Saturday, April 1, 2017
இஸ்லாமிய இயங்கங்கள்..
#அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தடை செய்யப்படவேண்டும்... நண்பர் Sabar Khan ..
நீண்டநாட்களாகவே இதுகுறித்து பேசப்படவேண்டும் விவாதிக்கப்பட வேண்டுமென எண்ணியதுண்டு..
குறிப்பாக தமிழகத்தில் எங்குமில்லாத (பிறமாநிலங்களில்) அளவிற்கு இஸ்லாமிய கட்சிகளின் எண்ணிக்கை அதிகம்.. பெயர் தெரியாத கட்சிகள் கூட தேர்தல் நேரங்களில் திடீரென முளைத்து விடுகிறது..
யார் அவர்கள் என்ன பின்னணி என தெரியவில்லை..
..
முதலில் IUML இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தனது பணியை இந்தியா முழுக்க எடுத்த செல்லவில்லை.. குறிப்பிட்ட மாநிலங்களுக்குள் சுருங்கிப்போனது.. பிற மாநிலங்களில் புதிதுபுதிதாய் இஸ்லாமிய கட்சிகள் தோன்றி மறைந்தன.. கேரளாவை தவிர மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட சொல்லகூடிய வளர்ச்சி இல்லை.. இப்போது காலம் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.. IUML தனது பணியை இந்தியா முழுக்க கவனம் செலுத்தி கடமையாற்றவேண்டிய நேரம் வந்திருக்கிறது..
..
நாம் தமிழகத்தை ..பார்ப்போம்..
என்பதுகளின் இறுதிகளில் பழனிபாபாவின் உணர்ச்சி மிகு பேச்சால் இளைஞர்கள் தறிகெட்டவண்டியைப்போல செயல்பட தொடங்கினார்கள் திடீரென்று அவரின் மரணம் ஒரு வெற்றிடத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டுவந்தது.. குறிப்பாக அரபுநாடுகளில் பணிபுரிவோரிடம் அவர்களின் ஒய்வு நேரம் ..பெரிய பொழுதுபோக்கோ.. அல்லது சட்டென்று குடும்பத்தாரோடு தொடர்பு கொண்டு கதைத்துவிட கூடிய தகவல்தொடர்போ இல்லாத காலம்.. ஒரு வெறுமை மனதோடு கழித்தவர்களிடம் இஸ்லாம் பற்றிய தகவல்களும்.. அதுகுறித்து பேச்சுகளும் சட்டென்று மனதில் பதிந்தது..சொல்லவரும் சேதியின் பொருளை உணர்வதற்குள் மற்றொரு சேதியை தரும் முளைச்சலவை யுக்தி கையாளபட்டது....
இதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றியோ.. இது முஸ்லிம்களை பிரதானமாக எதிர்க்கும் இந்துத்துவா அமைப்பினருக்கு வலு சேர்த்துவிடுமென்று யோசிக்காமல் அதில் கவனம் செலுத்தினார்கள்..
..
முஸ்லிம்லீக் கின் அதிகார சண்டையில் அந்த கட்சி பிரிந்து செயல்பட தொடங்கியபோதுதான்..இஸ்லாமிய இயக்கங்கள் பெயரில் புதிய கட்சிகள் தோன்றின.. நாங்கள் தான் தமிழக முஸ்லிம்களை காக்க வந்தவர்கள் எங்களால்தான் தமிழக முஸ்லிம்களின் உரிமைகளை பெற்று தரமுடியுமென கூறி போராட்டங்க வடிவங்களை கையிலெடுத்தார்கள்..குருவி அமர்ந்ததால் பழம்விழுந்த கதையாக என்னால்தான் என சொல்லி முஸ்லிம்களிடையே குறிப்பாக இளைஞர்களை ஈர்த்தார்கள்.. கொஞ்சம் வளர தொடங்கியதும் தலைமைக்கு யார் என்பதிலும் அதிகார மோகமும் தனித்தன்மையை காட்டவேண்டுமென்பதிலும் கவனம் செலுத்த .. இன்று எண்ணில் அடங்கா இயங்கங்கள்..
..
களையப்பட வேண்டியவர்கள்.. இவர்கள்..
புற்றைப்போல் இஸ்லாமிய சமுதாய இளைஞர்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.. இடஒதுக்கீட்டில் கூட இவர்கள் கேட்கும் 10 சதவிகிதம் எப்படி வழங்கமுடியும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைந்த.. சி்றுபான்மையனருக்காக விழுக்காடு 7.5 % மட்டுமே அதுவும் முஸ்லிம் கிருஸ்துவ ஜெயின்.. போன்ற தமிழகத்தில் வாழும் சிறுபான்மையினருக்கானது.. இவர்கள் நோக்கம் இடஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்குவதுதான் ஏறக்குறைய ஆர்எஸ்எஸ் வேலையை சுலபமாக்குவதை கூட அறியாமல் செயல்படுகிறார்கள்..
நிறைய சொல்லலாம்..
..
நண்பர் சபர்கானின் கருத்தில் உடன்பட வேண்டியிருக்கிறது.. ஒரே குடையில் கீழ் இவர்கள் வராதவரை.. புறக்கணிக்கபடும் சமூகமாகதான் இருப்பார்கள்.. ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்..
குழப்பம் விளைவிப்பது கொலைக்கு சமம் என்கிறது வேதம்.. இவர்களின் செயல் குழப்பம் செய்வது மட்டுமே இவர்களின் பலம் அதுதான்.. அது பலவீனமென்று
அறிந்தே தப்பு (தவறை) செய்கிறார்கள்..
#குழப்பவாதிகள்..
..
தோழர் ஆலஞ்சி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment