Wednesday, April 5, 2017
ஜெயலலிதா குற்றவாளி..
Re-review petition..
ஜெயலலிதாவின் ₹100 கோடி அபராதத்தை எப்படி வசூலிப்பதென்ற மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது..
சில ஊடகங்களும் ஆதரவாளர்களும் ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் சொன்னதைப்போல சித்தரிக்க முயல்கிறார்கள்..
மிக தெளிவாக தீர்ப்பில் எந்த திருத்தமும் செய்ய முடியாதென திட்டவட்டமாக சொல்லிவிட்டது..
இறந்தவரிடம் எப்படி பணத்தை வசூலிப்பது என்ற கேள்வியே தவறு .. இறந்தவர் என்பதால் குற்றவாளியாக கருதி சொத்தை பறிமுதல் செய்ய முடியாது.. இறந்து போனவரை குற்றவாளியாக அறிவிக்கவோ/கருதவோ சட்டத்தில் இடமில்லை..
மரணம் எப்படி காப்பாற்றுகிறது பாருங்கள்...
..
நீதியரசர் குன்ஹா தீர்ப்பை நடைமுறை படுத்த வேண்டுமென்ற நீதுமன்றம்.. அதாவது ஜெயலலிதா உட்பட நால்வரும் குற்றவாளிகள்.. ஆனால் செத்தவரை தண்டிக்கமுடியாது என்பதால் #தண்டனையோ_தண்டமோ தேவையில்லை.. அதுதான் தீர்ப்பில் சொல்கிறது.. உடனே ஜெயலவிதாவை புனிதராக்க சிலர் முயல்வதும் .. கெட்டவன் இறந்தால் நல்லவனாக பதிவு செய்வதும் சரியல்ல..
..
வரலாற்றில் இரண்டுமுறை சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர் .. உயிரோடிருந்திருந்தால் பெங்களுரூவில் சிறைப்பறவையாக நான்குவருடம் கழிக்கவேண்டி வந்திருக்கும்.. மரணம் அவரை சிறைக்குள் வாழ்வை கழிக்கவிடாமல் காப்பாற்றியிருக்கிறது.. ஒருவகையில் மரணம் ஜெயாவை காப்பாற்றியிருக்கிறது..
..
#ஜெயலலிதா கிரிமினல் என்பதை மாற்றமுடியாது..தண்டனைதான் இல்லை..
இறந்துபோனதால்.. உச்சநீதிமன்றம்..
..
#A1criminal_miss_Jayalalithaa..
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment