Wednesday, April 19, 2017
நூற்றாண்டு கண்ட இயக்கம்..
இன்று நேற்றா..
நூற்றாண்டாய் கடும் முயற்சியெடுத்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.. டி.எம்.நாயர் தியாகராய செட்டி பனகல் அரசர் ..நடேசமுதலியார் காலம் தொட்டே அழித்தே தீருவோமென கங்கணம் கட்டிக்கொண்டுதானியிருக்கிறார்கள்.. திராவிட இயக்கமாய் உருப்பெற்று.. பெரியாரின் பெருந்தொண்டால் நெருங்கமுடியாமல் போய்.. கலைஞர் பெருமகனின் சாதூர்யத்தால் துரோகிகளை இனம்கண்டு களைந்ததால் பெரும் இயக்கமாய்.. தி.மு.கழகம்..
..
எத்தனை குறுக்குவழிகள் உண்டோ அத்தனையிலும் வந்தார்கள்..
மகோராவை தூண்டிவிட்டு கட்சியை உடைத்தபோதும்..
மிசா,கைது.. ஆட்சிகலைப்பு எத்தனையோ பார்த்தாகிவிட்டது.. ஊழல்கட்சி என பெயர்கட்டி பார்த்தார்கள் எவரையும் தண்டிக்கமுடியவில்லை.. இப்போது 2ஜி வரை.. சொன்னவர்கள்தான் தொடர்ந்து சிறைக்கு சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.. திமுக ஒற்றை நபரை நம்பி இருக்கவில்லை.. பெரும்கூட்டம் அறிவின் சுடரில் இணைந்த கூட்டம் அது அதனால்தான்.. ராஜாஜியை காக்கவைத்துவிட்டு பெரியாரிடம் சென்று வாழ்த்துகளை பெற்று அண்ணா ஆட்சியமைத்தார்..
..
மூட்டைப்பூச்சியை போல் நசுக்குவேன் என்ற ராஜாஜியையும்.. 6000 அடி பள்ளத்தில் புதைத்துவிடுவேனென்ற பக்தவச்சலத்தையும்..இருக்குமிடம் தெரியாமல் கல்லறைக்கு அனுப்புவேன் என்ற முதுகில் குத்திய எம்ஜிஆரையும்(ம.கோ.ரா.) கடந்து இன்றும் நிலைத்துநிற்க முடிகிறது.. எத்தனை சூழிச்சிகள்.. அத்தனையும்.. சாணக்கியன் வம்சம் செய்துபார்த்தது..ஆனால் நிஜத்தில் சாணக்கியன் #கலைஞர்தான் என்பதறிந்து .. திசைமாறி அதிமுகவை சிதைத்து தலைக்காட்ட முயல்கிறது..
..
திராவிட இயக்கம் நான்காம் தலைமுறையை மிக சரியாக வடிவமைத்து தளபதி கையில் தந்திருக்கிறது..
சிலர் அதிமுகவை போல திமுகவையும் சிதறவிடலாமென பகல்கனவு காண்கிறார்கள்..
இதோ இன்றைய தினம் தளபதியின் செய்தியே போதும்.. இந்தி நாடாக்க முயற்சிக்காதீர்கள்..
புரிகிறதா.. திமுகவின் வலிமை.. பதவி இருந்தாலும் இல்லாவிட்டடாலும் கொள்கை உறுதி, மக்கள் பணி.. சமூகநலன்.. இதுதான் திமுகவின் ஆணிவேர்.. அதனால்தான் தொடர்ந்து இயங்கமுடிகிறது..
..
திமுக கட்சியல்ல கரைந்துபோகவோ அழிப்பதற்கோ.. விலைபோகவோ..
#திமுக_மாபெரும்இயக்கம் தொடர்ந்து இயங்கும்..புரிகிறதா..
DMK.. not just a Political Party.. it's a Great Movement..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment