Tuesday, April 25, 2017
பெரியார் தேசமிது
பெரியார் தேசமிது தோழர் ஆலஞ்சி
பெரியார் சிலையின் பீடங்களில் இருக்கும் வாசகங்களை அழிக்க வேண்டும். - ராமகோபாலன். திராவிடத்தை ஒழிக்கப்பட வேண்டிய நேரம் வந்தாயிற்று எச்.ராசா.. .. பெரியாரை,பெரியாரிய கருத்துக்களை மீறிய எதுவும் அவ்வளவு எளிதில் தமிழகத்தில் சாத்தியமில்லை இதை மகோராவும்(எம்ஜிஆர்) ஜெயலலிதாவும் அறிந்திருந்ததால்தால் மிதவாதிகளை போல #நடித்தார்கள் இல்லையேல் அவர்களின் முகம் வெளிறிப்போயிருக்கும்.. கடவுள் மறுப்பு வாசகத்தை அழிக்கவேண்டும் என்கிற ராமகோபலனே.. பெரியார் கடுமையாக எதிர்த்த தேவதாசிமுறை,பால்யவிவாகம் தீண்டாமை தாலிஅறுத்தால் மொட்டையடிக்கவேண்டும் எனச்சொல்லிப் பாருங்கள்.. உங்கள் வீட்டுப்பெண்களே விளக்காமாறை தூக்குவார்கள்.. ..
நிறையபேர் பெரியாரை தவிர்த்து திமுகவை கொண்டாடுகிறார்கள் சில திமுக பதிவர்கள் (பெயரில் இருப்பவர்கள்) கூட ..நிச்சயமாக அவர்கள் திமுக கொள்கையாளர்கள் இல்லை மிதவாதிகள் எனும் போர்வையில் உளவும் பாசிசவாதிகள்.. பெரியாரை மீறிய தமிழகமோ திராவிடமோ திமுகவோ இல்லை.. என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.. .. மறைமுக காய்நகர்த்தல்களை அறியாமல் இல்லை கிரிஜா முதல் புதிய கவர்னர் வரை .. இது நீண்டகாலம் நீடிக்காதென்பது என்னதான் குறுக்குவழியில் தங்கள் செயல்திட்டங்களை கொண்டுவந்தாலும் தேர்தலுக்கு பிறகு துடைத்தெறியப்படும்.. அதனால்தான் மிக கவனமாக செயல்படுகிறார்கள்.
தமிழக மக்களின் உணர்வோடு கலந்துவிட்டதால்தான் சீமான் போன்றவர்கள் கூட திரும்பவும் பெரியாரை உயர்த்திபிடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.. ராமகோபாலன் வகையறாக்கள் ஒன்றை உணர்ந்துக்கொள்வது நல்லது .. கடலூர் கூட்டத்தில் செருப்புவீசினார்கள் செருப்பு வீசிய இடத்தில் பெரியாரின் சிலையை நிறுவினார் கலைஞர்.. செருப்பிற்கு ஒரு சிலை வருமென்றான் கவிஞன்.. எச்சரிக்கை.. .. அறிவிலிகளே புரிந்துக்கொள்ளுங்கள்.. அச்சமறியாத திராவிடர் பூமி.. #பெரியாரின்_தேசமிது.. ..
http://mansoorspm.blogspot.in/2016/12/blog-post_30.html?m=1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment