Tuesday, April 4, 2017

தமிழின விரோதிகள்

கருப்புமையை எடுத்து மைல் கற்களில் பூசுவதைவிட முகத்தில் பூசிக்கொள்ளுங்கள் மாண்பிமை பொன்.ராதாகிருஷ்ணன்.. தமிழ் எதிர்ப்பு போராட்டம் நடத்துவோம்.. எச்.ராசா.. .. பாஜக தலைவர்கள் எப்போதுமே எதிர்மறை அரசியலைதான் செய்கிறார்கள்..என்ன.. பொய்யோடு கலந்து.. திரு.பொன்னர் டி ஆர்.பாலு தான் இந்தியில் எழுதும் அரசாணையை பிறப்பித்தார் அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு பேசுங்கள் என்கிறார்.. திரு. டி.ஆர்.பாலு அவர்கள் அரசாணையை படித்துவிட்டு வரட்டும் என்றார்.. மாநில மொழி..அடுத்து ஆங்கிலம் பிறகுதான் இந்தியில் எழுதவேண்டும்.. அதுவும் ஒன்றாவது மூன்றாவது ஏழாவது மைல்கல்களில் தான் இந்தி எழுத வேண்டும் எல்லாம் கற்களிலும் அல்ல அதுவும்..ஆங்கிலத்தை அடித்துவிட்டு அல்ல.. இது முன்பே உள்ள அரசாணைதான் ரயில்வேகளில் பார்க்கலாம்.. எதையுமே அரைகுறையாகதான் பொன்னர் பேசுவார்.. காரணம் பாஜக அடுத்து என்ன செய்யபோகிறதென்று அவருக்கே தெரியாது... நாள்தோறும் பொய்கள் .. பொன்னர் ஒன்றை உணரவேண்டும் என்ன கத்தினாலும் ..மக்களின் ஆதரவோடு நின்று வென்றாலும்.. உங்களைவிட நோகாமல் #நிர்மலாசீதாராமனும் .. #இல_கணேசனும்தான் அதிகம் பலன் பெறுவார்கள். மக்களை சந்திக்காத நிரமலாவிற்கு தனிபொறுப்போடு கூடிய அமைச்சர்பதவி... பொன்னருக்கோ துணை அமைச்சர்தான். அதுதான் இனியும் நடக்கும்.. இனியாவது அதிகம் உளறி மாட்டிக்கொள்ளாதீர்கள். .. தமிழ் எதிர்ப்பு போராட்டம் .. வரவேற்கிறோம் நேரடி துணிவிருந்தால் நடத்தட்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழுக்கெதிரான போக்கை கொண்டிருக்கிறது. தமிழின் தொன்மையை பறைசாற்றும் #கீழடி_ஆய்வை கூட நிறுத்தியது.. இந்தியை திணிப்பதின் மூலம் தமிழ் மொழியின் வளத்தை சிதைத்துவிட நினைக்கிறது.. பார்பனர்கள் வடமொழி கலந்து பேசி .. தமிழின் மொழியில் இடைசொருகலை மிக கச்சிதமாக சேர்த்துவிட்டதை நாம் நம்மை அறியாமல் பேசியும் எழுதியும் வருகிறோம்.. மலையாள மொழியில் நிறைய வட சொற்கள் புகுத்தி #கைரளியர்களின் மொழி வளத்தை ஏறக்குறைய இல்லாதாக்கினார்கள் இதிலும் பார்பனர்கள் பங்கு அளப்பரியது.. தென்னிந்திய மொழிகளில் (திராவிட மொழிகளில்) தமிழ் உட்பட வடமொழி சொற்களை தான் கையாள்கிறோம்..இந்தியை திணிப்பதின் மூலம் நிறைய தனித்தமிழ் சொற்களை மறந்தோ அல்லது சிதைந்து போகலாம்.. .. எச்.ராசா போன்றவர்கள் தமிழ் எதிர்ப்பை கையிலெடுக்கவேண்டும் அப்போதுதான் தமிழ்மொழி மீதான பற்று அதிகமாகும் .. குறிப்பாக இளைஞர்களிடையே மொழியறிவு அதன் தாக்கமும் முன்னெப்போதுமில்லாத அளவு வீரியம் பெறும்.. தனித்தமிழில் பேச எழுதவேண்டுமென்று தோன்றும்.. தமிழ்விரோதிகளை இனம் கண்டு வேரறுக்க முடியும்..தமிழர்களை ஒன்றுமைபடுத்தவாகினும் .. எச்.ராசா தன் தாய்மொழி மீதான பாசத்தை கையிலெடுத்து தமிழ் எதிர்ப்பை காட்டவேண்டும். அப்போதுதான் எச்.ராசா போன்ற எச்சைகள் தமிழகத்திருந்து விரட்டபடுவார்கள்/புறக்கணிக்க படுவார்கள் .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment