Sunday, April 9, 2017

தீதும் நன்றும்..

தடம் மாறுகிறது இஸ்லாமிய இயக்கங்கள்.. கொள்கை சமூகநலன் சார்ந்து நின்றாலும் இந்த சமுதாய மக்களின் உணர்வுகளின் மீதான பயணம் சற்று தடுமாறி தரிக்கெட்டு போகிறதென்று படுகிறது.. .. நாடே எதிர்க்கிற ஒருவருக்காக தங்களின் வழிசுவடுகளை சேதபடுத்தி.. மக்கள் முன் தலைகுனிந்து நிற்கிறார்கள்.. .. திமுகவை ஆதரிக்கவில்லை என்பதற்காக அல்ல இந்த பதிவு.. ஆதரவையும் எதிர்ப்பையும் மாறி மாறி தந்திருக்கிறீர்கள் .. அது தங்களுக்குள் வந்த அதிகார போட்டியில் எதிரெதிராய் களம் காண வேண்டிய நிர்பந்தத்தினாலேயே தவிர.. வேறில்லை என்பதையும் நாம் அறிவோம்.. ஆனால் இப்போது நடப்பது கேடுகெட்ட செயலாய்.. ஒட்டுமொத்த தமிழகமும் வெறுக்கிற ஒருவரை ஆதரிக்க முடிகிறதென்பதிலேயே நம்பகதன்மை அடிபட்டுப்போகிறது.. ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சமுதாய மக்களின் எண்ன உணர்வுகளை புறந்தள்ளி தங்கள் முகம் மட்டுமே மிளிர செய்து தொலைக்கும் காரியங்கள்.. காலம் கடந்து கேலி பேசும் என்பதை உணராமல் போனதேன்.. .. அரசியலில் நிலைநிற்பும்.. வாய்ப்பை வழங்காமல் கழட்டிவிட்ட கட்சியை எதிரியாக பார்ப்பது கூட சரிதான். எதிரியை சமயம் பார்த்து திணற வைக்கவேண்டுமென்பதும் எதிர்ப்பை கடுமையாக்க வேண்டுமென்பதும் கூட சரிதான் ஆனால் யார் எதிரி என்பதை தெரிவு செய்வதில் தான் பிழைகள் நடக்கிறது.. பரம வைரி பாஜக பலம் பெற கூடாதென்பதால் ஆதரிப்பதாக சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை.. அதிமுக அம்மா கட்சியை ஆதரிப்பதற்கு.. நிறைய காரணம் சொன்னாலும்.. அவையெல்லாம் சாமானியர்களிடம் .. எந்த கட்சியையும் சாராத.. நடுநிலையாக யாரும் இருக்க முடியாது ஏதோவொரு கொள்கையில் கோட்பாட்டில் தம்மை இணைத்துக்கொண்டே அல்லது கவரப்பட்டோ இருப்பர் ஆனாலும் சோதனையாக/இக்கட்டான காலக்கட்டத்தில் சரியான முடிவை எடுப்பார்கள்..அப்படிப்பட்ட சாமானியர்கள் கூட முகம் சுளிக்கிறார்கள்.. .. நல்லதை செய்யாவிடினும் கெட்டதை தாங்கிப்பிடிக்காமல் இருந்திருக்கலாம்.. இது காலம் கடந்தும் பேசப்படும்.. #வரலாற்றுப்பிழை.. #தீதும்நன்றும்பிறர்தரவாரா.. .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment