Friday, April 7, 2017

கருப்பு எங்கள் நிறம்

இந்தியர்கள் நிறவெறியர்கள் கிடையாது. அப்படி இருந்திருந்தால் #கருப்பர்களான தென்னிந்தியர்களுடன் நாம் சேர்ந்து வாழ அனுமதித்திருப்போமா.. ...தரூண் விஜய். .. முதலில் நன்றி விஜய்.. பிரிந்து கிடக்கும் எங்களை ஒருங்கிணைத்து தென்னிந்தியர்கள் #திராவிடர்கள் என்று ஒப்புக்கொண்டமைக்கு.. மற்றொன்று திராவிடர்கள் என தனியே பிரித்து சொல்வதிலிருந்தே இந்தியா திராவிடர்களுக்கானதல்ல என்று நீரே பறைச்சாட்டியிருக்கிறீர்.. .. கருப்பு அழிக்க முடியாத வண்ணம்.. ஆதிமனிதனின் நிறமும் அதுதான்.. கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு சொந்தக்காரன் இவன் தான் ஆம் திராவிடன் தான்.. நாங்களெல்லாம் கைபர் வழியே பிழைக்க வந்தவர்கள் வெள்ளை தோல் நிறத்தவரென.. எங்களின் ஆதி யூதரினம் என்பதை விஜய் அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்.. இந்த மண்ணின் மைந்தர்கள் கருப்பர்கள் என்பதையும் அவரின் இந்த ஒற்றைவரி சொல்லாமல் சொல்கிறது என்னதான் எங்களின் புகழ் வானுயறந்து புகழ்ந்துநின்றாலும்.. நாங்கள் தனியானவர்கள்.. நிறத்தால் கருப்பர்கள் என சொல்லி நிறவெறியை மெல்ல மனதில் விதைக்கும் விஷமேறிய சொல்லின் பொருள் புரிகிறது.. நாங்கள் இன வெறியர்கள் அல்ல இருப்பின் கருப்பர்களான தென்னிந்தியர்களை சேர்ந்துவாழ அனுமதித்திருப்போமா என்ற வரிகளில் ஆணவம் நிறைந்திருப்பதை விஜய் தருண் அறியாதவரா..அறிந்தே தான் நாங்கள் உங்களை விட உயர்ந்தவர்கள் நீங்கள் சூத்திரர்கள் கருப்பர்கள் என உள்ளில் கிடப்பதை திறந்து காட்டியிருக்கிறார்.. .. .. எங்கள் பெருங்கிழவன் பெரியார் சும்மாவா #கருப்பை தேர்வு செய்தார்.. பார்பனனின் உள்ளில் கிடக்கும் நிறவெறி அறிந்தேதான் கருப்பை நம் கலராக்கினார்.. கருப்பு வண்ணம் எங்களுடையது.. கருப்பு தான் ஆதிநிறம்.. கருப்புதான் கெட்டியானது.. வெள்ளை என்பது வியாதி/குறைபாடு..என்பது மருத்துவம் அறிந்தவர்களுக்கு தெரியும் .. மனிதனின் இயற்கையான நிறம் கருப்பு.. நாங்கள் கருப்பர் என்பதில் பெருமைக்கொள்கிறோம்.. தயை கூர்ந்து இதையே தொடர்ந்து வலியுறுத்துங்கள்.. எங்கள் அண்ணன் #பேரறிஞர்_அண்ணா சொன்னதைப்பேல.. #திராவிடநாடு கோரிக்கை தான் கைவிடப்பட்டிருக்கிறதே தவிர, அதற்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கின்றன .. .. காரணங்களை தேடி செல்லவேண்டியதில்லை.. அவர்களே தோண்டியெடுத்து தருகிறார்கள்.. திராவிடர்கள் கருப்பர்கள் மண்ணின் மைந்தர்கள்.. .. #black_not_to_erase…

No comments:

Post a Comment