Friday, April 14, 2017

தலித் எனும் சொல்

தலித் சமூகம்.. இன்றும் ..விடுதலை கிடைத்து இவ்வளவுகாலம் பின்னிட்டும் ஒடுக்கப்பட்ட சமூகமாகதான் இருக்கிறது வர்ணம் சொல்லி நம்மை பிரித்து மேலிருந்து ஆழ அழுத்தி புதைத்தே விட்டார்கள்.. #வர்ணா எனும் சமஸ்கிருத சொல்லின் பொருள் அடைத்துவை.. ஆம் தலித் சமூகம் அடைத்துவைக்கப்பட்டுதான் இருக்கிறது.. .. ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்துதான்.. வியாசரும் வாலிமீகியும் வந்தார்கள் அவர்கள் புராணம் பேசினார்கள்.. ஆனால் அண்ணல் அம்பேத்கர் மட்டும் தான் அறிவு பேசினார்.. சங்கரர் சொல்லியதால்தான் கீதை புனிதநூலானது இல்லையென்றால் யாருக்கும் புனிதமென்று தெரிந்திருக்காது.. அதெப்படி புனிதநூலாகும் என கேள்வியெழுப்பினார்... அரசியல்சாசனத்தில் ஒடுக்கப்பட்டவருக்காக இடஒதுக்கீட்டை தரவில்லையென இன்றைக்கு நினைக்கவே பயமாக இருக்கிறது ஒட்டுமொத்தமாக கொன்று போட்டிருப்பார்கள்.. .. இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மிக மோசமாக வேட்டையாட படுகிற சமூகமாக தலித்சமூகம் இருக்கிறது தமிழகம் கேரளம் தவிர்த்து பிற மாநிலங்களில் மிருகத்தைவிட கேவலமாக வேட்டையாடபடுகிறார்கள்.. பார்பனர்கள் தீட்டு என ஒதுக்கி வைத்ததோடு அல்லாமல் இடைசாதிகாரனையும் (சத்ரிய வைசிய) கொம்புசீவி இவர்களை பாய்ந்து பிராண்ட வைக்கிறார்கள்.. .. இவர்களுக்குள்ளும் இன்னமும் காணப்படாத ஒற்றுமையும் அதிகாரபகிர்வால் வந்த மோதலும்.. கட்சிகள் தனியாக தலித்பிரிவு/அணி என பிரித்து வைத்ததும்..அனைத்துமக்களோடு சமமாக குடியமர்த்தபடாமல் தனியாக அடைத்துவைக்கப்பட்டதும்..ஒருசிலர் முன்னேறி வந்தாலும் தங்களுக்குள்ளேயே வேலி அமைத்துக்கொள்வதும்.. தங்களை தாங்களே இழிபிறவியென தாழ்வாக எண்ணுவதும்.. திறமையிருந்தும் அதை கண்டுக்கொள்ளாத சமூகமுமே இவர்களின் வளர்ச்சிக்கு தடைகளாகும்.. .. மிக சிறந்த அறிவாளிகளை .. திறமையாளர்களை தலித் சமூகம் தந்திருக்கிறது ..(அம்பேத்கர் இளையராஜா என சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் அருகில் கூட இன்னமும் மற்றவர்கள் நெருங்கமுடியவில்லை) ஆனாலும் அடைக்கி வைக்கப்பட்டேயிருக்கிறார்கள்.. விடுதலை இந்தியாவில் இன்னமும் விடுதலைபெறாத சமூகம்.. தலித்சமூகம்.. முன்பெல்லாம் ஹரிஜன் என்று அழைக்கப்பட்டவர்கள் எங்களை அப்படி அழைக்க கூடாதென சொல்லியதால் மத்திய மாநில அரசுகள் நிறுத்திக்கொண்டது ஆனாலும்... பார்பனர்கள் இன்னும் அந்த சொல்லி பயன்படுத்துகிறார்கள்.. ஒருமுறை சங்கரராமன் புகழ் ஜெயேந்திரர் (சங்கராச்சாரியர்) தலித் என்று அழைப்பது தவறு தலித் என்றால் ஏழைகள் ஹரிஜன் என்றே அழைக்கவேண்டுமென்றார். கடவுளின் குழந்தை என்றார்.. கடவுளின் குழந்தைகள் எப்படி கடைசிக்குவருவார்கள் .. .. கூறுங்கள் தலித் தோழர்களே.. எவனும் எனக்கெடிமையில்லை எவனுக்கு நான் அடிமையில்லை.. .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment