Wednesday, August 31, 2016

அடிமைகளின் தர்பார்

கொலைகொள்ளைகள் மற்றமாநிலத்தைவிட குறைவாக இருப்பதாக தந்திடிவி .. .. எந்த அளவுகோல் என்றால் வடமாநிலங்கள் குறிப்பாக உபி,பீகார், மத்திய பிரதேசம்... இந்தமாநிலங்களில் இன்னமும் சாதீய வெறியும் குறிப்பாக தாழ்த்தப்பட்டமக்கள் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் மாநிலங்களின் மக்கள் தொகையென்ன என கணக்கிட்டு பார்த்தால் மிக மோசமான மாநிலமாகதான் தமிழகம் இருக்கிறது இவர்கள் கணக்கில் கேரளா,கர்நாடக ஆந்திராவைவிட தமிழகம் மிக மோசமாக இருப்பதை மறைக்கமுயல்கிறார்கள்.. ஊடகங்கங்களின் தார்மீக பொறுப்பே அரசின் அராஜக அலட்சிய போக்கை மக்களிடம் கொண்டுசெல்வதும், அரசை இடித்துரைப்பதும்தான்.. .. இந்த மாநிலத்தில்தான் காதலித்தற்காக சுவாதியும் காதலிக்க மறுத்தற்காக பிரான்ஸினாவும் கொல்லப்படுகிறார்கள்.. தினம் குறைந்தது கொள்ளை கொலை இல்லாமல் பொழுது விடிவதே இல்லை.. அரசின் தலைமைக்கு பக்கத்து மாநிலத்தில் அணைகட்டுவது கூட தெரியாமல் இருக்கிறது.. யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக சசிகலா புஷ்பா வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார்.. தானாக இயங்க முடியாத தலைமை என்கிறார்.. இந்திய நாடாளுமன்றத்திலேயே மாநில முதல்வர் கட்சிதலைவர் தன்னை அடித்ததாக குற்றம் சாட்டுகிறார்.. ஒரு எம்பியே உயிருக்கு பயந்து மத்திய அரசு பாதுகாப்போடு தான் தமிழ்நாட்டிற்குள் வரமுடிகிற அவலம்.. இதுதான் தமிழக சட்டஒழுங்கு.. .. சட்டமன்றத்தை பாட்டிபாடும் கச்சேரி மேடையாக்கியதும் ஏதாவது கேட்டால் பதில் சொல்ல வக்கில்லாமல் எதற்கெடுத்தாலும் முந்தைய திமுக ஆட்சியை குறைகூறுவதும்.. ஏதேனும் ஒரு தொலைநோக்கு திட்டங்களோ சமுதாயத்தில் அடிதட்டில் வாழும் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களோ இல்லை.. இட்லிகடையும் ,பூங்காவும் வாழ்வியல் வளம் சேர்க்க உதவாது.. காவிரியில் என்னால்தான் முடிந்தது என பொய்யுரைத்து பட்டமெல்லாம் வாங்கியவர்.. இப்போது சிறுவாணியில் யார் மீது பழிபோடலாமன நினைக்கிறார்.. தமிழக உரிமைகள் பறிபோக ஜெயலலிதாதான் காரணம் #காவிரித்தாய் பட்டத்தை திரும்பபெற வேண்டும் .. அசோகரைவிட அதிக திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலிதா என தனபால் புகழ்வதும் தான் கேவலத்தின் உச்சம் சபாநாயகரின் தகுதியை மீறிய உளறல்.. வீதிதோறும் மரம் நட்டான் அசோகன்.. வீதிதோறும் சாராயக்கடை.. ஜெயலலிதாவின் புகழ்பாடும்.. .. ஜெயலலிதா அரசின் லட்சணம்.. அமைச்சர் பாட அடிமைகள் தாளம் போட.. ஆஹா.. சட்டமன்றம் கூத்து கட்டும் சபையானது.. அடிமைகள் என்றாலே.. #அதிமுகவினரை காட்டுகிற குகூள்.. இதுதான் ஜெயலலிதாவின் ஆட்சிசெய்யும் விதம்.. .. வாழைமர தோரணங்கள் எல்லாம்கட்டி கடைசியில் இழவு வீடான கதைதான்.. #நூறுநாட்கள்.. .. ஆலஞ்சி மன்சூர்

கமல்

கமல்.. கமலின் கருத்துக்களோடும் செயல்களோடும் நிறைய கருத்துவேற்றுமை உண்டு.. அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை தவிர்த்து அவரின் பெரியாரிய கருத்தின் நிழலில் இருப்பதை போன்ற தோற்றத்தை தருவதில் நிறைய விமர்சனங்கள் உண்டு.. ஆனால் சினிமா கலைஞனாக அவர் தந்த படைப்புகள், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தில் சிறந்ததொரு நடிப்பை தருவதிலோ யாருக்கும் எந்த விமர்சனமோ எதிர்ப்போ இல்லை.. .. அவரின் போலித்தனமான அரசியல் நடவடிக்கைகளில் யதார்த்தத்தை மீறி வெளிபாடு உண்டு மறுப்பதற்கில்லை.. எனக்கு தெரிந்து சினிமாவில் சமரசமே செய்துக்கொள்ளாத பகுத்தறிவாளன் இலட்சியநடிகர் எஸ்எஸ்ஆர் மட்டுமே.. கலைவாணர் தொடங்கி எம்ஆர்ராதா வரை நடிப்பில் சமரசரத்தை ஏற்றிருக்கிறார்கள்.. கொள்கையை நடிப்பில் தேவையான போதுமட்டுமே எடுத்துரைப்பதும் அந்த கதாபாத்திரம் ஆன்மீகம்..? பேசினால் அதோடு ஒன்றிபோவதுமாக இருந்தது.. .. கமல் சினிமா கலைஞனாக நிச்சயமாக சிறந்ததொரு பங்களிப்பை தமிழ்திரைக்கு ஏன் இந்திய திரைக்கு தந்திருக்கிறார் என்பதில் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை.. அவரை பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே விருது கிடைத்ததை தமிழகம் பெரிதாக கொண்டாடவில்லையென்பது வருத்தம்தான் தமிழ் திரைஉலகம் கூட ஏதோ வாழ்த்துச்சொல்லி முடித்துக்கொண்டது.. .. நேற்றைய கமலில் பேட்டி பெரிதாக பேசபடுகிறது தமிழக அரசோ முதல்வரோ தமிழ்கலைஞன் உயரிய விருதை பெற்றதற்கு வாழ்த்தவில்லை.. மலையாளகரை அதை கொண்டாடுகிறது கேரள முதல்வர் வாழ்த்துகிறார்.. கமலில் தன்னை மலையாளியாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்.. எதிர்வினையாற்றுகிறார்.. .. கமலில் திரைபயணத்தின் தொடக்ககாலங்களில் கேரள திரைஉலகம்தான் அவரை தூக்கிவிட்டது..நிறைய மலையாளபடத்தில் நடித்திருக்கிறார் பிளேபாயாக.. அந்த இளமை பருவத்தில் கைகொடுத்ததென்னவோ மலையாள சினிமாதான் அந்த உணர்வில் சொல்லியிருக்ககூடும்.. .. கமல் தமிழக கலைஞன், தமிழ்நாட்டுக்காரன் என்றுதான் அடையாளப்படுத்தபடுவார்.. அவரின் சினிமாவை தவிர்த்து வேறெதும் போற்றுதலுக்குரியதில்லை எனினும் சினிமாவிலேயே தன் வாழ்வியலை கழித்த /தொலத்த மகாகலைஞன் என்பதை கொண்டாடியே தீரவேண்டும் .. தமிழகம்.. .. #தாகம்தீராத_கலைஞன்_கமல் .. ஆலஞ்சி மன்சூர்

Tuesday, August 30, 2016

எறும்பு...

காலுக்கடியில் சிறு எறும்பு நகர்ந்துசெல்கிறது நசுக்க மனமில்லை.. நான் யார் அதை தொந்தரவு செய்து கொல்ல.. .. குளத்துநீரில் மரக்கிளையிலிருந்து தவறிவிழுந்தது எறும்பு.. எடுத்து தரையில் விட்டேன்.. அப்படியே சாகவிட ..மனமில்லை.. .. குளித்து முடித்து துண்டை கட்டி புறப்பட்டேன் இடுப்பில் கடித்து நன்றி சொன்னது எறும்பு திரும்பவும் பிடித்து தரையில் விட்டேன்.. .. டப்பாவில் போட்டுவைத்த வெல்லக்கட்டியை எறும்பு தின்றது.. எடுத்து வெளியே விட மனமில்லை.. .. அம்மா கட்டிதந்த சக்கரை பொங்கலில் எறும்பு கிடந்தது செத்து தூக்கியெறிந்தேன்.. சிறுது நேரத்தில் எறும்பு கூட்டம் பல்லக்கில் தூக்கி சென்றது.. .. எறும்பை போல் வாழவேண்டும்.. .. ஆலஞ்சி மன்சூர்

விலையென்ன?

மாணவர்களிடம் கல்விக்காக பெற்ற #நன்கொடையை..? திருப்பி தர சம்மதம் பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் .. எல்லாரும் இடத்தை காலி பண்ணுங்க.. திருடியதை, ஏமாற்றி அபகரித்ததை, அது குற்றம் என்று தெரிந்தும் செய்ததை, அதற்கு அரசு அதிகாரத்தை பயன்படுத்தியதை .. அதுவும் தவறென்று தெரிந்தே பயன்படுத்தியதை( miss use) நாட்டின் மாநில முதல்வராக இருந்துக்கொண்டே செய்ததை அதற்காக தண்டனை பெற்றதை.. எல்லாம் மறந்து உச்சநீதிமன்றம் டான்சி வழக்கில் சொத்தை திருப்பி அரசிடமே ஒப்படைக்க தயாரென்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்து பிரதான பத்திரத்தை சமர்பித்து .. விடுதலையாக முடிகிற திருநாட்டில் பச்சைமுத்துவிற்கு 70 கோடிகள் பெரிய விசயமா என்ன.. பிச்சை காசை தூக்கியெறிந்துவிட்டு பச்சைமுத்து வெளியே வந்து கல்வியில் புரட்சியாளராக வலம் வருவார்.. .. எதற்கும் முன் உதாரணமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி சர்வசாதாரணமாக வெளியே வரலாம் .. ஜெயலலிதாவிற்கு ஒரு நீதி .. பச்சைமுத்துவிற்கு நீதியா என கேள்வி கேட்கலாம்.. அரசு பதவியையோ அல்லது அரசு சம்பளத்தை பெறுகிறவர் இல்லை.. அல்லது ஒரு ரூபாய் சம்பளம் வாங்குகிற ஏமாற்று வேலை செய்யவில்லை.. சுயநிதி பல்கலைகழக நிறுவனர்.. பழசையெல்லாம் கிளறி சாராய காய்ச்சியதையெல்லாம் எடுத்தால் நாங்களும் தோண்ட வேண்டியிருக்கும்.. .. பணமும் அதிகாரமும்... தவறென்று தெரிந்தும் சட்டத்தை தங்களுக்காக வளைத்தொடித்து .. அதற்கு உச்சநீதிமன்றம் போன்ற நீதிபரிபாலன உச்சசபையை பயன்படுத்துகிற கேடுகெட்டநிலை தொடருமேயானால்.. நீதியை இவ்வளவு விலைக்கு தரப்படும் அல்லது ஏலம் விடப்படுமென அறிவிப்பை வெளியிட்டுவிடலாம்.. எல்லா தவறையும் நியாயப்படுத்த ஜெயலலிதாவின் வழக்குகளே போதுமானது.. வருமானத்திற்கு சொத்துசேர்ப்பது எப்படி குற்றமாகும் என்கிற நீதிசபையில்.. பச்சைமுத்துக்களை ஒரு மயிரும் புடுங்கமுடியாது.. .. நீதியே விலையென்ன.. #JUSTICE_for_sale.. .. ஆலஞ்சி மன்சூர்

சட்டமன்றம்..

சண்முகநாதனுக்கு பதில் மாபா.பாண்டியராஜ் முதல்வர் தனக்கு பிடித்தமானவரை அல்லது தேவையானவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வது அவர் விருப்பம்.. மாற்றுகருத்தில்லை ஆனால் ஏன் ஒருவர் அமைச்சரவையிலிருந்து மாற்றப்படுகிறார் என்பதற்கு குறைந்தபட்சம் விளக்கமாவது தரவேண்டும்.. ஒருவரை தொடர்ந்து சிலகாலம் ஒருதுறையில் வைத்திருந்தால்தான் அவர் அந்த துறைப்பற்றிய அறிவை பெற முடியும்.. அடிக்கடி மாற்றுவதால் துறைசார்ந்த வேலைகள் /பணிகள் தேக்கமடையும் இவையெல்லாம் அறிந்தும் அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது.. சிறந்த நிர்வாகத்தை தராது.. .. நிறைய மரபுகள் மீற படுகின்றன புதிய உறுப்பினரின் கன்னிப்பேச்சில் குறிக்கிடுவது கூடாது ஆனால் அன்பில் மகேஷின் பேச்சில் அமைச்சர் பன்னீர் செல்வம் குறிக்கிடுகிறார்.. சட்டமன்றம் நடக்கும் போது அறிவிப்புகளை சட்டமன்றத்தில் தான் அளிக்கவேண்டும் அதுவும் துறைசார்ந்த விவாதத்தில் ஆனால் விவாதம் முடிந்தபின் மற்றொரு விவாதத்தில் குறிக்கிட்டு முடிந்துபோன மான்ய விவாதத்தின் அறிவிப்புகளை செய்யகூடாது அது உபரியாகவோ அல்லது கூடுதல் நிதிநிலை அறிக்கையாகவோ தரவேண்டும் இதெல்லாம் மரபு மீறியசெயல்கள்.. அதைவிட கொடுமை சட்டமன்றம் நடந்துக்கொண்டிருக்கும் போதே அமைச்சரவை மாற்றம் .. மரபுகளை மீறுவது ஜெயலலிதாவிற்கு புதிதல்ல என்றாலும்.. அமைச்சரவை மாற்றம் என்பது அழகல்ல .. .. ஜெயலலிதா அறிந்தே தவறுகளை செய்வதும் அதை நியாயப்படுத்தி ஊடகங்கள் ஜால்ரா அடிப்பதும் காலக்கொடுமை.. .. #வாசல்கோணல்.. ..

Monday, August 29, 2016

ஜெயலலிதா எனும் மாயபிம்பம்

காவிரி பிரச்சனையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை கலைஞர்.. .. ஜெயலலிதா எந்த விடயத்திலும் /பிரச்சனையிலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டமாட்டார்.. ஆணவம் அகம்பாவம் தான்தோன்றிதனமாக நடக்கிறார் என்பதைவிட.. தனக்கு எல்லாம் தெரியும் என்று நம்பவைக்க முயற்சிக்கிறார் என்பதை விட.. உண்மையான காரணம் வேறு இருக்கிறது.. இதை எதிர்கட்சிகள் ஏன் திமுக கூட பேசுவதில்லை.. .. முக்கியமான பிரச்சனையில் கூட ஜெயலலிதா அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதில்லை.. எந்த பிரச்சனை/ விடயமானாலும் கலந்துக்கொள்ளும் கட்சிகள்/அமைப்புகள் அந்த விடயத்தில் அனுபவமுள்ள திறமையானவர்களை, புள்ளிவிபரத்தோடு பேசகூடிய நபர்களை தான் அனுப்புவார்கள்.. நதி நீரென்று வைத்துக்கொண்டால் திமுக துரைமுருகனை தான் அனுப்பும் அதே பிற கட்சிகளும் அதில் ஆரம்பம் முதலே பங்கெடுக்கிற எல்லா விசயங்களையும் விரல்நுனியில் வைத்திருக்கிற சாதகபாதகங்களை விரிவாக அலச கூடியவர்களை தான் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அனுப்பும்.. எந்தவித அடிப்படை அறிவு கூட இல்லாமல் அடுத்தவர் எழுதிக்கொடுப்பதை படித்துவிட்டு துறை செயலர்களின் கருத்தை அப்படியே மொழிகிறவராகதான் ஜெயலலிதா இருப்பார் அவரால் பிற கட்சியினரின் கேள்விகளுக்கோ கருத்துகளுக்கோ ஆலோசனைகளுக்கோ பதில் சொல்லவோ, மறுத்து பதிலளிக்கவோ தெரியாது.. அவர் மற்றவர்கள் எழுதி தருவதை படிக்கிற கூட்டத்தை சேர்ந்தவர் சுயமில்லாதவர்.. .. ஜெயலலிதா என்கிற மாய பிம்பம் பாசிசம் பேசுவோரால் கட்டமைக்கப்பட்டது அவர்களுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டார் அதனால் அவரை கொண்டுநடக்கிறார்கள்.. சோ வார்த்தையில் சொல்லவேண்டுமானால் ராஜாஜிக்கு பிறகு #வராதுவந்த_கண்மணி அவ்வளவு தான் ஜெயலலிதாவின் தகுதி.. .. பொதுக்கூட்டங்களிலேயே அடுத்தவர் எழுதிக்கொடுப்பதை பேசியும் சட்டமன்றத்தில் திமுகவினரோடு விவாதிக்க பயந்து மொத்தமாக வெளியேற்றிவிட்டு தனக்குதானே பேசுவதும் தான் ஜெயலலிதா அறிந்தது.. ஜெயலலிதா மிகப்பெரிய அறிவார்ந்தவர் intelligent என ஒரு மாயையை, இரும்புமனுசி என்ற போலியான தோற்றத்தை மீடியாக்கள் உருவாக்கியதே தவிர உண்மையில் பேசவோ செயல்படவோ சரியானதை அறிந்து விளக்கவோ சிறிதும் திறமையில்லாதவர்.. மொத்தத்தில் #தகுதியில்லாதவர்.. .. #காற்றடைத்த பலூன்.. .. ஆலஞ்சி மன்சூர்

சிறுவாணி

#சிறுவாணி.. பழைய தமிழக எல்லையான பாலக்காட்டுக்கருகில் மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற ஆறு.. சுவைகூடிய நீர்.. மேட்டுபாளையம் அருகிலும் பவானி ஆற்றோடு கலக்கிறது.. கோவைக்கு குடிதண்ணீரின் ஆதாரமாக விளங்குகிற ஆறு..கோபி நீர்வீழ்ச்சி .. கோவை பாலக்காட்டு மக்களின் சுற்றுலாதளம்.. .. சரி விசயத்திற்கு வருவோம் கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைகட்டுகிறது.. முறைப்படி மத்திய அரசின் அனுமதியை கேட்கிறது மத்திய அரசும் தமிழகத்திற்கு கருத்துகேட்டு கடிதம் எழுதிஅதற்கு பதில் வராததால் அனுமதியளித்திருக்கிறது.. ஜெயலலிதாவிற்கு யாராவது சொன்னால்தான் எதுவுமே தெரியும் போலியிருக்கிறது.. அவதூறு வழக்கில் கூட உச்சநீதிமன்ற நோட்டீஸ் கிடைக்கவில்லை என பொய் சொல்லியவர்.. ஆறுமாதமாகவே சிறுவாணியில் குறுக்கே அணைகட்டபோவது எல்லா ஊடகங்களும் வந்திருந்தது.. ஜெயா செய்திகளில் கூட பார்த்ததாக ஞாபகம்.. எனவே ஜெயலலிதாவிற்கு தெரியாமல் இல்லை அலட்சியம்.. காசு வாங்கிக்கொண்டு ஓட்டுபோடுகிறவனுக்கு எதற்காக உழைக்கவேண்டும் ..அவனுக்காக அவன் தேவைகளுக்காக ஏன் செயல்படவேண்டுமென்ற ஜெயலலிதாவின் சிந்தனை சரியானதுதான்.. விற்றபின் உரிமை கோரமுடியாது.. .. நதிநீர் பிரச்சனையில் ஜெயலலிதா எப்போதுமே தும்பைவிட்டு வாலை பிடிக்கிறவர் .. திமுக மீது குற்றம் சாட்டியே காலத்தை கடத்துகிறவர்.. காவிரியில் சன்டிவிக்காக கலைஞர் தயங்குவதாக குற்றம் சாட்டினார்.. ஆனால் காவிரி நடுவர்மன்றம் அமைத்தபோது அதை எதிர்த்தார்.. நடுவர்மன்ற தீர்ப்பு வந்தபோது குறைச்சொன்னார் ஆனால் அரசிதழில் வெளியிடும் போது ஜெயலலிதா ஆட்சி இருந்தது காவிரித்தாய் பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டார் காவிரிக்காக ஒரு சிறு துரும்பை கூட அசைக்காதவர்.. முல்லை எம்ஜிஆர் காலத்தில்தான் அணையை உயர்த்தவேண்டாமென்ற யோசனையை தன் இன பாசத்திற்காக விட்டுகொடுத்ததும் பின் கலைஞர் ஆட்சிக்கு வந்தபிறகு வழக்குபதிவே நடந்தது.. .. இப்போது கூட சிறுவாணி பிரச்சனையில் நித்திரை கலையாமல் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்க நினைக்கிறார்.. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் மூலமே தீர்வை கண்டுவிட முடியுமென்கிற அறியாமையை விட்டபாடில்லை.. கச்சேரிக்கு போனா உள்ளதும் போகும் என்பார்கள்.. கொங்கில் ஒரு சொல் உண்டு.. வரப்பிற்காக வயலும் போச்சு என்பார்கள்.. நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகாவும் கேரளாவும் மதிக்காது .. ஏன் ஜெயலலிதாவே தன் சொந்த வழக்குகளில் எவ்வளவு காலதாமதத்தை ஏற்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும்.. .. கலைஞர் ஆட்சியிலிருந்தபோது கர்நாடகாவோடு பேசி தொடர்ந்து தண்ணீரை பெற்று தந்தார்.. ஜெயலலிதாவின் அகம்பாவத்தால் எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடுவதால் காலவிரயமாகி டெல்டா மாவட்டமே பாலைவனமாகிறது.. ஜெயலலிதா தயவில் டெல்டா மாவட்டம் வறண்டுபோனது இனி.. மேற்கு மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாகலாம்.. .. #தகுதியில்லாத_தலைமை… ஆலஞ்சி மன்சூர்

Sunday, August 28, 2016

இருவர்

திராவிட இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டனவே என்ன செய்தீர்கள் என்றார்.. சிரித்துக்கொண்டே சொன்னேன் அம்மணசாமியார் சட்டமன்றத்திற்குள் பார்த்துக்கொண்டேமே .. .. மிகபெரிய கால அளவுதான் ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக எங்களை அடிமைப்படுத்தியவர்களிடமிருந்து மீண்டுவந்த சுயமரியாதையோடு இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறோமே.. ஆட்சியில் இருந்ததாக சொல்லபடும் ஆண்டுகளில் ஏறக்குறைய இருபதாண்டுகள் கூட திமுக ஆட்சியில்இல்லை ..அதிமுகவை நீங்கள் திராவிட இயக்கமாக கருதமுடியாது.. .. இன்றைக்கு பெருந்தலைவர் காமராஜரை அவரின் ஆட்சியை புகழ்ந்துக்கொண்டிருக்கிறோமே அதற்கு காரணம் பெரியார்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.. ராஜாஜியின் கட்டுபாட்டியிலிருந்த காங்கிரஸை தமிழர்களின் தலைமைக்கு கொண்டுவர வேண்டுமென எண்ணி குடியாத்தம் இடைதேர்தலில் காமராஜரை நிற்க சொல்லி பணிக்கிறார்.. காமராஜரோ நான் மிகவும் பின்தங்கிய நாடார் வகுப்பை சார்ந்தவன் குடியாத்தத்தில் முதலியார்களும் முஸ்லிம்களுமே,அதிகம்..என்ற போது நான் சொல்கிறேன் நீ நில் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தமிழர்கள் காமராஜரை ஆதரியுங்கள் என்றார் திக விலிருந்து பிரிந்து திமுக கண்ட அண்ணாவும் , கண்ணியமிக்க காயிதே மில்லத்தும் பெரியார் சொல்லிவிட்டார் என்று ஆதரித்தார்கள்.. அப்படிதான் தமிழக அரசியலில் பிராமணர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட தொடங்கியது.. .. திமுக ஆட்சியிலிருந்த போதுதான் .. சமதர்ம சமுதாயத்தை கட்டமைக்க திட்டங்களும் சட்டங்களும் வந்தன.. 1950 களில் அண்ணல் அம்பேத்கர் வீட்டிலும் நாட்டிலும் ..எல்லா மத ஜாதியிலும் பெண்கள் அடிமைகளாகதானியிருக்கிறார்கள்.. அவர்களுக்கென்று உரிமைகளில்லை சொத்தில் பங்கில்லை எனவே அதை சட்டமாக்க வரைவை கொண்டுவருகிறேன் என நாடாளுமன்றத்திலே பேசிய போது பண்டிதஜவகர்லால் நேரு தலைமையிலான அரசு இருந்த போதே ஆதிக்க மேட்டுக்குடி பார்பனர்கள் கடுமையாக எதிர்த்து தோற்கடித்தார்கள்.. என்னால் முடியாமல் போனது எப்போதாவது ஒருதலைவன் பெண்களுக்கான உரிமையை கொண்டுவருவான் என கூறி ராஜினாமா செய்துவிட்டுபோனார்.. ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்களுக்கு சொத்தில் சமபங்கை கொண்டுவந்து சட்டமாக்கியது திராவிட இயக்கம் தான் திமுகதான் கலைஞர்தான்.. இந்தியாவிற்கே வழிகாட்டியது.. .. இன்றைக்கும் இடஒதுக்கீட்டில் 69 சதவிகிதத்தை செயல்படுத்துவதும் சாதிமத கட்டமைப்பை உடைத்து சமத்துவபுரம் கண்டதும், மலம் அள்ளுவோர் என ஒதுக்கி வைத்த அருந்தியினருக்கு உள்இடஒதுக்கீட்டை வழங்கி இன்றைக்கு மருத்துவம் பொறியியல் என உயர்கல்வி பெற வழிவகை செய்ததும்.. இடுப்பில் கட்டிய துண்டை தோளில் போட்டுக்கொண்டு சரிசமமாக அமர்ந்து பேச வைத்ததும்...சமூகநீதியில் இன்றுவரை இந்தியாவிற்கே முன்னுதாரணமாய் இருப்பதும் திமுகவால் திராவிடத்தால் கிடைத்தது.. .. குளத்தில் தண்ணீர் அள்ளி குடிக்கவோ குண்டி கழுவவோ விடமாட்டேன் என்கிறான் என் இனத்தவனை அறநிலையத்துறை அமைச்சராக்கி கருவறை வரை செல்ல வைத்தது திராவிடம்தான் பெரியார்தான் என பெருமையோடு சொன்னார் பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவனை பெரியார் சொன்னார் என்பதற்காக அமைச்சராக்கினார் காமராஜர்.. .. திராவிடத்தை உச்சரிக்காமல் இங்கே அரசியலே செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவந்திருப்பதும் மற்றமாநிலங்களை போல் அல்லாமல் எல்லாவற்றிலும் முன் உதாரணத்தை உருவாக்கியிருப்பது திராவிடம்தான்.. காரல் மார்க்ஸ் சொன்னார்.. குரங்கையும் மாட்டையும் தெய்வமாக மதிக்கிற நாட்டில் ஒரு கலாச்சார புரட்சியோ பொருளாதார புரட்சி வராதென்றார்.. இன்றைக்கு தமிழகத்தில் மாட்டு அரசியல் எடுபடாமல் போனதற்கு நவநாகரீக சிந்தனையை .. கலாச்சாரம் என்ற பெயரில் மூடத்தனமும் எடுபடாமல் போனதற்கு .. பெரியாரும் பெரியாரின் கொள்கைகளை தாங்கி அதை அரசியலாய் சட்டவடிவாய் மாற்றிக்காட்டிய பெருமை திமுகவை கலைஞரையே சாரும்.. .. #அன்றைய_பெருங்கிழவனும்_இன்றையகிழவனும்… ஆலஞ்சி மன்சூர்

Saturday, August 27, 2016

கல்வி...

SRM .. பச்சை முத்து கைதிற்கு பிறகு நடக்கும் திரைமறைவு அரசியல் .. பச்சைமுத்துவின் வளர்ச்சி அரசியல் மற்றும் பணம் என்பதை கடந்து அவரின் உழைப்பும் பங்களிப்பும் மிகபெரிய அளவில் வளர காரணம்.. இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் பணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு செயல்பட்டாலும் அதன் பின்புலத்தில் சில கசப்பான உண்மைகள் புதைந்திருக்கும்.. .. பச்சையப்பன் அறக்கட்டளையிலிருந்து ஐசரி வேலன் விரட்டப்பட்டதின் பின்னில் யார் செயல்பட்டார்களோ அவர்களே பச்சைமுத்துவின் கைதுக்கு பிறகு நடந்த திரைமறைவு அரசியலில் இருக்கிறார்கள்.. நடந்த சம்பவங்கள் கண்டிக்க / தண்டிக்கதக்கது மாற்றில்லை.. ஆனால் இதே பகல் கொள்ளையை நடத்தும் சாஸ்திரா மீதோ.. இளம் பிச்சுகளின் படிப்பில் கொள்ளையையும் வெறியைஞ ஊட்டும் பத்மா சேஷாத்திரி மீது நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை.. கட்டணக்கொள்ளையை நடத்துவதாக பெற்றோர்கள் புகார் அளித்தும்..இவர்களின் ரோமத்தை கூட தொடமுடியவில்லையே ஏன்.... ஐசரி கணேஷை மிரட்டியதை போல இவர்களை மிரட்டி சொத்தை அகரிக்கவோ அல்லது நிர்வாகத்தின் பங்கை பெறவோ முடியவில்லையே ஏன்.. .. பச்சைமுத்தென்ற கல்வி கொள்ளையனை நியாயப்படுத்தவில்லை மாறாக சாஸ்திராக்களும் சேஷாத்திரிக்களும் எங்களுக்காக கடைவிரிக்க தயாரில்லை என்பதும் சுடுகின்ற நிஜம்.. காசு உள்ளவன் வெளியே வருவதில் இந்த நீதிமன்றங்கள் சிலநேரம் கண் மூடிக்கொள்ளும்.. மோசடி ஏமாற்று எல்லாம் எல்லா கல்வி நிறுவனங்களிலும் சர்வசாதாரணமாக நடந்துக்கொண்டுதானியிருக்கிறது..அவையாவும் மாட்டிக்கொள்ளும்வரை அல்லது பேராசை படாதாவரை.. ஒன்றும் வெளியே வராது.. .. நண்பர் ஒருவர் தன் மகனை சேர்பதற்காக பத்மா சேஷாத்ரி சென்றபோது.. அதுவும் நண்பர் மத்திய அமைச்சரின் பரிந்துரையோடு வந்தார் காசு தர தயாராக இருந்தும் இடம் கிடைக்கவில்லை.. கள்ளப்பய ரெகமண்ட் பண்ணியிருக்கான் என காதுபடவே பேசினார்கள்.. இவ்வளவிற்கும் எல்கேஜி க்கு 2L வரை கொடுக்க தயாராக இருந்தார்.. மந்திரியால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.. காரணம் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.. .. இன்றைய கல்வி வியாபாரமானதற்கு எம்ஜிஆரின் கல்விக்கொள்கையும் .. அதை தொடர்ந்து அந்தந்த நிறுவனங்களையெல்லாம் நிகர்நிலை பல்கலைகழகங்களாக மாற்றியதும் தான்.. SRM போன்ற பிரமாண்ட கல்வி கட்டமைப்பை அரசே ஏற்று நடத்தினால் ஒரு வேளை கட்டண கொள்ளை குறையலாம் நிச்சயமாக தரமான கல்வியென்ற மக்களின் மாயையை, ஊழலை ஒழித்திட முடியாது.. .. கல்வி எதென்பதில் மக்களின் அறியாமையை அகற்றாதவரை கல்வியாளர்கள் புதிய அவதாரங்களோடு வருவார்கள்.. ..

Friday, August 26, 2016

பாரிவேந்தர்

பழைய சாராயவியாபாரி கைது இப்படி செய்தி ஏதாவது போடுவார்களா என பார்த்தேன். கல்வி வள்ளல்..? கல்வியாளர் கைது என ஊடகங்கள் செய்தி.. சரி.. இந்த பச்சைமுத்துவை பாரிவேந்தர் அளவுக்கு உயர்த்தியவர்களில் கல்வி மீது மோகம் கொண்டவர்களின் பங்கு சாதாரணமானதில்லை.. தான் கேட்ட படிப்பு வேண்டுமென்பதற்காக கேட்டதை கொடுக்க தயாரானது அவரின் அபரீத வளர்ச்சிக்கு காரணமானது.. .. அடியாட்களை சாராயம் காய்ச்சியவர்களையெல்லாம் கல்வியாளர் தகுதிக்கு உயர்த்தியதில் எம்ஜிஆருக்கு பெரும்பங்குண்டு.. தொழில்கல்வியை வியாபாரமாக்கிய பெருமை அவரையே சாரும்.. .. யார் இந்த பச்சைமுத்து.. மிகவும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஒருவர் மிகப்பெரிய கல்வியாளராக ஆக்கிய பெருமை நடுத்தர குடும்பத்தினரையே சாரும்.. கேட்டதை கடன்வாங்கியாவது கொடுத்து தங்கள் குழந்தைகளை படிக்கவைக்கவேண்டுமென்ற வெறி.. சாதாரணமானவனை .. இன்றைக்கு நிறுத்தியிருக்கிற இடம்.. இன்னும் மர்ம முடிச்சுக்கள் அவிழாமல் இருக்க இவர் செய்யபோகும் தந்திரங்களும் இலைமறைவு செயல்களும் மீண்டும் இவரை புனிதர் அளவிற்கு கொண்டுவராமல் இருக்கவேண்டும்.. .. ஊடகம் என்ற மிகப்பெரிய பலம் அதைக்கொண்டு ஆளும்தரப்பை சரிசெய்ய முடியுமென்கிற நிலைதான் இப்போதுவரை இருக்கிறது.. சிறைக்கு செல்லவேண்டியவர் .. உயர்தர சிகிச்சை என்ற பெயரில் சொகுசாக இருக்கலாம்.. வழக்கின் பின்னணியோ அல்லது இவர் மீதும் SRM கல்வி நிறுவனம் மீதும் தொடர்ந்து புகார்களும் குற்றசாட்டுகளும் வந்தபோதும்.. இதுவரை அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாத அரசும் .. நீதிமன்ற தலையீட்டிற்கு பிறகே கைது வரை வந்திருக்கிறார்கள்.. .. இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.. பள்ளி கல்லூரி அளவில் இவர்களும் கல்வியை வியாபாரமாக்கி மக்களின் ஆசையை பேராசை காட்டி படித்தவுடன் வேலையென்ற மாயதோற்றத்தை உருவாக்கி மக்களின் ஏமாளித்தனத்தை/அறியாமையை பயன்படுத்தி பணம் பார்க்கிறவர்கள்.. நிறைய பச்சைமுத்துக்கள் பாரிவேந்தர்களாக உலாவந்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.. .. சாதாரண ஆசிரியர் 15000 கோடிக்கு அதிபதியான கதை.. சாதாரணமான விடயம்தான் ஏனெனில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேரப்பது குற்றமா என கேட்கும் #நீதி..? இருக்கும் நாட்டில் பச்சைமுத்துக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.. #சாமானியனுக்கு_கல்விதந்ததெய்வம் …என போஸ்டர் வரலாம்.. #கல்வியை_காசாக்கதெரிந்தவன் .. .. ..

Thursday, August 25, 2016

ஜெயலலிதாவின் நிஜமுகம்..

இன்னும் பக்குவமடையவில்லை சபாநாயகர் தனபாலை நீக்கி பரிகாரம் தேடபோவதாக செய்திகள் வருகின்றன.. இந்தியாவே உற்றுநோக்கிய தினமானது மொத்த திமுக உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து உத்திரவிட்டார் தனபால்.. அதிகார வரம்புகளுக்குள் நின்றாலும் சபையின் தலைவர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது அவையின் மாண்பை கெடுத்துவிடும்.. .. ஜெயலலிதா இன்னும் சகிப்புதன்மையில்லாதவராக விமர்சனத்தை எதிர்கொள்ள அஞ்சுகிறவராக திரைமறைவில் செயலாற்றும் பேடித்தனத்தை உடையவராகதான் இருக்கிறார்.. இத்தனைகாலம் முதல்வராக இருந்தும் ஆணவம் அடங்காமை போன்ற செயல்களால் தானும் தலைகுனிந்து தமிழகத்தையும் தலைகுனிய வைத்திருக்கிறார்.. .. தனக்கு பிடிக்காத எதிர்மறையானவர்கள் மீது அவதூறு வழக்கு அவரை தரகுறைவாக தனக்கு விசுவாசமானவர்களை விட்டு பேசவைத்து ரசிப்பது போன்ற ஈனச்செயல்கள் இவரின் நிஜமுகத்தை நமக்கு காட்டுகிறது.. .. எம்ஜிஆர் ஆட்சியின் போது அதிமுக உறுப்பினர்கள் கலைஞரை கருணாநிதியென பேசியதற்காக கடிந்துக்கொண்டதும் சபாநாயகரிடம் சொல்லி கலைஞர் என அவைக்குறிப்பில் மாற்றியதும் அப்போதெல்லாம் சபையை மிக கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடத்தியதும் நாடறியும்.. இப்போதெல்லாம் மிகவும் புகழ்பெற்ற தமிழக சட்டசபை சிலரின் நடவடிக்கைகளால் நாறிப்போய் கிடக்கிறது.. .. சபை உறுப்பினர்களின் எண்ணங்களை பிரதிபலிக்க மக்களின் கோரிக்கைகள் தேவைகளை அவையில் எடுத்துரைக்க.. நாட்டிற்கும் மக்களுக்கும் கேடானவற்றை செய்யும் அரசை தட்டிகேட்க சரியானவையெனில் சேர்ந்து கரம்கோர்க்க .. ஆனால் நடப்பதென்ன ஜனநாயகத்தின் ஆணிவேரையே பிடிங்கி எறியும் நிலைக்கு வந்திருக்கிறது.. .. தொடர்ந்து ஊடகங்களும் மக்களும் .. நீதிமன்றமும் ஜெயலலிதாவின் உண்மையான முகத்தை தோலிரிப்பது கண்டு பலியை தனபால் மீது போட்டு தப்பிக்க முயற்சிக்கிறார்.. ஆனால் நாடும் மக்களும் அறிவர் .. இந்த ஜனநாயக படுகொலையின் பின்னில் ஜெயலலிதா இருப்பது.. .. என்னதான் உச்சத்தில் நின்று ஆடினால்.. ஆட்டம் பிழையானால் வீழநேரிடும்.. .. #வீழ்ந்துபோவார் ..

காமராஜரும் பெரியாரும்

காமராஜர் திராவிடம் என்ன செய்து என்போரே..குடியாத்தம் அரசியல் தெரியுமா .. 1953 ல் குடியாத்தம் இடைதேர்தலில் தந்தை பெரியார் காமராஜரை குடியாத்தத்தில் போட்டியிட சொல்கிறார்..பெரியாரின் நோக்கம் பார்பனர் கைகளிலிருந்த அதிகாரத்தை பறிக்கவேண்டும் அதற்கு காமராஜர் தான் சரியான கருவியென தீர்மானித்து செயல்படுகிறார்.. அப்போது காமராஜர் சொன்னார் நான் சாதாரண மிகவும் பிற்படுத்த பிரிவை சார்ந்தவன் என் குடியாத்தத்தில் நிற்க சொல்கிறீர்களே அங்கே முதலியார்களும் முஸ்லீம்களும்தானே அதிகமிருக்கிறார்கள் என தயக்கம் காட்டுகிறார்.. உன்னை எப்படி ஜெயிக்க வைக்கவேண்டுமென்று எனக்கு தெரியும்..எனச்சொல்லி தமிழர்கள் அனைவரும் காமராஜரை ஆதரியுங்கள் என்கிறார்.. .. அறிஞர் அண்ணா வும் ஒரு அறிக்கைவிடுகிறார் குணாளா மணாளா குலக்கொழுந்தே சென்று வா குடியாத்தம் வென்று வா கோட்டைக்கு .. திமுக தொண்டர்கள் காமராஜரின் வெற்றிக்கு பாடுபடவேண்டுமென கேட்டுக்கொண்டார் காமராஜர் வெற்றிப்பெறுகிறார்.. உடனே காமராஜர் பெரியாரை சந்தித்து எதில் முதல் கையெழுத்து போடவேண்டுமென கேட்கிறார்.. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் யூ.என். தேவரைபார்த்து கேட்கவில்லை... பெரியார் ஒரு தாழ்த்தப்பட்டவனை இந்து அறநிலையதுறை அமைச்சராக்கு என்றார்.. அப்போதுதான் பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவர் அறநிலைய துறை அமைச்சரானார்.. அப்போது அண்ணா பரமேஸ்வரன் வருகை கண்டு தில்லை நடராசரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் பதறும் காட்சிக்கண்டேன் அந்த மாட்சி கண்டேன் ..என்றார்.. .. அப்போது டாக்டர் அம்பேத்கர் சொன்னார் என் இனத்திலே பிறந்தவனை குளத்தில் குளிக்கவும் விடமாட்டேன் என்கிறான் குனிந்து அள்ளி தண்ணி அள்ளி குடிக்கவும் விட மாட்டேன் என்கிறான்.. பெரியார் பிறந்த மண்ணில் தான் என் இனத்தவன் கடவுளின் மூலவிக்ரகத்துக்குள்ளே போகும் அதிகாரத்தை பெற்றான் என்றார்.. .. பெரியாரை இன்றைக்கும் சிலர் வெறுக்கிறார்கள் என்றால் காரணம் புரியுமே ஆனால் அந்த பெருங்கிழவன் பெற்று தந்த உரிமைகளை அனுபவித்துக்கொண்டே பெரியார் இல்லாவிட்டால் நாங்கள் முன்னேறி இருக்கவே முடியாதா என்கிறார்கள்..உ.பி.யிலும் குஜராத்திலும் பீகாரிலும் இருப்பதை போல இருந்திருப்பான்.. .. பெருந்தலைவரை சரியான நேரத்தில் கொண்டுவந்து பார்பனர்களின் அதிகார மையத்தையே ஆட்டிவைத்தவர் பெரியார்.. பெருந்தலைவரை உருவாக்கியதில் பெரும்பங்கு எங்கள் பெருங்கிழவனுக்குண்டு.. என்ன கிழித்தது திராவிடம்.. #புரிகிறதா.. .. ஆலஞ்சி.மன்சூர்..

விஜயகாந்த்

#விஜயகாந்த் அரசியல் தெரியாத அரசியல் செய்யாத அரசியல் தலைவர்.. திடீரென்று ஒருநாள் அரசியல் கட்சியை தொடங்கி தேர்தல் வெற்றி என புதிய அத்தியாயம் தொடங்கியது.. தமிழக அரசியல் புதியதை ஏற்றுக்கொள்ள தயாராகவே இல்லை என்று கூட சொல்லலாம் திராவிட இயக்கத்தின் வேர் அவ்வளவு பலமாக வேருண்டிருக்கிறது.. .. அரசியலுக்கு தகுதியானவரா என்பதை விட சரியாக திட்டமிடாதததாலும் சிலரின் சூழ்ச்சியாலும் வேரோடு பிடிங்கியெறியப்பட்ட செடியை போல கிடக்கிறார்.. தனித்து தொடர்ந்து களம் கண்டிருப்பாரே ஆனால் ஒரளவு மெச்சப்பட்ட நிலையை எட்டியிருக்கலாம்.. அரசியல் சகுனி சோவின் பேச்சை கேட்டு ஜெயலலிதாவை ஆதரிக்க போய் கடைசியில் ஒன்றுமில்லாத நிலைக்கு வந்துவிட்டார்.. அரசியலில் சமகால நிகழ்வுகளுக்கு தகுந்தாய்போல காய் நகர்த்தப்படவேண்டும் இல்லையெனில் அடுத்தமுறை என்ற சொல்லே இல்லாமல் போய்விடும் .. .. கடந்த தேர்தலில் வைகோவோடு இணைந்தது அவரது அரசியல் வரலாற்றில் கருத்தபக்கங்களானது.. தனித்து களம் கண்டிருக்கவேண்டும் அல்லது திமுகவோடு சேர்ந்து ஜெயலலிதாவை வீழ்த்திருக்கவேண்டும்.. அப்படி வீழ்த்திருந்தால் தமிழகத்தில் வருங்காலங்களில் திமுக தேமுதிக என இருகட்சிகள் மட்டுமே இருந்திருக்கும்.. .. அரசியலில் சூழ்ச்சியறிந்து செயல்படவேண்டும் நட்டதும் பூக்கவேண்டுமென நினைப்பது அறிவீனசெயல் .. காத்திருந்து நேரம் வரும் போது அதன் பயனை அனுபவிக்கும் பொறுமை வேண்டும்.. விஜயகாந்த் எனும் தனிப்பட்ட நபரோடு தமிழக மக்கள் வெறுப்பை தரவில்லை மாறாக அவரின் செயல்பாடுகளின் மீது தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.. இன்னும் காலமிருக்கிறது.. வாழ்த்துக்கள் விஜயகாந்த்.. .. அரசியலில் #வெள்ளந்தி_வேலைக்காகாது.. ..

Wednesday, August 24, 2016

அவதூறு...

அவதூறு.. இதொன்றும் ஜெயலலிதாவிற்கு எத்தனை முறை கொட்டினாலும் அவருக்கு ரோசம் வராது.. கண்டனத்தை பதிவு செய்வதால் மனமுடைந்து போகமாட்டார்.. அதெல்லாம் மானமுள்ளவர்கள் செயல்.. .. ஜெயலலிதாவை அவர் அரசை நீதிமன்றங்கள் கண்டிப்பதொன்றும் புதிதல்ல டான்சி வழக்கிலேயே நீதிமன்றம் தன் கண்டனத்தை பலமாக பதிவு செய்திருக்கிறது.. ஆனால் தொடர்ந்து நீதிமன்ற கண்டனத்திற்கு ஆளாகிற ஒரு தலைவர் உண்டென்றால் அது ஜெயலலிதா தான்.. .. பொதுவாழ்விற்கு வந்தவர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் விமர்சனம் செய்ய கூடாது என்பது சர்வாதிகாரச்செயல் .. ஜெயலலிதாவிற்கு இதெல்லாம் புரியாது கண்டனத்தாலோ நீண்ட விளக்கம் தருவதாலோ ஜெயலலிதா திருந்திவிட போவதில்லை.. .. அரசு வழக்கறிஞர்களை தன் சொந்த நலனுக்காக / வழக்கிற்காக பயன்படுத்திய தவறுக்கான தண்டனையை தரவேண்டும்.. அரசு வழக்கறிஞர்களை ஜெயலலிதாவின் சொந்த வழக்கில் வாதாடிமைக்காக பெற்ற அரசுபணத்தை திரும்ப பெறவேண்டும்.. அதோடு மட்டுமில்லாமல் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக ..தாம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கெதிராக நடந்துக்கொண்டதற்கு அவரை தண்டிக்கவேண்டும்.. வெறுமனே கண்டிப்பதால் திருந்திவிட போவதில்லை.. மாறாக முன்னெப்போதுமில்லாத அளவிற்கு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.. .. மற்றமாநிலங்களில் இது போன்று வழக்குகள் தம்மை எதிர்போர்மீது போடபசுவதில்லையென உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது.. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் அரசு இயந்திரம் தனிநபரின் நலனுக்காக செயல்படுகிறது.. எதிர்கட்சியினர் மீது அவதூறு வழக்குகள் சர்வசாதாரணமாக பதியபடுவது.. ஜெயலலிதாவின் இயலாமையை காட்டுகிறது. பயமுறுத்துவதாக எண்ணிக்கொண்டு ஜெயலலிதா செயல்படுகிறார் உண்மையில் யாருமே அஞ்சவில்லை என்பதும் மாறாக அது ஜெயலலிதா பெயரை கெடுக்க மட்டுமே உகவுகிறது என்பது அறியாத அறிவிலித்தனமாக இருக்கிறார்.. .. மிரட்டுவதாக எண்ணி.. தன் பயத்தை அம்பலப்படுத்துகிறார்.. உண்மையில் எதிரிகளின் பேச்சை உள்வாங்க மறுத்தும், அவர்களின் செயல்களை தடைசெய்தும்.. அவர்களோடு போட்டியிட முடியாமல் ஒரு வகை பயத்தோடு தோல்வி ஏற்பட்டு விடுமோ என அஞ்சி செயல்படுகிறார்.. #இது_கோழைத்தனம்… .. ஆலஞ்சி.மன்சூர்..

முகமறியா நல்லவர்கள்

சிலரை பிடிக்கும் சிலரை பிடிக்காது காரணம் எதுவுமே இல்லாமல் .. ஆனால் அவர்களின் திறமையை அவர்களின் உழைப்பை இந்த சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.. நம் வாழ்வில் கடந்து போகிற முகமறியாத சிலரின் நடவடிக்கைகள் நம்மை அப்படியே புரட்டி போட்டுவிடும். .. நமக்கு பிடித்தமானவரைவிட அல்லது நமக்கு அறிமுகமானாலும் பிடிக்காதவரை விட .. முகமறியா நாடோடியின் செயல் நம் வாழ்க்கையின் அர்தத்ததை உணர்த்திவிட்டு போகும்.. நம் வாழ்வின் வழிநெடுக நிறைய நாடோடிகளை கண்டுக்கொண்டுத்தானிருக்கிறோம்.. .. சில விடயங்களில் போகிற போக்கில் சொல்லிவிட்டு போய்விடுவர் ஆனால் அது நம் வாழ்வின் அர்த்தம் பொதிந்த நிகழ்வை நடத்திவிட்டு போய்விடும்.. சிலரின் மௌனமோ நம்மை அறுத்துவிடும்.. பேசாமல் பேசும் செயலில் நாம் உடைத்தே போய்விடுவோம்.. சாதாரணமாக நாம் எண்ணிக்கொண்டிருப்பவரிடம் நாம் அறிந்திறாத அறிவு குவியல் கொட்டிக்கிடக்கும்.. .. சின்ன சின்ன விசயங்களை கூட மிக நேர்த்தியாக செய்துக்காட்டுவர்.. அப்படி நிறைய பேரை நிச்சயமாக வாழ்வின் வழிநெடுக நாம் சந்தித்திருப்போம்.. வாழும் வழிநெடுக நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள் .. பசியறிந்து நீராகாரம் தந்திருக்கிறார்கள்.. என் நிலையறிந்து தங்க அனுமதித்திருக்கிறார்கள்.. யாரென்றே தெரியாமல் உதவியிருக்கிறார்கள்.. .. எல்லோர் வாழ்விலும் முகம் தெரியாத சிலர் வந்து நம்மை சீர்செய்திருப்பார்கள்.. அந்த முகமறியாதோரை நாம் என்றைக்குமே மறக்க முடியாது.. .. நிறைய பேருண்டு என் வாழ்வில்.. அது சம்பவங்களாய் தோன்றும்.. நிறைய உண்டு நல்லவர்கள்.. .. ஆலஞ்சி மன்சூர்

Tuesday, August 23, 2016

காவிரி

தமிழகம் எதை நோக்கி போய்கொண்டிருக்கிறது.. காவிரி பாலாறு முல்லை பெரியாறு என மூன்றுபக்கமும் தண்ணீரால் நனைந்த பூமி.. இப்போது கண்ணீரால் சூழ்ந்து நிற்கிறதே.. முப்போகம் கண்ட தஞ்சை குறுவை இனி எப்போதுமில்லை சம்பா கிடைக்காமல் கூட போகலாம் தாளடி மழைவந்து தரவேண்டும் இல்லையெனில் அது போச்சு.. இந்த நிலைக்கு என்ன / யார் காரணம் ஆளும் தரப்பு எதிர்கட்சியையும் எதிர்கட்சி ஆட்சியாளரின் கையாகாலாகாததனத்தையும் குறைக்கூறியே பொழுதும் விடிகிறது.. .. எல்லாவற்றையும் நீதிமன்றம் மூலமே தீர்த்துக்கொள்ளலாம் என்கிற அறிவின்மை தமிழகத்தை வறண்ட தேசமாய் மாற்றிக்கொண்டிருக்கிறது.. ஜெயலலிதா என்ற ஒருவரின் ஆணவத்தால் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்து என்ன செய்வது அடுத்தகட்ட போராட்டமென்ன .. என தீர்மானிக்க மறுத்து நாடு சுடுகாடாய் போய்க்கொண்டிருக்கிறது.. .. வாக்கை விற்கிற மனநிலைக்கு வந்துவிட்டவன் இனி நிலத்தை விற்றுவிட்டு பிழைப்பு தேடி பிறமாநிலங்களுக்கு செல்லவேண்டியதுதான்.. திமுக ஆட்சியில் வழக்கு நீதிமன்றத்திலிருந்தும் தொடர்ந்து கர்நாடகவோடு பேசி குறுவை சாகுபடிக்கே தண்ணீரை பெற்று தந்தார் கலைஞர்.. ஆனால் ஆட்சி வந்து ஆறு ஆண்டுகளாக குறுவை இல்லை இந்தவருடம் சம்பாவுமில்லை.. .. அனைத்துகட்சி கூட்டத்தை மற்ற மாநிலங்கள் கூட்டி முடிவெடுக்கும் போது ஜெயலலிதா மட்டும் நீதிமன்றத்தை மட்டுமே நம்புவதும் .. அதனால் பிற மாநிலங்கள் தமிழ்நாட்டில் பொது பிரச்சனைக்கு கூட கட்சிகளிடையே ஒற்றுமையில்லை என்பதை அறிந்து அலட்சியமாக நடந்துக்கொண்டு தண்ணீர் தர மறுப்பதும் நாம் காண முடிகிறது.. .. அண்டை மாநிலங்களோடு வெறுப்புணர்வை மட்டுமே வளர்ப்பது எதிர்காலத்திற்கு நல்லதல்ல.. ஏறக்குறைய எல்லாபுறமும் தண்ணீர் தட்டுபாட்டை சந்திக்கிற மாநிலமாக தமிழகம் இருப்பது விவசாயிகளின் நலனுக்கு மட்டுமல்ல நாட்டின் நலனுக்கும் பேராபத்தை விளைவிக்கும்.. .. அறிவு ,அறம், தெளிவு, திறமை இவையாவுமே இல்லாத ஜெயலலிதாவிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு இப்போது கதறுவதில் பயனில்லை.. பிரதான எதிர்கட்சியின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி , அனைத்துக்கட்சியினரையும் ஒருங்கிணைத்து பிற மாநில அரசோடு பேசி.. தண்ணீரை பெற முயற்சிக்கலாம்... இந்த முயற்சி நிச்சயம் பலனை தரும் அது வருங்காலங்களில் ஆளும்கட்சியின் ஆணவத்தலைமைக்கு எதிராகவும் செயலாற்றும்.. .. இது அவசிய அவசரமும் கூட.. .. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்.. .. ஆலஞ்சி மன்சூர்..

பத்திரிக்கை சுதந்திரம்..

பத்திரிக்கையாளர்கள் கண்டனம்.. நேற்றைய நிகழ்வை சுட்டிகாட்டி ஊடகவியலாளர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.. நல்லது.. ஏதோ நேற்றும் மட்டும் நடந்த நிகழ்வாக இதை ஒதுக்கிவைக்கும் செயலை முதலில் கண்டிக்கிறேன் .. ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தொடர்ந்து ஊடகவியலாளர்கள், தங்கள் தொடர்ந்து பணி செய்ய இயலாதவாறு தொந்தரவுகளை தருவதென்பது தொடர்கதைதானே பின் ஏன் நேற்றைய நிகழ்வை மட்டும் பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.. .. பத்திரிக்கையாளர்களுக்கு இதொன்றும் புதிதல்ல ஆனாலும் தொடர்ந்து ஜெயலலிதா ஆதரவு நிலையை எடுக்கவேண்டி வந்திருக்கிறது .. முதலாளிகளின் சொல்படி நடக்கவேண்டி வந்திருக்கிறது.. தொடர்ந்து அவமதித்தாலும் எதிர்க்க துணிவற்று இருந்தார்கள் .. அவதூறு வழக்குகள் பின்தொடருமென்ற பயமும் காரணம்.. ஜெயலலிதாவின் ஆணவபோக்கை இவர்கள் இந்த அறிக்கையில் கூட கண்டிக்கவில்லை.. மேம்போக்காக கண்டனத்தை பதிவு செய்கிறார்கள்.. உறுப்பினர்களின் கோபத்தை கணக்கில் கொண்டு சங்கம் .. நோகாமல் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.. .. கலைஞரோ ஸ்டாலினோ பத்திரிக்கையாளர்ரளை புறக்கணித்ததாகவோ அல்லது அவர்கள் உரிமையில் தலையிட்டதாகவோ சொல்லமுடியுமா.. தொடர்ந்து திமுக செய்திகளை இரட்டடிப்பு செய்தும் திமுகவை தொடர்ந்து விமர்சித்தும் (ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும்) வந்தாலும் ஊடகவியலாளர்களை மதிக்கிற பண்பை கைவிட்டதில்லை.. ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமாக நடுநிலையோடு செயல்படவேண்டியவர்களின் செயல்கள் சரியாக இருக்கிறதா.. இதை இந்த தருணத்தில் ஊடகவியலாளர்கள்/பத்திரிக்கையாளர்கள் எண்ணிப்பார்பது அவசியம்.. .. இதுபோன்ற ஒரு அராஜக பாசிச சர்வாதிகார தான்தோன்றித்தனத்தோடு செயல்படும் ஆட்சியை இதுவரை விடுதலை இந்தியா கண்டதில்லை.. தற்புகழ்ச்சிகளும் புகழ்மாலை பஜனைகளும் ஆட்சியாளர்களுக்கு அழகில்லையென ஊடகங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.. சரியானதை சரியென்றும் தவறென்பதை துணிவோடு எதிர்க்கவும் செய்து .. தன் ஜனநாயக கடமையை சரியாக செய்தால் .. இந்த கண்டனத்திற்கு அர்த்தம் உண்டு.. இல்லையெனில்.. குப்பைத்தொட்டிக்கு செல்லும் காகிதம் தான் பத்திரிக்கை.. waste paper .. ஆலஞ்சி மன்சூர்..

Monday, August 22, 2016

காற்றில் பறக்கும்...இலை

எனக்கிருந்த துணிச்சல் கருணாநிதிக்கு இருக்கிறதா என்கிறார் ஜெயலலிதா.. யார் யாரெல்லாம் துணிவைப்பற்றி பேசுவதென்றே வரைமுறை இல்லாமல் போய்விட்டது.. கலைஞர் சபைக்கு வந்தால் தன் ஏவல் நாய்களை வைத்து சகட்டு மேனிக்கு பேசவைத்து தாக்குதல் கூட நடத்திகாட்ட இருந்தது அறிந்துதான் சபையை புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.. 80 உறுப்பினர்களை நீக்கியதன் பின்னில் ஜெயலலிதாவின் செயல்திட்டம் அறிந்துதான் திமுக செயல்பட்டது.. 93 வயதுடைய மூத்த அரசியல்வாதியை ஒருமையில் பேசி சபை நடத்தும் ஈனச்செயல் ஜெயலலிதாவிற்கே உரியது..ஏனெனில் ஜெயலலிதாவின் பாதை அதுதான்.. அவருக்கு தெரிந்ததெல்லாம் குறுக்குவழி அரசியல்தான் குறுகிய மனபான்மையும் பெண் என்பதால் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக கூறிதான் ஆரம்பகால அரசியலை நடத்தினார்..சென்னாரெட்டி என்ற பழுத்த அரசியல்வாதியை இவர் குற்றம் சுமத்தியது அறிந்ததுதான்.. இவருக்கு இருக்கிற ஒரே பலம் ஆரியப்பெண் அவ்வளவுதான் இதுதான் அவரது தகுதியும்கூட.. இவரின் ஆரம்பகால அரசியலை கவனித்தவர்கள் இன்றைய வளர்ச்சி அவரது திறமையால் வந்ததாகவோ அல்லது துணிவால் வந்ததாகவோ சொல்லமாட்டார்கள் மாறாக திரைமறைவு அரசியலை மட்டுமே இவரின் வளர்ச்சிக்கு உதவியது .. .. கடந்த ஐந்தாண்டுகளில் அதிமுக ஆட்சியென்பதை மறந்து திமுக ஆட்சியின் சட்டஒழுங்கைப்பற்றி பேசுகிறார்.. கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் குற்றங்கள் திமுக ஆட்சியை விட 21 சதவிகிதம் அதிகரித்திருந்ததாக மனிதஉரிமை ஆணையம் கடந்த வருடம் தந்த புள்ளிவிபர கணக்கை மறைத்து சபையில் பேசுகிறார்.. ஆளே இல்லாத கடையில் .. .. இவர் தந்த குற்றங்களில் எண்ணிக்கை குறைவு என்ற வாதமும் தவறானது.. இந்தியளவில் மூன்றாமிடம் தமிழகத்திற்குதான்.. உ.பி போன்ற பெரிய மாநில குற்றங்களோடு ஒப்பிட கூடாது வடமாநிலங்களில் தலித் மீதான தாக்குதல் அதிகம் நடைபெறுவது குற்ற எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்டுகிறது.. அதைவிட தலித் மீதான தாக்குதலில் இந்தியளவில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது என்பதை இவர் சொல்லவில்லை ஒருவேளை இதை தகுதி என்கிறாரா.. .. திமுக ஆட்சியைவிட ஏன் கடந்த அதிமுக ஆட்சியை விட மூன்றேமாதத்தில் தமிழகத்தில் நடந்த கொலை சம்பவங்கள் .. சாரசரிக்கும் மேலானது மட்டுமல்ல கொடூரமானதும் கூட இவையெல்லாம் பேசப்படாமல் எதிர்வரிசையில் யாருமில்லாமல் ஏதோ பழைய பட வசனத்தைப்போல பேசியிருக்கிறார்.. .. துணிவென்பது தனக்கு சமமானவர்களடோ அல்லது தன்னைவிட பலம் பொருந்திவரோடு மோதுவது.. கலைஞர் கோபுரம்.. கோபுரத்தில் ஒட்டிக்கொண்ட எச்சில் இலை.. கலசமாகிவிடாது.. .. #அஞ்சாமை_திராவிடன்உடன்பிறந்தது.. .. ஆலஞ்சி.மன்சூர்..

Sunday, August 21, 2016

பயந்தாங்கொள்ளி

இப்படியொரு பயந்தாங்கொள்ளி முதல்வரை இதுவரை விடுதலை இந்தியா கண்டதில்லை.. எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பயந்து ஓடியொளிந்தவர்கள் உண்டு மகோரா போன்ற தகரடப்பாக்கள் சபைக்கு வராமல் இருந்ததுண்டு ஆனால் எதிர்கட்சியினரை சபையிலிருந்து மொத்தமாக இடைநீக்கி நிம்மதி பெரும்மூச்சு விடும் முதல்வர் செல்வி.ஜெயலலிதாதான்.. .. நிறைய கேள்விகள் அடுக்கடுக்காய் மிக தெளிவாக தயார் செய்யப்பட்டதறிந்து 570 கோடி கண்டெய்னர்,சுவாதிகொலை,தொடர்ந்து நடந்துவரும் கொள்ளைகள், என நிறைய விடயங்களில் ஒட்டுமொத்தமாக தோற்றுப்போன ஒரு துறையாக உள்துறை செயலிழந்து நிற்பதை சுட்டிக்காட்டி பேச பி.டி.ஆர்.தியாகராஜன் அன்பில் மகேஷ், போன்ற இளைய தலைமுறையினர் எப்படி பேசவேண்டுமென தயார் செய்யப்பட்டார்கள் .. அவர்களுக்கு உதவ தங்கம் வேலு போன்றோர் பணிக்கப்பட்டிருந்து அறிந்து ஜெயலலிதா சரமாரியான கேள்விகள் வருமென அஞ்சி சபாநாயகரை கொண்டு ஒரு விசயமும் இல்லாத ஒன்றை கையிலெடுத்து சபாநாயகரின் அதிகாரத்தை பயன்படுத்தி காய் நகர்த்தி தனிஆவர்த்தனம் செய்கிறார்.. .. இது ஜனநாயகம் அல்ல இதை ஜனநாயகத்தின் நான்காம்தூண் பத்திரிக்கைகளும் தவறென்று சுட்டிக்காட்டவில்லை.. இந்த போக்கு சர்வாதிகாரம் மட்டுமல்ல கோழைத்தனமும் கூட.. உலகின் சர்வாதிகாரிகள் பலரும் உண்மையில் கோழைகளாகதான் இருந்தார்கள்.. .. கருணாநிதி சட்டமன்றத்திற்கு வரலாமே என்கிறார் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யபட்டபோது நான் கூட தனியாகதான் சட்டமன்றம் வந்தேன் என்கிறார் .. அப்போது ஜெயலலிதாவிற்கு இருக்கை முதல்வரிசையில் தரப்பட்டதும் அன்றைய சபாநாயகர் நடுநிலையோடு நடந்துக்கொண்டதும் நாடறிந்தது.. .. தான் பேசும் போது குறிக்கீடு வரக்கூடாது என நினைக்கும் முதல்வர் அப்படி ஏதாவது பேசினால்/செய்தால் அதை உடனே சபைகுறிப்பிலிருந்து நீக்குவது இடையில் ஆளும்கட்சி உறுப்பினர்களைக்கொண்டு ஒருமையில் தகாதவார்த்தையில் பேசவைப்பது இதுதானே நடக்கிறது.. இடைநீக்கம் செய்துவிட்டு அதற்கு நியாயம் கற்பிக்க சபாவும் மற்றவர்கள் ஏன் பேசவில்லையென்பது நாங்கள் அறியாத அரசியல் அல்ல.. குறிக்கீடில்லாமல் ஜால்ராக்களின் கைதட்டலோடு மட்டுமே சபையை நடத்தவேண்டுமென்ற ஆசை நிறைவேறியிருக்கிறது.. .. இன்றைக்கு புகழ்மாலை யாராவது பாடினால் நல்லது.. #சகிக்கல.. .. ஆலஞ்சி.மன்சூர்..

Friday, August 19, 2016

வாழ்த்துக்கள்..

#திருமணநாள்_வாழ்த்து .. எளிதில் எதுவும் கிடைத்துவிடாது அப்படியெனில் இன்பம் இராது.. .. நீ.. செதுக்கப்பட்டவன் ஒவ்வொரு முறையும் உன்னிடம் எதிரிகள் தோற்கின்றனர்.. .. அண்ணனை கொம்பு சீவி அழகுபார்த்து அய்யகோ.. அது நடக்காது போனதால்..வேறுவழியை கையிலெடுக்கிறார்கள். .. உன் ஒவ்வொர் அசைவும் மக்களை ஈர்க்கிறது.. எதிர்கால இயக்கத்தின் இயக்கம் நீ .. மனிதனின் வெற்றி அவன் செயல்களால் நீ.. செயல் வீரன்.. .. காலம் கடந்து காலம் கனிந்து.. கையில் தானாய் வரும். உன் நிழலில் இயக்கம் ... தானாய் வரும்.. .. உன் வாழ்வில் .. நீ பெற்றதெல்லாம்.. போராடி பெற்றது.. .. தமிழகம் உன்னை உற்று நோக்குகிறது ஆன்றோர்..அறிவில் சான்றோர்... உன்னை அரவணைக்க காத்திருக்கிறார்கள்.. .. மாபெரும் மக்கள் சபையில் மதிப்புமிக்கோர் #மகிழ்ச்சி கொள்கிறார்கள் கொள்கையில் மாற்றும் உன் முன்.. குலைந்து போகிறது.. .. உன்னை வீழ்த்தநினைத்தோர்.. வீழ்ந்து போகிறார்கள்.. நீ.. எளிமையானவன்.. யதார்தமானவன்.. இயல்பானவன்.. எல்லோர்.. இதயம் கவர்ந்தவன்.. ஆனாலும் கொள்கையில்.. சுயமரியாதையில் இயக்கத்தை.. கட்டிகாப்பதில் #எஃகு_மனிதன்.. .. இன்னும் இருக்கிறது உயரம்..உனக்காக உச்சத்தை தொடும்வரை போராடு.. பெறு.. அதுவரை.. பொறு.. .. திருமணநாள் வாழ்த்துக்கள் .. #ஆகஸ்டு20_1975 .. #வாழ்த்துக்கள்_தளபதி .. ஆலஞ்சி.மன்சூர் Mansoor Spm

பெண்கள்...

#ஷாக்சி_சிந்து.. பெண்கள் வேலைக்கு செல்வதால்தான் திருப்பதி மலையில் பஸ் உருண்டது.. மாதவிடாய் பெண்கள் வெளியில் வருவதால்தான் தேசம் நாசமானது.. வேலைக்கு போகும் பெண்கள் விபச்சாரிகள்.. இப்படியெல்லாம் திருவாய்மலர்ந்த தேசத்திலிருந்து.. பெண்கள் பதங்கங்களை கொண்டுவருகிறார்கள் .. பெண்களை இப்படிதான் உடையணிய வேண்டுமென கட்டுபாடுகள்.. விதிகளை மீறி. இதோ இந்திய மங்கைகள் சாதித்திருக்கிறார்கள்.. மாட்டுக்கறி சாப்பிடவோ விற்கவோ கூடாது என்கிற திருநாட்டிலிருந்து.. நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதால் வெல்ல முடிந்தது எனச்சொல்லி.. போலிகாவிகளின் மூஞ்சியில் காறி உமிழ்ந்திருக்கிறார்.. சாக்ஷி .. பெண்களை போகப்பொருளாகதான் இந்த சமூகம் இதுவரை கண்டிருந்தது/கண்டுக்கொண்டுமிருக்கிறது.. நிறைய தடைகள் மதம்,ஜாதி,உறவினர் சமூகம் என பல்வேறு ஏச்சுக்களை தாண்டி சற்று வெளியே வந்தால் அரசியல்.. சிபாரிசு என தளர்ந்திட வைக்கும் ..அதையும் தாண்டி வந்தால் பொருளாதாரம் வேட்டையாடும்.... எல்லா தடைகளையும் உடைத்து சர்வதேச சமூகத்தின் முன் இந்தியா தலைநிமிர காரணம்..#பெண்கள்.. .. உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய மணித்துளிகள்.. பெண்களை எல்லா மதங்களும் வீட்டுக்குள் அடைத்து வைத்து அழகிய பொம்மையாக்கிதான் வைக்கிறது.. .. பெண்களை சம்பளமில்லாத வீட்டு வேலைகாரி பிள்ளை பெற்றுக்கொடுக்கும் மிஷின், தங்கள் காமத்தின் வடிகால் இப்படிதான் இந்த சமூகம் வைத்திருக்கிறதென்றார் பெரியார்.. பெண்கள் எல்லாதுறைகளிலும் சரிசமாக பங்கேற்கவேண்டும் என எண்ணியவர்.. ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள் ..அதற்கு உங்களூரில் வசதியில்லையென்றால் வெளியூர் சென்று கூலிவேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார் எங்கள் பெருங்கிழவன் .. பெண்களின் பங்களிப்பு இல்லாத தேசம் முன்னேற முடியாது.. பெண்கள் வெளியில் வருவதையே விரும்பாத சமூகத்திலிருந்து அதுவும் விளையாட்டில் சாதனை படைத்திருக்கிறார்கள்.. பாராட்டுவோம்.. #மகிழ்ச்சி .. மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா.. #கவிமணியின் வரிகளோடு.. .. ஆலஞ்சி.மன்சூர்..

Thursday, August 18, 2016

ராமதாஸ் விசவித்து...

முஸ்லிம் பெண்களை விசிக இளைஞர்கள் கவர் இழுத்திருக்கிறார்கள் சாதிவெறியர் ராமதாஸ்.. என்ன சொல்ல வருகிறார் தாழ்த்தப்பட்டவன் உயர்ஜாதி/ மத பெண்ணை திருமணம் முடிக்கிறான் அவ்வளவுதானே.. முதலில் ராமதாஸ் ஒன்றை உணர வேண்டும் ஒரு தனிநபர் தான் விருப்பபடும் ஆண்/ பெண் உடன் செல்வதை அல்லது திருமணம்/காதல் செய்வதை நீங்கள் ஏன் அரசியலாக்குகிறீர்கள்.. சம்பந்தப்பட்ட பெண்ணோ /ஆணோ மதம்மாறியோ அல்லது மதத்தை ஏற்றுக்கொள்ளாமலோ இருப்பதில் உங்களுக்கென்ன வந்தது.. .. ராமதாஸ் இதை கையிலெடுத்திருப்பதின் பின்னில் யார் இருக்கிறார்கள் என அப்பட்டமாக தெரிகிறது ஒரிரு ஒற்றைப்பட்ட சம்பவங்களை எண்ணிக்கையில் அதிகமாக்கி காட்டும் நரித்தனம் புரியாமல் இல்லை.. ஜாதியை கையிலெடுத்து மூக்கறுப்பட்டு கிடைக்கையில் எதையாவது பேசி மத கலவரத்தை தூண்டி அதில் குளிர்காய்கிற நினைக்கிறார்.. .. வடமாநிலங்களில் தலித் அமைப்புகளோடு சிறுபான்மையினர் இணைந்து போராடுவது பெரும் தலைவலியை பாசிச இந்துத்துவா சக்திகளுக்கு தந்திருக்கிறது அது தென்மாநிலங்களிலும் தொடர்ந்தால் இந்தியாவில் ஆதிக்கசெலுத்தும் ஆர்எஸ்எஸின் செயல்திட்டங்கள் பெரும் பின்னடைவை சந்திக்கும்.. இதையறிந்து இருபிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கி அதை மதசாயம் பூச நினைக்கும் பாசிச திட்டத்தை செயல்படுத்த தான் இந்த ஜாதிவெறியர் இப்படி உளறிக்கொட்டியிருக்கிறார்.. .. ராமதாஸின் பேச்சில் உண்மையில்லையென்பதும் இது திட்டமிட்டு மதகலவரத்தை நிகழ்த்த இஸ்லாமிய இளைஞர்களின் உணர்ச்சியை தூண்டி சேரிகள் மீது தாக்குதல் நடத்தி அதை மத ரீதியான செயலாக்கி குளிர்காய நினைக்கும் ராமதாஸை இரு சமூகத்தினரும் புரிந்துக்கொள்ளவேண்டும்.. .. #ராமதாஸ்_விசவித்து_அழித்தால்_நல்லது… .. ஆலஞ்சி.மன்சூர்..

Wednesday, August 17, 2016

பேசு..

நீ..பேசு பேசுவதை கண்டு அஞ்சுகிறார்கள்.. அடிமைகள்.. .. இருபத்துஇரண்டில் போலிஸ் மான்யம் கலைஞரே நேரில் வந்து பேச இருப்பதறிந்து மொத்தமாய் வெளியேற்றி கலைஞரை தாக்க திட்டமிடுகிறார்கள்.. .. அஞ்சுவதில்லை அராஜகம் கண்டு அஹிம்சை தெரியும். கொஞ்சம் அராஜகமும் தெரியும்.. எப்படியென்பதை எதிரியே.. நீயே தீர்மானித்திருக்கிறாய்.. .. ஜனநாயகம் நெறி அறிவோம் அதனால் தான் அமைதி காக்கிறோம்.. அடிமைகள் சபையில் அறிவாளிகள் எதற்கு.. .. இனி.. ஆட்டம் ஆரம்பம்.. தீர்மானித்தபிறகு.. எப்படி ஆடவேண்டுமென காட்டுகிறோம் இனி.. பேசி பயனில்லை.. பேசினால் புரிவதில்லை .. கோழைத்தனம் கொத்தடிமைகளின் சபையில் தலையாட்டியை வைத்து சபை நடத்த எண்ணுவது கோழைத்தனம்.. .. பேசமுடியாமல் பேசதெரியாமல்.. ஓடியொளிய வழிதேடும்.. பேடிகளின் செயல் வெளியேற்றம்.. .. இனி.. இனிதான் ஆட்டமே.. ஆடுகளம் தெரிந்துவிட்டதால் ஆடும் ஆட்டம் .. எதிரிகள் நிலைகுலைவர்.. .. ஆட்டம் ஆரம்பம்.. .. ஆலஞ்சி.மன்சூர்...

இருவர்

இன்று இருவர்களின் பிறந்தநாள் மாறன் திருமா.. திராவிட அரசியலில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர் மாறன் திமுகவின் இயக்கசெயல்பாட்டில் மிக முக்கிய பங்கு வகித்தவர் .. அண்ணா முதல்வரான பிறகு அந்த இடத்தை நாடாளுமன்ற நிரப்ப மாறனை தான் தேர்வு செய்தார்.. நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கவும் முறைப்படுத்தவும் காரணமானவர்.. சிறந்த படிப்பாளி பன்முகதிறமையாளர் இவர் இயக்கிய மறக்கமுடியுமா திரைப்படம் மிகப்பெரியளவில் பேசப்பட்டது.. மிசாவில் சிறையிலிருந்த போது திராவிட இயக்கவரலாறு என்ற சிறப்புமிக்க வரலாற்றுநூலை எழுதினார்.. கலைஞரின் மனசாட்சியென அறியப்பட்டவர்.. .. திருமா ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக போர்வாளாக வலம் வந்தாலும் முதலில் இவர் இருந்ததென்னவோ திமுகவில் தான்.. ஒரு முறை சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். நேர்காணலில் பேராசிரியர் பெருந்தகை என்ன செஞ்சுகிட்டு இருக்கே என்ற போது லா படிக்கிறேன் என்றார் முதல்ல படி பிறகு பார்க்கலாமென்றார்.. அப்போது சென்றவர் தான் தன் சமுதாயமக்களின் நலனுக்காக ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார் .. .. நிறைய விமர்சனங்கள் இருவரின் மீதும் உண்டு மாறனின் சில தவறான முடிவுகளால் பாசிச சக்திகளோடு கைகோர்க்க, சில அருவறுப்புகளை ஆட்சியில் அமர்த்த வேண்டியிருந்தது சுப்ரமணி அய்யர் மகள் மல்லிகாவை மணந்தும் தன் இருமகன்களுக்கு குடகிலிருந்து காவேரியையும் தி இந்து விலிருந்து ப்ரியாவையும் கொண்டுவந்தாலும் திராவிட கொள்கைகளில் சமூக சமதர்ம கோட்பாடுகளில் கடைசிவரை இருந்தார் திராவிட சிந்தனையோடு செயல்பட்டார் இவரின் சமூக பங்களிப்பும் புறந்தள்ளிவிட்டு திராவிட வரலாற்றை எழுத முடியாது.. .. திருமா ஆரம்பகாலங்களில் இருந்த திடம் இப்போதெல்லாம் இல்லை நிறைய சமசரங்களை செய்துக்கொள்கிறார்.. சிலரோடு சேர்ந்து சில தவறாக முடிவுகளை அவசரகதியில் எடுக்கிறார்.. இன்றைய தமிழக அவலங்களுக்கு காரணியாக செயல்பட்டதும் மீண்டு வர முயற்சிக்கிற போது அது இயலாமல் போகிறது அடங்கமறு அத்துமீறு எல்லாம் போய் அடக்கிவாசிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி இருப்பதும் கவலையான விடயம்.. ஆனாலும் கால்நூற்றாண்டு தமிழக அரசியலில் சில முக்கிய நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்தவர் இவரை மறுத்து தமிழக அரசியல் இல்லை.. .. இருவருக்கும் இன்று பிறந்தநாள்.. மாறனை நினைவுகூறுவோம் திருமாவை வாழ்த்துவோம்.. #இன்னும்_உயரங்கள்இருக்கிறது_திருமா… .. ஆலஞ்சி.மன்சூர்..

Tuesday, August 16, 2016

என்னசெய்தது திராவிடம்

என்ன செய்தது திராவிடம்.. பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் மாநிலத்தின் முதல்வர்.. சுதந்திர தின மற்றும் குடியரசு தினத்திற்கு குடியரசுதலைவர், மாநில ஆளுநர்தானே கொடியேற்றுகிறார் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாநில முதல்வரோ பிரதமரோ ஏன் ஏற்ற கூடாது அதற்கு அவர்களுக்கு அருகதையில்லையா.. அதற்கான உரிமையை ஏன் தரக்கூடாது என கடிதம் எழுதுகிறார்.. கடிதத்தில் இருக்கிற உணர்வை /உரிமையை மதித்து உடனே பிரதமரும் மரபுகளை மாற்றி இனி சுதந்திர தினத்தில் மாநிலத்தின் முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றலாம் என அறிவிக்கிறார்.. .. அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திரா அம்மையார் .. முதல்வர்கள் கொடியேற்றலாம் என்ற உரிமையை பெற்று தந்தது #கலைஞர் .. அதுவரை எந்த மாநில முதல்வர்களும் தங்களின் உரிமை இது என அறிந்திருக்கவில்லை சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்தவர் கலைஞர் மக்கள் பிரிதிநிதிகள் தேசிய கொடியை ஏன் ஏற்றகூடாது என சிந்தித்ததால் தான் இன்றைக்கு நாட்டின் முதல்வர்கள் தேசியகொடியை ஏற்றுகிறார்கள்.. .. விடுதலைநாளில் தேசிய கொடியை முதல்வர்களும் நாட்டின் பிரதமரும் இன்றைக்கு ஏற்றுகிறார்கள் என்றால் அது திராவிடத்தலைவன் கலைஞரின் உரிமைப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. இந்த விடுதலைநாளில் பெருமைக்கொள்வோம் #கலைஞரை எண்ணி.. .. #திராவிடன்_தமிழன்_இந்தியன்.. .. ஆலஞ்சி.மன்சூர்..

என்று தீரும்

ஏறக்குறைய அனைத்து கதவுகளும் அடைப்பட்டது போன்ற உணர்வு.. 120 கோடிமக்கள் வாழும் பரந்த தேசத்தில் உலக விளையாட்டு திருவிழாவில் ஒலிம்பிக் ஒரு பதக்கம் கூட வாங்க முடியவில்லை..ஜிம்னாஸ்டிக் தீபா கர்மாகர் இறுதிச்சுற்று வரை வந்து நான்காம் இடம் பிடித்திருக்கிறது..இந்திய மனங்களில் சின்னதொரு ஆறுதல்.... .. விளையாட்டு அல்ல என ஒலிம்பிக் ஏற்றுக்கொள்ளாத கிரிக்கெட்டிற்கு தரும் முக்கியத்துவத்தை பிற விளையாட்டுகளுக்கு தரவேண்டும் ..ஆனால் இங்கு நடப்பதோ பக்கா அரசியல்.. திறமையானவனை கண்டறியபடுவதேஇல்லை.. சிலர் தானாக முயன்று தன் முழு திறமையையும் வெளிகாட்டினாலும் .. அவன் யார் என்று பார்க்கிறார்கள் அவனின் பின்புலமென்ன நம்மஆளா என்றெல்லாம் நோக்குகிறார்கள்..சரியான பயிற்சியின்றி சிலர் தங்களின் ஆற்றலை வெளிப்படுத்த முடியவில்லை. சிலருக்கு பொருளாதார சிக்கல் இதையெல்லாம் தாண்டி தேர்வு கமிட்டி வரை வந்துவிட்டால் அங்கே #அணுசரித்து போகவேண்டும் அல்லது சிபாரிசு வேண்டும் அல்லது அவன் ஆளாக இருக்கவேண்டும்..இது இந்தியாவின் சாபகேடு.. .. பேசாமல் ஒலிம்பிக்கில் 10 ஆண்டுகள் பங்கேற்பதில்லையென முடிவெடுக்கவேண்டும் .. திறமையானவர்களை கண்டறிந்து நேர்மையான முறையில் தேர்வு செய்து சரியான பயிற்சி அளித்தால் நமக்கு பதக்கங்கள் கிட்டும்..மிக சிறிய நாடுகள் கூட பதக்கப்பட்டியலில் வரும் போது இந்தியாவின் பெயர் இடம் பெறாதது வருத்தமளிக்கிறது.. .. விளையாட்டில்கூட லஞ்சம் பணம் பரிந்துரை வேண்டியவன்,இதனோடு அரசியல் அதிகாரிகள் கொள்ளையென அடிக்கிக்கொண்டே போகலாம்.. சுதந்திர இந்தியாவில் விளையாட்டில் கூட நம்மால் சோபிக்க முடியவில்லை அதற்கு தகுதியில்லாதவர்கள் காரணமில்லை தகுதியில்லாதவன் பணத்தை, பெண்ணை, அதிகாரத்தை, காட்டி இடம் பிடிக்கிறான்.. உண்மையான திறமைசாலிகள் மறைக்கப்படுகிறார்கள்.. .. வெள்ளைக்காரனிடம் விடுதலை வாங்கி கொள்ளைக்காரனிடம் கொடுத்துவிட்டோம் என்றார் பெரியார்.. எவ்வளவு சரியான பார்வை.. விளையாட்டில் கூட அரசியல் செய்கிற ஈனத்தனத்தை ஒழித்தால் தான்.. ஒலிம்பிக் பதக்கம் நனவாகும்.. .. #என்றுதீரும்.. .. ஆலஞ்சி.மன்சூர்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு.. திருமதி.மேனகா காந்தி ஜல்லிக்கட்டை விட வேறு பணிகள் மத்திய அரசிற்கு இருக்கிறது தமிழக பாஜகவினர் புரிந்துக்கொள்ளவேண்டும் என்ற தொனியில் பேசியிருக்கிறார்.. ஜல்லிக்கட்டை விட மாட்டு மூத்திரத்தை விற்பதையும் கங்கையின் அசுத்தத்தை தபால்நிலையங்களில் விற்பதற்கு மத்திய அரசிற்கு முடிகிற போது தமிழர்களின் வீரத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப்பிணைந்த ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதி வழங்க மத்திய அரசுக்கு நேரமில்லை.. .. மாடுபிடிப்பதில் சில தவறுகள் நடந்திருக்கலாம் அது ஒரு ஜாதிக்கான அடையாளமாக பார்க்கப்பட்டு மற்ற பிரிவினர் அதில் அக்கறை எடுத்துக்கொள்ளவோ அல்லது கலந்துக்கொள்ளவோ மறுக்கப்பட்டிருக்கலாம் அதையெல்லாம் சரிசெய்துவிட கூடிய அற்ப காரணங்கள் .. இதையெல்லாம் காரணம் காட்டி ஜல்லிக்கட்டை வேண்டாமென்கிற நிலைபாடு சரியானதல்ல.. .. தமிழக அரசியல்கட்சிகள்/தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிற விடயமும் கூட தமிழன் பண்பாட்டு வடிவமாக ஆதிகாலம் தொட்டே நடந்து வந்த வீரவிளையாட்டை சில அற்ப காரணங்களை சொல்லி நிறுத்திட முயல்கிறார்கள்.. மிருகவதை என்ற பெயரில் மேனகா போன்றோர்கள் பேசிவருவது எந்த வகையிலும் நியாயமில்லை.. மிருகங்கள் குறிப்பாக கால்நடைகள் வரிசையில் வருபவை மனிதனின் தொழிற்சார்ந்த பணிக்களுக்கே பயன் பட்டிருக்கிறது.. மனிதனின் வாழ்வியலோடு கலந்தது அவனின் உழைப்பு,உணவு,உல்லாசம்,பயணம் என கால்நடைகளோடு வாழ்பவன் .. .. சிலருக்கு விளையாட்டிற்காக வளர்ப்புபிராணி..அல்லது செல்லம் என்றிருக்கலாம்..பிரதானமாய் ... தமிழனின் வாழ்வில் கால்நடைகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது அவன் உணவு, இசை, கலாச்சாரநிகழ்வு பண்பாடு அரசியல் வீரம் என மாடுகள் பயன்படுகிறது.. ஜல்லிக்கட்டிற்காக மாடுகள் தயாரிக்கும் முறை கூட ரசிக்கதக்கதாக அதிகவனம் கொண்டதாக இருக்கும்..சில வேண்டாத சம்பவங்கள் (மாட்டிற்கு சாராயம் ஆசனவாயில் மிளகாய் பூசுதல்) நடந்திருக்கலாம் அவையெல்லாம் கண்காணிக்கப்பட்டு செம்மையாக நடந்து வந்த ஜல்லிக்கட்டை சிலரின் விருப்பத்திற்காக தடைவிதிப்பது சரியல்ல.. .. இன்னும் கூட கடுமையான விதிகளை பயன்படுத்துங்கள் அவைகள் யாவும் ஏற்றுக்கொள்ளப்படும் .. ஆனால் மத்திய அமைச்சர் பொன்.ராதா வின் கருத்தில் / சொல்லில் மாறுபடுவதை ஏற்கமுடியாது.. ஜல்லிக்கட்டு ஆபத்தானதில்லை மேனகாவின் வார்த்தைதான் ஆபத்தானது... #மேனகா_வாய்மூடிஇருந்தால்நலம்.. .. #ஜல்லிக்கட்டு_தமிழரின்பண்பாடு.. .. ஆலஞ்சி.மன்சூர்..

Sunday, August 14, 2016

அடங்கி போ

பெரியாரை விட ஜெயலலிதாவை அதிகம் பின்ப்பற்றுகிறவர் ஸ்டாலின்.. திருமா எதற்காக சொன்னார் என தெரியவில்லை..பெரியாரை மீறி தி மு கழகம் எதையும் சாதிக்க முடியாது என்பதை பெரியாரிய கொள்கையிலிருந்து விலகி சென்றால் அது தன் முகத்தை இழந்துவிடும் என்பதை அறியாதவரல்ல தளபதி.. பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை என நினைத்தால் அது திருமாவின் அறியாமை திமுக ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனச்சொல்லித்தான் பிரிந்தது அதைவிட திராவிட கொள்கைகளை சட்டமாக்க அதிகாரம் வேண்டுமென்பதற்காக தான் வாக்கு அரசியலில் பங்குப்பெற்றது..திமுகவில் கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமல்ல பழங்களும் நிறைய உண்டு ஆனால் சிந்தனை செயல் எல்லாம் பாசிசத்திற்கெதிரான சமூகநீதிக்கு ஆதரவான செயல்திட்டத்தோடே இயங்குகிறது.. .. இப்போது கூட பாஜக வின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து திராவிட கழகத்தின் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைப்பெற்றது..பிறகேன் ஜெயலலிதா அரசியல் செய்கிறார் என திருமா கூறுகிறார் என்பதை ஊகிக்கமுடிகிறது.. #கலைஞரைப்போல ஒவ்வொரு முறையும் மன்னித்து அரவணித்துச்செல்லும் பழக்கத்தை கைவிட்டு இவரைப்போன்ற சில்லறைகளை வளர்த்துவிட தேவையில்லையென்ற முடிவெடுத்து அதில் திடமாக நிற்கிறார் அது திருமா போன்றவர்களுக்கு எரிச்சலை தருகிறது.. இது ஜெயலலிதாவின் அரசியலை ஒத்திருந்தாலும் கொஞ்சம் மாறுபடுகிறார் ஜெயலலிதாவின் ஆணவ/அடிமை அரசியல் இவரிடத்தில் இல்லை ஸ்டாலின் ஒரு நேர்மையான/தோழமையான போக்கை அதே நேரம் வேண்டாதவை தவிர்த்து சுயமாக எழுந்து நிற்க முயல்கிறார்.. இது எப்படி ஜெயலலிதா அரசியலாகும் .. அதுமட்டுமில்லாமல் குறுகிய வட்டத்திற்குள் (சாதி,மதம்) அரசியல் செய்கிறவர்கள் வேண்டாமென்ற முடிவை எடுத்திருக்கிறார்.. நீண்டநாட்கள் தங்களோடு இருக்கிறவர்களை வெற்றியிலும் தோல்வியிலும் கைகோர்த்து நின்றவர்களோடு பயணித்தால் போதுமென்ற எண்ணம்/செயல் சரியானது.. .. திருமா போன்றோர்கள் வேறு வழியே இல்லாமல் பாசிச சக்திகளோடு (பாஜக) கைகோர்த்து பிழைக்கலாம் திருமாவின் சமீபத்திய செயல்பாடுகள் அதை நோக்கி தான் நகர்கிறது.. .. #அடங்கிப்போ... .. ஆலஞ்சி.மன்சூர்..

Wednesday, August 10, 2016

அதிமுக

நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கவனஈர்ப்பு தீர்மானத்தில் .. உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்கவேண்டும் வழக்கிற்காக டெல்லி வரை செல்லவேண்டிருக்கிறது காலவிரயமும் செலவும் கூடுகிறது அலைகழிக்கபடுகிறார்கள் என பேசுகிறார் அதிமுக நவநீதன் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என பாடுகிறார்.. என்ன கொடுமை.. அதிமுகவிலிருந்து சென்ற ஒருவர் கூட மிக சிறப்பாக செயல்ப்பட்டதாக தெரியவில்லை திறமையில்லாதவர்களும் செயல்படமுடியாதவர்களையும் அனுப்பினால் தமிழகத்தின் மானம் கப்பலேறும் .. நவநீதன் பாடலை பாடியதைவிட அதை எம்ஜிஆர் பாடியதாக சொன்னதுதான் உச்சகட்ட நகைச்சுவை.. எம்ஜிஆருக்கு நெடும் வசனத்தை கூட ஒழுங்காக சொல்லதெரியாது இதில் பாடினாராம்.. .. அதிமுகவிலிருந்து அனுப்படுகிறவர்கள் மந்தையாடுகளைப்போல வழிநடத்தப்படுகிறார்கள் சுயமாகவோ அல்லது தனிதிறனுடனோ செயல்படதெரியாதவர்களாக இருப்பது மிகமோசமான விளைவுகளை தருகிறது.. அறிவில் சிறந்தவர்களையெல்லாம் அனுப்பி அழகுபார்த்த தமிழகம் இன்று அரைகுறைகளை அனுப்பிகிறது .. .. இரா.செழியன் நாஞ்சிலார், மாறன் தொடங்கி சிவா வரை திமுகவினரின் பேச்சுக்களை கவனித்தால் எவ்வளவு அழகாக ஆணித்தரமாக உறுதியோடு செயல்பட்டிருக்கிறார்கள் என தெரியும்.. ஒரு முறை மாறன் நாடாளுமன்ற நூலகத்தில் சில குறிப்புகளை எடுக்கவேண்டிருந்தது அங்கு சென்ற போது எல்.கே. அத்வானி அங்கு அமர்ந்து சில குறிப்புகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்.. நீங்களுமா என்ற போது சபையில் சரியான தகவலை தரவேண்டும் பிழையாகிப்போனால் நாளைய சமுதாயம் நம்மை எள்ளும் என்றார்.. அதிமுக உறுப்பினர்களுக்கு அங்கொரு நூலகம் இருப்பது தெரியுமா என்றே தெரியவில்லை.. .. சிறந்த நாடாளுமன்றவாதிகள் எல்லாம் திறமையாக செயல்படுபவர்களாக சபையின் கண்ணியத்திற்கு குறைவராமல் பார்த்துக்கொண்டார்கள்.. எல்லாவற்றையும் அறிந்து சரியானதை மட்டுமே பேசினார்கள் தங்கள் நிலம் இனம் மொழி சார்ந்த விடயங்களில் போராட்ட குணத்தோடு நேர்மையாக செயல்பட்டார்கள் .. வாததிறமையும் பன்முகதன்மையும் கொண்டவர்கள் சபையின் நெறி அறிந்தவர்கள்.. இப்போது கூட திமுகவின் சார்பில் செல்கிறவர்களை கவனியுங்கள் அவர்கள் செயல்பாடுகள் மெச்சதக்கதாய் இருக்கும் .. ஆர்.எஸ் பாரதி கூட மிக அருமையாக பேசினார்.. .. இதெல்லாம் அதிமுக தலைமைக்கு தெரியாமல் இல்லை ஆனால் அவர் நல்ல அடிமைகளை மட்டுமே அனுப்புகிறார் அறிவில் சிறந்தவரை அனுப்பினால் தன் நிஜம் வெளுத்துவிடுமென அஞ்சுகிறார். . அதுசரி அறிவாளிக்கு அவர் எங்கே போவார் .. #அறிவுடையோர்க்கு_அதிமுகவில்_என்னவேலை… .. ஆலஞ்சி.மன்சூர்.. ..

முரசொலி

#முரசொலி.. ஒரு நாளிதழ் எழுபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து வருவதென்பது சாதாரணமான காரியமல்ல.. அதுவும் தொடர்ந்து திராவிட கொள்கைகளை தாங்கி வருவேண்டுமெனில் அதில் நிச்சயம் ஈர்ப்பு வேண்டும் .. ஆம் கலைஞரின் எழுத்துக்கிருந்த வசியம் தமிழர்களை தொடர்ந்து வாசிக்க செய்தது.. மிகப்பெரிய எண்ணிக்கையிலோ அல்லது பெரிய வருமானத்தையோ தரும் ஜனரஞ்சக பத்திரிக்கையல்ல விளம்பரங்களால் பக்கத்தை நிரப்பி காசு பார்க்கவில்லை.. ஒவ்வொரு வரியும் கொள்கை,தமிழ், தமிழர்நலன் சமூகநீதியென சமூகத்தின் மீதான அக்கறையை கொண்டு நடந்தது. .. இப்போது போல் முன்பெல்லாம் வலைதளங்களை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்வதுபோல இயக்கம்/கட்சி சார்ந்தவிடயங்களை தெரிந்துக்கொள்ள முரசொலிக்காக காத்திருந்த காலம்.. கலைஞர் என்ன எழுதபோகிறார் /சொல்லபோகிறார் என எதிர்பார்ப்போடு முரசொலியை வாங்கிய காலம்.. கவிதை கட்டுரை கருத்தென கலைஞரின் வரிகள் மயக்கியகாலம்.. எங்களுர் படிப்பகத்திற்கு சிலநாட்கள் மதியத்திற்கு பிறகுதான் வரும் சிலநாட்கள் வராது மறுநாள் சேர்த்துவரும்.. அப்போது கூட அதை படிக்கிறபோது புதிதாய் செய்தியை தருகிறதைப்போல் இருக்கும் அதுதான் முரசொலியின் பலம்.. .. திருவாரூரில் கையெழுத்து பிரதியாக தொடங்கி கட்சியின் திராவிட இயக்கத்தின் பிரதான நாளேடாக வந்திருக்கிறதென்றால் அது கலைஞர் என்ற மனிதரின் எழுத்தும் செயலும் ஆற்றலும் தான்.. இப்போது இணையத்தில் வந்துவிடுகிறது என்றாலும் காத்திருந்து வாங்கிப்படித்த போது இருந்த மயக்கம் இப்போதில்லை.. .. கட்சி பத்திரிக்கை என்பதை தாண்டி ஜனரஞ்சமாக செயல்படாமல் போனது இழப்பை தந்திருக்கும் ஆனாலும் முரசொலி மீதான பார்வை கம்பீரமாக இருக்கிறது பாருங்கள் அது ஜனரஞ்சமாக்கப்பட்டிருந்தால் குறைந்து போயிருக்கும்.. தமிழர் வாழ்வில் ஒரு குறிப்பிட்டளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. கடிமையாக உழைத்தால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் எழுத்து கம்பீரமாக ,ஈர்க்ககூடியதாக இருந்தால் வெற்றிகரமாக வலம்வரமுடியுமென்பதற்கு முரசொலி சாட்சியம் வகிக்கிறது.. .. #முரசொலி_தமிழர்களின்கம்பீரம்.. .. ஆலஞ்சி.மன்சூர்

Tuesday, August 9, 2016

அதிமுக அரசியல்..

மிரட்டப்படும் .. சசிகலா மீது தமிழகத்தில் தொடர்ந்து வழக்குகள் புனையப்படுகிறது.. ஏன் புனையப்படுகிறது என்பதன் பிண்ணனி சில தகவல்களை அவரது கட்சியினருக்கு உணர்த்தும் தமக்கு விசுவாசமாக அடிமையாக இருக்கிறவரை எதுவேண்டுமானாலும் செய்துக்கொள் அதைப்பற்றி கவலையில்லை மாறாக எனது கட்டளையை மீறினால் பல்வேறு வழிகளில் மிரட்டப்படுவாய்.. .. சசிகலா என்ற அரசியல் பிரமுகரோடு நமக்கு உடன்பாடில்லை அவரின் அரசியல் ஏற்புடையதுமல்ல ஆனால் அவரைப்பற்றி வரும் செய்திகளின் பின்னணியில் இருக்கிற மர்மங்கள் தமிழக அரசியல் இவ்வளவு கேவலமான பாதையில் செல்கிறது என்பதை எண்ணும் போது கவலைவருகிறது.. சசிகலா வீட்டு பணிப்பெண் தரும் தகவல்கள் எவ்வளவு உண்மையென்று தெரியவில்லை வேலையாட்களை கொடுமைப்படுத்தியதாக சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டாலும் அதன்பிறகு அவர் சொல்லும் குற்றசாட்டை அவரின் தனிப்பட்ட செயல்களை இங்கே சொல்லவேண்டிய அவசியமில்லை.. சசிகலாவை காமவெறியர் என சித்திரிப்பதற்காக சொல்லப்பட்டிருக்கலாம் அல்லது அதில் உண்மையிருக்கலாம் அதை விசாரிக்கவோ தெரிந்துக்கொள்ளவோ வேண்டியதில்லை.. அவர் திருப்பியடித்து.. பழையதை கிளறினால் அசிங்கமாகிப்போகும்.. .. கட்சியில் இருந்தவரை இவர்மீது புகார்கள் கொடுக்கப்படாததும் சசிகலா முதல்வர் மீது நாடாளுமன்றத்திலும் வெளியிலும் புகார் கூறியதும் டெல்லி காவலில் அவர் ஜெயலலிதா மீது நேரடியாகவே குற்றம் சாட்டி மனு அளித்ததும் ஜெயலலிதாவை கோபம் கொள்ள செய்திருக்கிறது.. .. மிகவும் மட்டமான /கீழ்த்தரமான அரசியலை எம்ஜிஆர் செய்வார் அவர் பெண்களை பகடைகளாக பயன்படுத்தியது அப்போதெல்லாம் பிரபலமாக பேசப்படும் நிறைய #குருவிகளை வைத்திருந்தார்.. அதிமுக அரசியல் அழுக்குபடிந்த அரசியல்.. கஞ்சா கேஸில் தொடங்கி பாலியல் வழக்கு வரை வந்திருக்கிறது.. இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை ஏனெனில் ஜெயலலிதாவுக்கு தெரிந்தது அதுமட்டும்தான்.. .. #கீழ்த்தரமான_அரசியல். .. ஆலஞ்சி.மன்சூர்..

Saturday, August 6, 2016

சிலநேரங்களில் சில மனிதர்கள்

சிலநேரங்களில் சில மனிதர்கள் மீது கொண்ட மரியாதை போய்விடுகிறது.. திருமா.. இன்னுமொரு ஜெயலலிதா தான் ஸ்டாலின் என திருவாய் மலர்ந்திருக்கிறார்.. ஜெயலலிதாவிடமுள்ள ஆணவம், திமிர், தான் என்கிற அகந்தை, சக தோழர்களை அடிமையைவிட கேவலமாக நடத்தும் செயல், குறுக்குவழி அரசியல், தினம்தினம் பொய், சொல்லில் நேர்மையின்மை, எவரையும் மதிக்காத செயல், எதிர் அரசியல் செய்பவரை பழிவாங்கும் போக்கு .. மொத்தத்தில் பிற்போக்கு அரசியல் ‍... இதில் எதை #தளபதிஸ்டாலினிடம் கண்டார்... .. புதிய கல்விக்கொள்கையைப்பற்றி பேசவில்லை பெரியாரிய கருத்துக்களை முன்னெடுக்கவில்லையென்கிறார். பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் திமுக கலந்துக்கொள்கிறது தோழர் கனிமொழி பாதபூஜைக்கெதிராக நாடாளுமன்றத்தில் ஆணியடித்தார் எனவே இவரின் குற்றசாட்டில் உண்மையில்லை.. .. எல்லாவற்றையும் மறந்து ஒவ்வொரு முறையும் மாறி மாறி சவாரி செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் கலைஞரின் பெருந்தன்மையை .. ஸ்டாலினிடமும் எதிர்பார்த்தால் அது நடக்காது.. தொடர்ந்து எங்கள் கொள்கையோடு பயணிப்பவர்களை புறம்தள்ளிவிட்டு வாக்கு அரசியல் செய்ய தயாரில்லை.. நம்பிக்கையில்லாதவர்களோடு தோழமை கொள்வதை விரும்பவில்லை ஸ்டாலின் .. தோழர் திருமா முதலில் இதுபோன்ற அறிக்கை அரசியலை விடுவது நல்லது கடந்த தேர்தலில் தெரிந்தே ஜெயலலிதாவிற்கு உதவ விலைபோனவர்கள் கூட்டத்தில் தாமும் சேர்ந்து செய்த கூட்டுசதி அறியாமல் இல்லை அதனால் தான் #ஸ்டாலின் திமுகவின் தனித்தன்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கட்சியில் வீணர்கள் சிலரை களையெடுப்பதிலும் அக்கறை செலுத்தி வருகிறார்.. சிறிய சிறிய உதிரிகளை கொண்டு நடந்து அவர்களை வளர்த்துவிடுவதை விட மக்களிடம் நம்பிக்கையை பெற்று தனித்து களம்காண திட்டமிட்டு செயல்படுகிறார்.. .. திருமா போன்றோரை நம்ப முடியவில்லை திடீரென எந்த கொள்கை பிணக்கமும் இல்லாமல் கூட்டணியிலிருந்து வெளியேறி புதிய இயக்கம் அமைப்பதாக சொல்லி வாக்குகளை பிரித்தாளும் சூழ்ச்சியில் பங்குவைத்ததையும் தேர்தலுக்கு பிறகு நாங்கள் வெல்லமுடியாது என முன்பே தெரியும் என வாக்குமூலம் தந்ததையும் திமுக வரகூடாது என்பது மட்டுமே பிரதான கொள்கையாய் கொண்டு நடந்த வைகோ வின் கரம் கோர்த்து செயல்பட்டதை மறக்கமுடியாது அதனால் தான் அரவணைத்து செல்ல #தளபதி தயக்கம் காட்டுகிறார்.. அதை வைத்து ஜெயலலிதா போல் செயல்படுகிறார் என்கிறார் திருமா.. .. #நம்பிக்கையில்லாதவர்கள்_வேண்டாதசுமை.. .. ஆலஞ்சி.மன்சூர்..

இடஒதுக்கீட்டில் ..பிஜேபியின் தந்திரம்

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செல்லாது குஜராத் உயர்நீதிமன்றம்.. ஆர்எஸ்எஸ் எனும் பிராமணர்களுக்கான அமைப்பு செயல்படுத்த நினைத்த பொருளாதார அளவுகோலை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு பொருளாதாரம் ஒரு அளவுகோல் அல்ல என்றும் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட இடஒதுக்கீடு அரசிலமைப்பு எதிரானது என்றும் தீர்பளித்திருக்கிறது.. .. நீண்டநாட்களுக்காக புறவழியாக சலுகைகளை அனுபவிக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் கும்பல் மறைமுகமாக செயல்பட்டு வருவது அதிகமாகி இருக்கிறது.. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 29 சதவிகித ஒதுக்கீட்டு கல்வி வேலைவாய்ப்பில் தரவேண்டுமென்ற மண்டல் கமிஷன் அறிக்கை கடுமையாக எதிர்த்து தீக்குளிக்க செய்து தடுக்க பார்த்தார்கள்.. திரு. வி.பி சிங் பிரதமரான போது திமுக போன்ற கட்சிகளின் கடும் முயற்சியால் அது சட்டவடிவம் பெற்றது.. கலைஞர் தலைமையில் பாராட்டுவிழா கூட நடந்தது.. .. யார் பிற்படுத்த மிகவும் பிற்படுத்தவர்கள் என்றால் யாரை ஏவி பார்பனர்கள் குளிர்காய்கிறார்களோ அவர்கள்தான்.. இன்னும் கூட தெளிவாக சொல்லவேண்டுமென்றால் இடைசாதிக்காரன், இஸ்லாமியன் கிருஸ்துவன்.. எல்லாமதங்களிலும் உள்ள இடைநிலையர்கள்.. நீண்டநாட்களாக பிற்படுத்த மக்களின் உரிமைகளை தட்டிபறித்து அனுபவித்து வந்த இனம் மண்டல் பரிந்துரை சட்டவடிவமான பிறகு அதை எப்படியாவது முடக்கிடயெண்ணி செய்கிற சூழ்ச்சியிது.. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் வசதியானவர்கள் விட்டுதரவேண்டுமென சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் தொடர்ந்து உயர்கல்வியிலோ,அல்லது உயர்பதவிகளிலோ இடஒதுக்கீட்டை கொண்டு வராமல் உயர்ஜாதியினர் மட்டுமே அனுபவித்து வருவதை அவர்கள் ஏன் பிறிபடுத்தப்பட்டவருக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கோ அல்லது அவர்கள் இனத்திலுள்ள ஏழைகளுக்கோ விட்டுதரவில்லை என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.. .. பிற்படுத்தப்பட்டவர்களில் வசதியானவர்கள் விட்டுகொடுத்தாலும் அது மற்றொரு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு செல்லவேண்டும் இன்னும் கூட இடஒதுக்கீட்டு அளவு 80 சதவிகித்த பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கிற நாட்டில் 27 சதவிகிதம் என்பது குறைவானதாகதான் இருக்கிறது.. நிறைய பேர் இதன் பலனை அனுபவிக்க முடியவில்லை.. 3 சதவிகிதம் கூட இல்லாத பிராமணர்கள் ஒவ்வொரு பதவிகளிலும் 27 % தொடங்கி 52% வரை இருக்கிறார்கள் இதனால் பெரும் இழப்பு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தான் .. .. ஏதையாவது செய்து இழந்த சலுகைகளை உரிமைகளையல்ல பெற்றிட வேண்டுமென நினைக்கிறார்கள் குஜராத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜக செய்யும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.. உயர்ஜாதியினர் மீதான தாழ்த்தப்பட்டமக்களின் போராட்டமும் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் சிறுபான்மையினரும் இம்முறை மாற்றத்தை கொண்டுவருவார்கள் என செய்திகள் வரும் வேளையில் இவர்களின் கொள்ளைப்புறமாக இடஒதுக்கீட்டிற்கு வேட்டுவைக்கும் செயல் தடுக்கப்பட்டிருப்பது ஆறுதல் தரும் செய்தி.. .. இன்னும்_விசம்_பிடுங்கப்படவேண்டும்.. .. ஆலஞ்சி.மன்சூர்..

Thursday, August 4, 2016

பிராமணீயமும் எதிராளுமையும்

திராவிடர் கழகம் உயர்சாதி எதிர்ப்பு இயக்கம் என குருமூர்த்தி..ஆம் இப்போதுதான் சரியாக சொல்லியிருக்கிறார் .. தங்களை உயர்ஜாதி என்று சொல்வதன் மூலம் மற்றவர்களை வேறு தட்டில் வைக்கிறார்.. செத்த இயக்கம் என்று சொன்ன குரு இப்போது மிரளுவது புரிகிறதா.. .. இந்திய கட்டமைப்பே மதங்களை பிரித்து ஆள்வதால் அல்ல சாதிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதில் தாங்களே உயர்ந்தவர் எனும் பாசிசத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும்.. பிற சிறுபான்மையினர்கள் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான தோற்றத்தை இந்துத்துவா அமைப்புகள் உருவாக்கினாலும் அடிப்படையில் அவர்களின் பிரதான எதிராளுமைகள் எல்லா மதங்களிலுமுள்ள பிற்பட்டுப்பட்டவர்களே என்பது இதிலிருந்து விளங்கும்.. நான் ஏற்கனவே சொன்னதைப்போல பிராமணியம் மற்றும் பிறக்கானது பிறர் என்பது இங்கே பிராமணியர் அல்லாதோர் .. .. குஜராத்தில் தலித் எதிரான அரசியல் திருப்பி தாக்க தொடங்கியிருக்கும் குருவின் பேச்சில் உள்ள சூட்சமம் புரிந்துக்கொள்வது கொஞ்சம் கடினம் .. அதனால் தான் திராவிடர் கழகம் ஜாதிக்கெதிராக செயல்படவில்லையென்கிறார்.. அதில் உண்மை இருப்பதுபோல் தோன்றும்.. பிராமணர்களுக்கு எதிராக ஓட்டுமொத்த தமிழகம் கிளிர்தெழாமல் பார்த்துக்கொண்டதில் திராவிட இயக்கத்திற்குள் புகுந்த நாகம் மகோராவையே சாரும்.. முதல் முதலில் பிராமணர்களுக்கென்று சங்கம் வைத்துக்கொள்ள அனுமதி தந்தது இந்த மடையன்தான் ... .. திராவிடத்தின் வேர் பாசிசத்திற்கெதிரானதென்பதை உணர்ந்து அதற்கெதிராக செயல்பட தொடங்கியிருக்கிறார்கள் குரு போன்றவர்களின் பேச்சு அதைதான் காட்டுகிறது.. சாதிகளுக்கெதிராக திராவிட இயக்கம் போராடவிலலை என்பதிலிருந்தே புரிந்துக்கொள்ளமுடிகிறது.. பெரியாரின் சிந்தனை செயல் எல்லாமே பிராமணீயத்திற்கு எதிராக இருந்தது அதை இல்லாமல் செய்துவிட்டால் சாதீய கட்டமைப்பு தூள்தூளாகிவிடும் என சிந்தித்தார் அது தான் சரியானதும் கூட.. பிராமணீயத்தை உடைத்து உயர்ஜாதி என்பதை அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோல் இருந்து வந்த உயர்பதவிகளில் நம்மளவனையும் ஏற்ற நினைத்தார் அவர்களுக்கு மட்டுமே சலுகைகள் என்ற நிலையை உடைத்து அனைவருக்கும் சமமான நீதியை உரிமையை பெற்று தர நினைத்து சாதித்ததுதான் இவர்களின் புலம்பலுக்கு காரணம்.. .. இன்னும் இவர்கள் பல வழிகளில் வருவார்கள் இவர்களை தனிமைப்படுத்தினாலே இந்தியாவில் நிகழும் முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்ந்துவிடும் இன்னும் வரும் குருவின் புலம்பல்கள்.. .. ஆலஞ்சி.மன்சூர்..

Wednesday, August 3, 2016

ஜனநாயகம் ஒருவழிபாதையல்ல..

நாங்கள் எந்த ஆயுதம் எடுக்கவேண்டுமென்று எதிரிகள் நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள்.. உங்கள்மொழியில் தான் நாங்கள் பதில் சொல்லவேண்டியிருக்கிறது.. 132 கொத்தடிமைகள் சோற்றால் அடித்தபிண்டங்கள்.. சட்டமன்றத்தில் 89 வயக்காட்டு பொம்மைகள் என்றழைத்தற்கு திருப்பி கொத்தடிமைகள் என்றழைக்க வேண்டியதாகியது.. .. மொத்தத்தின் அடிமைகளை வைத்துக்கொண்டு நீண்டநாள்கள் இதைப்போல் சபையை நடத்தமுடியாது என புரிந்துபோய் இருக்கிறது சபாநாயகர் சபையை ஒத்துவைக்கிறார்.. இனி உள்ளிருப்பு போராட்டம் அதிகம் காணலாம்.. .. எதிர்கட்சிதலைவர் தளபதி அவர்கள் உரை செவிகளில் அறைந்ததைப்போல இருந்திருக்கிறது அடிமைகள் கூச்சலிட தொடங்கியதும் மறுபக்கம் திமுகவினர் கூச்சலிடவும் அவையை நடத்தமுடியாமல் ஓடவேண்டியிருந்தது.. முதல்வர் ஜெயலலிதா வயக்காட்டு பொம்மைகள் என்ற சொல் மன்றத்தில் பயன்படுத்தத் தகுதி அற்ற வார்த்தையல்ல எனச்சொன்ன பிறகு அமளி நடக்கிறது கொத்தடிமைகளும் சோற்றால் அடித்தபிண்டங்கள் என்றும் அதிமுக உறுப்பினர்களை சொல்லவேண்டி வந்தது.. .. அநாகரீகம் எல்லாம் ஜெயலலிதா அறியாத ஒன்று ஜானகிராமசந்திரனை,சென்னாரெட்டியை பழிச்சொன்னதை பார்த்தவர்கள் நாம்.. ஏன் சபையில் தலைவிரிக்கோலமாக சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வந்து #நவநாகரீக அரசியல் செய்தவர்.. அவரிடம் அவரது பாணி அரசியல் செய்யவேண்டும்.. இன்னமும் சபை நாகரீகம் என கட்டியழ தேவையில்லை .. எந்த வகையில் எந்த உடல்மொழியில் எப்படி பிரதிபலிக்கார்களோ அதே வடிவில் நாமும் திருப்பி தரவேண்டும்.. .. #ஜனநாயகம்_ஒருவழிபாதையல்ல… .. ஆலஞ்சி.மன்சூர்..

கடும் கோபத்தில்..

கலைச்செல்வி வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான கொலைப்பட்டிருக்கிறாள் இந்த ஊடகங்களில் கடைசி பக்கத்தில் கூட இல்லை .. நுங்கம்பாக்கம் ரயிலடிக்காக பொங்கிய உயர்நீதிமன்றம் இந்த தோட்டிக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை .. இப்போது இதை ஒற்றைப்பட்ட சம்பவம் என தொலைகாட்சிகள் விவாதிக்க கூடும்.. இதற்கெல்லாம் சட்டம் ஒழுங்கை குறைகூற முடியாது தராசு ஷியாம் சொல்லக்கூடும்.. செ.கு.தமிழரசன் நியாயப்படுத்தகூட செய்யலாம்.. .. எங்கே போய்க்கொண்டிருக்கிறது.. கொலையில் கூட உயர்ந்தகுடியில் பிறந்தவருக்காக மட்டுமே இந்த சமூகம் அழுமா.. இவளும் பெண் தானே இவளுக்காக குரல்கொடுக்க முன் வராதது ஏன்.. பெரியகட்சிகள் உதிரிகட்சிகள் எல்லாம் வாக்குவங்கிக்குள் கரைந்து போய்விட்டனவா. வெட்கப்படவேண்டாமா.. .. ஆதிக்கவெறியா இங்கே.. இந்த கயவர்களை பீயை கரைத்து அடிக்கவேண்டாமா.. இது போன்ற சம்பவங்களில் ஆணுறுப்பை அறுத்தெறியவேண்டும்.. தொடர்ந்து தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் அதை ஒற்றை நிகழ்வாக கருதி பெரிதுப்படுத்ததால் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறுகிறது இவர்களின் சாதி பின்பலமும் அதை வைத்து எதையும் செய்யலாம் என்கிற மனோபாவமும் மாற்றப்படவேண்டும்.. .. தலித்தென்றில்லை யார் இதுபோன்று தாக்கப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தாலும் அனைவரும் ஒன்று சேர்ந்து இதுபோன்ற சம்பவங்களை கண்டிக்கவேண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் காட்டுமிராண்டிகளை நடுத்தெருவில் வைத்து அடித்தே கொல்லாம். சிலநேரம் வன்முறைதான் தீர்வாகிறது.. .. இன்னும் எத்தனை கலைச்செல்விகள் வேண்டும் ஆண்டைகளே.. .. அடங்கமறுத்து திருப்பியடித்தால்.. .. #கடும்கோபத்தில்.. ஆலஞ்சி.மன்சூர்..

Tuesday, August 2, 2016

பத்திரிக்கைதர்மம் எங்கே..?

திரு.பாண்டே .. என்ன தயக்கம் .. ஜெயலலிதா அறைந்ததாக பகிரங்கமாக பொதுமேடையில் அல்ல ராஜ்யசபாவில் உலகமே கவனித்துக்கொண்டிருக்கும் (நேரலை) போது அதிமுக எம்பியாக இருந்த சசிகவாபுஷ்பா குற்றம் சாட்டுகிறார்.. தன் தலைவி அறைந்ததாகவே சொல்கிறார்..தன்னை ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தியதாகவும் மிரட்டியதாகவும் சொன்னார்.. அதைவிட முக்கியமாய் தன் உயிருக்கு ஆபத்து என்கிறார்.. சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிலமணிகளுக்குள் அவரின் வீடு அதிமுகவினரால் (இவர்கள் ரௌடிகள் என அழைக்கபடமாட்டார்கள்) தாக்கப்படுகிறது ..இது அனைத்து தொலைக்காட்சிகளிலும் வந்தது.. தாக்குதல் நடத்தியவர்கள் மீது அல்லது தூண்டியவர்கள் மீது ஏன் நடவடிக்கையில்லை என விவாதம் வைக்காதது ஏன்.. திமுக எம்பியை தாக்கியதற்கு நாடாளுமன்ற அவையிலேயே பகிரங்கமாக மன்னிப்பை கேட்டுவிட்டப்பின் அது குறித்து விவாதிக்க என்ன இருக்கிறது.. இருநபர் பிரச்சனை என்கிற தாங்கள் ஜெயலலிதா சசிகலாபுஷ்பா என்ற இரண்டுபேரின் பிரச்சனையை அதுவும் நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டியதைதானே விவாதிக்கவேண்டும்.. .. எம்பியின் செயல்பாடு பிடிக்கவில்லையென்றால் முன்கூட்டியே அவரை கட்சியிலிருந்து விலக்காமல் பரப்பரப்பாக குற்றசாட்டை எழுப்பிக்கொண்டிருக்கும் போது அதை இருட்டடிப்பு செய்ய கட்சியிலிருந்து விலக்கிவைக்கும் நடவடிக்கை எடுத்தது ஏன்.. இது உட்கட்சி விவகாரம் என ஒதுக்கிவிட முடியாது அவரை அழைத்து விசாரித்ததுவரை அது உட்கட்சி விவகாரம் என்னை பெண் என்றும் பாராமல் அடித்தார்கள் என குற்றம்சாட்டிய பிறகு கிரிமினல் நடவடிக்கையின் கீழ் குற்றப்பதிவு செய்திருக்கவேண்டாமா.. இப்போது டெல்லி போலீஸ் பாதுகாப்பு அளித்திருப்பதிலிருந்தே சசிகலாவிற்கு பாதுகாப்பான சூழல்இல்லை என்று தானே பொருள்.. இதையெல்லாம் எப்போது பேச போகிறீர்.. வழக்கம் போல இனபாசத்தோடு ஜெயலலிதாவிற்கு வக்காலத்து வாங்குவீர்களெனில் அதற்கு ஊடகத்துறையை விட்டுவிடலாம்.. .. #பாவம்_ஜனநாயகத்தின்நான்காம்தூண்..

Monday, August 1, 2016

துணிவு..

சசிகலா புஷ்பாவின் அரசியலோடு நமக்கு உடன்பாடில்லை நிறைய கருத்துவேறுபாடு எனக்குண்டு .. பொதுவாழ்விற்கு வருகிறவர்களின் அவர்கள் அரசியல் சார்ந்த நிகழ்வுகளை நாம் விமர்சித்திருக்கிறோம் சிலநேரம் கடுமையாக கூட வார்த்தை பிரயோகம் செய்திருக்கிறோம் ஆனால் எல்லை மீறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறோம் தனிநபர் விருப்புவெறுப்பை நாம் விமர்சிப்பதில்லை அவர்களின் சுதந்தரத்தில் தலையிட இங்கே யாருக்கும் உரிமையில்லை.. .. பெண்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்பதில் திராவிட இயக்கம் அதிகம் விரும்புகிறது .. அவர்களுக்கான அதிகாரத்தை அவர்கள் பெறவேண்டுமென்பதில் கவனிப்பாக இருக்கிறது.. அதற்கான வாய்ப்பை அதிகம் உருவாக்கவேண்டுமென்பதில் அதிகம் முனைப்புகாட்டுகிறது ..சமூகத்தில் பெண்கள் எல்லா நிலைகளிலும் பங்களிப்பை தரவேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.. .. எந்தவழியை பின்பற்றி வந்தாலும் அவரின் அரசியல்சார்ந்த செயல்களை விமர்ச்சிக்கவேண்டுமே தவிர அவரையல்ல.. இங்கே சசிகலாபுஷ்பாவை தொடர்ந்து விமர்சனத்தை திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களே செய்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய செயல்.. .. சசிகலா நேரடியாகவே தமிழக முதல்வர் மீது குற்றம் சாட்டுகிறார்.. அதைவிட தன் உயிருக்கு ஆபத்தென்கிறார் இதை ஊடகங்கள் ஏன் நாடாளுமன்றம் கூட அலட்சியமாக கவனிக்கிறது.. குலாம் நபி ஆசாத் போன்றோர் குறிக்கிட்டப்பிறகு அவரின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லையென்கிறார் துணைசபாநாயகர்.. நமக்குள்ள சந்தேகமெல்லாம் சசிகலாவை ஏன் பேச அனுமதிக்கவில்வையென்பதுதான் பேசிவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்யப்பட்டது ஏன்..ஒரு பெண் நாடாளுமன்ற அவையில் பேசியும் காம்ரேட்கள் மவுனம் அதிர்ச்சியளிக்கிறது அதைவிட முத்தரசன் பேச்சு சகிக்கவில்லை.. .. திருமதி.சசிகலா புஷ்பா வின் தைரியத்தை நாம் பாராட்டியாகவேண்டும் தம்பிதுரையும் இன்னும் பிற அதிமுக எம்பிகளும் சேர்மன் முன் அழைத்துக்கொண்டுப்போய் நிறுத்தியும் தன் ராஜினாமாவை தர மறுத்திருக்கிறார்.. அதிமுகவில் இவரைபோன்றவர்கள் இருக்கமுடியாது காரணம் சுயம் இழந்தவர்கள் தான் அங்கே இருக்கமுடியும்.. சசிகலா பழைய ஜெயலலிதாவைப்போல் செயல்படுகிறார்.. எம்ஜிஆர் ராஜினாமாவை கேட்டும் தர மறுத்தவர்தான் இந்த ஜெயலலிதா.. .. .. சபையில் அவரை பேச அனுமதித்திருந்தால் இன்னும் நிறைய மர்மங்களுக்கு விடை கிடைத்திருக்கும்.. யாரோடு மோதுகிறோம் என்று தெரிந்தும் அதனால் பெரிய ஆபத்துக்கள் சாதாரணமாககூட நிகழலாம் என அறிந்தும் பின் விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் எதிர்த்து நிற்கிறார் பாருங்கள் நிச்சயமாக துணிச்சலான பெண்தான்.. .. I appreciate her Boldness!! Brave lady.. .. ஆலஞ்சி.மன்சூர்..

ஜெயலலிதா நிதானமிழந்தார்

ஜெயலலிதா சசிகலாபுஷ்பா கைகலப்பு இப்படிதான் ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் .. முதலில் ஜெயலலிதாவின் முகம் இங்கே அப்பட்டமாக தெரிகிறது.. சசிகலா குற்றச்சாட்டை அவர் பொதுவெளியில் வைக்கவில்லை மாறாக நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறார்.. ஜெயலலிதா அறைந்தார் எனச்சொல்லும் போதே இவரின் இயல்பு நமக்கு தெரியுமென்பதால் ஜெயலலிதாவை திருப்பி அடித்தாரா என கேட்கவேண்டியிருக்கிறது.. தனிமையில் வைத்து அடித்ததாக சொல்லும் போது சந்தேகம் கூடவே வலுகிறது... .. சசிகலா மீது பெரிய அபிப்ராயமெல்லொம் இல்லை இவரை போன்றவர்கள் பொதுவாழ்விற்கு வருவதால் எந்த பயனுமில்லை என்பதை அறிவோம்.. ஆனால் மற்றவர்களுக்கு காலில்விழுந்து தன்மானத்தை இழந்து நிற்கிற மூடர் கூட்டத்திற்கு, மிகப்பெரிய சக்தியோடு மோதுகிறோம் என்ற அஞ்ச உணர்வே இல்லாமல் உண்மையை நாடாளுமன்றத்தில் பதிந்தார் பாருங்கள் அந்த துணிவு மற்றவர்களுக்கு இல்லாமல் அடிமையாக இருக்கிறார்களே என்று கேட்க தோன்றுகிறது.. .. இது அதிமுகவின் கலாச்சாரம் தனக்கு பிடிக்காதவர்களை ராமவரம் தோட்த்திற்கழைத்து கவனிக்கும் பழக்கும் #மகோரா காலத்திலிருந்தே தொடங்கியதுதான்.. மறைந்த ஜேப்பியார் எம்ஜிஆருக்காக பாபுவிடமிருந்து பிரித்து வலுக்கட்டாயமாக கொண்டுவந்ததாகவும் அவரை ஒருநாள் இரவு வைத்திருந்துவிட்டுதான் மக்கள்திலகத்திடம் சேர்த்தேன் என வெளிப்படையாகவே பேசினார்.. கடைசிவரை ஜேப்பியார் மீது கை வைக்காததற்கு காரணம் அதுவாகதானிருந்தது.. அதிமுகவில் இப்படியும் ரோசத்தோடு ஒருவர் இருந்திருக்கிறார் என்கிற போது இன்னும் எத்தனைப்பேர் வாய் திறக்கமுடியாமல் தைரியமின்றி கிடந்து சாகிறார்களோ.. தெரியவில்லை.. .. உண்மையில் நிதானம் தவறியது ஜெயலவிதாதான் #ஜெயலலிதாவின்முகம்_கறுத்ததினம்.. .. ஆலஞ்சி.மன்சூர்..