Tuesday, April 11, 2017
தேமுதிக..
தேமுதிகவில் ஒருகோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.. திருமதி பிரேமலதா விஜயகாந்த்
ஒருவேளை.. வார்த்தை தவறி சொல்லி விட்டாரோ.. எழுத்துப்பிழையோ..
ஐம்பதாண்டு கண்ட திமுகவில் கூட 90 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.. எப்போதும்போல் பொய்பேசும் அதிமுக ஒன்னரை கோடி என்கிறது.. ஆனால் சரியாக தேர்தல் ஆணையத்தில் பதிவில் சொன்னது. 68 லட்சம் பேர்..அதெப்படி தேமுதிகவிற்கு ஒருகோடி பேர்..
சிரிப்பதற்காக சொல்லியிருந்தால் சரி..
..
இது எப்படியிருக்கிறது தெரியுமா.. சாதி சங்கங்கள் எங்கள் சாதியினர் 1கோடி பேர் இருக்கிறார்கள் ஒன்னரைக்கோடி இருக்கிறார்கள் ஆளாளுக்கு கணக்கு சொல்வார்கள் மொத்தம் கூட்டி பார்த்தால் 15 கோடி தமிழக மக்கள் என வரும்.. காசா பணமா..சொல்லவேண்டியதுதானே..
..
சிலநேரத்தில் இவர் மீது மதிப்பு தோன்றும் உடல்நலியுற்று இருக்கும் கணவரை தாக்கிபிடிக்கும் இவரது செயல் .. கட்சியை கலைக்கவும் முடியாமல்.. கட்சி நடத்த கணவருக்கு தெரியாமல் ..அதற்கு உடலும் வழங்காமல்.. இவர்படும்பாடு பாவம்..
அரசியல் என்னவென்றே தெரியாமல் சட்டென்று யோசிக்காமல் ஒரு நாளில் திடீரென்று கட்சி ஆரம்பித்து கொள்கையோ திட்டமோ எதுவும் இல்லாமல் நடித்துக்கொண்டிருந்த போது கொஞ்சம் இருந்த ரசிகர்களை துணைக்கொண்டு ரசிகமன்ற நிர்வாகிகளை இணைத்து கொண்டு அரசியல் செய்யவந்தார்.. அரசியல் வேறுமாதிரி இருக்குமென அறியாமல்..
..
தமிழக வரலாறு தெரியாமல்.. திடீரென தோன்றுகிற இயக்கங்கள்/கட்சிகள் காணாமல் போய்விடுமென அறியாமல்.. எதற்காக மக்கள் ஆதரிக்கவேண்டுமென விளக்க ஒருகாரணமும் இல்லாமல் ஏதோ திடீரென ஒருகட்சியெல்லாம் ஆரம்பித்தால் இப்படிதான் போகும்..
இப்போது ஏதோ சொல்ல வருகிறார்.. நீட்தேர்வு தேவை விவசாயிகள் போராடுவது தவறு.. இப்போது கூட தமிழக மக்களின் எண்ணவோட்டம் அறியாமல் இருக்கிறார்..
இருப்பதை காப்பாற்றிக்கொள்ள கட்சி ஆரம்பித்தால் வாசன் நிலைதான் வரும்.. கடைசியில் யாரும் சீந்துவாரின்றி..
..
வேசம் கட்டி..அரிதாரம் பூசினால்.... அந்திபோனால் களைத்துதான் தீரவேண்டும்..
தேமுதிகவும்..வேசம்கட்டிய கட்சிதான்..காட்சி முடிந்தததால்..
..
அப்ப அந்த ஒரு கோடி ..
#பாவம்_பொய்சொல்லியிருக்கு..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment