Friday, April 7, 2017
ரெய்டு
#ரெய்டு..
இதொன்றும் புதிதல்ல..
புதிய புதிய உக்திகளை கையாண்டு பண விநியோகம் .. பேருந்து நடத்துனரிடம் பெற்றுக்கொள்ளலாம்.. என்கிற நிலை.. அமைச்சர்கள் விஜயபாஸ்கர்..,
ராஜேந்திர பாலாஜி.. இதில் விஜயபாஸ்கரின் உதவியாளர் நயினார் வீட்டில் 2.2 கோடி பறிமுதல்.. விஜயபாஸ்கரின் குவாரியில் முக்கிய ஆவணங்கள்..
விஜயபாஸ்கர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது சரத்குமாருக்கு எவ்வளவு கொடுத்தீர்கள் என கேடடாரகள் என்கிறார்
ராதிகா கணவர் வீட்டிலும் ரெய்டு..
அதைவிட அமைச்சர்வீட்டில் ரெய்டின் போது பாதுகாவலுக்கு வந்த துணைராணுவத்திரையே சுட்டுவிடுவோம் என எச்சரிக்கிற நிலையில் தமிழக சட்டஒழுங்கு இருக்கிறது.. அந்த அளவிற்கு பலம் பொருந்தியவர்களா தினகரனின் ஆட்கள்..
..
எப்படியும் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக பணத்தை கொட்டுகிறார்கள்.. நேற்றைய தினம் தினகரன் அணியை சேர்ந்த (மகளிர் அணி) தன் ஆடையை கலைந்து தமிழகத்தை அசிங்கப்படுத்தியது
நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் ..என்ற அச்சம் வருகிறது.. பணத்தை கேட்டுபெறும் அவலம்.. ஏழைகள் அல்ல நடுத்தர மக்களிடையே கூட இன்னும் சொல்லப்போனால் உயர்ந்தவர் என தங்களை சொல்லிக்கொள்பவர்களிடம் கூட.. இது அசிங்கம் என்று தெரிந்தும் சர்வசாதாரணமாய் மனநிலை மாறியிருக்கிறது குற்றபோதமே இல்லாமல் கை நீட்டி வாங்குகிறார்கள்.. வாங்குபவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மற்றவர்கள் அஞ்சும்நிலை வரும்..
..
கோடிக்கணக்கில் பணம் எங்கிருந்து வந்தது..நேற்று சந்தித்து சரத்குமார் நாடாரின் வாக்குகளை பெற்று தருவதாக கூறி பெருந்தொகை தினகரனிடம் வாங்கியதாக சொல்லபடுகிறது.. வெட்கமே இல்லாமல் இவர்களையும் புனிதர்களாக்கும் செயலை ஊடகங்கள் செய்யும்..
மற்றொரு விடயமும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.. தேர்தல் நேரத்தில் ரெய்டு செய்து மாநில கட்சிகளை சங்கடத்திற்கு உள்ளாக்கும் செயலை தொடர்ந்து பாஜக அரசு எல்லா மாநிலங்களிலும் செய்துவருவதை கடந்து செல்ல இயலாது. ஆனாலும் இந்த தேர்தலில் பணம் எந்தளவிற்கு புழக்கத்தில் என்பதையும் வாக்கை நேரடியாகவே விலைபேசும் அவலத்தையும் அப்படியே விட்டுவிட இயலாது..
..
இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகரில் பணத்தோடும் பிணத்தோடும் சுற்றிவரும் நாய்கள் தொல்லை..இந்த வெறிநாய்களை அடித்துவிரட்டவேண்டும்.. பிணத்தை காட்டியும் பணத்தை எறிந்தும் மக்களை எதோவொரு வகையில் ஏமாற்றி அதிகாரத்தையும் பலத்தையும் கூட்டிக்கொள்ள இவர்கள் நடத்தும் அநாகரீக செயல்கள் ஜனநாயகத்தை வேரோடு வெட்டிசாய்க்கிற செயல்.
..
அமைச்சர் ஒருவரின் வீட்டிலும் சொந்தமான இடங்களிலும் உதவியாளர் இல்லத்திலும் சோதனையிட்டிருக்கிறார் உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்.. என்று மாண்பிமை எதிர்க்கட்சி தலைவர் #தளபதிஸ்டாலின் கோருகிறார்.. ஆம்..
இவரை உடனடியாக நீக்கவேண்டும் அதோடு.. எந்த அதிகாகத்தை பயன்படுத்தி சாதித்துவிடலாமென எண்ணுகிறார்களோ அதை இல்லாததாக செய்யவேண்டும்..
disolve the government..அரசாங்கத்தை கலைத்துவிடலாம்..
அதுதான் சரி.. நல்ல ஜனநாயகத்தை நிலைநாட்ட அதுதான் கடைசி ஆயுதம்.. ஆளுநர் ஆட்சியில் பொதுதேர்தலை சந்திக்கலாம்.. மக்கள் விரும்புகிறவர்கள் வரட்டும்..
..
#Disolve_the_Government…
..
தோழர் ஆலஞ்சி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment