Wednesday, April 12, 2017
ஈழ வியாபாரிகள் வேசம் கலையுது
சீமான் யார் என்றே பிரபாகரனுக்கு தெரியாது - வடக்கு மாகாண முதல்வர் ..#விக்னேஷ்வரன்
அப்போ பிரபாகரனை சந்திக்க
காடு கடல் மலை தாண்டி ராணுவ தோட்டக்களையெல்லாம் தாண்டி.. நேராய் போய் சடார்ன்னு திரும்பி அந்தபக்கமாய் போய் .. ராணுவத்திற்கு தண்ணிகாட்டிட்டு.. பிரபாகரனை சந்திச்சா.. உடனே அவரு.. ஏகே 47 துப்பாக்கிய சுட கத்துக்கொடுத்தார். சீமானின் கதைவசனத்தில் நாம் கேட்ட கண்ட காட்சிகள்..
பயப்புள்ள பொய் சொல்லியிருக்கு..
..
அப்போ உண்மையில்லையா.. பிரபாகரனுக்கு பிறகு வாழ்வதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வேறு வழியின்றி அரசியல் நடத்தினால்.. இவனுக வேற உண்மையை சொல்லி வர்ற வருவாயிலேயும் மண்ணை அள்ளி போட்ட என்னதான் செய்யறது..
..
உண்மையில் நெடுமாறன், திருமுருகன் சீமான் ஏன் வைகோ கூட தமிழினம் மீதோ அல்லது ஈழத்தமிழர்கள் மீது கரிசனம் உள்ளவர்கள் அல்ல.. ஈழத்தில் போராட்டம் நடந்துக்கொண்டே இருக்கவேண்டும் அங்கு அமைதி திரும்பி ஜனநாயகத்தை மீட்டெடுத்தால் இவர்கள் கதி அதோகதிதான் என முன்பு எழுதியது சரியாக போகிறது...அதுதான் உண்மை பதட்டமாக வைத்திருந்தால் தான் குளிர்காய முடியும் என்று அறியாதவர்கள் அல்ல இவர்கள்.. அதனால் தான் திரு.ப.சிதம்பரம் போரை நிறுத்துங்கள் .. தேர்தல் முடிந்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்குவந்தவுடன் பிரச்சனையை ஜனநாயக ரீதியாக தீரித்துக்கொள்வோம் என்று பிரபாகரனிடமே பேசியபோது ..வைகோவோடு கலந்துக்கொண்டு பதிலளிக்கிறேன் என்றார் ஆனால் வைகோ..பாஜக வரும்.. வாஜ்பாய் நான் சொன்னால் கேட்பார்.. மூன்றுமாதங்கள் தாக்குபிடியுங்கள் எனச்சொல்லி இனத்தையே இனத்தின் போராட்டத்தையே வேரோடு சாய்த்துவிட்டார். ..
..
ஏன்,இதை இங்கே பதிவு செய்கிறேன் என்றால் தமிழக தலைவர்கள் குறிப்பாக ஈழ அரசியல் செய்யும் கேடுகெட்டவர்கள் .. தங்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தால் போதும் இனம் அழிந்தாலும் பரவாயில்லையென நினைப்பதால்தான் இன்று #உயர்லட்சிய_போராட்டமே சிதைந்து போனது..
அவசரகுடுக்கைகள்.. அரைகுறை அரசியல் அறிவுள்ளவர்கள் .. தங்கள் வளம் பேணி காவு கொடுத்தார்கள்.. ஆனால் இவர்கள் பங்களாக்களில் வாழ்கிறார்கள் எந்த வருவாயும் வராமல் எந்த தொழிலும் செய்து முன்னேறாமல். நெடுமாறன் போன்றோர் சிறந்த வாழ்வை வாழ்கிறார்கள்..
..
பொய்யும் புரட்டும் உணர்ச்சிபூர்வமான காட்டுகத்தலும்..
இளைஞர்களை வழிகேட்டில் கொண்டு சேர்க்கிறது.
நிதானமாக வீரத்தோடு விவேகமும் இணைந்து..அறிவார்ந்தோரின் ஆலோசனையோடு வென்றுயெடுக்கவேண்டிய விடயத்தை சிறுமதியாளரின் கிறுக்குதனத்தால் இனம் நிறைய இழந்து நிற்கிறது.. ..
..
இன்னும் நிறைய ..
ஈழத்தமிழர்கள்.. உண்மையை கதைப்பார்கள்..
..
#அப்போதுதெரியும்_ஈழவியாபாரிகளின்_நரித்தனங்கள்..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment