Sunday, April 16, 2017

நானெங்கே..

தேடுகிறேன்.. என்னையே நான்.. எங்கோ தொலைந்திருக்கவேண்டும் எங்கென்று தெரிந்தால் ஓடிப்போய்..எடுத்துவந்துவிடுவேன். .. எப்போது முதல் முதலில் பொய் பேசினேன் ‍. அப்போதா.. எப்போது.. மதி மயக்கத்தில் இருந்தேன்.. அப்போதா.. அம்மாவிற்கு தெரியாமல் அடுக்குபானையை உருட்டி கிடைத்ததை சுருட்டினேனே.. நட்போடு பழகியவனை.. நடுவில் கழட்டிவிட்டு.. நாவு கூசாமல் பழிச்சொன்னேனே அப்போதா.. .. எங்கோ தொலைந்திருக்கவேண்டும் எங்கென்றுதான் தெரியவில்லை.. .. நான் நானாக இல்லாமல்போன அந்த நொடிமுதல் பிணமாய் .. பங்காளியோடு பகைபாராட்டி.. பக்கத்துவீட்டுக்காரனோடு குரோதம் பொய்யாய் சிரித்து நிஜத்தில் நான் எங்கே.. .. பசித்தவனுக்கு உணவளிக்க சொன்னாள் தாய்.. பகைமை வெறு.. என்றாய் தந்தை பறவைக்கு சேர்த்துதான் விளைச்சல் என்றார்.. என் வீட்டு மூப்பர்.. உண்மை நிலைக்கும் என்றார் ஆசான்.. அறிவுக்கொண்டு பாரென்றார் ஆன்றோர்.. அடங்க பழகு என்றான்.. வழிப்போக்கன்.. முடியுமென்றால் மட்டும் வாக்குறுதி கொடு என்றாள் என் மூத்தவள்.. சிநேகத்தோடு பார்த்தான்.. என் தெருக்காரன்.. அன்பை காதலை.. விருப்பத்தை தந்தார் சுற்றியிருப்பவர்.. ஆனாலும் நான் எங்கோ.. தொலைந்தேன்.. .. நான் நானில்லை. நான் எனில்.. எங்கிருந்து வந்தது பொய்.. யார் சொல்லி தந்தது பழிவாங்கும்செயல் அடுத்தவன் நிலைநிறுப்பை கண்டு எங்ஙனம் வந்தது பொறாமை.. கூடவிருந்தே குழிப்பறிக்க யாரிடம் கற்றேன்.. நான் நானாக இல்லை.. .. என்னை என்னிலும் அதிகமாய் நேசித்த தாயோடு நான் சொன்ன முதல்பொய்யில் தொலைந்திருக்கவேண்டும்.. யார்கண்டார்.. எங்கோ.. தொலைந்திருக்கவேண்டும்.. .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment