Saturday, April 22, 2017

ஊழல்..ஆட்சி எது..

நடப்பது ஊழல் ஆட்சியா..? தந்தி .. இதை சொல்ல இத்தனை காலமா.. இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் ஆளும் ஆண்ட அரசுகள் மீது ஊழல் குற்றசாட்டுகள் கூறபடுவதுண்டு.. சிலர் தண்டிக்கபட்டிருக்கிறார்கள்.. ஆனால் தமிழகத்தில் இது பிரத்கேயமாக பேசபடும். திமுகவை குறிவைத்து ஊழல்கட்சி என சொல்லி வந்த ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் மறந்தும் ஜெயலலிதாவின் ஊழலை பேசுவதே இல்லை..இத்தனைக்கும் திமுக மீதான குற்றசாட்டுகள் .. குற்றசாட்டுக்களாகவே இருக்கிறதே தவிர.. ஒரு வழக்கில் கூட தண்டிக்கபடவில்லை.. எத்தனை முறை சொல்லியும்.. கமிஷன்,அமைத்தும் வழக்கு தொடுத்து பார்த்துவிட்டார்கள்.. ஆனால் ஒருமுறை கூட திமுக மீதான குற்றசாட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவுமில்லை கண்டிக்கப்படவுமில்லை.. எத்தனை முறைகளில் தங்களுக்கு தோன்றிய விதத்தில் எல்லாம் வழக்கு தொடுத்து தோல்வியை சந்தித்திருக்கிறார்கள்.. .. ஆனால் அதிமுக அரசு மீதான ஊழல்வழக்குகளில் தொடர்ந்து அமைச்சர்களும் ஏன் அரசின் முதன்மை அமைச்சர் ஜெயலலிதாவும் கூட கண்டிக்க மட்டுமல்ல தண்டிக்கவும் செய்தார்கள் ஆனால் ஊடகங்கள் அவரை புனிதராக காட்ட முயற்சிக்கிறது..ஹோட்டல் பிளசண்ட் வழக்கில் தண்டிக்கப்பட்டும்.. டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்டு பின் சொத்தை திருப்பி தருகிறேன் என்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்..அமைச்சர்கள் நாகூர்மீரான், மருங்காபுரி பொன்னுசாமி, தொடங்கி இப்போது கல்விஅமைச்சராக இருந்த அரங்கநாயகம் வரை தண்டிக்கபட்டிருக்கிறாரே.. ஜெயலலிதா.சொத்துகுவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனைப்பெற்று..முதல்வராக சென்றவரின் காரின் உள்ள லோகோவையும் கொடியையும் பிடிங்கிக்கொண்டு சிறைக்கு அனுப்பியும் .. இடையில் கணிதப்பிழையில் தப்பித்து மீண்டும்,ஆட்சியில் அமர்ந்ததால்..இன்றைய எல்லா கெடுதிகளுக்கும் காரணம்.. உச்சநீதிமன்றத்தாலேயே குற்றவாளியென,அறிவிக்கப்பட்டு ஊழல் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டும்..ஊழல் ஆட்சியா என கேட்பதிலிருந்தே.. ஊடகத்தின் அயோக்கியத்தனம் வெட்டவெளிச்சமாகிறது.. .. தந்தி செம்மலையை அழைத்து விவாதிக்கிறது.. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.. ஒட்டுமொத்தமாக அமைச்சர்கள் மீதான குற்றசாட்டும் வெளிப்படையான ஊழலும்.. இப்போதுகூட வைகையை Thermocol கொண்டு மூடியதில்...அறிவுபூர்வமாக ..? எவ்வளவு கொள்கை என்பதை மக்களே கணக்கிடுகிறார்கள்.. ஜெயலலிதா தொடங்கி அமைச்சர்கள் வாரியம் வரை பணம் சம்பாதிக்கமட்டுமே அரசு அதிகாரத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.. கேவலமான அரசு அதை விமர்சிக்க தைரியமில்லாத ஊடகம்.. .. #களவாணிகள்... .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment