Thursday, April 13, 2017

பகிரங்கமாகவே..

பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறேன்.. தலைவரும் இனமான பேராசிரியரும் மிக தெளிவாக.. வெளிப்படையாக.. கழகத்தின் வருங்காலத்தை தீர்மானித்து சொல்லிவிட்ட பிறகும்.. சிலர் வேண்டுமென்றே கனிமொழியை உள்ளே இழுத்து அரசியல் செய்கிறார்கள்.. இதன் பின்னில் யார் இருந்தாலும் அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் கடுகளவும் இந்த இயக்கத்தின் செயல்பாட்டை ,தளபதி தலைமையில் கழகம் ஆளபோவதை தடுத்துவிட முடியாது.. .. கோவை ஜோசியர் சொன்னராம்.. கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாதகம் பிரத்தியேகமான அமைப்பைக் கொண்டது. அவர் முதல்வராவார் என்று சொன்னதாக .. யாரை.. கடவுள் நம்பிக்கையற்ற கனிமொழியை.. மூடநம்பிக்கைகளை விரும்பாத ஜோசியத்தை நம்பாதவரை .. அதே ஜோசியத்தின் பெயர் சொல்லி பிரித்தாள முயற்சிக்கிறார்கள்.. ஏற்கனவே இப்படிதான்.. அழகிரியை உசுப்பிவிட்டு இருக்குமிடம் தெரியாமல் ஆக்கினார்கள். இப்போது கனிமொழி.. .. சில நாடார் அமைப்பை சேர்ந்தவர்கள்.. கனிமொழி தாயார் மொழிகேட்டு வழிகெடுக்க முயல்கிறார்கள் .. எச்சரிக்கை.. இயக்கம் சட்டென்று தலைமை பொறுப்பை தூக்கி திரு.ஸ்டாலினிடம் தந்துவிடவில்லை.. நீண்டநெடிய பயிற்சிக்குப்பின். ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து.. சரியான நேரத்தில் கழகத்தின் /இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்த தளபதியை தேர்வு செய்திருக்கிறது.. உள்ளிருந்தும் புறமிருந்தும் நிறைய எதிர்ப்புகள் குழிதோண்டல்கள்.. புறமிருந்து தாக்குதல்.. கூட இருந்தே குழிப்பறித்தசெயல்.. இவையெல்லாம் கடந்துதான் தளபதி செயல்தலைவராகி இருக்கிறார்.. .. கழகத்தை அதன் வெற்றியை தடுத்திட அதை பலவீனப்படுத்த நிறைய உக்திகளையெல்லாம் கையாண்டு எதுவும் நிறைவேறாமல் போய்.. அண்ணனை கொம்பு சீவி அதுவும் நடக்காமல் போய் இப்போது தங்கையை ..முன்னெடுக்கிறார்கள்.. சாதிய பாசம் கொண்டு நயவஞ்சகமாய் பேசிவருகிறார்கள்.. கனிமொழியே விரும்பாத ஒன்றை ..ஏற்கனவே முடிவான ஒன்றை இவர்களிடம் கபடநாடகத்தால் நடத்திவிட நினைக்கிறார்கள் ஏமாந்து போவார்கள்.. .. கலைஞரின் மொழியில் சொன்னால்.. தளபதி.. தென்றலை தீண்டியதில்லை.. தீயை தாண்டிவந்திருக்கிறார்.. தீயில் வெந்தால் தான் #பொன்கூட ஜொலிக்கும் நகையாகும்.. எங்கள் தளபதி.. எல்லோரும் விரும்பும் மாசற்றவர்.. வருங்கால தமிழகத்தின்..விடிவெள்ளி.. தமிழகம் நம்பும் ஒரே தலைவர்.. .. #எதிரிகளும்_துரோகிகளும்_வாய்மூடிஇருக்கவும்.. .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment