Thursday, April 27, 2017

மம்தா..

#மம்தா_பானர்ஜி.. ஆரம்பகாலங்களில் இவர் மீதான அரசியல் பார்வையில் சட்டென்று உணர்ச்சிவயப்பட கூடியவர் என்றுதான் நினைத்திருந்தேன்.. நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு நேரே கையில் வைத்திருந்த தாள்களை வீசியெறிந்து வெளியேறிய போது இன்னமும் முதிரவில்லையென்ற எண்ணவேண்டியிருந்து.. காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து வெளியேறி தனி கட்சி தொடங்கி அதை வங்கத்தில் ஆட்சி பொறுப்பில் ஏற்றியதின் பின்னில் அவரின் தன்நம்பிக்கையும் விடாமுயற்சியும் எதையும் எதிர்கொள்ளும் மனோதிடமும் நம்மை வியப்பில் ஆழ்த்தியது.. பெண்கள் அரசியலில் மிளிர்வதென்பது அதுவும் சரியான ஜனநாயக நெறிமுறைகளோடென்பது எவ்வளவு கஷ்டமான காரியமென்பதை எல்லோரைவிட தமிழர்களாகிய நாம் அறிவோம்.. (ஜெயலலிதா எப்படி இருக்ககூடாதென்பதற்கு சிறந்த உதாரணம்) எப்படி இருக்கவேண்டும் எப்படி அதே போராட்ட உணர்வோடு அதிகாரத்தில் இருக்கும் போதும் தளராது சமரசம் செய்துக்கொள்ளாது இருக்கவேண்டுமென்பதற்கு சரியான எடுத்துக்காட்டாய் திகழ்கிறார்.. .. இந்திய அரசின் திட்டங்களை வங்கத்தில் செயல்படுத்த வேண்டுமெனில் பங்காளி மொழியில் இருக்க வேண்டுமென்பதை உறுதியோடு சொன்னவர்.. யாருக்கும் புரியாத சமஸ்கிருதத்தை இங்கே நடப்பிலாக்க முடியாதென்று திருப்பி அடித்தவர்..இதோ இப்போது கூட அமிர்ஷா வங்கத்தை திரிணாமுலிடமிருந்து பிடுங்குவோம் uproot என்றதற்கு I accept the challenge of those who challenge me. We'll capture Delhi," Mamata Banerjee .. ஆம் இவரால் மட்டுமே முடியுமென நினைக்கிறேன்.. .. காங்கிரஸ் தலைமை மென்மையான போக்கை கடைப்பிடிப்பது தற்போதைய சூழலுக்கு சரியான அணுகுமுறையாக தெரியவில்லை.. ராகுல் அரசியல் என்பதை பெரியதொரு ஈர்ப்பை தரவில்லை என்பதும்.. காங்கிரஸ் இரண்டாம் கட்ட தலைவர்களின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்படாததும் இந்தியாவின் மிக பெரிய இயக்கம் (காங்கிரஸ்) சிதலடைந்து கிடக்கிறது.. தற்போதைக்கு காங்கிரஸ் தலைமை மம்தா போன்றவர்களிடம் செல்வதுதான் நாட்டிற்கு நல்லது.. அல்லது மம்தாவை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் .. இரண்டாவதை விட காங்கிரஸ் தலைமையை மம்தாவிடம் தரலாம் அப்போதுதான் பாஜகவிற்கு சரியான எதிரை உருவாக்க முடியும்.. .. முடியாததென்று ஏதுமில்லை என்கிறது பாரசீக பொன்மொழி .. ஆம் முடியாததே கிடையாது ஏதோ ஒரு புள்ளியில் அது சேரும் அப்போது அது தரவேண்டியதை தந்தே தீரும் அந்த வெற்றி நோக்கியதாக இருக்கவேண்டும் நமது செயல்.. .. மீண்டும் மம்தாவின் வரிகள் I accept the challenge of those who challenge me. We'll capture Delhi," Mamata Banerjee .. .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment