Monday, April 10, 2017

கருப்பா வெள்ளையா..

ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்.. டாக்டர் பாலாஜி ₹5 லட்சம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.. அதோடு அது டாக்டர் பீலேவிற்காக.. அவர் தங்கியகற்கு வாடகை கொடுக்கப்பட்டதாகவும். அப்போலோ அவரின் குடும்பத்தார் தங்கிய செலவை ஏற்க மறுத்ததால் தான் விஜயபாஸ்கரிடமே வாங்கியதாக சொல்கிறார்.. அதை ஏன் டாக்டர் பாலாஜி வாங்கவேண்டும் அதிமுக அலுவலக ஊழியர்களை கொண்டோ விஜயபாஸ்கரின் உதவியாளரை கொண்டே கட்டியிருக்கலாம்.. ஜெயலலிதாவின் மொத்த மருத்துவ செலவும் யார் செய்தார்கள் அவர்கள் ஏன் இந்த பணத்தை தரவில்லை.. நிறைய கேள்விகள் கூடவே வருகிறது.. .. ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது..அதிமுகவில் எல்லோருமே கோடிகளில் புரளுகிறார்கள்.. எங்கிருந்து வநிதது இந்த பணம்.. மூன்று லட்சத்திற்கு மேல் பணபரிவர்ததனை ரிசர்வ் வங்கி அறியாமல் நடக்க கூடாதென்ற விதிகள் இங்கே பொருந்தாதா.. என்பத்தொன்பது கோடி(₹89கோடி) எங்கிருந்து வந்தது.வங்கி அறியாமல் வந்ததெனில் அது கருப்புபணமல்லவா.. திரு.மோடி கருப்புபணத்தை ஒழித்துவிட்டேன் என்றாரே.. அப்படியெனில் அதிமுகவினரிடம் மட்டும் எப்படி கோடிகளில் பணம் சர்வசாதாரணமாக கைமாறுகிறது.. அதிமுக அமைச்சர்களிடம் உள்ள கணக்கில் வராத பணம் எப்போது வெள்ளையானது..இதற்கெல்லாம் மோடி பதில் தருவாரா.. விஜயபாஸ்கரிடமிருந்து பிரித்துக்கொடுக்கப்பட்ட பணம் .. கருப்பா வெள்ளையா.. தெரியவேண்டாமா.. ஒருவேளை குருமூர்த்தி வகையறாக்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா..கருப்பு வெள்ளையாகி விடுமா.. .. தேர்தல் தள்ளிவைப்பதனால் இவர்கள் ஒழுக்கமானவர்களாக ஏற்றுக்கொள்ள முடியுமா.. அமைச்சர் விஜய்பாஸ்கரே பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.. இனியும் என்ன தயக்கமென்று தெரியவில்லை.. மற்றொன்று உண்டு இதே ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவிற்காக பணம் கொடுத்தபோது தடையேதுமில்லை.. தஞ்சையிலும் அரவக்குறிச்சியிலும் திமுகவின் வெறறியை தடுத்ததைப்போல ஆர்.கே.நகரிலும் வெற்றியை தடுத்திருக்கிறது ஆணையம்.. திமுக பெருவாரியான வித்தியாசத்தில் வெல்லவதை விரும்பவில்லை .. .. இனியும் காலம்தாழ்த்தாமல் பொதுதேர்தலை நடத்த வழிவகை செய்யவேண்டும்.. முதல்வரே முன்னின்று வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை.. கனநொடி கூட முதல்வராக இருக்க தகுதியிழக்கிறார்.. எடப்பாடி.. .. #தமிழகஅரசை_கலைக்கவேண்டும்... .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment