Friday, April 14, 2017

அரசியல் பிழைகள்

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட திமுகவுக்கு அருகதை கிடையாது : தமிழிசை தமிழக அரசியல் வரலாற்றிலேயே அதிக 89 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி திமுகதான்...இன்றைய தேதியில் வார்டு கவுன்சிலர் கூட இல்லாத பாஜக சொல்கிறது அருகதையில்லை.. .. அருகதை என்ற வார்த்தை இப்போதெல்லாம் #அருகதையே இல்லாதவர்கள் அடிக்கடி உபயோகிக்கிற வார்த்தையாகிப்போனது.. யாரிந்த தமிழிசை.. எச்.ராசா அமர்ந்திருந்தால் கூட ஓரமாக உட்காரவைக்கப்படுகிறவர்.. சுயமரியாதை என்னவென்றே தெரியாத சுயம் தெரியாத எதையாவது ஏடாகூடமாக பேசிவருவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.. பார்பனர்கள் மிக தெளிவாக இவரை போன்றவரை முதலில் இறக்கி ஆழம்பார்பார்கள்.. இப்படிப்பட்ட உளறல்களையெல்லாம்.. நாங்கள் செய்யமாட்டோம்.. நாங்கள் அறிவாளிகள்..இதெல்லாம் இடைசாதி சூத்திரர்கள் அறிவின்மையால் பேசியது என்கிற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.. அதுதான் பொன்னரின்/தமிழிசையின் பேச்சும் செயலும்.. .. திராவிட கொள்கைகள் அறிவை மழுங்க செய்யும் என்கிறார்.. யார் சங்கராச்சாரியாரோடு சரிசமமாக நாற்காலியில் அமர முடியாத உணர்வற்று காலடியில் கிடகிகும் பிண்டம் சொல்கிறது.. அறிவை மழுங்க செய்யும்.. எல்லோருக்கும் சரிசமமான உரிமை கேட்பது.. வேலைக்கு செல்லும் பெண்களை விபசாரி என்ற காஞ்சி பெரியவரின் கூற்றை மறுத்து வேலைக்கு சென்று சம்பாதியுங்கள் அது (பெண்களின்) உங்களின் எதிர்காலத்திற்கு நல்லது..அது நம்பிக்கையை தரும். ஆண்,பெண் இருபாலாரும் படியுங்கள் அப்போதுதான் உலகம் புரியும் ..தீண்டதகாதவன் என்று யாருமில்லை அது பார்பனர்கள் செய்த துரோகம்.. வர்ணா சொல்லி பிரித்து அவன் மட்டும் குளிரிகாய்கிறான்.. உனக்கான உரிமையை அவன் எடுத்துக்கொண்டு எங்கிருந்தோ வந்தவன் உன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான்.. சாதி,மதம் எனச்சொல்லி ஏற்றதாழ்வை உண்டாக்கி உன்னை எழவிடாமல் கால்கொண்டு அழுத்தி நிற்கிறான் என... சொல்லி உன்னை சிந்திக்க சொன்ன திராவிடம் எப்படி மழுங்க செய்யும்.. .. மதம் தலைக்கேறினால்..அறிவு மழுங்கும் அறிவு மழுங்கினால் உண்மை தெரியாமல் ஏதையாவது பேச சொல்லும்..மானம் கெட்டு மதிகெட்டு திரிவோரை.. என்ன சொன்னாலும் அவர்களுக்கு உரைக்காது..மதம் என்ற பெயரில் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்..இவர்களை சிந்திக்க விடாமலே வைத்திருப்பதில்தான் பாசிசத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது..தோள் சீலை போராட்டம் செய்து மானத்தை காத்துக்கொண்ட சமூகத்திலிருந்து.. அறிவின் நிழலில் கோலோச்சும் சமூகத்திலிருநிது சில #பிழைகள்.. .. வேறென்ன சொல்ல.. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment