Wednesday, April 5, 2017
கிரண்பேடி..
ரப்பர் ஸ்டாம்ப் போல் என்னால் இருக்கமுடியாது
புதுவை துணைநிலை ஆளுநர்.. கிரண்பேடி..
புதுச்சேரி மாநில நிலையை பெறாததால் தொடர்ந்து மத்திய அரசின் கீழ் செயல்பட வேண்டியிருக்கிறது.. ஆனால் இதுவரை இருந்த ஆளுநர்கள் அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டதில்லை. ஆனால் கிரண் பேடி தலையீடு அதிகரிப்பதுடன் அதை விளம்பரப்படுத்தி.. தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள முனைகிறார்.. டெல்லியில் கூட இந்த கூத்து நடந்தது மாநில (அந்தஸ்து ) தகுதிநிலையை பெற்ற பிறகும் கூட காவல்துறை அரசின் கட்டுபாட்டில் இல்லை டெல்லி தலைநகர் என்பதால் அதை கவனத்தில் கொள்ளலாம்..
..
கிரண் பேடி காவல் அதிகாரியாக இருக்கும் போதே தன்னை விளம்பரபிரியராகவே காட்டிக்கொண்டார்..முதல் ஐபிஎஸ் என்ற நிலையில் சில சவுகரியங்கள் அவருக்கு கிடைதத்தும் அதை தன் வளர்ச்சியின் நோக்கிற்கு வலுவாக பயன்படுத்திக்கொண்டவர்.. ஓய்விற்குப்பின் அண்ணாஹசாரேவோடு..ஊழல் எதிர்ப்பில் முன்னிலைப்படுத்தி பின் அர்விந்த் ஜெஸ்ரிவாலோடு ஏற்பட்ட பிணக்கம் டெல்லியில் முதல்வர் வேட்பாளராக நின்று தோற்று பாஜகவின் தயவில் கவர்னரானார்..
மக்களின் ஆதரவில் நின்று வென்று அதிகாரத்தை செலுத்தமுடியாததால் மறைவில் அமர்ந்துக்கொண்டு தேர்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டில் தலையிடுகிறார்..
..
தங்களுக்கு எதிரான அரசின் செயல்பாட்டில் தலையிடும் பாஜகவின் கொள்கையை .. தங்களுக்கு வழங்கி நிற்காத மக்களின் அரசை தங்களின் அசைவிற்கு தகுந்தாற்ப்போல் நடத்த எண்ணும் பாசிச சிந்தனையை நடப்பாக்க மத்திய பாஜக அரசு கிரண் போன்றவர்களை பயன்படுத்துகிறது.. எதற்கும் தலையாட்டும் அதிமுக அரசை கவனிக்க கூட கவர்னரை அனுப்பவதில்லை காரணம் இந்த அடிமைகள் தாமாக முன்வந்து பாஜக கேட்காமலேயே எதற்கும் தயாரென எழுந்துநிற்பார்கள்..
..
கிரண் அவர்களே..
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடுங்கள்.. கண்காணிக்க கூட அருகதையில்லை..மக்கள் பிரதத்துவ சட்டம் தெளிவாக சொல்லியிருக்கிறது..மக்களால் தேர்தெடுக்கபடுகிறவரே அதிகாரம் பெற்றவர்.. அவரை மாற்ற வேண்டுமெனில் மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்.. தலையீடு என்பது சரியான நெறிமுறையல்ல
இதுபோன்று தலையீடுகள் வரும் என்பததால்தான் அண்ணா அப்போதே சொன்னார்..
#ஆட்டுக்கு_தாடிஎதற்கு..
..
மக்கள் பிரதிநிதியை செயல்படவிடுங்கள்..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment