Saturday, April 8, 2017
நாடு எங்கே போகிறது..
எங்கே போகிறது..நாடு
..
மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றதலிருந்து தொடர்ந்து அவர்களின் செயல்பாட்டில் காட்டும் திமிர்த்தனம்.. அவர்களின் உடல்மொழியில் காட்டும் அலட்சியமும் .. முற்போக்கு சிந்தனை மீதான தாக்குதலும் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது..
மிக அலட்சியமாக வரலாற்று புரட்டுகளை பதிவு செய்கிறார்கள்.. மதம் பெயரைச்சொல்லி கொலையும் கொள்ளையும் நாள்தோறும் நடந்தேறுகிறது.. ஜனநாயக மரபுகள் கேள்விக்கேட்கபடாமலேயே மீறப்படுகிறது..
அடித்தும் கொளுத்தியும் சிறுபான்மையினரும் தலித்துக்களும் வேட்டையாட படுகிறார்கள்..
..
முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் கொலைசெய்யபடுகிறார்கள் மிரட்டபடுகிறார்கள்.. இதோ ஒரிசாவில் 48 மணிநேரமாய் முஸ்லிம்கள் காவிகளால் வேட்டையாடப்பட்டும் எந்த ஊடகங்களையும் செய்திவெளியிடாமல் செய்து காலணி ஆட்சி செய்கிறார்கள்.. சர்வாதிகாரிகள் தந்த கருத்துசுதந்தரம் கூட இப்போதில்லை..
மாட்டை விற்பவனும் திண்பவனும் அடித்தே கொல்லப்படுவான்.. கேட்டால் தேசதுரோகியாவாய்.. மாட்டை மதிக்க தெரிந்த அரசுக்கு மனிதனை நேசிக்க தெரியவில்லை. ..
..
பாஜகவின் ஆட்சி வந்தவுடன் இன்னும் ஐந்தாண்டுகளில் பார்பனர்கள் உயர்பதவிகளில் ஒட்டுமொத்தமாக அமர்ந்துவிடுவார்கள் பிறகு அவர்களை கீழிறக்க ஐம்பதாண்டுகள் தேவைப்படுமென எழுதியது உண்மையாகிறது.. எல்லா உயர்பதவிகளிலும் பார்பனர்களாகவே தெரிவு செய்யபடுகிறார்கள்.. பிற மத,ஜாதியினர் தகுதியிருந்தும் மறுக்கபடுகிற அவலம் .. தேர்தல்களில் தில்லுமுல்லு.. மாநில கட்சிகளை சிதைக்க அல்லது ஒத்தூத வைக்க முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றன.
தொலைக்காட்சிகளிலும் பார்பனர்களையே அழைத்து அறிவிற்கு பொருந்தாத பொய்களை .. நம்மீது அடித்தமர்த்துகிறார்கள்.. விவாதங்களின் மேன்மை ..சீரழிகிறது வரலாற்றை மாற்று எழுத முற்படும் அயோக்கியதனத்தை செய்ய ஒரு கும்பல் சமூகஆர்வலர்கள் என்ற முகமூடியோடு உலாவருகிறார்கள்.. பாஜகவினர் ..
..
ஜனநாயகத்தில் நேர்மை நீதி..இவையெல்லாம் பாசிச சகதிகள் அறியாதது.. மாபெரும் ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிதலைவர் இல்லாமலேயே ஆட்சி நடத்துகிற பாஜக.. பலவீனமாய் காட்சிதரும் எதிர்க்கட்சிகள்.. பார்ப்பன தலைமையில் காம்ரேட்கள்.. இவையெல்லாம் ஆர்எஸ்எஸின் நீண்டகால திட்டத்திற்கு கிடைத்த வெற்றி..ஆனால் மக்களுக்கு கிடைத்த மாபெரும் தோல்வி.. இதே போன்று தொடர்ந்து காவிகள் செயல்படுவார்களாயின்.. மிகப்பெரிய அடியை மக்கள் தருவார்கள்..எழுந்திருக்கவே முடியாதவாறு..
..
#காலம்_பதில்தரும்..
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment