Thursday, April 20, 2017
பன்னீரெனும் பரம அயோக்கியன்..
#பன்னீரெனும்_பரமஅயோக்கியன்..
..
அதிமுகவிற்குள் பன்னீர் எதிர்ப்பு வலுக்கிறது..
ஆம்..
எதிர்க்கிறவனை.. விட்டு ஓடுகிறவனை.. புறமிருந்து தாக்குகிறவனை .. கூட சிலநேரம் நம்பலாம் ....ஆனால்
கூழை கும்பிடுப்போட்டு நயவஞ்சகமாய் சிரிக்கிறவனை நம்பமுடியாது..
..
மிக மோசமான..அரசியல் அயோக்கியர் பன்னீர்..
கட்சி சார்ந்த நிலை ,கொள்கை, விருப்பம், என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு சாமானியனாக யோசித்து பாருங்கள்.. பன்னீர் தகுதியானவரா.. ஏன் பன்னீருக்கு முதல்வர் பதவிவழங்கவேண்டும்..
..
முதல்வராக இருந்தவர் கட்சிதலைமை ..மாண்புமிகு சின்னம்மா கேட்டுக்கொண்டதால் ராஜினாமா செய்தவர்..
அப்போது முடியாதென்று மறுத்திருந்தால் சுயபுத்தியில் செயல்படுகிறார் கொஞ்சம் மானத்தோடு நடந்துக்கொள்கிறார் என நம்பலாம்... முதலில் ராஜினாமா.. பிறகு பாஜக தூண்டுதலில் பேரில் தியானம் .. கட்சியை உடைத்து சின்னத்தை முடக்கி எல்லா வேலையும் செய்துவிட்டு உலகமகா உத்தமர் வேசம் போடுகிறார்.. சசிகலா காலில்விழுந்து முதல்வராக இருந்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனிய வைத்த அயோக்கியர்.. இன்று யோக்கியன் நானென்கிறார்.. ஒருகுடும்பத்திற்குள் அதிகாரம் செல்லகூடாதாம்.. அவரின் தம்பி மகன்கள் சம்பந்தி என கட்சியிலும்.. அரசுவழக்கறிஞர்களாகவும் ..கட்டபஞ்சாயத்திலும் கோலோச்சுகிறார்கள்..
..
அதிமுகவிற்குள் பாஜகவின் ஆதிக்கம் மட்டுமல்ல இப்போது நடந்துக்கொண்டிருப்பது சாதிய சண்டை..
கொங்கும் மறவரும் .. யாருக்கு அதிகாரமென்பதில் பகை கொள்கிறார்கள்.. கொங்கிலிருந்து அதிக உறுப்பினர்களை கொண்டிருப்பது.. மற்றொன்று
துரோகத்தால் முதுகில் குத்தி இனத்திற்குள் பிளவும்.. செய்வதறியாது முக்குலமும் .. ஒன்றை இருஅணியினருமே மறந்து போனார்கள்.. இருவருக்குமே வாய்ப்பு வழங்கியது A2 சசிகலாதான்..
பன்னீரின் திறமையை கண்டு வியந்து ஜெயலலிதா முதல்வர் பதவி தந்தது போல சிலர் பேசிவருகிறார்கள்.. சசிகலா தன் இனத்தை சேர்ந்தவர் என்பதாலும்.. தினகரனின் #கீழ்படிபவன் என்ற சான்றிதழுமே பன்னீருக்கு பதவி தந்ததே தவிர.. ஜெயலலிதா பிரியத்தின் பேரிலோ நல்ல நிர்வாகியென்றோ தரவில்லை.. பன்னீர் பெற்ற எல்லா சலுகையும் பொறுப்பும் சசிகலா தயவில் என்பதுதான் உண்மை..
கடைசியில் குலத்தை கெடுக்கவந்த கோடாரியாய் மாறினார்..
..
உண்மையில் ஜெயலலிதா மரணம் பற்றிய எல்லா உண்மைகள் தெரிந்தும் .. பதவியில் இருந்தபோது.. எதுவும் கசியாமல் பார்த்துக்கொண்டவர்.. தமிழக அரசியல் கண்ட மிக அயோக்கியத்தனமான கேடுக்கெட்ட அரசியல்வாதி பன்னீர்தான்.. அதிமுக அறிவிலிகளின் கூடாரம் என்றாலும் இப்போது துரோகிகளால் சிதறுண்டு கிடக்கிறது.. துரோகத்தால் விளைந்தது துரோகத்தால் அழிகிறது..
#காலம்தந்த_தீர்ப்பு..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment