Monday, April 17, 2017

கேடிகெட்டவர்கள்

அதிகாரமும் ஆதிக்கமும் கை மாறலாம்.. வரும் செய்திகள் அப்படிதான் சொல்கிறது..அதிமுக எனும் கட்சியை தன் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது பாஜக.. தினகரன் இலைக்காக காசு கொடுத்தாரென டெல்லி வழக்கு பதிவு செய்யும் போதே நமக்கு பிடி கிட்டுகிறது.. .. எப்போதும் நேரடியாக களம்காண முடியாது என்பதால்.எந்த காலத்திலும் அது சாத்தியமில்லை என்பதால் அதிமுகவை சிதைத்து அதன் மீறி ஏறியமர்ந்து கோலோச்சலாம் என்ற ஆசையும் திட்டமும் சிறிதுசிறதாய் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.. பணம் கொடுத்து இலையை பெற முயற்சித்தார் என்ற குற்றசாட்டு உண்மையெனில்.. தேர்தல் ஆணையம் பணம் வாங்கும் என்பதும் உண்மையா.. தேர்தல் ஆணையத்தை அதிகாரம் பணபலத்தால் வளைத்தொடிக்க முடியுமென்பதும்..ஆளும்கட்சிக்கு சாதாகமான முடிவை எடுக்க ஆணையம் பயன்படுமென்பதும் .. நேர்மையான தேர்தலை அது நடத்தாது வேண்டியவர்களுக்காக வளைந்து நெளியுமென்பது தானே உண்மை.. .. உண்மையில் வெட்கப்படவேண்டாமா.. தினகரன் அயோக்கியராக.. மிக மோசமான மாபியா கும்பலாகவே இருக்கட்டும் அவரால் இந்திய அரசை .. அரசு நிர்வாகத்தை ,தனிஅதிகாரம் கொண்ட அமைப்பை.. வாங்க கூடிய அளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது.. கருப்புபணத்தை ஒழித்ததாக சொல்லும் மோடி ..மொத்த பணத்தையும் தினகரனிடம் விட்டுவைத்தாரா.. இடைத்தேர்தலுக்காக ₹89 கோடி செலவு செய்கிற கட்சியை அதன் ஆட்சியை ஏன் இன்னும் விட்டுவைத்திருக்கவேண்டும்.. எதை எதிர்பார்க்கிறது.. குரங்கை கட்டுபாட்டில் வைத்து கரணம் போட சொல்லும் வித்தையைப்போல தன் சொல்லிற்கேற்க ஆடும் அரசை நிறுவ முயல்கிறதா.. இதுதான் ஜனநாயகமா.. .. எங்கும் பணம்..எதற்கும் ஒரு விலை..என்றியங்கும் இந்த அரசை நீங்குவதுதானே முறை..எந்த காலத்தில் தமிழகத்தில் நேரடியாக மக்களை சந்தித்து வெற்றி பெற முடியாதென்பதால்..இருக்கிற காலம்வரை பினாமி ஆட்சியை நடத்த அல்லது பொம்மை அரசை இயக்க பாஜக முடிவு செய்திருக்கிறதா.. ஒராண்டுக்குள் எத்தனை முதல்வர்களை மாற்றுவார்கள்..அது சரியான நிர்வாகத்தை தருமா.. இனியும் காலம் தாழ்த்தாமல்... தேர்தலை நோக்கி தமிழகத்தை நகர்த்துவதுதான் சிறந்தது.. இல்லையெனில் ஜனாதிபதி தேர்தல் வரை வைத்திருக்கலாமென்றால்.. அது மீண்டும் மீண்டும் நிறைய வழிகேடுகளைுக்கே வழிவகை செய்யும்.. அரசை மட்டும் கலைத்துவிட்டு.. ஜனாதிபதி தேர்தல்வரை சட்டமன்றத்தை வைத்திருக்கலாம் அப்போது வாக்களிக்கும் உரிமையை உறுப்பினர்கள் பெறுவார்கள்.. த .. அதிமுகவே ..மத்திய அரசின் காலடியில் காலில் விழுவது அதிமுக நிறுவனர் மகோரா தொடங்கிவைத்ததுதானே.. இப்போது மொத்தமாய் வீழ்ந்து கிடக்கிறார்கள்.. அதிகாரம் கைவிட்டு போய்விட கூடாதென்பதற்காக.. கேவலம்.. .. இனி ஆட்சியை தொடர்வதென்பது #ஜனநாயக_கேலிக்கூத்து_Democratic_farce.. .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment