Tuesday, April 25, 2017
முழு அடைப்பு
முழு அடைப்பு ..வெற்றி..
கொண்டாட அல்ல புரிதலுக்காக.. கண்டுக்கொள்ளாத மத்திய அரசையும் கையாலாகாத மாநில அரசையும் மக்கள்முன் நிறுத்தியிருக்கிறது..
இந்த ஒருங்கிணைப்பிற்காக ஒன்றிணைந்த அனைத்து கட்சி அமைப்புகளுக்கும் காவிரிக்கரையை சேர்ந்தவன் என்ற வகையில் நன்றி..!
..
இந்திய அரசிலமைப்பு முழுஅடைப்பை ஏற்கவில்லை என்பதும்.. முழுஅடைப்பை விரும்பாதவர்களின் அவசரதேவைகளுக்கான உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டியதும் கருத்தில் கொண்டுதான் முழு பந்த் என்பதை சட்டவிரோதமாக்கியிருக்கிறது.. திமுக ஆளும்கட்சியாக இருந்து நடத்திய பந்த்தை எதிர்த்து வந்தேறி கிரிமினல் ஜெயலலிதா காழ்ப்புணர்ச்சியில் தொடர்ந்த வழக்கில் பெறப்பட்ட தீர்ப்புதான் மேல உள்ளது.. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்குபிறகு நிறைய போராட்டமும் முழுஅடைப்பும் நடந்திருந்தாலும் பேருந்துகள் வலுக்கட்டாயமாக இயக்கப்படும்.. ஆளும்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இயக்குவார்கள்..
அனைத்து தொழிற்சங்கங்கள் தொமுச உட்பட பங்கேற்றியிருக்கிறது..
வணிகர்கள் அதிமுக மிரட்டலுக்கு அஞ்சாமல் கடைகளை அடைத்து தங்களின் எதிர்ப்பை பலமாக பதிவு செய்திருக்கிறார்கள்
..
பாஜக .. பாஜகவின் பினாமி அதிமுகவும் எவ்வளவோ முயன்றும் தோற்றியிருக்கிறது
பாமக தமாகா போன்ற உதிரிகளை உசுப்பேற்றி பார்த்ததும்..கடைசிவரை மக்கள் காதோர்க்காமல் வெற்றிபெற செய்திருக்கிறார்கள்..
..
இன்றைய தினம் முழுஅடைப்பு வெற்றியடைந்திருக்கிறது.. பாதிப்பில்லாமல் போராட்டத்தை நடத்த திமுக கற்றுக்கொள்ளவேண்டுமென்ற மரம்வெட்டியின் யோசனையை ஏற்று.. பாவம் திமுகவினருக்கு குடிசை கொளுத்தவும் மிகவும் ஆண்டுகள் பழைமையான மரங்களை வெட்டி போக்குவரத்திற்கு இடையூறு செய்ய தெரியாததால் மறியல் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.. கலந்துக்கொண்டவர்கள் அனைத்துக்கட்சியை சேர்ந்த நாட்டின் நலன் கருதுவோரும் விவசாயிகளும் தான்..
இந்த வெற்றி சிலருக்கு எர்ச்சலை தரும்.. எரிச்சல் தருவதையே இவர்களின் கருத்துக்கள் நமக்கு சொல்கிறது..
உண்மையில் இவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களும்.. தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறவர்களும்தான்..
..
தாமாக முன்வந்து கலந்துக்கொண்ட
சோறு உண்ணும் அனைவருக்கும் நன்றி!..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment