Saturday, April 29, 2017

கிறுக்கர்கள்..

இன்னும் 50 ஆண்டுகளுக்கு அதிமுகதான் ஆட்சிசெய்யும் செங்கோட்டையன்.. தமிழகத்தில் பாஜக நுழையும் தாமரை மலரும்.. இப்போது தேர்தல் நடத்தினால் அன்புமணி முதல்வராவாரென மோடிக்கு தெரியும்.. என் திறமையை கண்டு உலகமே வியக்கிறது.. தெர்மாகோல் அமைச்சர்.. செல்லூர் ராஜூ.. அய்யாகண்ணு அப்சல்குருவின் ஆள்.. அவரே தான் பாப்பாரா .. நிர்மலா சீதாராமன்.. அதிமுகவை உடைக்க நினைக்கும் திமுக மீது அதிமுக வழக்கு போடலாம்.. பொன்னர்.. .. இவர்களெல்லாம் பதவியில் இருக்கிறார்கள்.. கட்சி நடத்துகிறார்கள் அடிப்படை நாகரீகம் கூட தெரியாத வாய்க்கு வந்ததை பேசி திரிகிறார்கள்.. பொழுதுபோக்கிற்காக அரசியல் செய்கிறவர்கள் கொஞ்சம் சுயபுத்தியோடு பேசுவார்கள். ஆனால் இங்கே ஒரே பைத்தியகாரர்களின் கூச்சலாக இருக்கிறது.. முதலில் தன்நிலை உணரவேண்டும் தங்களின் பலமென்ன .. எவ்வளவு செல்வாக்கோடிருக்கிறோமென்று அறிந்திருக்கவேண்டும்.. கொள்ளைப்புற அரசியல் நீண்ட நாள் நிலைத்ததில்லை.. இன்னும் வாய்ப்பிருக்கிறது ஆள்வதற்கு என்ற ஒரு காரணத்திற்காக அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாய் ஆசைகாட்டியும்.பயமுறுத்தியும் பாஜக செய்யும் லீலைகள் அறியாமல் இல்லை.. ஒரு நொடியில் இல்லாதாக்க முடியுமென்கிற நிலையிலும் விட்டுவைத்திருப்பதன் நோக்கம்.. நேர்மையான வழியில் வெற்றி என்ற ஒற்றை சிந்தனையும் அந்த இலக்கை நோக்கிய பயணமும்தான்..இல்லையென்றால் இந்நேரம் கதை முடிக்கப்பட்டிருக்கும்.. .. சிலர் சுயம் மறந்து தங்களின் கடந்தகாலத்தில் மாறி மாறி புகழ்ந்து நிலைநிறுப்பை காத்த வரலாற்றை மறந்து எல்லாம் அறிந்தவரைப்போல பேசிதிரியும் சாதீய நிழலில் நின்று கதைப்போரை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்தார்கள்.. நேற்று பேசியதை இன்று மாற்றி பேசும் .. உடல்மொழியிலும் வார்த்தை வடிவிலும் ஆணவத்தோடு பேசி திரியும் அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற திமிரில் பேசும் நிர்மலா பொன்னர் .. மரியாதை தெரியாமல் எதிர்ப்போரை தேசதுரோகியாக்கும் ராசா போன்றவர்கள்.. எம்மக்களால் ஏற்றுக்கொள்ளாதவர்கள்.. இடையிடையே நம்ம பங்காளிகள் .. புத்தியே இல்லாமல் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பது.. இதைவிட கொடுமை நடுநிலையாளர்கள்..? போர்வையில் உலவும் சமூககெடுதிகள்.. .. உண்மையில் இவர்களுக்கு திமுக மீதான பயம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.. மாவட்ட செயலர் கூட்டம் நடந்தவுடன் இவர்கள் அதிகமாக பதறுகிறார்கள் .. மக்கள் மிக தெளிவாக திமுகமீதும் தளபதி அவர்கள் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை கண்டு எரிச்சலடைகிறார்கள்.. இவர்கள் வருங்காலங்களில் முகவரி தொலைந்தவர்களாக உலாவருவார்கள்.. இவர்களின் பேச்சும் செயலும் இவர்களின் இயலாமையிலும் பேராசையிலும் வருகிறது.. தமிழகத்திலிருந்து துடைத்தெறியபடுவார்கள்.. .. #துடைத்தெறியப்படவேண்டும் .. தோழர் ஆலஞ்சி ..

No comments:

Post a Comment