Sunday, April 30, 2017
தலைவா..வா
இதயம் ஏங்குகிறது
உன் இன்பத்தமிழ் கேட்க
ஒற்றை வார்த்தையில்
தமிழ்கூறும் நல்லுலகை
கட்டிப்போட்டவன் ..நீ..
#உடன்பிறப்பே..
..
கனத்த இதயம்
கலங்கிய கண்கள்
காணகிடைக்காமல்
காலம் தாழ்த்தியதை கண்டு
சிறிதாய் ஒரிருவார்த்தையில்
பேசி காண பெரும் ஆவல்..
..
ஓய்விற்கு ஓய்வுதந்த
ஒப்பற்ற தலைவன்..நீ..
வயதும் மூப்பும்
உடல் ஒவ்வாமையும்
நம்மை சில காலம் பிரித்தது..
அதற்குள் சிலர்
ஆனந்த கூத்தாட..
அடுத்து கெடுப்பவர்
ஆணவத்தோடு கொக்கரிக்க
செய்வதறியாது நின்றோம்..
ஆயினும் தளபதியெனும்
தங்கமகன் தலைமையேற்று
செயல் வடிவாய் நின்றதால்
எதிரிகள் மூர்ச்சையாயினர்..
..
இதோ.
நல்லதொரு செய்தி..
தேன்கலந்து தினையாய்
தேன்மதுர.. கனியாய்
செவிக்கும் கண்களுக்கும்
பேரின்ப பெரும் கருணையாய்
வருகிறாய்.. என்றவுடன்
சிலர்..
நாவடங்கி நடுநடுங்கிப்போனார்..
..
திராவிட பெருந்தலைவா..
உன்.. மூச்சுகாற்று கூட
எதிரிகளுக்கு பெரும்புயலாய் மாறும்
என்பதாண்டாய் எதிரிகள்
உனை கண்டே அஞ்சுகிறார்..
உன் கண்ணசைவில்
காத்திருக்கும் பெரும்கூட்டம்
ஆர்ப்பரிக்கும் பெரும் அலையாய்..
சுருண்டு போவர்..
எம்இன எதிரிகள்
..
தமிழனின் வைரமே..
தமிழின் ஓளியே.
தமிழ் மொழியின் ஒலியே
ஊர்கூடி விழாகாண..
காத்திருக்கிறது.
வைரவிழா காண..
..
வா..தலைவா..
விரைந்து..நலிவு நீங்கி
நல்லதொரு சேதி கொண்டு
நாட்டின் நலன் கருதி
தமிழ்த்தாயின்.. தவப்புதல்வா
வா.. காத்திருக்கிறது தமிழகம்..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment