Friday, April 21, 2017

திணிப்பு...

இந்திய அரசின் பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு இனி ஹிந்தி கட்டாயம்.. முதலில் ஹிந்தி மொழி இந்திய மொழியே இல்லையென்பதும் அதை இந்தியர்கள் மீது திணிப்பதும் கூட அரசியல்தான்.. .. ஹிந்தி மொழி 1824ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் .. ஆச்சாரியமார்கள் ஒன்றுகூடி .. (இந்தியாவை ஆளும் மொகலாயர்கள் கொண்டுவந்த பாரசீகமொழியையும்.. அதனூடே பிரிந்துவந்த உருதுவையும் ஏற்க மறுத்து பேச்சுவழக்கில் அதுதானிருந்தது.. பிராந்திய மொழிகளான குஜராத்தி மராத்தி பங்காளி மற்றும்.. தமிழைத் தலைமையாக கொண்ட திராவிட மொழிகள் மட்டுமே வழக்கில் இருந்தது) புதிய மொழிவடிவை கொண்டுவந்தார்கள்.. உருதுவின் இலக்கணத்தையும்.. ஹிப்ளு மொழியின் உருவையும்..மற்றும் சமஸ்கிருத சொற்களையும் கலந்த ஒரு மொழி வடிவம்.. ஆங்கிலமெப்படி கிரேக்கமொழியின் இலக்கணத்தை கொண்டதோ அதைப்போல ஹிந்திக்கென்று இலக்கண வடிவம் இல்லை.. உருது இலக்கணத்தை கொண்டது ஹிந்திமொழி.. .. ஒரு மொழியின் முழுமை.. அல்லது கட்டமைப்பு ,செழுமை அதன் இலக்கணத்தில் இருக்கிறதென்றார்.. மொழியியல் ஆய்வாளரும் பேராசிரியருமான அலெக் கோலியர் .. மற்றொன்றும் சொன்னார்.. #உலக_வரலாற்றில் முதன் முதலாகத் தோன்றிய மொழியும், உலகம் தோன்றியதிலிருந்து வாழ்ந்த மக்கள் அனைவரும் பேசிய மொழி #தமிழ்மொழியே எனவும் சொன்னார்..அமெரிக்க மொழியியல் ஆய்வாளரும் பேராசிரியருமான அலெக் கோலியர் .. .. இந்திய போன்ற துணைக்கண்டத்தில் பல்வேறு இன மொழி கலாச்சாரங்களை கொண்ட ஒரு பன்முகதன்மை கொண்ட தேசத்தில் ஒருமொழியை மட்டும் முன்னெடுப்பதென்பது பிற மொழிகளின் மீதான தாக்குதல். பிற மொழிகளின் தொன்மையை சிதைக்கும் செயல்.. பலமொழிகளின் அறிவு தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் அது சம்பந்தப்பட்ட மாநிலத்தின்.. அங்குள்ள மக்களின் உணர்வுகளின் மீதான வாள்வீச்சாக இருக்ககூடாது.. நேரு காலம்தொட்டே ஊடகமொழியாக ஆங்கிலத்தை கொண்டிருக்கவேண்டுமென்ற தீர்மானம்.. ஒருமொழியை மட்டுமே முன்னெடுக்கிற .. பிற மொழிகளை பின்னுக்கு தள்ளும் அல்லது அழிக்க நினைக்கும் செயல் என்ற முடிவு எல்லா மொழிபேசும் மாநிலங்களும் சேர்ந்தெடுத்தது.. .. பாஜக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து செத்த சமஸ்கிருதத்தை திணிக்க பார்த்து அது முடியாமல் போய் யாருமே செவிமடுக்கவில்லையென்பது வேறுவிடயம்.. பலமொழி கலப்பான ஹிந்தியை கையிலெடுத்து பிறமொழி பேசும் மக்களிடையே திணிக்க பார்க்கிறது.. ஹிந்தியை அனுமதித்ததின் விளைவாக மராத்திய மொழி பேசும் மக்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் மும்பை போன்ற பெருநகரங்களில் வெகுவாக பாதிக்கப்பட்டது அதனால் மராத்திமொழிபேசுபவரை தவிர மற்றவர்கள் வெளியேற வேண்டுமென போராட்டமும் கலவரமும் வந்தது ..இதே போன்ற நிலைதான் ஹிந்தி பேசும் பிற மாநிலங்களிலும் நிகழ்ந்தது... புரிகிறமாதிரி சொல்லவேண்டுமெனில் உள்ளுர்காரன் பாதிக்கப்பட்டான்.. .. ஒருமொழியை கற்பதில் அறிந்துக்கொள்வதில் பிழையில்லை.. தேவைபடும் போது அது தானாகவே கற்றுக்கொள்ள போகிறார்கள் ஆனால் எந்தவொரு மொழியும் .. பிற மொழிபேசும் மக்களின் மீது திணிக்கப்படுவதென்பது..உச்சக்கட்ட அயோக்கியத்தனம்.. திணிக்கப்படும் மொழி எம் தமிழாய் இருந்தால் கூட.. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment