Monday, May 1, 2017
தலித்.. அரசியல்
விசிக ரவிக்குமார்
தலித்துக்களை விலக்கி வைத்த திராவிட அரசியல் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் நண்பர் அன்சாரி முஹம்மது அதை அனுப்பியிருந்தார்..
..
ரவிக்குமார் எப்போது நிறைய கருத்துகளை கோர்வையாக்கி சொல்லவந்த விடயத்தின் வீரியத்தை நீர்த்துபோக செய்வார் அல்லது மடைமாற்றிவிடுவார்.. ஐம்பதாண்டுகால திராவிட கட்சிகள் ஆட்சியென்பதே முதலில் ஏற்றுக்கொள்ள முடியாது ம.கோ.ரா.வின் தலைமையிலான அதிமுக ஆட்சியும் ஜெயலலிதாவின் ஆட்சியும் ஏறக்குறைய திராவிட எதிர்மறை கொள்கையைதான் கொண்டிருந்தது திராவிடர் ஆட்சியென்ற முகமூடியோடு..
..
திமுக ஆட்சிக்குவந்த பின்தான் பிராமணர்கள் அதிகாரத்தில் அதிகளவில் வந்ததாக சொல்வது அபத்தம்.. மாறாக மொழிப்போரில் பங்கெடுத்தவர்களை அதிகாரவரம்பிற்குள் கொண்டுவந்தது திமுகதான்..
தலித்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதைப்போல கட்டுரையில் சொல்கிறார்.. தலித் சமூகம் தொடர்ந்து எம்ஜிஆரை தாங்கிப்பிடித்தது அதன் எதிர்மறையாக இடைச்சாதியினர் பெருமளவில் திமுகவின்பக்கம் இருந்தார்கள் என்ற தோற்றம்கூட ஒரு பகுதிவரை சரியென்றே நினைக்கிறேன்.. திமுக ஆட்சி அதிகாரத்தில் கட்சி அதிகாரத்தில் சரியான வாய்ப்பு வழங்கவில்லை என்பதை சட்டென்று கடந்து போக முடியாதென்றாலும். ..ராசா போன்றவர்கள் மத்திய அமைச்சராக்கியும் பெரும் தடங்கலுக்கிடையே அருந்ததியினர் உள்ஒதுக்கீட்டையும் மறந்து போனார்..
அதிமுக ஆட்சியில் தலித்களுக்கென்று தனி கவனமோ சிறப்பு திட்டங்களோ அவர்கள் மேம்பாட்டிற்கான செயல்திட்டங்களோ இல்லை..மாறாக திமுக ஆட்சியில் தலித்கள் மேம்பாட்டிற்கான திட்டங்களை/செயல்களை அவரே பட்டியலிட்டிருக்கிறார்..
அவை வருமாறு..
..
//திமுக ஆட்சியிலிருந்த சுமார் 22 ஆண்டுகளில் தலித் மக்களின் கல்வியறிவை மேம்படுத்த பள்ளிகளை உருவாக்குதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் அளித்தல், குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகளை கட்டித் தருதல், உயர்கல்வி பெறுவதற்கு லோன் ஸ்காலர்ஷிப், போட்டித் தேர்வுகளில் பங்கேற்க சிறப்புப் பயிற்சி - எனப் பல்வேறுவிதமான நலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன என்பது உண்மைதான்.
அந்த நலத் திட்டங்கள் தலித் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பயன்பட்டன என்பதையும் மறுக்கமுடியாது.
ஆனால் தலித் மக்களை அரசியல்ரீதியாக அதிகாரப்படுத்துவதில் திமுக போதுமான அளவுக்குக் கவனம் செலுத்தவில்லை.//..
..
மொத்தத்தில் பொத்தாம் பொதுவாக திராவிட அரசியலை பழிச்சொல்லும் நோக்கமும் அதன் மூலம் தேசீயகட்சிகளை குறிப்பாக பாசிசத்தை நோக்கி திசை திருப்ப பயன்படும்..
தலித் விரோத அரசியல் திராவிடம் ஆளும் தமிழகத்தில் தான் குறைவென்பதும்.. பாஜக ஆளும் மாநிலங்களில் ருத்ரதாண்டவம் ஆடுவதும் கட்டுரையாளர் மறந்து போனார்..
திராவிட கட்சி ஆட்சியென்றால் அதில் திமுகவை மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்..திமுக ஆட்சியில் தலித்கள் புறக்கணிக்கப்படவில்லை.. இன்னும் கொஞ்சம் கூடுதலாய் செய்திருக்கலாமென்பதை மறுப்பதற்கில்லை..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment