Thursday, April 27, 2017
வைகோ வெத்துவேட்டு
முழுஅடைப்பு வெற்றிதான்..
அதற்கு ஸ்டாலின் காரணமில்லை வைகோ..
இதற்கு பெயர்தான் வன்மம்..
வைகோவின் இயலாமையில் வந்த வார்த்தை என்று கருதமுடியாது நீண்டநாள் மனதில் வன்மத்தோடும் பகையோடும் திரிகிறவரிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகள் தான் வரும்..
..
செய்வதறியாது நிற்கிறவனின் செயல்பாடு இங்கே இவர் மீது பாவம் தோன்றவில்லை எல்லாம் தன்னால் வந்தது பிறரால் அல்ல என்பதை உணராத வரை வைகோவின் நிலை இன்னும் பரிதாபகரமாகதான் போகும்.. தேசதுரோக வழக்கு 2009 ல் தொடரப்பட்டது இதுவரை அதை கண்டுக்கொள்ளாமல் இப்போது அதை எடுத்து கவனத்தை ஈர்க்கலாம் என்றெண்ணியது அவருக்கு கெடுதியாக வந்துநிற்கிறது.. யாரும் கண்டுக்கொள்ளவில்லை பெட்டி செய்தியாக கூட செய்திதாள்களில் இடம்பெறவில்லை தமிழக மற்றொரு விடயத்தில் கவனத்தை திசைதிருப்ப அரசியலில் காணமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெறும் நிலைக்கு வந்துவிட்டார்..
..
இடையிடையே வந்து திமுகவை வசைபாடி .. மக்களின் பார்வை கிடைக்குமென நினைத்து கடைசியில் மக்களின் கோவத்திற்கு ஆளாகிறார்.. எதை எப்போது எப்படி செய்யவேண்டுமென்று அறியாததால் தெருவில் அலையும் மனநிலை பாதித்தவரைப்போல மைக் கிடைத்தால் கத்துவதையும் .. ஐம்பது வருட நாடாளுமன்றவாதி என சொல்லி சொல்லியே கடைசியில் யாரும் கண்டுக்கொள்ள மறுப்பதால் கோவம் தலைக்கேறி எதை பேசுகிறோம் என்றே தெரியாமல் எதைஎதையோ உளறிவருகிறார்..
..
விவசாயிகள் டெல்லி போராட்டத்தில் கூட அரியானா விவசாயிகள் கலந்துக்கொண்டால்நான் எழுந்து போய்விடுவேன் என்று சொல்லி அவர்கள் தாமாக முன்வந்து ஆதரவு தருகிறார்கள் என்ற போது நான் 52 வருட பாராளுமன்றவாதி எனக்கு எல்லாம் தெரியும் என கூச்சலிட்டு யாரும் எந்த விவசாயிகளும் செவிசாய்க்காததால் வெளியேறினார்..
இவர்தான் வைகோ..
அவசரக்குடுக்கை, நிதானமின்மை தெளிவோடு கூடிய செயலின்மை நெஞ்சில் வன்மம்... இயலாமையில் வரும் விரக்தி, அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைமைபண்பின்மை .. மொத்தத்தில் தெளிவின்மை..
ஒரே வரியில் சொல்லவேண்டுமெனில்.
#வெத்துவேட்டு..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment