கட்சிகள் தலையெடுக்காது.. தேசியகட்சிகள் என்ற பேரில் வலம் வரும் கம்யூனிஸ்ட்கள் வேறுவழியின்றி சசிகலாவின் பின்னால் செல்ல நேரிடும் .. இவையாவும் நான்காண்டுகள் தொடருமா என்பதும் சந்தேகம்..ஏனேனில் சசிகலா நடராஜனின் சாதீய சாயல் மாறுவது அவ்வளவு சுலபமில்லை.. கொங்குமண்டலம் எப்போதும் போல் அதிமுகவை பின்துணைக்குமா என்பதும் மிகபெரிய கேள்வியாக எழுந்துநிற்கிறது.. .. பொதுக்குழு எதிர்ப்பின்றி நடத்த எல்லா ஏற்பாடுகளும் நடப்பதாக தெரிகிறது நேற்றைய தினம் சசிகலா புஷ்பாவின் கணவரை அடித்தது கூட ஒரு எச்சரிக்கை தான்.. அடித்தவனை விட்டுவிட்டு அடிவாங்கியவனை கைது செய்யும் அவலம்.. இது அதிகாரம் எங்கள் கையில் என்பதை காட்டும் தந்திரம்.. ஒழுங்காக வந்து அமைதியாக செல்லவேண்டுமென விடப்பட்ட எச்சரிக்கை .. திரு.பன்னீர் செல்வம் பதவி விலக மறுத்தால் ஒரு வேளை சலசலப்பு அல்லது கட்சி இரண்டாகும் சாத்திய கூறுகள் உண்டு அது எந்தளவிற்கென்பதை பொறுத்திருக்கவேண்டும்.. காரணம் நேற்றைய இல.கணேசனின் பேச்சு சசிக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு எடுத்திருப்பதை காட்டுகிறது.. நிறைய எதிர்பார்ப்புகளை தந்தாலும் எதிர்பில்லாமல் அத்தாச்சி ஆட்சி கட்டிலில் அமரலாம்.. .. #புகைந்துக்கொண்டாதானிருக்கும்.. .. ஆலஞ்சி மன்சூர்

Tuesday, December 27, 2016

அரசியல் சதுரங்கம்

என்ன நடக்கிறது.. அதிகாரத்தைகையிலெடுக்க அதிகாரிகள் துணைக்கொண்டு பணத்தை பெரும் முதலீடாக்கி ஊடகங்களை கவர்ந்து எப்படியேனும் வந்துவிடவேண்டுமென்று சசிகலா துடிக்கிறார்.. மறைமுகமாக ஆட்சியை கையிலெடுக்க தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமித்து மத்தியில் ஆளும் பாஜக துடிக்கிறது தொடர்ந்து பன்னீரை வைத்து நடத்திடலாமென எணணுகிறது. இருவருமே அருகதையற்றவர்கள்... மக்கள் வாக்களித்தது இந்த இருவருக்குமே அல்ல மாறாக தவறினும் ஜெயலலிதாவைதான் தேர்வு செய்தார்கள்.. .. திரு.பன்னீர் செல்வமோ திருமதி சசிகலாவோ மக்களால் தேர்வு செய்யபடவில்லை ஜெயலலிதாவின் அரசில் இருந்தவர் மற்றொருவர் ஜெயலலிதாவின் தோழியென அறியபட்டவர் அவ்வளவுதான் இந்த இருவரில் மக்கள் ஏற்றுக்கொண்டால் யார்வேண்டுமானாலும் வரட்டும்.. ஆனால் இன்னும் நீண்ட நாட்கள் காலஅவகாம் இருக்கிறது என்பதற்காக ஏற்றுக்கொள்ளமுடியாது.. பினாமிகள் அரசின் அதிகாரத்திற்கு வருவது ஆபத்தானது.. .. நேரடியாக அதிகாரத்தில் இல்லாதபோதே இவர்களின் ஆட்டம் நாடு கண்டதுதான்.. சசி வகையறாக்கள் போலீஸ் படைசூழ வலம் வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.. நிறைய பேரின் சொத்துக்களை மிரட்டி வாங்கிய வழக்குக்கள் கூட இன்னமும் நிலுவையில் இருக்கிறது.. இவரை போன்றவர்கள் மக்கள் ஆதரவில்லாமல் ஆட்சிக்கு வருவது ஜனநாயகவிரோதம்.. .. ஆசிரியர் வீரமணி அவர்கள் சோதனையான காலகட்டத்தில் சசிகலாவை பொதுசெயலராக்க வேண்டுமென்பது கூட அபத்தமான பிதற்றல்தான்.. கட்சியின் உள்விவகாரம் அது.. ஆனால் முதல்வராக வரவேண்டுமென நினைக்கிற மாபியா கும்பலை தடுக்கவேண்டிய தார்மீக பொறுப்பு கழகத்திற்கு உண்டு என்பதை ஆசிரியர் உணரவேண்டும். ஆசரியர் சொல்வதை ஏற்க வேண்டுமென்பதில் ஏனெனில் பெரியார் சொல்கிறார்.. யார் சொன்னாலும்.. எதைப்பற்றி சொன்னாலும்.. ஏன #நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே.. .. புறவழியாக யார் வந்தாலும் அது ஜனநாயக மாண்பிற்கு இழுக்கு.. தமிழகம் தேர்தலை சந்திப்பதே சரியானதும் முறையானதும் கூட.. சசிகலாவை மக்கள் விரும்பினாலை அவரே வரட்டும் யாரும் தடுத்திட முடியாது.. Now... Dissolve the government.. .. ஆலஞ்சி மன்சூர்

ராவ்.. வாக்குமூலம்

ராவ்.. இன்னமும் தன்னை தலைமைசெயலர் என்கிறார்..கூடவே அவர் கூறிய கருத்துக்கள் அவர் அரசு அதிகாரியா அதிமுககாரா என தெரியவில்லை.. எனக்கே இந்த நிலையென்றால் சாதாரண அப்பாவி ..? அதிமுக தொண்டனுக்கு என்ன நிலை ஏற்படும் என்கிறார்.. உண்மையில் அதிமுக கட்சிக்காரனாகதான் 5 வருடம் இருந்திருக்கிறார்.. ஜெயலலிதாவிடம் ஐந்தரை ஆண்டு பயிற்சிப்பெற்றவன் என்கிறார்.. அரசியல் சட்டத்தை மீறிய செயல் என் மகன் மீதான குற்றசாட்டிற்கு எனது அலுவலகம் சோதனையிடப்பட்டதை கேள்வி கேட்கிறார்.. தலைமைசெயலராக தாமே தொடர்வதாக சொல்வதில் உண்மை என்ன என்னை பணிநீக்கம் செய்யாமல் சோதனை செய்திருக்க கூடாதென்கிறார்.. திருமதி கிரிஜா தலைமைசெயலராக பணிகளை கவனிக்கும் போது ராவ் நான் தான் தலைமைசெயலர் என்பது நிர்வாக குழப்பத்தை தராதா.. யார் தலைமைசெயலராக தொடரவேண்டுமென்று முதல்வர் தான் தேர்வு செய்யவேண்டுமே தவிர மத்தியரசு அல்ல .. முதல்வர் பன்னீர்செல்வம் இதற்கு விளக்கம் தரவேண்டும்.. .. திரு.ராவ் அவர்களே தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததைப்போல்தான் உங்கள் பேட்டி தருகிறது .. அப்பாவி அதிமுக தொண்டனுக்காக கவலைப்பட நீங்கள் யார்..உங்கள் மீதான குற்றசாட்டை மறுப்பதற்கு உரிமையிருக்கிறது யாரை கேட்டு சோதனை செய்தீர்கள் என்று கூட நீங்கள் கேட்கலாம் ஆனால் தங்களின் பேட்டி அதிமுக உறுப்பினரின் பேட்டியைப்போல இருப்பது கடந்த கால தங்களின் தலைமைப்பணியை/ செயல்பாடுகளை சந்தேகத்தோடு பார்க்க தோன்றுகிறது.. நேர்மையற்ற முறையில் அரசியல்கட்சி தொண்டனைப்போல தங்களின் கருத்து இருப்பது கவலைக்குரிய விடயம்.. .. தலைமை செயலகத்தை காப்பாற்ற தவறியதாக கூறப்படும் குற்றசாட்டில் உண்மையில்லாமல் இல்லை பலவீனமாக அரசை வைத்துக்கொண்டு மத்தியில் ஆளும் அவாள்களின் அரசு தங்களுக்கு சாதகமானவரை தலைமை பொறுப்பில் அமர்த்தியது.. ஆனால் ராவ் திருப்பியடிக்க தொடங்கியிருக்கிறார் தலைமைசெயலர் பதவிதான் மாநில அரசின் தலைமை பதவியென்பதால் அவர் மீது களங்கம் சுமத்த நினைத்த மத்திய அரசை கேள்விகளால் துளைத்திருக்கிறார்.. மாநில அரசு அதிகாரிகளுக்கு பாதுக்காப்பில்லை என்கிறார்.. அவரின் கருத்தை முழுவதுமாக தள்ளிவிடமுடியாது.. .. இனி.. முதல்வர் விளக்கம் அளித்திட வேண்டும்..யார் ஆட்சி செய்கிறார்கள் என விளக்கிட வேண்டும்..கவர்னர் இந்த ஆட்சியை தொடர அனுமதிப்பதா என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.. அரசு அதிகாரிகள் கட்சிக்காரர்கள் போல செயல்பட்டது அம்பலமாகியிருக்கிறது..தலைமை செயலரே ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்.. அரசை dissloved (கலைத்து) செய்துவிட்டு தேர்தல் மூலம் புதிய அரசை தேர்வு செய்யவேண்டும் அப்போதுதான் கொஞ்சமேனும் ஜனநாயகத்தின் மீது,மக்களாட்சியின் மீது நம்பிக்கை வரும்.. .. ஆலஞ்சி மன்சூர்

Monday, December 26, 2016

கலைஞர் அவர்களே..

கலைஞருக்கு கடிதம்.. .. கலைஞர் அவர்களுக்கு.., தங்கள் நலம் தமிழ் இனத்தின் நலனோடு இணைந்தது தாங்கள் வாழும் காலத்தில் அரசியல் பேசுவது எங்கள் பேறு.. திராவிட இயக்கத்தின் மீது தீராத காதல் கொண்டதால் ஒவ்வொரு அசைவையும் ரசிக்க முடிந்தது. காங்கிரஸ் நிழல் படிந்த தஞ்சை கிராம பின்னணியில் வளர்ந்த என் போன்றவர்களை திராவிட இயக்கத்தை நோக்கி நகர்த்தியதில் பெரும்பங்கு தங்களுக்கு உண்டு ஆம்.. பண்ணையார்கள் நிலக்கிழார்(மிராசுதார்) ஆதிக்கம் செலுத்திய எங்கள் தஞ்சைமண்ணில் திராவிட சிந்தனை கொண்டு சேர்த்ததும் தாங்கள் தான்..கிராமம் கிராமமாக அலைந்து காலுன்ற செய்தீர் அதை தீவிரமாய் கொண்டு சென்று சேர்த்ததில் கோ.சி.மணிக்கும் பங்குண்டு.. அந்த நன்றி எங்களுக்கு தங்கள் மீதும் மணி மீதும் எப்போதும் உண்டு அந்த தஞ்சைமண்ணிலிருந்து தான் இதை எழுதுகிறான்.. காவிரிக்காரனாய் கலைஞரின் தமிழ்காதலனாய்.. .. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையின் தலைமை குறித்து மக்கள் நம்புகிற தலைமையை தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டதென்றே நினைக்கிறேன்.. இரண்டாவது முறையாக மாற்றிய பொதுக்குழு தேதி..அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு நடத்தலாமென்ற எண்ணம் புரிகிறது.. கழக ஆக்கப்பணிகள் குறித்து தங்கள் தலைமையில் விவாதிக்க ஆலோசிக்க இருக்கும் வேளையில் திராவிட இயக்கத்தின் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்டவனின் மடல் .. சிறியதொரு பறவை சுமந்துவரும் சறுகைப்போல .. பயன்தரும் .. .. தீவிரமாய் கழகப்பணிகளைஆற்ற வயதின் காரணமாய் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது ஆனாலும் உளஉறுதியோடு செயலாற்றுகிறீர் தங்களை மையப்படுத்தியே அனைத்து நகர்கிறது..இன்னும் சொல்லப்போனால் அரசியலின் அசைவு நீர்.. மறுப்பதற்கில்லை இருப்பினும் தங்களின் ஆலோசனைகள் படியே அடுத்த தலைமுறை தலைமையை தேர்வு செய்வதற்கான காலம் வந்துவிட்டதாகவே எண்ணுகிறேன்.. நீண்டகால பயிற்சியும் அனுபவமும் கொண்ட வெற்றி தோல்வி இரண்டையும் சமநிலையில் பார்க்கிற கையாள்கிற ஐம்பதாண்டு பொதுவாழ்வில் தடம்பதித்த கட்சி ,இயக்கம் தாண்டி மக்களாலும் விரும்பபடுகிற தளபதி அவர்கள் பொறுப்பேற்கும் நேரம் வந்துவிட்டது இப்போது கூட காலந்தாழ்ந்தவிட்டதுதான்..இனியும் காலந்தாழ்த்துவது சரியாக தோன்றவில்லை.. தளபதி அவர்களின் செயல்பாடு மக்களால் ஈர்க்கபடுகிற/ விரும்பபடுகிற சூழலில் காலம் கனிந்து நிற்கும் வேளையில் அறிவிப்பதுதான் சரி.. .. நிச்சயமாக கட்சியும் தொண்டர்களும் தமிழகமக்களும் மறுப்பேதும் சொல்லாமல் தளபதியை ஏற்றுக்கொள்வார்கள்.... .. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்... அறியாதவரா தாங்கள்.. .. என்றும்.. நன்றியோடு.. ஆலஞ்சி மன்சூர்

Sunday, December 25, 2016

மணல் சிற்பம்

ஜெயலலிதா.. ஊடகங்களும் பார்பன சக்திகளும் சேர்த்து பிடித்துக்கொண்டிருந்த மாய பிம்பம் சிதறுண்டு போகிறது.. ஜெயலலிதாவை நிர்வாகத்தில் புலி என்றும் அவரைப்போல ஆட்சி செய்ய முடியாதென்றெல்லாம் ஜெயலலிதாவிற்கு பரிவட்டம் கட்டினார்கள்.. இதோ அவரின் ஆட்சி எவ்வளவு மோசமான ஆட்சியாக இருந்திருக்கிறதென்பதை தொடர்ந்து வரும் செய்திகள் நமக்கு சொல்கின்றன.. ஜெயலலிதா திட்டங்கள் எதுவுமே மக்களை முறையாக போய் சேரவில்லை என்பதைவிட 95 விழுக்காடு திட்டங்கள் ஆரம்பநிலையிலேயே முடங்கி கிடப்பதும்.. தொடங்கப்பட்ட திட்டங்களில் அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை கொள்ளையடித்திருக்கிறார்கள்.. தலைமைசெயலர் வீடும் அலுவலகம் கூட சந்தேக வளையத்திற்குள் வந்து சோதனை செய்யப்பட்டு கோடிக்கணக்கில் புதிய ₹2000 நோட்டுக்கள் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது.. அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக தமிழகத்தை களீபரம் செய்திருக்கிறார்கள்.. .. ஜெயலலிதாவின் ஒரே தகுதி அவர் பிராமணர் என்பதால் மட்டுமே மிக சுலபமாக, எதிர்வினையாற்றாமல் மத்திய அரசின் செயல்கள் இருந்தன.. மற்றபடி எந்த தகுதியோ,நிர்வாக திறமையோ சிறிதுமில்லாமல் தமிழக அரசை அதிகாரிகளின் செயல்பாட்டில் நடத்தியிருக்கிறார்.. அதனால் தான் சசிகலா குடும்பம் அதிகாரிகளின் துணைக்கொண்டு தமிழகத்தில் பேயாட்டம் ஆடியிருக்கிறது.. தொலைநோக்கு திட்டங்களோ சமூகமேம்பாட்டிற்காக செயல் வடிவமோ இல்லை.. எங்கும் எதிலும் வெளிப்படையான நிர்வாகமின்றி.. வெளிப்படையான ஊழல் லஞ்சமென சந்திசிரித்தது.. அதை ஊடகங்கள் பெரிதுப்படுத்தாமல்.. முந்திய திமுக ஆட்சியில் நடக்கவில்லையா என பேசி எழுதி மூடிமறைக்க பார்த்தது.. இதுவரை எந்த திமுக அமைச்சரும் ஊழல் வழக்குகளுக்காக தண்டிக்கப்பட்டதில்லை என்று அறிந்திருந்தும் பத்திரிக்கைகள் திரும்ப திரும்ப திமுக மீதே பழிபோட்டன.. ஆனால் முதல்வராக இருந்த போதே ஜெயலலிதா தண்டிக்கப்பட்டும் சிறைச்சென்றும்..பெரிய தியாகியாக/நியாயமானவராக/தெய்வமாக காட்ட முயற்சித்தது.. உண்மையில் ஜெயலலிதா சிறந்த நிர்வாகியாகவோ சிறந்த ஆளுமையாகவோ ,கம்பீரமோ இல்லை மாறாக அவரை உயர்ந்திப்பிடித்திருந்தவர்கள் கீழே போட்டப்பின் தான் தெரிகிறது அது சுடப்படாத களிமண் பொம்மையென்று ..சுக்குநூறாகிவிட்டது.. அவரை கூட்டாளிகள்,புகழ்ந்துதள்ளியவர்கள், கூட இருந்தவர்கள் இன்றைக்கு சந்கேகவளையத்தில் ஊழல்குற்றசாட்டில் நிற்கிற போது ஜெயலலிதாவின் லட்சணம் மக்களுக்கு புரிய தொடங்கியிருக்கிறது... .. ஜெயலலிதா இவ்வளவுதான்..ஆம் #ஜெயலலிதா_மணல்சிற்பம்...சிறிய அலைபோதும் கரைத்து கொண்டுபோய்விடும்.. #கரையதொடங்கிவிட்டது_மணல்சிற்பம் .. ஆலஞ்சி மன்சூர்

Saturday, December 24, 2016

பெரியார் தேசமிது

பெரியார் சிலையின் பீடங்களில் இருக்கும் வாசகங்களை அழிக்க வேண்டும். - ராமகோபாலன். திராவிடத்தை ஒழிக்கப்பட வேண்டிய நேரம் வந்தாயிற்று எச்.ராசா.. .. பெரியாரை,பெரியாரிய கருத்துக்களை மீறிய எதுவும் அவ்வளவு எளிதில் தமிழகத்தில் சாத்தியமில்லை இதை மகோராவும்(எம்ஜிஆர்) ஜெயலலிதாவும் அறிந்திருந்ததால்தால் மிதவாதிகளை போல #நடித்தார்கள் இல்லையேல் அவர்களின் முகம் வெளிறிப்போயிருக்கும்.. கடவுள் மறுப்பு வாசகத்தை அழிக்கவேண்டும் என்கிற ராமகோபலனே.. பெரியார் கடுமையாக எதிர்த்த தேவதாசிமுறை,பால்யவிவாகம் தீண்டாமை தாலிஅறுத்தால் மொட்டையடிக்கவேண்டும் எனச்சொல்லிப் பாருங்கள்.. உங்கள் வீட்டுப்பெண்களே விளக்காமாறை தூக்குவார்கள்.. .. நிறையபேர் பெரியாரை தவிர்த்து திமுகவை கொண்டாடுகிறார்கள் சில திமுக பதிவர்கள் (பெயரில் இருப்பவர்கள்) கூட ..நிச்சயமாக அவர்கள் திமுக கொள்கையாளர்கள் இல்லை மிதவாதிகள் எனும் போர்வையில் உளவும் பாசிசவாதிகள்.. பெரியாரை மீறிய தமிழகமோ திராவிடமோ திமுகவோ இல்லை.. என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.. .. மறைமுக காய்நகர்த்தல்களை அறியாமல் இல்லை கிரிஜா முதல் புதிய கவர்னர் வரை .. இது நீண்டகாலம் நீடிக்காதென்பது என்னதான் குறுக்குவழியில் தங்கள் செயல்திட்டங்களை கொண்டுவந்தாலும் தேர்தலுக்கு பிறகு துடைத்தெறியப்படும்.. அதனால்தான் மிக கவனமாக செயல்படுகிறார்கள். தமிழக மக்களின் உணர்வோடு கலந்துவிட்டதால்தான் சீமான் போன்றவர்கள் கூட திரும்பவும் பெரியாரை உயர்த்திபிடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.. ராமகோபாலன் வகையறாக்கள் ஒன்றை உணர்ந்துக்கொள்வது நல்லது .. கடலூர் கூட்டத்தில் செருப்புவீசினார்கள் செருப்பு வீசிய இடத்தில் பெரியாரின் சிலையை நிறுவினார் கலைஞர்.. செருப்பிற்கு ஒரு சிலை வருமென்றான் கவிஞன்.. எச்சரிக்கை.. .. அறிவிலிகளே புரிந்துக்கொள்ளுங்கள்.. அச்சமறியாத திராவிடர் பூமி.. #பெரியாரின்_தேசமிது.. .. ஆலஞ்சி மன்சூர்

ஜல்லிக்கட்டு

மாட்டை அடக்குவதற்கு பதில் சிங்கத்தை தருகிறோம் அடக்குகிறீர்களா.. உச்சநீதிமன்றம்.. நமக்கு திருப்பி கேட்க தெரியாதா.. எது வேண்டுமானாலும் உச்சநீதிமன்றம் பேசலாமா.. யானைக்கு பதில் பூனையை வைத்துக்கொள்ளலாமா.. பூனைக்கு அலங்காரம் செய்து ராஜவீதிகளில் ஊர்வலம் வருவோமா.. குதிரைப்படைவரிசைக்கு பதில் புலிகளோடு விருந்தினரை வரவேற்ப்போம்.... .. தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தை மிருகவதையென கூறுவது தமிழனை இழிவுப்படுத்தும் செயல் என ஏன் நீதிமன்றம் புரிந்துக்கொள்ள மறுக்கிறது.. நாட்டில் வாழும் மிருகங்கள் மனிதனுன் பயன்பாட்டிற்கே பெரிதும் உதவுகிறது.. மாடுகளோடான தமிழரின் உறவு பிற இனத்தவரிடமிருந்து வேறுபட்டது.. உலகில் தமிழன் மட்டுமே தன்னோடு உழைத்த மாட்டை கௌரவப்படுத்துகிறேன் .. மாட்டுப்பொங்கல் என கொண்டாடுகிறான்.. .. சில குறைகள் ஜாதீய ரீதியான விழாவாக கொண்டாடபடுகிறது.. போதைப்பொருட்களை கொடுத்து மாட்டை வெறிக்கொள்ள செய்கிறனர் என்ற குற்றசாட்டை மறுப்பதற்கில்லை.. மேலெழுந்தவாரிய பார்வையது என்றே நினைக்கிறேன்.. குறிப்பிட்ட வாட்டாரத்திற்குள் ஜல்லிக்கட்டு பிரபலமானதும் அங்கு வசிக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் பிரத்கேய கவனம் செலுத்துவதால் எண்ணம் தோன்றுகிறது பிற சமூகத்தை சேர்ந்தவர்களும் மாடு வளர்க்கிறார்கள்.. அதிக பொருட்செலவில் ஜல்லிக்கட்டு மாடுகள் தயாராகின்றன.. சாராயம் போன்றவைகளுக்கு பயன்படுத்தபடுவதை தடுக்க மாடுகள் மருத்துவ பரிசோதனை செய்யபடுகின்றன. இதனால் இவர்களது குற்றசாட்டு உடைந்து போய்கிறது மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த படுகிறார்கள்.. .. சங்ககாலம் முதலே மாடுபிடி எனும் ஜல்லிக்கட்டி ஏறுதழுவுதல் என புலவர்கள் பாடிவைத்திருக்கிறார்.. எங்கள் கிழவன் ..கூட மானம் அவன் கேட்ட தாலாட்டு மரணம் அவன் ஆடிய விளையாட்டு என்று புதிய சங்கத்தமிழ் வடித்தான்.. நீதி மறுக்கபடும் போதெல்லாம் நாம் ஒன்றிணைய வேண்டியிருக்கிறது.. இனம் மொழி,கலாச்சாரம் பண்பாடு மீதான தாக்குதலை ஒருங்கிணைந்து எதிர்போம் போராடுவோம்.. #மானமிகு_தளபதியார் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாபெரும் அறப்போரை நடத்துகிறார்.. ஜாதி,மதம்,இனம் கடந்து தமிழராய் ஒன்றுபடுவோம்..வென்றுகாட்டுவோம்.... .. ஆலஞ்சி மன்சூர்

Friday, December 23, 2016

நான்..

என்ன..செய்துவிட்டேன்.. ஆண்டொன்று போனது.. அவ்வளவுதான் .. .. கொஞ்சம் ஆணவம், கொஞ்சம் அகங்காரம் .. கொஞ்சம் அன்பு.. சொன்ன சேதிகள்..கொஞ்சம் சொல்லாததோ..நிறைய எஞ்சும் .. பகுத்தறிவு.. தமிழர் நாகரீகம்.. தமிழர் அரசியல் தமிழன் பண்பாடு.. திமிர்.. வீரம் விளையாட்டு கோபம் எல்லாம் பந்தியில் வைத்தேன் .. கொஞ்சம் திராவிடம் பேசினேன்.. எதற்கும் அஞ்சா திமிரோடு.. கோவம் கொண்டேன்.. தமிழ்குல பகைவர் மீது கருணைக்கொண்டேன்.. வாடி நின்ற வறியவர்மீது.. எல்லாம் நேர் நின்றே செய்தேன்.. புறம் நின்று தாக்குதல் தமிழன் மரபில்லை என்பதால்.. .. கொஞ்சம் காதல். கொஞ்சம் காமம்.. கொஞ்சம் கலவி..சொன்னேன்.. பெண்கள் தம்மை கேலி பேசும் நிலைக்கண்டால் பெரியாரின் தடியெடுத்தேன் எல்லாம்.. சுயமரியாதை நிழலில் நின்றே செய்தேன்.. .. நான்.. சிறகுள்ள பறவை எல்லா மரக்கிளையிலும் அமர்வேன் ஆன்றோர் சபை.. அறிவிக்கொவ்வா ஆன்மீகம் பேசுவோர் சபை சான்றோர் சபையென.. அடிக்கடி அமர்வேன்.. அறிவின் சுடரில் அமுதம் சுவைப்பேன்.. நான் ரசித்தவை அறிவேற்றதை.. அவைக்கு வைப்பேன்.. அவ்வளவு தான்.. .. ஆலஞ்சி மன்சூர்...

Thursday, December 22, 2016

பெரியார் நினைவில்

#டிசம்பர்24.. .. பெரியார்.. யாரிந்த ஈரோட்டு கிழவன். கூன் விழுந்த என் அப்பனை தூக்கி நிறுத்தியவன்.. கக்கத்தில் வைத்திருந்த துண்டை தோளில் போட்டு அழகுபார்த்தவன்.. கடவுள் மறுப்பல்ல என் கொள்கை ஏற்றதாழ்வை சரிசெய்தலே என்றான் கடவுள் பெயரில் பிரித்துவைத்ததால் அந்த கடவுளையே எதிர்க்கிறேன் என்றவன்.. .. எல்லோரும் வந்தார்.. மதவாதிகள்.. மார்க்கம் பேசியவர்.. இலக்கணம் வடித்தவர் இன்ப இலக்கியம் சொன்னவர் அறிவை.. ஆய்ந்து திறம்பட சொன்னவர்.. திறமையாளர்கள்.. ஆன்மீக பேசியவர்.. அரசியல், நிர்வாகம் மடமை மூடம்.. முதிர்ந்த சொல்.. விவேகம் ,வீரம். சமூகசிந்தனை சமுதாய நலன் வாழ்வியல் சொன்னவர்.. என வந்தார்கள் ..சான்றோர்கள் பலர்.. எல்லோரும் .. தான் சொல்வதை மட்டுமே சரியென்றார்கள்.. ஆனால்.. இந்த பெருங்கிழவன் மட்டுமே.. யார் சொன்னாலும் எதைப்பற்றியென்றாலும் எப்படி சொன்னாலும்.. ஏன் நானே சொன்னாலும்.. உன் அறிவேற்காததை ஏற்காதே என்றான்.. அதனால் இன்னமும் நிலைத்து நிற்கிறான்.. .. எல்லாவற்றிக்கும் தீர்வை சமூகநீதியின் அளவுகோலில் பார்த்த பேரறிவாளன் ஆண்குழந்தையை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தையை படிக்கவையுங்கள் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்கவைக்க தொலைக்காளன் எல்லாவற்றிலும் முற்போக்கு எழுத்தில் பேச்சில் எப்போதும் இருந்ததில்லை எப்போதும் பிற்போக்கு.. .. தமிழ் மண்ணையும் தமிழனையும் எப்போதும் காத்துநிற்கும்.. ஆயுதம்.. ஆம்.. பெரியார்.. பகைவர் குலைநடுங்கும் எங்கள் #பேராயுதம்.. .. #பெரியார்நினைவில்43 கலைஞரின் வரிகளோடு முடிக்கிறேன் பம்பரமும் சுற்றிய பின் ஓய்ந்துவிடும் படுகிழமாய் ஆனப்பின்பும் பம்பரம் போல் சுற்றுகிறார்.. #எம்பெரியார்.. .. ஆலஞ்சி மன்சூர்

Wednesday, December 21, 2016

ராம் மோகன்...

தலைமை செயலர் .. தமிழக அரசின் தலைமை செயலர் ராம் மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலக சோதனை..இங்கே எல்லோரும் பதறுகிறார்கள் மாநில சுயாட்சி லெவலுக்கு.. ஜெயலலிதாவின் தனிசெயலராக இருந்தபோதே இவர்மீது நிறைய குற்றசாட்டுகள் வந்தன ஆனால் ஜெயலலிதா Influence செல்வாக்கை பயன்படுத்தி சரிசெய்தவர் .. ஜெயலலிதாவால் தலைமை செயலராக நியமிக்கபட்ட போது அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு வந்தது.. .. மிகபெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறார்.. இவரை பதவியிறக்கம் செய்து விட்டு சோதனை செய்திருக்கலாம். அரசியல் வாதிகள் அரசு ஊழியர்கள் வீடுகளில் ரெய்டு நடப்பது புதிதல்ல ஆனால் தலைமை அதிகாரி பொறுப்பில் இருப்பவர். ஏன் ஒட்டுமொத்த தமிழக நிர்வாக சுமைதலை உள்ளவர் வீட்டில் என்கிறபோது தலைகுனிவை ஏற்பட்டிருக்கிறது அதைதான் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.. .. இப்போது நடத்தப்படும் சோதனைகளின் பின்னில் எதுவாக இருக்கட்டும் இவர்கள் இத்தனை கொள்ளைகளையும் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் செய்தார்கள் என்பதை மறக்க செய்கிறார்கள் ஜெயாவின் தனிசெயலராக இருந்தவர் இன்னும் சொல்லப்போனால் மன்னார் மாபியாவின் இசைக்கேற்ப ஆடியவர் அதனால் தான் தலைமை பொறுப்பிற்குவரை வரமுடிந்தது. .. இந்த சோதனைகளின் மூலம் தமிழகத்தில் மறைமுக அதிகாரபிரயோகத்தை காவிகள் தொடங்கியிருக்கிறார்கள் நோக்கம் நேரடியாக எந்தகாலத்திலும் வரமுடியாதென்பதால் இருக்கிற வரை தங்களின் சொல்படி ஆடுகிறவரை வைத்து காலம் கடத்தலாம் ஏறக்குறைய #பொம்மலாட்டத்தை நடத்திட எண்ணுகிறார்கள்.. ரெய்ட் க்கு எதிராக யாரும் பேசவில்லை ஆனால் அதற்காக இந்த சோதனை (ரெயிட்) வளைத்தொடித்து தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டுவைப்பதற்காக இருக்ககூடாது.. மற்றொரு சந்தேகமும் வருகிறது.. உயர்ந்தவர்கள் மட்டுமே அமர்ந்த பதவியில் இடைநிலைக்காரன் வந்தது பொறுக்கவில்லையா என்ற சந்தேகமும் வருகிறது ஏனெனில் முதல்வரின் ஒப்புதல் இல்லாமல் தலைமைசெயலர் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடத்த முடியாது.. முதல்வர் மோடி சந்திப்பின் பின்னணியில் காய்நகர்த்தல் இருந்திருக்கலாம்.. .. இதில் சுவாரஸ்யம் இந்த ராமன் தான் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை செயலராக இருந்தார் ..காலக்கொடுமை .. #இதெல்லாம்எவ்வளவுஅசிங்கம்தெரியுமா... .. ஆலஞ்சி மன்சூர்

Tuesday, December 20, 2016

ஊடகஅறம்

ஊடகங்கள்.. நேற்றுவரை அதிமுககாரன் அம்மா என்றழைத்ததை ஜெயலலிதா என அழைப்பதில் ஆச்சரியபட ஒன்றுமில்ொலை ஆனால் ஊடகங்கள் ஒற்றை இரவில் மாறியதை எண்ணும் போது இவர்களின் #ஊடகஅறம் நமக்கு தெரிகிறது #காசுபணம்துட்டு.. Assets case சொத்து வழக்கென்ற மூச்சுபிடித்து முழங்கிய பாண்டே இப்போது சொத்துகுவிப்பு என்கிறார்.. ஜெயலலிதா இருந்தவரை சொத்து வழக்கானது மறைவிற்கு பிறகு சொத்து குவிப்பானது.. அதோடு விட்டாரா சசியை தூக்கிபிடிக்க வேண்டுமென்பதற்காக ஜெயலலிதா தான் சொத்துகுவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியென்கிறார்.. இதை ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சொல்ல மறந்துவிட்டாரென நினைக்கிறேன்.. .. கட்சிக்காரனும் ஊடகங்களும் இவ்வளவு சீக்கிரம் ஜெயலலிதாவை பின்னுக்கு தள்ளுவார்கள் என எண்ணவில்லை..ஜெயலலிதாவுக்காக மக்கள் வாக்களிக்கவில்லை இரட்டை இலைக்காக வாக்களித்தார்கள் என இவர்களால் சொல்லமுடிகிறது திரு.பொன்னையன் போன்ற மூத்த தலைவர் கூட ஜெயலலிதாவிடம் கலந்தாலோசிக்கும் போது அவர் சின்னம்மா சகுந்தலாவை (சசிகலா என்பதற்கு பதில் சகுந்தலா என்று உளறினார்) கலந்துக்கொள்ளுங்கள் என்பார் என்றார் ஜெயலவிதாவை இதைவிட அசிங்கப்படுத்திவிட முடியாது இப்படியெல்லாம் இவர்களால் பேசமுடிகிறதென்றால் இதுவரை இவர்கள் நடத்தி வந்த நாடகம் #நயவஞ்சகம் இல்லாமல் வேறென்ன.. .. ஏறக்குறைய எல்லா ஊடகங்களும் சசிகலாவை focus கவனம் செலுத்துகிறது.. ஜெயலலிதா பின்துணைத்தது கூட ஒருவகை ஈர்ப்பால் என சொல்லலாம் ஆனால் சசிகலாவை பின்துணைப்பது முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்த (பணம் பிரதானம்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதிக்கலாமென்ற ஒற்றை நோக்கை தவிர வேறேதும் இருக்க முடியாது.. இன்னும் சில ஊடகம் தீபாவை தூக்கிபிடிக்கிறது நேற்றுவரை யாரென்றே தமிழக மக்கள் அறிந்திராத ஒருவரை முதல்வராக போட்டிக்கு நிறுத்துகிற அயோக்கியதனத்தை செய்கின்றன.. .. ஊடகங்கள் சமீபகாலமாக சமூக தேச நலன் சார்ந்து செயல்படுவதே இல்லை சசிகலாவின் வரவு இந்த நாட்டிற்கு (மாநிலம்) நலன் பயக்குமா என்று யோசிக்க மறுக்கின்றன பத்திரிக்கை தொலைகாட்சி ஊடகங்கள் தங்களை உயர்த்திக்கொள்ள நினைக்கிறதே அன்றி நாட்டிற்கு நல்லதையோ மக்களின் உணர்வுகளையோ மதிக்கவோ/விரும்பவோ இல்லை.. நிறைய கருத்து வேற்றுமை இருந்த போதும் கல்கி, வாசன் ,சிவராமன் போன்றோர் சில இக்கட்டான நேரங்களின் கெட்டவைகளை சரியில்லாத தலைமையை சாடியிருக்கிறார்கள்.. சரியானமுடிவுகளுக்கு ஆதரவு தந்து ஊடக அறத்தை நிலைநாட்டியிருக்கிறார்கள்.. .. பணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு செயல்படுவது #ஊடகவேசித்தனம்... .. ஆலஞ்சி மன்சூர்

தகரங்கள்

தீபா.. நேற்றைய தினம் பார்க்கமுடியாத பாண்டேவுடனான சந்திப்பை யூடியூப்ல் பார்த்தேன் ஜெயலலிதாவின் குரலின் சாயல் இருக்கிறது.. ஒரே நாளில் அரசியலிக்கு வருவதென்பதும் உடனே உயர் பொறுப்புக்களை பெறுவதும் இந்திய அரசியலில் நடக்காத காரியமில்லை.. விமான ஓட்டியை திடீரென பிரதமராக்கிய அதைவிட ஏற்றுக்கொண்ட நாம்.. இதுபோன்றவர்களை கடந்து போக வேண்டியிருக்கிறது.. .. அதிமுகவில் அதிகார போட்டி இப்போது வெளிப்படையாக தெரியவருகிறது.. நிறைய கேள்விகளுக்கு பதில் அவரிடம் இல்லையென்றாலும் மென்மையாக சமாளிக்கும் திறன் இருந்தது சசியைப்போல் இலைமறைவு ஊமைநாடகம் நடத்தவில்லை அதுவரை நல்லது.. இருவருமே தகுதியானவர்களா என்றால் இல்லை தமிழகத்தின் சாபம் தீர நான்காண்டுகால அவகாசம் தான் பெரிய இடைஞ்சல்.. இல்லையெனில் இந்நேரம் முடிவு தெரிந்திருக்கும்.. பாண்டேவின் மடத்தனமாக #சசிஅத்தைக்கு தீபக்கை பிடிக்கிறதே தீபாவை ஏன் பிடிக்கவில்லை என்றார்.. பதவிக்கு ஆசைபடாதவரை பிடிக்கதான் செய்யும் எங்கே தீபாவை விட்டால்( தீபா ஒரு பத்திரிக்கையாளர்) தனக்கு இணையாகவந்துவிடுவாரோ என அஞ்சி தவிர்த்திருக்கலாம்.. .. அதிமுக சிதறுண்டு போகாமல் தடுப்பது கால அவகாசம் அதிகமிருப்பதும் ஏப்போதுமில்லாத அளவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதுமே காரணம்.. நிறைய அதிமுககாரர்கள் சசியால் மட்டுமே செலவு செய்யமுடியுமென நம்புகிறார்கள்..சில பகுதிகளில் சாதீய ரீதியான எதிர்ப்பும் வலுக்கிறது.. சிறிதுகாலம் இதை ஆறபோடலாம் ஆனால் ஒருநாள் சிதறிப்போகும்.. காரணம் அதிமுக என்பதே கொள்கையாலோ இன மொழி உணர்வாலோ ஏற்படுத்தப்பட்ட இயக்கமோ கட்சியோ அல்ல அது ஒரு தனியார் அமைப்பை போன்றது.. தனிநபர் கவர்ச்சியில் கட்டமைக்கப்பட்டது நீண்டகாலம் அதிகாரம் ஆட்சி பணம் போன்றவைகளைக்கொண்டு மெழுகப்பட்டிருந்தது அவ்வளவுதான்.. ஒரு குறிப்பிட்டவர்களின் கீழ் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது அக்கட்சி தொண்டர்களிடம் கூட கவர்ந்திருக்கும் தனித்தன்மை இப்போது போட்டியிடும் சசி & தீபா விடம் இல்லை.. பணம் சிறுதுகாலம் துணைநிற்கும் தொடர்ந்து கட்டிகாக்குமா என்றால் முடியாதென்றே பதில் கிடைக்கும்.. .. பொதுமக்களிடம் ஜெயலலிதாவிற்கு இருந்த ஆதரவு இந்த இருவருக்கும் இருக்குமென கூற முடியாது அது பெரும்பின்னடைவை அதிமுகவிற்கு தரும் இப்போதைய சூழலில் பணமும் பதவியும் காப்பாற்றலாம்.. அவ்வளவுதான்.. #தகரங்கள்_துருப்பிடிக்கும்.. .. ஆலஞ்சி மன்சூர்..

Monday, December 19, 2016

வைகோ.. எனும் ஆலகாலவிசம்..

வைகோவின் கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை.. #மானமிகு_தளபதி… இதைவிட நாகரீகமாக நச்சென்று கொட்டியிருக்க முடியாது ஆனாலும் அந்த மானங்கெட்ட மடையனுக்கு இதெல்லாம் உறைத்திருக்காது.. நயவஞ்சகத்தை நெஞ்சில் கொண்டு நடக்கும் நான்காம்தர அரசியல்வாதி இவர் கடந்த இருபதாண்டுகளாக செய்துவந்த ஈழ பிண அரசியல் படுத்துவிட்டதால் வேறுவழியின்றி திமுகவை சொறிந்து தன் பிழைப்பை நடத்த ஆசைபடுகிறார்.. வேறு மார்க்கமே இல்லாமல் அதிமுக எனும் அரசியல் இயக்கம் கரைந்துவிடும் என தெரிந்தும். எதிர்கால அரசியல் வியாபாரம் படுத்துவிட கூடுமென அஞ்சி ஏதேதோ உளறல்களை அள்ளிவிட்டு கடைசியில் முத்திப்போன #வட்டனைப்போல சிலநேரம் காட்சிதருகிறார்.. .. எண்ணம் எப்படியோ அப்படிதான் எல்லாம் அமையும் என்பர்.. வைகோவின் எண்ணமே அவரை வீழ்ச்சியில் நிறுத்தியிருக்கிறது ...அரசியலில் நிறைய பேரை பார்த்தாயிற்று..சொல்லிலும் செயலிலும் நேர்மையில்லாதவர்களை காலம் அரசியலிலிருந்து விடைகொடுத்து அனுப்பிவிடும்..வைகோ இப்போது நிற்பது எச்சரிக்கை பகுதியில் Warning Area.. மேலும் மேலும் தவறிழைத்து கொண்டிருந்தால் காலம் இவரை ஆழப்புதைத்துவிடும்.... அரசியல் என்றில்லை எதிலுமே துரோகம் வீழ்ந்துதான் போயிருக்கிறது.. ஒன்றா இரண்டா துரோகங்கள்.. அனைத்தையும் மறந்து தாயைப்போல அரவணைத்த ஆசானை மிக கேவலமாக பேச முடிகிற மனிதனை இந்த வையம் கண்டதில்லை..அரசியலில் வளர்த்து ஆளாக்கிய தந்தைப்போல #வையத்து_முந்திருக்க செய்த பெருமகனை.. சாதி குலத்தொழிலை செய்ய சொன்ன கேடுகெட்டவனை.. கலைஞரின் காலடி மண்ணெடுத்து வீச தோன்றுகிறது.. அப்பவும் மன்னித்து மன்னித்து போய்விட்டுபோகிறான் நம்மபயதானே என நெஞ்சம் வாஞ்சையோடு பேசுகிற பெருமகன்தான் #கலைஞர்.. .. ஆசான் அப்பனுக்கு சமம் என்பார்கள்.. தந்தையாய் உன் வளர்ச்சி பூரித்தவரை ஏசியும் கேலிசெய்தும் மாறி மாறி பொய்களை சொல்லியும் போக்கிடமில்லாமல் திரியும் தெருநாயைப்போல கல்லடிபடுகிறார் வைகோ.. .. இனியேனும் நாவடக்கவேண்டும்.. தளபதியின் ஒற்றைவரி பதில் நூறுபக்க விளக்கத்திற்கு சமம் Equal to hundred-page explanation.. இல்லையேல் இனியும் விட்டுவைப்பதில் பலனில்லை.. பழைய திமுககாரன் என்பதால் பெறும் சலுகைகள் இனி கிடைக்காது.. எல்லா இடங்களும் வேட்டையாட படவேண்டிவரும்.. #எச்சரிக்கை.. நாவடக்கவேண்டும். ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்... என்ற குறள் அறிதல் நன்று.. ஒரு தீய சொல் அத்தனை நல்ல சொற்களையும் அழித்துவிடும்.. பாலில் ஒரு துளி விசம்போல.. .. ஆலஞ்சி மன்சூர்

Sunday, December 18, 2016

கோ சி மணி

கோ.சி.மணி படதிறப்பு.. தளபதி திறந்துவைத்தார் அரங்கம் நிரம்பிவழிந்தது.. கும்பகோணம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அண்ணன் மணி அவர்கள் என்பதை கூட்டம் சொல்லாமல் சொன்னது.. நிறைய நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார்கள்.. .. துரைமுருகன் பேசும் போது ஒருவிடயம் சொன்னார்.. கலைஞருக்கு கருப்புகொடி காட்ட தீர்மானித்திருந்தார்கள்.. சிலர் அந்த போகவேண்டாமென்ற போது மணிதான் அழைத்துப்போனாரென்றார்.. அந்த சம்பவம் நினைவிற்கு வந்தது.. கலைஞருக்கு எதிராக சிலர் வேண்டுமென்றே பிரச்சாரம் செய்து தாக்க தயாரானார்கள்...இன்றைக்கு அருள் தியேட்டர் அருகில்.. சம்பவமறிந்து கலைஞரிடம் போகவேண்டாம் என்ற போது மணியை அழைத்து என்ன மணி என்றார்.. ஒரு பதினைந்து நிமிடம் பொறுத்துகண்னே என சொல்லிவிட்டு தொம்பன்குடிசை வரை வந்தார்.. மணி அண்ணனே களத்தில் என்றவுடன் ஒருவரையும் காணோம்.. திரும்பி வந்து கலைஞரிடம் இப்ப போகலாமென்றார்.. கலைஞர் வந்த போது அவ்வளவு அமைதியாக இருந்தது அதுதான் மணி.. .. இன்னொரு சம்பவத்தை தளபதி அவர்கள் நினைவு கூர்ந்தார்.. தளபதி உள்ளாட்சித்துறை அமைச்சர் அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக மணி அண்ணன் இருந்தார் அப்பேதுதான் கோ.சி.மணி அவர்களின் துணைவியார் மறைந்துபோனார்.. அவருக்கு அஞ்சலி செலுத்த ஸ்டாலின் சென்றார் .. அப்போது அவரை தனியாக அழைத்து கும்பகோணம் தேர் வருகிற வழியை செப்பனிடவேண்டும் அது உன் இலாக்காவில் தான் வருகிறது செய்து கொடு என்றாராம்.. மனைவியின் உயிரற்ற உடல் கிடக்கும் போது கூட தொகுதி நலன் குறித்து மக்கள் நலன் குறித்து சிந்திக்க செயல்படமுடிந்ததை தளபதி சொன்னபோது குரல் தளதளத்தது.... எனக்கு ஆச்சரியம் வரவில்லை கலைஞர் தன் மனைவி உடல்நலிவுற்று இருந்தபோதுகூட பொதுகூட்டத்திற்கு சென்றவர். அவரின் வார்ப்பு வேறெப்படி இருக்கும்.. .. எல்.ஜி பேசும் போது கோ.சி.மணியிடம் வன்னியர் சங்கத்தினர் பிரச்சனை செய்ய அவரது வீட்டை முற்றுகையிட்ட சேதியறிந்து எல்.ஜி போன்றவர்கள் விரைந்திருக்கிறார்கள் ..கூலாக ஏம்பா இதுக்கா வந்தீங்க ஏதாவதுன்னா இங்க உள்ளவங்க பாத்துக்கமாட்டாங்களா.. என்றாராம்.. அதை மேற்கோள்காட்டி பேசிய ஸ்டாலின்.. ஒரு சேதி சொன்னார் .. அண்ணன் மணியிடம் சிலர் மற்றகட்சியனர் அடித்துவிட்டதாக சொன்னபோது அடிவாங்கிட்டு வராதே அடிச்சிட்டு வா காப்பாத்துறேன்..என்பார் என்றார்.. புரிந்திருக்கும்.. .. மணி அண்ணன் எல்லா நேரமும் கட்சியை பற்றியும் கலைஞரைப்பற்றியுமே சிந்தித்தவர்.. பொதுக்குழுவில் கடைசியில் அமர்ந்திருப்பார்.. கலைஞர் தலையை நிமிர்த்தி பார்த்தால் போதும் பொதுக்குழுவை கலைஞரின் எண்ணவோட்டத்திற்கு தகுந்தாற்ப்போல மாற்றிவிடுவார்.. கலைஞரின் கண்ணின் மணி.. நிலைகுலையா மாவீரன்.. கழகத்தின் காவிரிக்கரை காவலன்.. மணியின் புகழ் நிலைத்திருக்கும்.. .. #மங்காதமாமணி_எங்கள்_கோ_சி_மணி.. ..

Saturday, December 17, 2016

இவரின் நாக்கே ..எதிரி..

இப்போது சொல்லுங்கள்.. வைகோவை விரட்டியது சரியென்று.. .. ஸ்டாலின் ஆட்களை அனுப்பி தாக்குதல் நடத்தினார் என்கிறார் வைகோ.. அதற்கு அவசியமென்ன இருக்கிறது .. தனக்கு சமமானவரோடுதான் அரசியல் செய்யவேண்டும் தன் நிழலில் கூட அரசியல் செய்ய அருகதையற்றவரை ஏன் கண்டுக்கொள்ளவேண்டும்.. தளபதி சமமாக அரசியல் செய்யும் யோக்கியதைகூட வைகோவிற்கில்லை.. கலவரத்தை உண்டுபண்ணவேண்டியே திரு.ஸ்டாலின் மருத்துமனையில் இல்லாதபோது வந்ததது ஏன்.. .. வைகோ அரசியல் பிழை இனியேனும் ஊடகங்கள் அவரை புறக்கணிக்கவேண்டும் வெத்துவேட்டோடு என்ன வேலை வேண்டிக்கிடக்கிறது.. இந்திய ஊடகங்களில் வைகோவின் முகம் வெளுத்துவிட்டது வடமாநிலங்களில் வைகோ இதுவரை கட்டமைத்திருந்த பிம்பம் நேற்றோடு கரைந்துப்போய்விட்டது .. வைகோ ஒன்றுக்கும் உதவாதவரென நேற்றுதான் வடமாநில தலைவர்கள் புரிந்துக்கொண்டிருக்கிறார்கள்.. .. தன்னை வளர்த்து உயரத்தில் ஏற்றிவைத்த தலைவனை குலத்தொழிலை செய்ய சொன்ன.. சாதிச்சொல்லி அழைத்து அயோக்கிய அரசியல்வாதி இவர் இதுவரை அமைதிகாத்தது கூட அண்ணாவும் கலைஞரும் சொல்லிதந்த நாகரீகம் தான் காரணம்.. வலிமிகுதி ..ஒரு எல்லையை தாண்டியதன் விளைவு இது.. மிதவாதிகள் நடுநிலையாளர்கள் கூட வைகோவின் அரசியலை விரும்பவில்லை.. எங்கே என்ன பேசவேண்டுமென்று கூட தெரியாத மூன்றாம்தர பேச்சாளர் அவ்வளவுதான் வைகோவின் தகுதி... சிறந்த ஆளுமையாகவோ அல்லது சிறந்த பண்பட்ட பேச்சாளராகவோ இல்லை.. இவரின் நாக்குதான் இவரின் எதிரி.. எங்கே எதை எப்படி பேசவேண்டுமென்று தெரியவில்லை இவருக்கு.. கட்சிதலைவராகவோ கூட இருக்க அருகதையில்லாதவர்.. ஜெயலலிதா பிணத்தின் மீது நின்று திமுகவை பார்த்து கொக்கரித்தவர்.. இவரை விட்டுவைப்பது கூட எதிர்கால அமைதியான அரசியலுக்கு #பேராபத்து.. .. #பிடிங்கியெறியப்படவேண்டிய_விஷசெடி_வைகோ.. .. ஆலஞ்சி மன்சூர் ...

வருத்தமிருக்கிறது

வருத்தமிருக்கிறது ஆனால் உணர்ச்சியின் வடிகால் கோவமாய் வெளியேறும் போது தடுத்திட முடியாது.. தம்பிதுரையும் ஜெயகுமாரையும் நாகரீகமாக அழைத்துச்சென்றவர்கள் .. வைகோவை துரத்துகிறார்களென்றால் தவறு யார் மீது என புரிந்திருக்கும்.. துரோகத்தின் முகமாக காட்சி தந்தும் மன்னித்த பெருந்தகையை மீண்டும் மீண்டும் சர்ந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கத்தியை கூர்பார்க்கும் கயமையை வேறெப்படி கைங்கர்யம் செய்வது.. தாயின் மரணத்திற்கு வந்தவரை அரசியல் செய்யவந்தவர் என்றவரிடம் எந்த நம்பிக்கையில் அரசியல் செய்வது.. இழவுவீட்டில் அரசியல் பேசுகிறவரிடம் .. மைக் கையில் கிடைத்தால் திமுகவை மட்டுமே வசவு பாடுகிறவரிடம்.. எந்த வகையில் ..நாகரீகம் பாராட்டுவதென்று தெரியவில்லை சிலர்.. இதுதான் அரசியல் பண்பாடா என வகுப்பெடுக்கவேண்டாம்..ஏனெனில் அரசியல் நாகரீகம் மாற்று கட்சி நண்பர்களைவிட திமுககாரனிடம் அதிகம் காணலாம்.. .. தலைமை கழகமும் தளபதியும் இப்போது கூட வருத்தம் தெரிவித்திருக்கிறார் பாருங்கள் இதுதான் திமுகவின் அரசியல் பண்பாடு.. நடந்த சம்பவம் #வலிமிகுதியின்_வெளிபாடாய் வெடித்து சிதறியது.. இது வைகோவிற்கு புரிந்திருக்கும் .. எல்லா இடங்களிலும் அரசியல் செய்கிற அயோக்கியத்தனம் ,பிறகட்சி உள்விவகாரங்களில் அழைக்காமலே தலையிடுவது.. சமீபத்திய வைகோவின் நடவடிக்கைகளை கண்டாலே தெரியும்.. கட்சியில் ஏறக்குறைய எல்லோருமே போய்விட்டபிறகு .. அனாதையைப்போல சுற்றித்திரியும் வைகோ இனியாவது.. ஔவை சொன்ன பாட்டை நினைவில் கொள்ளலாம்.. மதியாதார் வாசல் மிதியாமை கோடி பெறும்.. .. இது தொடக்கமாக கூட இருக்கலாம் இனி பிறகட்சி தோழர்கள் கூட இதுபோன்று கடுங்கை செய்யலாம்.. எச்சரிக்கை.. #வாயடக்கவேண்டும்_வைகோ .. ஆலஞ்சி மன்சூர்..

அரசியல் நாகரீகம்

அரசியல் நாகரீகம்.. முன்பெல்லாம் பெரியார் அண்ணா கலைஞர் போன்றவர்கள் எதிர்க்கட்சியினரோடு அரசுயல் ரீதியான எதிர்ப்பை மட்டுமே கொண்டிருந்தனர்.. பிற நிகழ்வுகளில் நட்புபாராட்டியே வந்தார்கள்.. ஆனால் எம்ஜிஆர் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு குறிப்பாக முதல் இரண்டாண்டுகள் எதிரெதிரே சந்திக்கும் போதெல்லாம் நட்போடே பழகினர்.. பிறகு எங்கே கலைஞரை சந்தித்தால் அவரோடு நாஞ்சிலாரைப்போல போய்விடுவார்களோ என அஞ்சி திமுகவினரை சந்திப்பவர்களை #கட்டம்கட்ட ஆரம்பித்தார் எம்ஜிஆர்(மகோரா).. எம்ஜிஆரை தொடர்ந்து எதிராய் அரசியல் செய்த ஜெயலலிதாவும் எம்ஜிஆரின் பார்முலாவையே இந்த விடயத்தில் கைக்கொண்டார்.. .. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த ராஜாஜியும் பெரியாரும் கூட தனிப்பட்டமுறையில் பகைமை கொண்டதில்லை.. கடுமையான எதிர் அரசியல் செய்த காமராஜரோடோ,பக்தவத்சலத்தோடோ,ராஜாஜியோடோ என்றைக்கும் கலைஞர் நாகரீகமான அரசியலையே செய்துவந்தார்.. எம்ஜிஆரின் அரசியல் வரவே தமிழகத்தில் எதிர்கட்சிகளென்றாலே எதிரியைப்போன்ற மனப்பான்மையோடு அரசியல் செய்கிற கொடுமை இருந்துவந்தது.. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நாகரீக செயல்பாடு மெல்ல துளிர்விட தொடங்கியிருப்பது நல்லதொரு தொடக்கத்தை தரும்.. .. எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு காழ்ப்புணர்ச்சி அரசியலுக்கு முடிவுகட்டுவோம்..கலைஞரை இன்று காண தம்பிதுரையும் ஜெயகுமார் வந்திருப்பது நிறைவான மகிழ்வை தருகிறது.. தொடர்ந்து எள்ளிநகையாடியும் மாண்பிமை ஸ்டாலின் தொடங்கிவைத்த பண்பான அரசியல் நாகரீகம் தொடரட்டும்.. கொள்கையில் உறுதியாய் எதிர்க்கவேண்டிய விடயங்களை கடுமையாக எதிர்ப்போம்.. எதிர்ப்பில் எதிரிகளை திணறவைப்போம்.. இவையாவும் அரசியலுக்காக மக்கள்நலன் சார்ந்த விடயங்களில் சமுக,சமுதாய நலன் வேண்டியே இருக்கும்.. ... #நல்லவை_தொடங்கட்டும்... .. ஆலஞ்சி மன்சூர்

Friday, December 16, 2016

கிழட்டு சிங்கங்கள்

நன்றியுள்ள தமிழனாய்.. இருப்போம். அன்றைய... இன்றைய... கிழட்டு சிங்கங்கள்.. சமுதாயம்.. சீர்திருத்தம்.. சுயமரியாதை.. சிந்திக்க .. செயல்பட.. சுடர்விட.. ஏன்... எதற்கு.. எப்படி..என வினவ.. கற்றுதந்தவர்கள்... இருவரும்.இல்லையெனில்.. நீ...குப்பை காகிதம்... ஆரிய வேட்டையில்..நீ..அழிந்து போயிருப்பாய்.. ஆழ... புதைந்துபோயிருப்பாய்.. சொரணையற்று கிடந்த உன்னை... சூடேற்றிவிட்டவர்கள்... உன்... உரிமைக்காக.. குரல் கொடுத்த.. கைகொடுத்து தூக்கிவிட்ட.. உன்னை.. உயரத்தில். ஏற்றிவிட்டு தாங்கும்.. தாங்கிகள்... சுமைதாங்கிகள்.. அன்று.போராடிய.. ஈ.வே.ரா.பெரியார் இன்றும்.போராடி கொண்டுயிருக்கிற.. கலைஞர்.. இருபெரும்.. போராளிகள்... பெரியாரின் பெரும்சீடன் கலைஞரோடு வாழ்வது நாம் பெற்ற பேறு.. .. பெரியார் சொல் கலைஞர் செயல்.. செயலே .. நம்மை உயிர்த்தெழுப்பியது முடக்கப்பட்ட நம்மை உணர்வை தூண்டி உயிர்தெழுப்பியது.. .. வாழும் பெரியார்.. வாழ்வார் நூற்றாண்டு கடந்து வாழும் ஒவ்வொருநாளும் தமிழும் தமிழனும் முண்டாசோடு வலம் வரலாம்.. .. இரண்டு..கிழட்டுசிங்கங்கள்.. தமிழா..நன்றியோடு.. இரு. நன்றியோடு ஆலஞ்சி மன்சூர்..

கலைஞர்

கலைஞர்.. பெருமகன் .. காலம் தந்த கொடை இவன் மீது வீசப்பட்ட அம்புகளை குவித்தால் இமயம் சிறிதாகும்.. யார் மீதில்லை விமர்சனமென்பீர்.. காந்தியை விமர்சித்த தேசமிது.. .. மூளையின் வலது பக்கம் ஆளும்திறனையும் இடது பக்கம் .. எழுத்து சிந்தனை திறன் கொண்டிருக்கும்.. ஏதேனும் ஒன்றுதான் அதீதமாய் வேலை செய்யும்.. ஆனால் கலைஞருக்கோ இருபுறமும் சிறப்பாய் செயல்படுகிறதென்றார்.. நரப்பியல் நிபுணர் ராமமூர்த்தி.. ஆம்.. #கலைஞர்.. இயற்கை வடித்த #மானுட_அதிசயம்.. .. ஏகாதிபத்தியத்தின் எதிரி ஆரியத்தின் சிம்மசொப்பனம் எதிரிகள் கலைத்துப்போய்விட்டார்கள்.. கலகலத்தும் போனார்கள் தலைமையின் இலக்கணம்.. இவரை எதிர்த்தால் மட்டுமே சோறு கிடைக்கும்.. எதிரிக்கும் துரோகிக்கும் வாழ்வளிக்கும் அட்சயம்.. .. தோண்ட தோண்ட வற்றாத தங்க தமிழ் ஊற்று.. தேனருவி..தமிழோ செவிக்கு இன்ப தேனருவி.. சொல்லும் செயலும் சமூகநீதிபேசும் சமத்துவபெரியார்.. .. பெரியார் சொன்னார்.. நாவலரா கலைஞரா என்றால்.. கலைஞர்தான் சரி.. பெரியாரின் நேரடி சீடன்.. இன்னும் இன்னும்.. எதிரிகளுக்கு வாழக்கை வேண்டும்.. அதற்காகவாவது.. கலைஞர் .. நீடுழி வாழவேண்டும்.. வாழ்வார்.. பெரும்வாழ்வு.. நூற்றாண்டை கடந்து.. .. #கலைஞர் .. ஆலஞ்சி மன்சூர்

நெஞ்சுக்கு நீதி எங்கள்.. கலைஞர்

நெஞ்சுக்குநீதி.. ஒருதலைவனின்..பாதை. தமிழ் தலைவனின் பாதை சறுக்கல்கள். சமாளிப்புக்கள், விடைதெரியாதபுதிர்கள், விளக்கங்கள். துரோகிகளையும் குழிபறித்தவனையும் குறைச்சொல்லா பாங்கு தலைவனுக்கே உரிய அஞ்சாமை.. கனிவுதரும். சொல்லாற்றல் எதிரியும் ஈர்க்கும்.. எழுத்தாற்றல். ஐந்துவரை 3616 பக்கம்.. படித்தவனை சொக்கவைக்கும் ஆறாய் பாய்ந்து வந்தது ஆறு.. உனை வெல்ல எழுத்தில் உனை வெல்ல யாரு? நீதியில்... நிலையான் யாரும் அரசியலில் நிலையான் புகழ்ந்தவனையும் இகழ்ந்தவனையும் ஒரே நேர்கோட்டில். ஒரேபார்வையில் பார்த்தவன்.. நீ ஆறு.. தமிழமுதம் ஆவலாய்.. இனி .. ஏழும் வேண்டும் நெஞ்சுக்கு நீதி ஏழும் வேண்டும் எழுந்து வா.. விரைந்து.. எழுத வேண்டும் நெஞ்சுக்கு நீதி.. ஏழு .. நெஞ்சுரத்தை நெஞ்சு சளி என்ன செய்யும்.. சிலர் ஆசையை நிராசையாக்கி நிமிர்ந்த நடையோடு எழுத்தில்.. நிமிர்ந்த நடையோடு எழுதவா... ஏழு.. .. உன் எழுத்து வசியம். படித்தே ஆகவேண்டும். அவசியம்.. ஆவலாய்.. நிமிர்ந்து நிற்கும். தமிழ்.. நிமிர்ந்து..நிமிர்ந்து .. கலைஞரே.. நீரே.. தமிழனின் நெஞ்சுக்கு #நீதி. .. ஆலஞ்சி மன்சூர்...

Thursday, December 15, 2016

புறவாசலில் முகவரியில்லாதவர்கள்

முகவரி இல்லாதவர்கள் அடுத்தவர் முகவரியில்தான் அஞ்சல் செய்வார்கள்.. இன்றைக்கு தோழர்கள் சசிகலாவை சந்தித்தபோது இதுதான் தோன்றியது.. முகவரி இழந்து அடுத்தவர் முகவரியில் அரசியல் செய்கிறார்கள்.. நிறைய கருத்துவேறுபாடுகள் வந்தபோதும் தமிழக காம்ரேட்களின் மீதான பார்வையை மாற்றிக்கொண்டதில்லை.. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அப்பட்டமான சாதீயநெடி வீசியதை கண்டு உண்மையில் கோபமே வந்தது.. .. சசிகலாவிற்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறதென்கிறார்..தா.பாண்டியன்.. எதன் அடிப்படையில் சொன்னார் என விளக்கவில்லை.. சிலகாலம் உதவியாளராக இருந்தவர் என்ற ஒற்றை தகுதிமட்டுமே தமிழகத்தை ஆள போதுமானதென்கிறாரா.. கட்சிக்கு யார் வேண்டுமானாலும் வந்துவிட்டு போகட்டும் ஆனால் முதல்வர் பதவிக்கு வருவதற்கு தகுதியானவரா என்ன..? எப்போதேனும் மக்கள் பணி செய்தாரா.. மக்களுக்காக போராடினாரா.. ஏதேனும் தொண்டாற்றினாரா .. மிட்டாய் மீது சுற்றபட்டிருக்கும் காகிதம் குப்பைக்குதான் போகும் சேர்த்து உண்ண/தின்கமுடியாது..என்பதை அறியாதவரா தா.பா .. சசிகலாவை சந்தித்த போது அவரின் உடல்மொழி காண்போரை கூசவைத்தது .. கம்யூனஸம் பேசும் தோழர்கள் கூட இவரின் செயலை விரும்பவில்லை.. அதே போல் மற்றதோழர்களின் செயல் கூட விரும்பதகுந்ததாக இல்லை. .. முகவரியை சிலர் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.. கட்சி ஆரம்பித்து ஏதும் தேறாததால் கமிஷன் நிறுவனமாக மாற்றி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.. இந்தியாவின் பிரதமர் மக்களின் பிரதிநிதிகளை சந்திக்க நேரம் ஒதுக்குவதைவிட தரகர்களுக்கு முன்னாள் நடிகைகளுக்கு நேரம் ஒதுக்குகிறார் இதுதான் பிரதமரின் லட்சணம்.. இந்த ஆட்சியில் தரகர்கள் ஜொலிக்கிறார்கள்.. பணமாற்றில் கூட தரகர்களின் கைதான் ஓங்கியிருக்கிறது.. இதுதான் இந்தியா.. .. #முகமிழந்து_முகவரிதொலைந்தவர்கள_புறவாசலில்.. .. ஆலஞ்சி மன்சூர்

Wednesday, December 14, 2016

கலைஞர்

நேற்றைதினம் சிலர் ஆசைபட்டார்கள்.. மரணம் எல்லோருக்கும் உண்டு வந்தே தீரும் எப்போதென்பதில் தான் இருக்கிறது.. இந்த கிழவனிடம் இன்னமும் ஏதோயொன்றை எதிர்பார்க்கிறது அதனால்தான் அமைதியாக இயற்கை சிரிக்கிறது இவர்களை பார்த்து.. .. #கருணாநிதி தனிமனிதனில்லை ஒரு இனத்தின் அடையாளங்களில் ஒன்று.. அடிமைபட்டுகிடந்த இனத்தின் கூரிய போர்வாள்.. இந்த போர்வாள் தமிழனின் கையிலிருப்பதால்தான் எதிரிகள் வரவே அஞ்சுகிறார்கள்.. 1991 லிருந்தே இவர்கள் வதந்திகளுக்கு பின்னால் ஒளிந்து அரசியல் செய்கிறார்கள்.. ஆனால் கலைஞர் மட்டுமே தோல்வியிலும் கூட கொள்கை பிறழின்றி அரசியல் செய்கிறார்.. கலைஞரின் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது கூட யாரையும் கடவுள் முன் மண்டியிட சொன்னதில்லை மண்சோறு அல்லல்வாலோ பாத்தியாவோ செய்ய சொன்னதில்லை யாருக்கும் இடைஞ்சல் தரவில்லை.. மருத்துவம் மூலம் எதிர்க்கொண்டார் அதைகூட வெளிப்படையாக அறிவித்துவிட்டு மருத்துவத்தோடு ஒத்துழைத்தார்.. அறிவோடு மட்டுமே அனுசரித்துப்போனார்.. .. தனிமனிதனின் ஆயுள் நீள நகைச்சுவை ஒருகாரணமென்கிறது ஆய்வு.. கலைஞரை கவனிக்கவர்களுக்கு இதுபுரியும் எப்போதும் நகைச்சுவையோடு அதே நேரம் பொருளில் சேதாரம் வராமல் பேசகூடியவர்.. உழைப்பும் நேர்மையும் எதையும் எதிர்க்கொள்ளும் நெஞ்சுரமும் ..தளறாத நம்பிக்கையும் ஒரு மனிதனின் வாழ்வின் பக்கங்களை அதிகரிக்கும்.. .. கலைஞர் நலமோடு என்கிறபோதெல்லாம் நமது மனம் நம்மையும் அறியாமல் வேண்டுகிறது பாருங்கள் அதுதான் நீண்டு வாழ உதவுகிறது.. கலைஞரால் நடக்கமுடியாமல் போனதே தவிர இயங்கமுடியாமல் போகவில்லை.. இன்னும் நம்மை இயக்கமுடியாமல் போனதில்லை.. மனதை இளமையாய் வைத்துக்கொள்பவர்களை முதுமை அடைவதேயில்லை.. .. #கலைஞர்_இளைஞர் .. ஆலஞ்சி மன்சூர்

Tuesday, December 13, 2016

முகவரி

#முகவரி..சொல் என்றாய்.. வந்தது தெரியும்.. வந்ததற்கான காரணமறியேன்.. வந்ததால்.. முகவரி...சரியென்றால்.. தெருவோரம் குப்பையில் கிடக்கும் மானிடனின்.. முகவரி என்ன.. யாருமறியா வேளையில்.. முளைத்த செடி .. மண்ணில் வெளிவந்தது யார் பாவம் .. படர ..முடியாமல்.. பரிதவித்து .. பிச்சை பாத்திரம்.. கையிலேந்தும்.. நிலையில் .. எங்கே.. யாரிடம் கேட்பது.. முகவரி... எது முகவரி.. எங்கு பிறந்தேன்.. எப்போது... எந்நிலையில்.. எல்லாம் சரி.. இதுதான்.. முகவரியெனில்.. ஏதுமில்லா .. மானிடனை... என்னவென்றழைப்பது.. முகவரியில்லாதவன்.. என்றா...அல்லது முகமே இல்லாதவரென்றா.. முகவரி.. இங்கே.. யாருக்குமில்லை.. வந்தாய்.. வந்ததால் முகவரியில்லை.. உன் வழிப்பயணத்தில்.. உன்... வாழ்வின் பயணத்தில் .. சின்ன ... சிலநிமிடம்.. சில மணித்துளிகள்.. சில நாட்கள்.. கடந்து போக. முகவரியெதற்கு.. நிரந்தமானவனுக்கே.. முகவரி வேண்டும்.. நீ .. நிரந்தரமில்லாதவன்.. நிலையில்லாதவன்.. உன் வாழ்வு.. நீர்குமிழியை..போன்றது .. உனக்கெதற்கு முகவரி.. முகவரி... தெரியவேண்டுமெனில்.. உன் முகம் தெரியவேண்டும்.. முகம் தெரியவேண்டுமெனில்.. முதலில்..நீ... மானுடம் பழகு.. மனிதனை..நேசி பக்கத்தில் நிற்பவனை.. பரிவோடு..பார்.. பசியறி.. பாசம் பழகு.. இல்லாதவனுக்கு ஈகு .. முடிந்தவரை நாவடக்கு.. நல்லதை நினை.. உன்னை.. ஊரறியும்.. ஊரறிந்தால்.. நாடரறியும்.. நாடரறிந்தால்.. நாட்டு மக்கள் அறிவர்.. .. மக்களறிந்தால்.. உன் முகவரி.. உலகறியும்.. அந்த முகவரி.. நிலைத்திருக்கும். .. #முகவரி_தேடு .. ஆலஞ்சி மன்சூர்

நான்.. யார்

யார் நீ என்றார்.. நான்தானென்றேன்.. நீயென்றால்.. எதில் நீ...யென்றார்.. .. எதிலும் நீ இல்லை பின் எதற்கு.. நான் தான் என்கிறார்.. அப்பனின் இச்சையில் அகிலம் கண்டாய் அகிலம் கண்டதால்.. நீ.. நீயென்கிறாய்.. வந்து விழந்த பிண்டம் அவ்வளவுதான்.. நீ.. .. நீ..நீயாக ஏதேனும் செய் அடுத்தவரின் வலியை உணர் அதிகம் பேசாதே செவிமடு.. அனாதைகள் மீது அக்கறை கொள் அளவோடு புசி அன்பு செலுத்து வறியவர் மீது இரக்கம் காட்டு எல்லாம் எனதென்பதை விடு உனக்கானதை தவிர எல்லாம் உனக்கானதல்ல பிறருக்கு சேர்த்தே உன்னிடம் தரப்பட்டிருக்கிறது .. .. தாய் மொழியை நேசி இன உணர்வு கொள் எதிரியை எதிர்கொள்ளும் வல்லமை கொள்.. அநீதி கண்டு அடங்க மறு.. சொல்லி அடி.. வந்து வாழ்த்தற்கான எச்சத்தை வை.. எல்லாமிருந்தும் இல்லாததுபோல் இரு.. .. எல்லாம் படி அறிவோடு சேர் ஆணவம் தவிர்.. அப்புறம் வா.. நீ..யாரென.. நான் சொல்கிறேன்... நானென்ன.. ஊர் சொல்லும்.. நீ..தான் நீயென்று.. .. ஆலஞ்சி மன்சூர்

சசியின் தேவையை அறிந்தவர்கள்

சசிகலா அதிமுகவினருக்கென்றில்லை பாசிசவாதிகளுக்கும் தவிர்க்கமுடியாதவராகிறார் .. சசியை தவிர யாருமே இல்லையா என கேள்வி வரும் கூட யாருக்குமே தகுதியில்லை அல்லது அவர்களுக்குள் ஒற்றுமையில்லை என்ற பதிலும் சேர்ந்து வரும்.. அரசியலில் கட்சியின் நிலைநிறுப்பை உறுதிசெய்வது மிக அவசியமாகும். அதிகாரம் நான்கரை ஆண்டுகள் இன்னமும் இருக்கிறது அதற்குள் ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே சம்பாதித்தை காப்பாற்றிக்கொள்ளவும் மீண்டும் முடிந்தவரை சேர்த்துக்கொள்ளவும் முடியும் என்கிற யதார்த்தத்தை அறிந்ததால் தான் கட்சியின் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த பிரபலங்கள் மறுப்பேதும் சொல்லாமல் #அத்தாச்சியை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்திருக்கிறார்கள்.. .. மிக சிறந்த தலைமையை தந்துவிட போவதில்லை அரசியலில் மிக சாதூர்யமான முடிவுகளை எடுத்துவிட போவதில்லை, .. சமூக நீதி தமிழக நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் சார்ந்த (காவிரி,முல்லை,பாலாறு) போன்றவற்றில் எந்த நடவடிக்கையும் எதிர்ப்பையும் காட்டாமல் மத்தியரசின் #தலையாட்டிபொம்மையாக அரசை நடத்தி செல்வார்கள்.. வரும் நான்காண்டுகளுக்குள் விரும்பதகாத நிகழ்வுகள் இலைமறைவில் நிறைவேறும் ஏறக்குறைய பாசிசஆட்சியை போல குறிப்பாக ஐம்பதாண்டு திராவிட ஆட்சியில் ஒளிந்திருந்தவர்கள் அதிகாரமையத்தில் அமர வாய்ப்பை பயன்படுத்திகொள்வார்கள். ஏனெனில் காலஅவகாசம் அதிகமிருப்பதால் இவர்களின் நோக்கமும், எதிர்மறையாளர்களின் சூழ்ச்சியும் வெல்லும்.. ஆனால் இதை சரிசெய்ய பலஆண்டுகளாகும்.. இப்போதே கவனித்தால் புரிந்திருக்கும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உயர்பதவிகளை ஆரியர்கள் ஏறக்குறைய எல்லாவற்றையும் ஆக்கரமித்துவிட்டார்கள்.. ஆட்சியில் அதிகாரமையத்தை கையில் எடுத்ததால் தான் நீட்தேர்வு வரை அவர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க தொடங்கிவிட்டார்கள் குறிப்பாக பிற்படுத்தபட்டோர்களின் தலையில் வைத்தாகிவிட்டது பிற்படுத்தபட்டோரின் உரிமைகள் (சலுகைகள்அல்ல) பறிபோக தொடங்கியாகிவிட்டது.. தமிழகத்தில் ஐம்பதாண்டுகாலம் தூக்கியறிப்பட்டவர்கள் மீண்டும் தலையெடுக்க இதுபோன்ற பலமான எதிர்பில்லாத சரியான தலைமையில்லாத கட்சியின் ஆட்சிதான் அவர்களின் தேவை.. அதனால் மௌனமாக ஆதரிப்பார்கள்.. அதை தான் #இந்து_ராம் அர்ஜூன் சம்பத் போன்றோர் சசியை சந்திப்பதின் பின்னணி .. தேர்தலை நோக்கி நகர்த்தினால் உள்ளதும் போன கதையாகும் என அவர்கள் அறிவார்கள்.. .. சசியின் தேவையை அறிந்தவர்கள் அவர்கள்.. .. ஆலஞ்சி மன்சூர்

Monday, December 12, 2016

வைகோவை காலம் தண்டித்திருக்கிறது

மிக மோசமான அரசியல்வாதியாக வலம் வருகிறார் வைகோ.. எல்லா கட்சிகளிலும் அக்கட்சியின் உறுப்பினரைப்போல செயல்படுகிறார்..அதிமுகவின் பொதுசெயலராக யார் வரவேண்டுமென்று தீர்மானிக்க இவர் யார் .. கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் அடுத்த கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடுவது எந்தவகை நாகரீகம் என்று தெரியவில்லை.. சாதாரணமாக கட்சியின் தலைவர்கள் மற்ற கட்சிகளின் உள்விவகாரங்களில் தலையிட கூடாதென்ற அறிவுகூட இல்லாமல் எப்படி திமுகவில் இத்தனைகாலம் இருந்தாரென்று ஆச்சரியமாக இருக்கிறது .. சசிகலாவை முன்னிருத்துவதில் வைகோவின் அக்கறையை விமர்சிப்பதற்கு முன் ஏன் இப்படியானார்..விரக்தியின் வெளிப்பாடா எல்லோரும் கைகழுவிவிட்டுப் போனதின் ஆற்றாமையா.. பெரியளவில் வரவேண்டி முடியாமல் கடைசியில் யாரும் சீண்டாதவராக போய்.. கௌரவமாக சொன்னால் பிறகட்சிகளுக்காக உழைக்கிற (தரகர்) வேலையோடு இவரது அரசியல் வாழ்க்கை முடிவு பெறும்.. .. சசியை வேலுநாச்சியார் அளவிற்கு புகழ்ந்து பேசுவது எதையோ எதிர்பார்க்கிறாரென்று தெரிகிறது..இவரை விடுங்கள் தஞ்சையில் வழிநெடுக வைக்கப்பட்டிருந்த பேனர்களை சில #விசமிகள் சாணியடித்திருக்கிறார்கள் நேற்றைய தினம் பார்த்தேன் இன்று சாணி முகத்தோடு அந்த விசமிகள் அதிமுகவினரின் அடிமட்ட தொண்டனாக இருக்கலாம் அல்லது இவர்கள் தரப்பே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு புதிய அலையை கிரியேட் செய்யலாம்.. ஆனாலும் சசியின் வரவு யாருக்கு பயன் அளிக்கிறதோ இல்லையோ இந்த அரசியல் முட்டாள் வைகோவிற்கு பயனளிக்கும்.. தஞ்சை செல்லும் வழியில் ஒரு சில இடங்களில் மதிமுக கொடிபறக்கும் வைகோவை போஸ்டரில் பார்க்கலாம் இப்போதெல்லாம் எங்கும் காணோம்.. அந்தளவிற்கு தான் அவரது கட்சியை வளர்த்த லட்சணம். இதில் இவர் மற்றவர்களுக்கு புத்தி சொல்கிறார்.. .. எனக்கொரு சந்தேகம் இவரை ஊடகங்கள் ஏன் மற்ற கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடுகிறீர் என கேட்பதில்லை..அருகிலிருப்பவர்களாவது சொல்லி இனியேனும் மைக் கிடைத்தால் தோள் துண்டை பிடித்துக்கொண்டு உளறும் பழக்கத்தை விட சொல்லுங்கள் இது மேடையல்ல பத்திரிக்கையாளர் சந்திப்பு என சொல்லுங்கள்.. .. வைகோவை காலம் கடுமையாக தண்டித்திருக்கிறது.. உலக அரசியல் அறிந்தவர் உள்ளூர் அரசியல் அறியாமல் போனார் #துரோகம்வெற்றதாய்சரித்திரமில்லை.. .. ஆலஞ்சி மன்சூர்

Sunday, December 11, 2016

அடிமைகள் உடம்பில் ரத்தமெதற்கு

ஆச்சரியபட ஒன்றுமில்லை.. சட்டென்று சசிகலாவை "சின்னம்மா" ஆக்கி காலில் விழ தொடங்கியதும் இனி வரும் காலங்களில் இது முக்கிய நிகழ்வாக காலில்விழும் கலாச்சாரம் தொடரும்.. இவர்கள் கொஞ்சமேனும் கொள்கை உணர்வோடு இருந்திருந்தால் மானம் என்ற உணர்வு உயிரைவிட மேலானது என புரிந்திருக்கும்.. கவிஞர் கண்ணதாசனின் கவிதை ஞாபகம் வந்து தொலைக்கிறது.. நடிகர் சங்கிலிமுருகனின் தந்தையாரை சில பங்காளிகள் வயலிகாட்டில் வைத்து வெட்டுகிறார்கள். அப்போது அவரின் வேட்டி அவிழிகிறது இருடா வேட்டியை கட்டிக்கிறேன் பிறகு வெட்டுறா என்றார்.. அதைதான் கவிஞன் பாட்டில் சொன்னான்.. தமிழனின் வீரம் மானமெல்லாம் அதிமுக அடிமைகளால் புதைந்துபோய்விட்டது.. .. ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.. காசுக்கு மாரடிக்கவனுக்கு யார் முதலாளியா இருந்தா என்ன அதுவுமில்லாமல் சம்பாதிக்க அரசியலை கருவியாக்கும் இவர்களுக்கு சம்பாதிதத்தை காப்பாற்றிக்கொள்ள ஏதோவோரு தேவை இருக்கதான் செய்யும்.. மிரட்டபடலாம் ஏனெனில் இன்னும் நான்காண்டுகள் அதிகாரம் இருக்கிறது அதற்குள் நிறைய சேர்த்துக்கொள்ளமுடியும் எவ்வளவு சீக்கிரம் முடியுமென பார்பார்களே தவிர யார் தலைமையாக இருந்தால் இவர்களுக்கென்ன.. ஜெயலலிதா மரியாதையாக நடத்தியிருந்தால் சோரம் சுரணை இருந்திருக்கும் இவர்கள் அடிமாடுகளை போன்றே எப்போது வெட்டுக்கு போகும் தெரியாத நிலையிலே இருந்தார்கள்..அதனால் பெரியதாக எதிர்ப்பு இருக்காது.. .. கொஞ்சம் விவரம் உள்ளவர்களாக இருந்திருந்தால் நிறைய திரைமறைவில் நடக்கும் விடயங்கள் புரிந்திருக்கும்.. ஆசிரியர் நடராஜனை சந்தித்துவிட்டு பின் 10 ந்தேதி கலைஞரை ஆசிரியர் சந்தித்தார் .. அதன் சூட்சமம் நாங்கள்தான் அறிவோம்.. நாங்கள் மட்டும்தான் அறிவோம்.. எதிரியை கூட நாங்கள்தான் தீர்மானிக்க/தேர்தெடுக்க வேண்டியிருக்கிறது.. இதெல்லாம் புரிந்துகொள்கிற அளவிற்கு அதிமுகவினருக்கு அறிவில்லை .. #அடிமைகள்_உடம்பில்ரத்தமெதற்கு.. .. ஆலஞ்சி மன்சூர்

சில உளறல்கள்.. வைகோ வகையறா..

அதிமுகவில் வீண் குழப்பங்கள் இல்லை கட்டுகோப்பாக இருக்கிறது.. வைகோ... 33 வருடங்கள் ஜெயலலிதாவோடு இருந்தவர் சசிகலா அவரே பொதுசெயலர் ஆக தகுதியுண்டு மஜக அன்சாரி.. சசிகலா அதிமுக பொதுசெயலர் ஆனால் பிராமண சமூகத்தின் ஆதரவு கிடைக்காது எஸ்.வி.சேகர் .. யாரிவர்கள் அதிமுகவின் உறுப்பினர்களை போல பேசிதிரிகிறார்கள் .. ஒரு கட்சியின் பொதுசெயலர் மறைந்துபோகிறார் அந்த இடத்தை நிரம்ப கட்சியினர் மட்டுமே சிந்திக்க பேச வேண்டும் ஆனால் நலம் விரும்பிகள் சில யோசனைகளை சொல்லலாமே தவிர முடிவு அக்கட்சியினரின் தான் எடுக்கவேண்டும்.. குறிப்பாக கட்சி நடத்துவதாக சொல்லிக்கொண்டு தரகுவேலையை பார்க்கும் "நாதாரிகள்" பேசகூடாது .. திமுகவோ காங்கிரஸ் கம்யூனிஸிட் போன்ற கட்சிகள் அமைதிகாக்கின்றன ஆனால் வைகோ அளவிற்கதிகமாக மூக்கை நுழைக்கிறார் என நினைக்கிறேன்.. ஜெயலலிதா மரணத்தில் சில கேட்கும் கேள்விகளுக்கு இவர் முந்திக்கொண்டு பதிலளிக்கிறார்..ஜெயலலிதா மரணப்படுக்கையில் நாட்டைப்பற்றி சிந்தித்துக்கொண்டே இருந்தார் என்கிறார்.. எப்படி சுயநினைவில்லாமலா.. ரெட்டியோடு நானே பேசினேன் என்கிறார்.. அங்குதான் சந்தேகம் வருகிறது இவர் பொய் சொல்கிறார் ஏனெனில் ரெட்டி இதுவரை யாரிடமும் (கலைஞர் உட்பட) ஜெயலலிதா உடல்நிலைப்பற்றி விவரிக்கவில்லை .. வைகோவிடம் மட்டும் பேசவேண்டிய அவசியம் இல்லை.. இவர் இப்போதெல்லாம் அழையாத விருந்தாளியாக எல்லா இடத்திலும் முன்னில் நிற்கிறார் வைகோ.. பிராமண சமூகத்தினரின் ஆதிக்கம் செலுத்தவதை அல்லது நுழையவிடாமல் தடுக்க ஆசிரியர் காய்நகர்த்தினாரா அதுதான் எல்லை அதுதான் ராஜதந்திரமும் கூட.. .. பிராமணர்களின் ஆதரவு கிடைக்காதென்ற சேகரின் பேச்சை இருகரம்தட்டி வரவேற்கிறேன் அந்த நிலைபாட்டிலேயே நில்லுங்கள் அதுதான் எங்கள் இனத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.. ஏனெனில் எங்கள் புரட்சிகவிஞன் அப்போதே சொல்லிவிட்டான் எப்பாப்பானாயினும் தமிழன் தலையை தடவப்பாப்பான்.. சுயமரியாதைகாரர்கள் ஆதரிப்பதின் நோக்கம் அதிமுக அவாள் திமுகவாக போககூடாதென்பதானே தவிர தேர்தல் ஆதரவல்ல.. மற்றபடி அன்சாரியின் தமாஷ் எல்லாம் பெரிய காரியமாக்கவேண்டாம்.. இவரெல்லாம் திடீரென்று தலைவரானவர் எரிநட்சத்திரம்.. நாளையே மாறி பேசலாம்.. .. அத்தாச்சி வரவேண்டுமென யாரெல்லாம் விரும்புகிறார்கள் என்பதும்,அதிமுகவை ஜாதீய கட்டத்திற்கும் அடைக்க நினைப்பதும் வருங்காலத்திற்கு நல்லது.. ஏனெனில் குட்டையை நீண்டநேரம் குழப்பிக்கொண்டே இருந்தால் மீன்கள் தங்காது.. .. ஆலஞ்சி மன்சூர்

Saturday, December 10, 2016

சசி...

சசியும் ஜெயலலிதாவும். எம்ஜிஆர் மறைவை தொடர்ந்து ஜெயலலிதா அரங்கேற்றிய நாடகங்களுக்கும் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சசிகலா ஆடும் திரைமறைவு ஆட்டத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை.. ஜெயலலிதா அரசியல் பிரவேசம் அறிந்தவர்களுக்கு சசியின் வரவு பெரிய அதிர்ச்சியை தராது.. எம்ஜிஆரை கெஞ்சி கூத்தாடி மிரட்டி கட்சிக்குள் நுழைந்த ஜெயலலிதாவிற்கு ஒரேயொரு ஆசை மட்டும்தானியிருந்தது ஆட்சி அதிகாரம்.. அதை நோக்கி நகர எந்த தரங்கெட்ட வேலையும் செய்ய தயாரானார்.. ஆரம்பத்தில் சத்துணவுதுறையில் சிறிய பொறுப்பைதந்து ஒதுக்கிவிட தான் எண்ணியிருந்தார்.. ஆனால் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி கட்சியின் கொபசெ ஆனார்..தொடர்ந்து மகோராவின்(எம்ஜிஆர்) நோவை காரணம்காட்டி ராஜீவிற்கு தன்னை முதல்வராக நியமிக்க கடிதமெழுதி.. ஜானகியை மோரில் விசம் வைத்து கொல்லபார்த்ததாக சொல்லி..ஜெயலலிதாவின் அரசியல் அஸ்திவாரம் பொய்களால் ஆனது.. மகோரா மறைவிற்குபின் சட்டசபையில் நாடகமாடி.. தன்னை வளர்த்துக்கொண்டவர் ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு முகம் வெளுக்க தொடங்கிய போது பணம் கொண்டு சாதிக்க தொடங்கினார்.. மானங்கெட்ட செங்கோட்டையன் காலில் விழ தொடங்கியதும் அதை மெல்ல ரசிக்க தொடங்கி கடைசியில் அது ஒரு மானங்கெட்டவர்களை அடிமைகளை பெருமளவில் உருவாக்கியது.. அடிமைப்படுத்துவதை ரசிக்க தொடங்கினார்.. .. ஆனால் சசியின் வரவும் நோக்கமும் ஒன்றே ஒன்றுதான்.. தங்கள் நிலைநிறுப்பை காத்துக்கொள்ளவேண்டும்.. முன்பெல்லாம் பெருத்த பணக்காரர்கள், நிலகிழார்கள்,ஜமீன்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருப்பார்கள் காரணம் சொத்தை கட்டிகாத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இருந்தது அதையேதான் சசியும் செய்கிறார்.. தன்னை காத்துக்கொள்ள இதை விட்டால் வேறு மார்க்கமே இல்லையென்பதை சரியாக அறிந்துவைத்திருக்கிறார்.. #சசியை குறைவாக எடைபோடாதீர்கள் .. இன்றைக்கு சிஆர் சரஸ்வதி ஒருவிடயத்தை போட்டுடைத்தார். ஜெயலலிதாவை #உருவாக்கியதில் பெரும்பங்கு சசிகலாவிற்குண்டு.. வெறும் சம்பிரதாய வார்த்தையல்ல நிஜம்... இந்த முறை வெற்றி பெறுமென நம்பிக்கையே இல்லாமல் தானிருந்தார் ஜெயா..சசியின் பண விநியோகம் வீயூகம் அதிமுகவை தூக்கிநிறுத்தியது.. ஜெயலலிதாவிற்கு மண்டையில் ஏறிய பதவி போதை சசிக்கும் வரும் அதற்கு கொஞ்சம் காலமெடுக்கும்.. ஒருவேளை மக்கள் தூக்கியெறிந்தால் கட்சி லெபில் வைத்துக்கொண்டு சொத்தை காப்பாற்றிக்கொள்ளலாம்.. பெரிதாக ஒன்றுமில்லைஇதுதான்/அவ்வளவுதான் அதிமுகவரலாறு.. .. அதிமுகவிற்கு சசியை விட்டால் வேறு ஆளில்லை.. பாவம் தோன்றுகிறதா.. தயவுசெய்து பரிதாபபடாதீர்கள்.. .. ஆலஞ்சி மன்சூர்

Friday, December 9, 2016

நன்றி..எங்கள் அறிவாசானே..

நன்றி எங்கள் அறிவாசானே.. .. தந்தை பெரியார் மட்டும் இந்த மண்ணை, இனத்தை செம்மைபடுத்தியிருக்காவிட்டால்.. அறிவின் நிழலில் நின்று இனஉணர்வை நம்மிடையே ஊட்டியிருக்காவிட்டால் இந்நேரம் தமிழகம் கேட்பாரற்று போயிருக்கும்.. ஒருமுறை அல்ல இரண்டுமுறை தெளிவில்லாமல் ஏதேதோ காரணங்களுக்காக சில சக்திகளின் கைகளில் அதிகாரம் போனாலும் திராவிட கொள்கையெனும் ஆணிவேரின் பலத்தோடு திருப்பியடிக்க முடிகிறது.. எத்தனை இடர்கள் சூழ்ச்சிகள் ஆரியர்களின் தகிடுதித்தோம் வேலைகள் இவையாவும் முறியடிக்கபடுகிற ஒவ்வொரு முறையும்.. தமிழ் மண்ணின் சுயமரியாதை வீறிற்று வெளிவருவதை காணமுடிகிறது.. .. பெரியாரின் பெருந்தொண்டே இன்றும் தமிழக மண்ணில் .. இலைமறைவு கயமைத்தனத்தை வென்று நம்மால் நிலைத்து நின்றாட முடிகிறது.. கொஞ்சம் பின்னோக்கி பார்க்கிறேன் அண்ணாவின் மறைவிற்கு பிறகு நாவலரோ எம்ஜிஆரோ பொறுப்பேற்றுயிருப்பார்களேயானாலும் மிக சுலபமாக நம்மை வீழ்த்தி மீண்டும் ஆரிய/பாசிசவாதிகள் நேரடியாகவே ஆட்சி செலுத்தியிருப்பார்கள்.. ஆனால் மேதகு கலைஞர் பெருமகன் ஆட்சியதிகாரத்திற்கு வந்ததால்தான் இங்கே திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாமல் போனது.. நுண் வேர் கெட்டுவிடாமல் நம்மை காத்துநின்றார்.. .. இப்போது நடக்கும் இலைமறைவு நகர்வுகள் இரண்டு காரணிகளுக்காக நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது.. அதிமுகவின் அடுத்தநகர்வை யாரெல்லாம் வடிவமைக்கிறார்கள் அதில் பாசிசத்தின் ஆளும் அரசின் பங்கென்ன என்பதையெல்லாம் கருத்திக்கொண்டே ஆசிரியர் போன்றோர் முட்டுகட்டை போடுகின்றனர் என்றே நினைக்கிறேன்.. இரண்டாவதாக இடைவெளியை பூர்த்தி செய்ய சரியானதொரு தேர்வு வராமல் போனால் வெற்றிடமாக இருப்பதும் கூட ஆரியர்களின் கைகளுக்கு நாமே தூக்கி தந்ததை போலாகிவிடும்.. நமக்குள் இருக்கும் போட்டியென்பது பங்காளி சண்டையை போன்றது.. வேறொருவர் தாக்க முற்படும்போது இயல்பாகவே எழுந்து துணை நிற்போமே அதைதான் ஆசிரியர் செய்கிறார் என நம்புகிறேன்.. .. இதோ கொள்கை தெளிவில்லாமல் பாசிசத்தின் கையின் கைபாவையாக இருந்தவர்களை மக்களென்றில்லை நாளடைவில் அவரை சார்ந்தோரே மறந்துபோவார்கள் (மகோரா)எம்ஜிஆரை ஜெயலலிதா மறந்தார் இப்போது ஜெயலலிதாவை இவர்கள் காலபோக்கில் மறந்தே போவார்கள்.. கொள்கை உறுதியும் சரியாக தலைமையை தயார்செய்து தொடர செய்தால் வரலாற்றில் இடம் பெறுவார்கள்.. பெரியார்..அண்ணா..கலைஞர் ..... .. பெருங்கிழவன் நம்மை செதுக்கியிருக்கிறான்.. கூர்மையாக.. #அறிவுக்கொண்டு.. .. ஆலஞ்சி மன்சூர்

Thursday, December 8, 2016

ஜெயலலிதா... யாரென

அதிமுக இரட்டை இலையால் தான் ஜெயித்தது ஜெயலலிதாவால் அல்ல ஆவடி குமார்.. எனக்கு ஆச்சர்யத்தை தரவில்லை காரணம் அதிமுக காரர்கள் கொள்கையில் இணைந்தவர்கள் இல்லை அல்லது தலைமையால் அவர்தம் திறமையை கண்டு வியந்து ஈர்க்கப்பட்டு இணைந்தவர்கள் அல்ல.. அல்லது தெளிவான சிந்தனை கொண்டோ தன் இனத்தை மொழியை காக்க உறுதிபூண்டோ, மக்களின் சேவைக்காகவோ இணைந்தவர்கள் அல்ல அதனால் தான் இவர்களால் ஜெயலலிதாவை ஒருநொடியில் தூக்கியெறிய முடிந்தது .. இவர்கள் நோக்கம் பதவியும் பணமும் மட்டும்தான் இவர்களை இப்படி வளர்த்தெடுத்தது ஜெயலலிதாதான். அடிக்கடி பதவி தந்து பிடிங்கி யதேச்சிய/சர்வ அதிகாரமும் தனக்குமட்டுமே உண்டு என்ற போக்கு அதிமுகாரர்களை பதவியை நோக்கி வர ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என தெருவோரங்களில் நிற்க வைத்தது.. உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் தங்கள் பதவியை காத்துக்கொள்ள எங்கே பதவி பறிபோய்விடுமோ என அஞ்சி .. ஜெயலலிதாவிற்காக காத்துகிடந்து கண்டபோது கிடந்து விழுந்து காரில் டயரை கூட கும்பிட்டு நடித்து நாடகமாட முடிந்தது.. சுரணையின்றி மானம் மரியாதைபோய் இவர்களால் உலா வரமுடிந்தது.. காரணம் ஜெயலலிதா கண்பார்வை மட்டுமே தம்மை ஒரேநாளில் புகழ் பதவியை நோக்கி செலுத்தும் என்ற நம்பிக்கைதானே தவிர ஜெயலலிதா மீது அன்போ உண்மையான பாசமோ கொண்டல்ல..இவர்கள் மூச்சுபிடித்து ஜெயலலிதாவை உயர்த்தி பிடித்ததும் .. அநியாயத்திற்கு புகழ்ந்து தெய்வம் ரேஞ்சுக்கு கொண்டுபோதும்.. மற்றபடி இவர்கள் அன்பால் பாசத்தால் கொள்கையால் உண்மையான தொண்டராய் எப்போதுமே இருந்ததில்லை.. .. ஆவடிகுமாரின் பேச்சு... மன்னனின் வீட்டு நாய் செத்தபோது அழுத மந்திரிகள் மன்னர் இறந்த போது மௌனமாய் நகர்ந்தார்கள் என்ற சீனபழமொழி ஞாபகம் வந்தது .. .. #இருக்கிறவரைதான்_எல்லாம்... .. ஆலஞ்சி மன்சூர்

தலைமை...

தலைமை.. ஒரு கட்சியின் தலைமை.. வருங்கால தலைவரை உருவாக்காமல் போவதென்பது நிறைய குழாயடி சண்டையை/தரகு வேலைகளுக்கு கொண்டுபோகும். சர்வாதிகாரபோக்குடைய தலைமை கீழ் நடத்தப்படும் கட்சிகள் வரலாற்றில் கரைந்தே போயிருக்கிறது. பின் வருபவர்களின் நிலை பரிதாபமாக நேரிடும்.. .. காலங்கள் கடந்தும் நிறைய வெற்றி தோல்விகளை சந்தித்தும் திமுக சிறந்து செயல்படுவதற்கு/திகழ்வதற்கு காரணம் உட்கட்சி ஜனநாயகம்.. யாரை எப்படி அவர்களின் சேவைகள் கட்சிப்பணிகள் தொண்டு உழைப்பு எல்லாம் கணக்கில் கொண்டு தேர்வாகி வருகிறார்கள். படிப்படியாக மெருகேற்றபடுகிறார்கள்.. தலைமைக்கு சரியானவரை இனம் காட்டுகிறார்கள் இவையெல்லாம் ஜனநாயத்திலேயே சாத்தியம்.. நிறைய கருத்து வேற்றுமை இருந்தபோதும் இறுதியில் தலைமை தேர்வு செய்தல் / கட்டுபடுதல் என்பதும் இயக்கம் தொடர்ந்து ஜனநாயக கடமையாற்ற முடியும். திமுக தொடர்ந்து கட்சி ஜனநாயகத்தில் நிறைய கருத்தொற்றுமை/வேற்றுமை இருப்பினும். கட்டுபடுதலில் ஒன்றுபடுகிறார்கள்.. சட்டென்று ஒற்றை இரவில்/ நாளில் அதிகாரத்திற்கு வருவதென்பது இங்கே நடக்காது.. அது ஸ்டாலினாக இருந்தாலும்.. தீட்டபடுவார்கள் போராயுதம் போல... இந்தியாவின் மிகச்சிறந்த ஜனநாயக இயக்கங்களில் திமுகவும் ஒன்று.. ஆனால். இதற்கு நேர்மாறான கட்சி அதிமுக .. கட்சியென்பதைவிட கம்பெனி அல்லது அமைப்பு என சொல்லலாம்... திரு.ம.கோ.ரா. அதிமுகவை நிறுவிய போது தன்னிடமுள்ள கவரும் கவர்ச்சியைமட்டுமே மூலதனமாக கொண்டார்.. எழுபதுகளின் இறுதிகளில் சினிமா மோகம் தமிழகத்தை ஆட்கொண்டிருந்த காலம்.. நிழலை பின்தொடர்ந்து தமிழன் அறிவிழந்து /சுயசிந்தனையின்றி நிஜமறியாதிருந்த காலகட்டமது.. திரு.ம கோ ரா அதை தனக்கு சாதகமாக்கி கொண்டார் .. தொடர்ந்து இந்திராவின் சாவும் மகோரா வின் நோவும் இரண்டுமுறை கைகொடுத்தது .. சட்டென்று உணர்ச்திவயபடும் தமிழனின் சுபாவம்..அவருக்கு கைகொடுத்தது.. அதன்பின் செல்வி.ஜெயலலிதாவை ராஜீவின் சாவும் பிறகு பணமும் கௌகொடுத்து தூக்கி நிறுத்தியது ..இவருமே.. கட்சியில் சரியான நபரை இனம்கண்டு தேர்வு செய்து பயிற்சியும் தந்து வழிநடத்தாமல் போய்விட்டார்கள் .. அதனைல் தான் அதிமுகவை சில பாசிச சக்திகள் தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர துடிக்கின்றன.. தெரிந்து தெரியாமலோ மக்கள் செய்த ஒரு நல்லகாரியம் எதிர்க்கட்சியை பலமாக அமைத்திருக்கிறார்கள் அதாவது ராசசபலம் இல்லாத ஆளும்கட்சி.. எவ்வளவு பிரிந்து சிலகாலம் கவர்ச்சி/பணம் அடிமைத்தனம் பின்னால் சென்றாலும் திராவிட இனத்தின் வேர் பலமாக நெஞ்சில் பதிந்திருக்கிறது .. அதை சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. சிலர் அதிமுக என்ற நிறுவனத்தை சொந்தம் கொண்டாட முயல்வதும் யார் தலைமையின் கீழ் என்பதிலே பொறாமை வருவதையும் காண முடிகிறது.. சர்வாதிகார தலைமையின் கீழ் வாய்பொத்தி அடிமைகளாய் இருந்தவர்கள்..இப்போது சுதந்தர காற்றை உணரும் போது தன்மானம் வெளிவருகிறது நம்மை கட்டுபடுத்த இவர் யார் ஏன் நமக்கு தகுதியில்லாயா என எண்ணம் வருகிறது இது வரும் .. ஆனால் நிலைத்து நின்று ஜெயிக்க இயலாது.. காரணம் சரியான பயிறிசியின்மை..ஜனநாயக ரீதியாக பேராடி உயரவரவில்லை.. இவர்கள் ..ஒருகாலகட்டத்திற்கு பிறகு மறைந்து யாரும் அறியாது யாருக்கும் வேண்டாது போய்விடுவார்கள்.. இப்போது நடப்பது அதிமுகவில் நடப்பது இதுதான்.. #யார்பெரியவன்.. .. இப்போது புரிகிறதா. .. வெறும் நியமனத்தால் பொறுப்புகளுக்கு ஆட்களை நிரப்புவதால் ஏற்படும் பின்னடைவு .. உட்கட்சி தேர்தலால் ஜனநாயகம் கட்சியின் வேர்வரை பலம் பொருந்தியதாக தொடர்ந்து வெற்றி/தோல்விகளின் இயங்கமுடிவதின் ரகசியம்.. .. #திமுகஇனத்திற்கானஜனநாயகஇயக்கம். .. ஆலஞ்சி மன்சூர்

Tuesday, December 6, 2016

போய்..வா தாயே

மரணம் அழகு.. இங்கேயொரு பேரழகு மரணமாய்.. துரோகிகள்.. புடைசூழ .. இறுதியாய் இந்த...பறவை விடை வாங்குகிறது.. .. எதிர்த்து நின்றவன் கலங்கி நிற்கிறான்.. துரோகிகள்.. மௌனமாய் காய்நகர்த்துகிறான் அடங்காமல்.. அடக்கிவைத்த திறன் இன்று அடங்கியவர்கள் முன் அசையாது கிடக்கிறது.. .. பொய்களால் அம்பெறிந்து அரசியலில் நின்றாடியவர் தன் நிழல் கூட துரோகியாகுமென அறியாமல்போன விந்தை.. நடித்தே அரசாண்டவர் தன் கையிருப்பும் நடிப்பதறியாது போனார்.. .. அன்பும் நட்பும் கிடைப்பதறிது.. நான் கலப்படமற்ற சுயநலமற்ற எதிர்பார்ப்பற்ற அன்பை கண்டதேயில்லை.. எத்தனை ரணம்.. இத்தனை காலம் உன்னை புகழ்ந்தவன் எதிர்பார்த்து கிடந்தவன்.. உன் கடை கண்ணின் பார்வைப்பட்டு பிழைக்கமுடியாதா என்றெண்ணியவன்.. நீ.. இருக்கும் வரை கரைந்தவன் இன்று மௌனமாய் அதிகாரத்தில் ஆனால்... வாழும் போதும் மறைந்தபோதும் யாரும் உன்னை உண்மையாய்.. நேசிக்கவில்லை உன் எதிரியை தவிர.. .. #போய்வா_தாயே.. .. ஆலஞ்சி மன்சூர்

Friday, December 2, 2016

மாவீரன் மணி..

அண்ணன் மணி.. தஞ்சையை திமுகவின் கோட்டையாக்கிய கலைஞரின் போர்வாள்.. தஞ்சை பகுதியில் பண்ணையார்களும் நிலக்கிழார்களும் (மிராசுதார்கள்) காங்கிரஸை தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்த காலத்தில் தஞ்சையை திமுகவின் பக்கம் கொண்டுவர அரும்பாடுபட்டவர்.. ஓய்வில்லாத உழைப்பிற்கு சொந்தக்காரர்.. ஒவ்வொரு கிளைக்கழகத்தை சேர்ந்தவர்களையும் பெயர் சொல்லி அழைக்கும் உரிமையோடு கடிந்துக்கொள்ளும்.. அதே போல் அவர்களையும் உரிமையோடு பேச சொல்லி ரசிக்கும் திமுகவின் மாபெரும் தலைவர்.. .. ஒருமுறை எங்கள் கிராமத்திற்கு வந்து கொடி ஏற்றுவதாக ஒத்துக்கொண்டார்.. நேரமாகிக்கொண்டே போகிறது மக்கள் சலசலக்க தொடங்கிவிட்டனர்.. அமுல்ராஜ்தான் கிளைக்கழக செயலர்.. கோபமாக திட்ட ஆரம்பித்துவிட்டார்.. அவர் திட்டிக்கொண்டிருக்கும் போதே ஜீப்பில் வந்திறங்கி அமுல் கோச்சிக்காதடா வரவழியில வண்டி பஞ்சர் அதான் லேட்டாயிடுச்சு என்றவுடன் தொண்டை கிழிய கத்துகிறார் அமுல்ராஜ்.. மாவீரன் கோ.சி.மணி வாழ்க..கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.. கோவத்தை மறந்து உணர்ச்சி மேலிட வானம் அதிர்கிறது கரவோசத்தால்.. எந்த வித கோவமும் கொள்ளாமல் அமுல்ராஜை அணைத்துக்கொண்டே பேசுகிறார்.. கட்சியின் அடிமட்ட தொண்டனையும் அறிந்து வைத்திருந்த மாவட்ட செயலாளர் அதனால் தான் கடைசிவரை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது.. .. கலைஞரின் அசைவு தெரிந்து படை திரட்டும் தஞ்சை தளபதி.. கும்பகோணத்தை ஜொலிக்க செய்த வைரம்.. சில துரோகிகள் கட்சியை சொந்த கொண்டாட சில மாவட்ட செயலர்களோடு வெளியேறிய போது தஞ்சையில் பொதுக்குழுவை கூட்டி கலைஞரின் பின்னால் கழகம் என உரைக்க சொல்லியவர்.. இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு.. மாவட்ட செயலாளர்கள் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு இவர் அகராதி..Dictionary.. .. #தஞ்சையின்_மாவீரன்.. #மாவீரனுக்கு_மரணமில்லை.. .. ஆலஞ்சி மன்சூர்

மிருகபலம் சர்வாதிகாரம்

நாட்டில் மக்கள் தொகை அதிகம் அதனால்தானம க்யூ அதிகமாக தெரிகிறது.. அருண்ஜெட்லி.. .. மேற்குவங்க முதல்வர் பயணித்த விமானம் தரையிறங்காமல் வானத்தில் வட்டமடித்தது.. தலைமைசெயலகத்தை சுற்றி ராணுவம்.. .. மோடி தன்னை முன்னிலை படுத்தவே நினைக்கிறார்.. இதுவரை 11 ஊடுருவல்களும் 25 மேற்பட்ட எல்லைதாக்குதலும் நடந்துள்ளது ராகுல். .. மூன்றும் வெவ்வேறு செய்திகள் ஆனால் உற்றுநோக்கின் உண்மை புலப்படும்.. நாடு மிக மோசமான நிர்வாகத்தை சந்தித்திருக்கிறது.. நாட்டின் மக்கள் தொகைதான் காரணம் என்றால் அந்த மக்கள் தானே தங்களை தேர்தெடுத்தார்கள்.. அவர்களை கேலி செய்வது எந்தவகை நியாயம்.. தன் மகளுக்கு திருமணம் செய்துவைத்திருக்கிறார் ஜெட்லி வாழ்த்துக்கள்.. ஆனால் செலவு 50 கோடி என்கிறார்கள் நான் என்மகள் திருமணத்தை 2.5 லட்சத்திற்குள் முடித்துக்கொள்ளவேண்டும்.. அதிக பணத்தை கையிருப்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் பட்டியலில் ஜெட்லி தான் முதலிடம்.. பண தட்டுபாடு சரியாக 6 மாதங்கள் ஆகும்..என்கிறார் ஜெட்லி இதை முதலிலேயே சொன்ன ப.சிதம்பரம் சிறந்த நிர்வாகியல்லவா..முன் கூட்டியே அறிந்து செயல்படுவதுதானே சரி.. குளறுபடியாக சரியாக திட்டமிடாததைதானே/நிர்வாக திறமையின்மையை தானே இது காட்டுகிறது..₹1000 த்தை ஒழித்து₹2000 த்தை கொண்டுவந்த போதே உங்களின் கருப்புபண ஓழிப்பு பொய் என்று தெரிந்துவிட்டது.. மக்களிடம் கட்டுபாடை கொண்டுவந்து சில கார்ப்பரேட்களின் கனவை நினைவாக்க சிறிய தொழில்களை முடக்க தீட்டிய நீணிடகாலதிட்டம் இது.. .. மம்தாவை மிரட்ட நினைக்கிறது மத்திய அரசு.. தவறான இடத்தில் கால்வைத்த கதையாகும்..மம்தா சரியோ தவறோ தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர்..மக்கள் பிரச்சனையெனில் தெருவிற்கே வந்து போராடும் குணம் கொண்ட #புரட்சிக்காரி.. ஆனால் மோடி அரசு சர்வாதிகாரத்தனத்தோடு தாங்கள் எடுக்கும் நடவடிக்கையை ஆதரிக்காதவர்களை இதே ரீதியில் மிரட்டுவோம் என்ற பழைய எமர்ஜென்ஸி காலத்தை நினைவூட்டுகிறது.. ஆனால் அப்போதும் கருணாநிதி போன்றோர் வளைந்து கொடுக்காத வரலாறு உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.. .. ராகுல் சொன்னதைப்போல பரபரப்பாக வைத்திருந்தால் தான் நினைத்ததை சாதிக்கவும் உடனே தேசபக்தி பாடம் நடத்தி தப்பித்துக்கொள்ளவும் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.. தினம் தினம் அறிவிப்புகளும் உடன் மாற்றி பேசுவதும் துக்ளக் தர்பாரை நினைவுபடுத்துகிறார்.. நம்மை செலவை குறைத்துக்கொள்ளும் மோடி விளம்பரத்திற்கு ₹1100 கோடி செலவு செய்கிறார்.. லட்சங்கள் செலவு செய்து கோட் அணிகிறார்.. பாஜகவினர் கோடிகள் செலவு செய்து திருமணம் நடத்துகிறார்கள்.. ஆனால் நாம் தேதபக்தியோடு கால்கடுக்க நின்று சொந்தபணத்தை எடுத்து சிக்கனமாக செலவுசெய்யவேண்டும்.. .. ஜனநாயகத்தில் அதீதபலம் சர்வாதிகாரத்திற்கு கொண்டுபோகும் என்பதற்கு இந்த அரசே சாட்சியாக நிற்கிறது.. #மிருகபலம்_மக்களை_பிறாண்டுகிறது.. .. ஆலஞ்சி மன்சூர்

Thursday, December 1, 2016

ராகுல நோக்கி இந்தியா

சுலபமாக்கியிருக்கிறார் ராகுலின் வரவை.. .. பெண்களின் சுருக்குப்பையிலும் கடுகுடப்பாவிலும் கைவைத்த அரசின் தலைவர் இப்போது #நகையில்.. மோடியின் பொருளாதார அறிவை ஸ்டாம்பின் பின்புறம் எழுதிவிடலாமென்ற ப.சிதம்பரத்தின் சொல் எவ்வளவு சரியாக இருக்கிறது பாருங்கள். சிறுக சிறுக சேமிப்பதென்பது பெண்கள் பெரும்குணம்.. காசை மண்ணிலோ அல்லது பொன்னிலோ போடு என்பார்கள் நாலும்அறிந்தவர்கள்.. பெண்களின் பிரதான சேமிப்பு தங்கம்தான்.. திடீரென்று தேவைகளுக்கு வங்கியில் அடமானம் வைத்து தேவைகளை பூர்த்திசெய்ய.. அவசரதேவைகளுக்கும் .. தவிர்க்கமுடியாத நிகழ்ச்சிகளுக்கு பணம் புரட்ட சாமானியன் குறிப்பாக நடுத்தர மக்களின் மிகபெரிய சேமிப்பு தங்கம் தான் அதில் கை வைக்கிறார் மோடி.. .. குறிப்பாக இந்திய பெண்கள் அதிகம் விரும்புவதும் தங்கநகைகள் தான் அது அவர்களுக்கு அழகை மட்டுமல்ல தன்னம்பிக்கையையும் கூட தரும்.. ஆண்களை சார்ந்து நிற்கமுடியாமல் போகிற போதும் பெரியளவில் தங்கம் தான் உதவும்.. பெரியளவில் பணம் தங்கத்தில் முதலீடு செய்யபடுகிறதே என்ற கவலை கொள்ளதேவையில்லை வரிவிதிப்பு முறையை சரிசெய்தாலே அல்லது லஞ்சத்தை கட்டுக்குள் கொண்டுவந்தாலே போதும் நாட்டின் வருவாயை பெருக்கலாம் சாமானியனை கசக்கிபிழிந்துதான் நாட்டின் வருவாயை உயர்த்தவேண்டுமென்பது கையாலாகாத செயல்.. வரிஏய்ப்பவர்கள் வருடக்கணக்கில் வழக்கை இழுத்தடித்து..போலி வருவாயை காட்டி அதையும் ஏற்று பிழையடைத்தால் போதும் என விடுவிக்கிற நாட்டில் சாமானியனை திருடன் ரேஞ்சுக்கு கொண்டுப்போகும் கயமைத்தனம் இது.. ஒழுங்காக வரி செலுத்தாத நிறுவனங்களிடம் வரிவசூலித்தாலே போதும் .. பெரும் தொழிலதிபர்கள் இவர்கள் வாங்கி குவித்திருக்குமே வைரங்கள் இதற்கெல்லாம் வரிவிலக்கு அளிக்கும் போது.. சாதாரண மக்களின் நம்பிக்கையான சேமிப்பை சூறையாடும் செயல் ஆட்சியாளர்களுக்கு உகந்ததல்ல.. .. மோடியின் திடீர்திடீரென்று அறிவுப்புக்கள்..மக்களை கோவப்பட செய்திருக்கிறது.. காங்கிரஸை வேண்டாமென்ற மக்கள் மனதில் இவர்களாகவே அவர்கள் தேவலை என்ற நினைப்பை வரவழைத்திருக்கிறார்கள்.. சுருங்க சொன்னால் ராகுலை நோக்கி இந்தியமக்களை ஓடசெய்திருக்கிறார்கள்.. வெகுவிரைவில்.. ராகுல் இந்திய அரசியலில் தவிர்க்கமுடியாதவராகிவிடுவார்.. நல்லதை செய்கிறார் மோடி ..ராகுலின் வேலையை சுலபமாக்கி.. #மிகப்பெரிய_கட்டுபாடுகள்_சர்வாதிகாரத்தின்_தொடக்கம் .. ஆலஞ்சி மன்சூர்

இன்குலாப்

இன்குலாப்.. மாணவர் பருவத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தவர் இந்திஎதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்ட #மொழிப்போர்வீரர்.. பின் சிறிதுகாலம் கழித்து மார்க்ஸியத்தில் ஈடுபாடுகொண்டு பொதுவுடைமை சித்தாந்தத்தில் இணைத்துக்கொண்டவர்.. முற்போக்கு சிந்தனையாளர் சிறந்த கவிஞர்... கடவுள் மறுப்பாளர் நாத்திகர்.. .. இஸ்லாமிய குடும்பத்தில் மிகவும் ஏழ்மையான குடும்ப பின்ணணியில் பிறந்து வளர்ந்தாலும் கல்வியறிவில் சிறந்துவிளங்கியவர் கீழவெண்மணியில் தாழ்த்தப்பட்டவர்களின் மீதான தாக்குதலுக்கு பிறகுதான் மார்க்ஸிய லெலினிய புரட்சிகர இயக்கத்தில் இணைந்தார்.. அப்போதுதான் சாகுல்ஹமீதாக இருந்தவர் இன்குலாப் (புரட்சி) என அறியப்பட்டார்.. .. உண்மையான காம்ரேடாக(தோழராக) வலம் வந்தவர்.. தமிழ்தேசிய விடுதலையிலும் இவர் ஆர்வம் கொண்டு செயலாற்றியிருக்கிறார்.. தமிழீழ தேசியதலைவர் வேலுபிள்ளை சந்தித்திருக்கிறார்.. ஆனால் வைத்து அரசியல் ஆதாயமோ அல்லது வயிறுவளர்க்கவோ செய்யவில்லை.. உண்மையான நேர்மையான இன்னும் சொல்லப்போனால் எளிமையான கம்யூனிஸ்டாக Real Communist வாழ்ந்தவர்.. #நாங்களும்_மனுசங்கடா ..என்றபாடல் இன்றைக்கும் தலித்திய மேடைகளில் பாடப்பட்டுவருகிறது.. கவிஞர் நாடகாசிரியர் முற்போக்கு சிந்தனையை எழுத்துக்களில் தந்த சமகால சமரசம் செய்துக்கொள்ளாத ஒப்பற்ற கவிஞர்.. .. முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்துக்கொண்டிருக்கிறது என்தாய்மொழி.. #இன்குலாப்_தமிழ்தேசியகவிஞன்.. .. விடைகொடுப்போம்.. #இன்குலாப்_இன்குலாப்.. #லால்சலாம் .. ஆலஞ்சி மன்சூர்

Wednesday, November 30, 2016

எச்சரிக்கை

டெபிட் கார்டை வைத்து டீக்கடை டீ குடிக்கலாம் எஸ்வி சேகர்.. அதிமேதாவிதனமாக எண்ணிக்கொள்ளும் காமெடியன்.. தொலைக்காட்சியில் வந்து மோடிக்கு வக்காலத்து வாங்கும் ராமசுப்ரமணியன் போன்றோர் ஒன்றை விளக்குவது நல்லது..எஸ்விசேகரின் நண்பரும் காமெடியனுமாகிய ஓய்ஜி மகேந்திரன் குடும்பம் நடத்தும் பாரதி வித்யாலயாவிலோ அல்லது ராம்சுப்ரமணியன் நடத்தும் பள்ளியிலோ கல்விக்கட்டணத்தை வரைவோலை demand draft மூலம் வாங்குகிறார்களா என்றால் இல்லை.. எனக்கு தெரிந்து சென்னையில் SBOA பள்ளியில் மட்டும்தான் வரைவோலையில் மூலமே பணம் செலுத்த முடியும்..எனது மகன் அங்குதான் படித்தார் அதனால் அறிவேன் ஒவ்வொருமுறையும் SBT பேங்கில் டிராப்ட் எடுத்து செலுத்த வேண்டும் எல்லாம் வெளிப்படைதன்மையாக இருந்தது.. ஆனால் பத்மாவில் தனியாக எந்த கணக்கிலும் வராமல் நன்கொடையாக பெரும் தொகையை கொடுக்கவேண்டிவரும் ..எனக்கே அந்த அனுபவம் வந்தது. சிபாரிசு கடிதத்தோடு சென்றபோதும் சிபாரிசு சீட்டிற்கு தானே தவிர நன்கொடை செலுத்த வேண்டும் என கட்டாயபடுத்தினார்கள்.. இது அங்கு பிள்ளைகளை படிக்கவைக்கும் அனைவரும் அறிந்தது... இனி பத்மா ஷேசாத்ரி பள்ளியில் கல்வி கட்டணம் வெளிப்படையாக நடக்கும் என உறுதியளிப்பார்களா இந்த தேசபக்தர்கள்.. .. இன்று அரசுஊழியர்கள் சம்பளத்தை குறிப்பிட்டளவே எடுக்கவேண்டுமென உத்தரவு வழங்கியிருக்கிறார்கள்.. எத்தனைபேர் வாடகை வீடுகளிலே இருப்பார்கள் அவர்களை காலி செய்ய சொல்லி வீட்டுஓனர்கள் வலியுறுத்துவார்கள் அவர்கள் கணக்கில் பணம் போடுகிறேன் என சொல்லி பாருங்கள் போட்டு எடுக்கமுடியாம இருக்கவா என்பார்கள்.. சிறிய தொகையை கூட எடுக்கமுடியாமல் மக்கள் அவதியுறுகிறார்கள் .. மேல்தட்டுமக்களின் சிந்தனையை மற்றவர்கள் மீது திணிக்கும் செயலை நீண்டகாலம் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.. கேரளாவில் மூன்று வங்கி கிளைகள் மக்களே பூட்டுபோட்டுவிட்டார்கள்.. இது தொடரும் ஆபத்து.. .. பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி மக்களை நகர்த்துவதற்குமுன் அதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கவேண்டும் கருப்புபண ஒழிப்பு என்பதெல்லாம் சும்மா ஒரு நாடகம் ஏற்கனவே கருப்பு வெள்ளையாகி தேசபக்தர்கள் கையில் சிரித்துக்கொண்டிருக்கிறது.. cashless பாசிலியை நோக்கி நகர்த்த இவர்கள் நடத்திய நாடகம் தான் கருப்புபணம் ஒழிப்பு என்பது தெரியவருகிறது.. மோடி மக்களுக்கு உரையாற்றியது கூட நேரலையில் இல்லையென்றும் அது முன்கூட்டியே பதிவு செய்யபட்டது recordred என்ற உண்மை வெளியே வந்து மோடியின் முகமூடியை கிழித்திருக்கிறது.. .. மனைவியின் பிணத்தோடு வங்கி வாசலில் பணமெடுக்க தவம் கிடக்கிறான் .. ஆனால் இவர்களுக்கு மட்டும் தடையின்றி பணம் வந்ததெப்படி என்று தெரியவில்லை .. குருமூர்த்தி நராமசுப்ரமணி, எஸ்விசேகர்,மகேந்திரன் வகையறாக்கள் மட்டும் ATM பக்கமே காணோமே.. இவர்களின் தேசபக்தி வாஜ்பாய் ரகம்.. எப்போதுவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும்/மாறிக்கொள்ளும் வகை.. இவர்கள் மிக மோசமான சந்தர்பவாதிகள் இவர்களுக்கென்கிற போது பொங்குவார்கள்.சுவாதி கொலையில் தான் பார்த்தோமே...மற்றவர்கள் பிரச்தனையெனில் தேசபக்தி என்றெல்லாம் பேசுவார்கள்.. .. #எச்சரிக்கை .. ஆலஞ்சி மன்சூர்