Thursday, April 6, 2017

தெங்கதிரோன்..எங்கள் தளபதி..

#தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி! திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்; ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில் உயர்கின்றான்; உதயசூரியன் வாழ்க நன்றே! ... என்றார் எங்கள் #புரட்சிக்கவிஞர்_பாவேந்தர். .. ஆம்.. உதயசூரியனாய் தளபதி.. பணத்தை காட்டியும் பிணத்தை காட்டியும் அரசியல் செய்கிற நிலையிலும்..நேர்மையான அரசியலை முன்னெடுக்கிற.. அனைத்து தரப்பினரும் விரும்புகிற நேசிக்கிற தலைவனாக மிளிர்கிறார்.. .. சவப்பெட்டியில் ஜெயலலிதா பிண பொம்மையை வைத்து கீழ்தரமான அநாகரீக அரசியல் செய்யும் கட்சி.. பணத்தை கண்டக்டரிடமும் ஷேர் ஆட்டோவிலும் வைத்து விநியோகம் செய்யும்..நவீன நாகரீகமாக செயல்படும் கட்சிகளிக்கிடையே.. மாணவர்களையும்.. மீனவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடி.. பிரச்சனைகளை எப்படி தீர்க்கமுடியும் வெற்றி தந்தால் எப்படி திமுக செயல்படும் என பேசி.. தேர்தலை சநிதிக்கும் நேர்மை ..தமிழகத்தில் இன்னும் ஜனநாயகம் செத்துவிடவில்லை என்பதை பறைச்சாற்றுகிறது.. .. வெற்றி பெற வேண்டுமென்பதற்காக பிணத்தை ஊர்வலமாக கொண்டு நடக்கும் கேடுகெட்ட கயமைகளை கண்டு மக்கள் முகம் சுளிக்கிறார்கள்.. பதவிக்காக யாரை வேண்டுமானாலும் காட்டிக்கொடுக்கும் கயவாளித்தனம் ஒருபுறம்.. பதவியை எப்படியும் அடைந்தே தீரவேண்டுமென்று பணத்தை வாரி இறைத்து .. அதிகாரிகளையும் அரசு ஊழியர்களையும் களத்தில் இறக்கி.. அதிமுகவை கைப்பற்ற கத்திகுத்து நடத்தி கொலைக்கஞ்சா கொடூரத்தை கையிலெடுக்கும்.. துரோகிகள் .. நயவஞ்சகர் கூட்டம் ஒருபுறம்.. மததுவேசத்தை மண்ணில் விதைக்க .. நம்மவரை கொண்டே நம்மை குத்தி குதறும் பாசிசவெறியர்கள் ஒருபுறமும்..சுற்றிநிற்க.. நிமிர்நடையும் நேர்கொண்ட செயலுமாய் நெஞ்சில் நன்மை ஏந்தி.. செத்துக்கொண்டிருக்கும் ஜனநாயகத்திற்கு பிராணவாயுவை தந்து.. இன்னமும் மக்களை நம்பி களம்காணும்.. தளபதி.. யார் வேண்டுமென மக்கள் தேர்வு செய்யட்டும்.. .. ஆனால் மக்கள் பணியில் தொய்வின்றி மக்களோடுமக்களாய் அவர்தம் பிரச்சனையை தோளில் சுமந்து .. இந்த தமிழ்மண்ணில்.. சமூகநீதியை நிலைநாட்ட.. தமிழக மக்களின் இன்னல்கள் கலைந்து உயர்நோக்கோடு..தொண்டாற்றும் நம் தளபதி.. நிச்சயம் மக்கள் தங்களின் தளபதியாய்.. தமிழகத்தின் தளபதியாய் தேர்வு செய்யும் காலம்..வெகுவிரைவில் வரும்.. .. உலகமிசை உணர்வெழுப்பிக் கீழ்திசையின் மீதில் உதித்துவிட்டான் செங்கதிரோன். என்ற பாவேந்தரின் வரிகள் நியாபகம் வருகிறது.. ஆம்.. .. #உதித்துவிட்டான்_செங்கதிரோன்_தளபதியாய்.. தோழர் ஆலஞ்சி...

No comments:

Post a Comment