Wednesday, April 5, 2017

ச.ம.ஸ்டாலின்..சமஸ்

ச.ம.ஸ்டாலின் சமஸ் கட்டுரை படித்தீரா என்றார்..நண்பர் சிரிப்போடு.. கொஞ்சம் கவனம் இடுப்பில் கத்தியை சொருகிறார் என்றேன் நான்.. .. திராவிடத்திற்கு பதில் தமிழ் என்று ஆரம்பிக்கும் போதே அவர் யாரின் ஊதுகோலாக பேசவருகிறார் என்பது புரியாமல் இல்லை.. பிராமணர் எதிர்ப்பு கோசம் போட்ட பெரியாரே 100% விழுக்காடு இடஒதுக்கீட்டில் பிராமணர்களுக்கு 3% விழுக்காடு வேண்டுமென்றார்..என்றும் நீதிக்கட்சி ஆட்சியில் தெலுங்கு நியோகி பிராமணர்கள் 40 பேர் அதிகாரத்தில் இருந்தனர் ஆனால் திராவிட கட்சி வந்தபிறகு பிராமணர்கள் புறக்கணிக்கப்பட்டதாக / வெளியேறியதாக கண்ணீர் வடிக்கிறார்.. கூடவே.. இடைசாதியை துணைக்கழைத்து.. தலித்களையும் இஸ்லாமியர்களையும் அரவணைக்கும் நேரம் வந்துவிட்டது.. என்று புலம்பியிருக்கிறார்.. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தான் பார்பனர் இது அநீதி இல்லையா என தான் வாங்கும் சம்பளத்திற்கு விசுவாசமாக இருக்கிறார்.. .. முதலில் சமஸ் போன்றவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.. நூறு விழுக்காடு இடஒதுக்கீடு வந்தால் பார்பனர்களுக்கு 3% விழுக்காடு கொடுப்பது தான் சரி என்றுதான் சொன்னார் பெரியார்..ஆனால் நெஞ்சை தொட்டு சொல்லட்டும் இன்று வரை உயர்பதவிகளில் 54% சதவிதிகம் வரை பார்பனர்கள் ஆக்ரமித்திருக்கிறார்கள் அவையெல்லாம் யாருக்கு வழங்கப்படவேண்டிய இடங்கள்.. நூற்றாண்டு பின்னிட்டும்.. அதிகாரத்தில் நேரடியாக இல்லை (ஜெயா தவிர்த்து) என்பதை ஆனால் மறைமுகமாக பார்பனர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அறியாதவரா.. சமஸ்.. திராவிடத்தை நீர்த்துபோக செய்ய ராஜாஜி காலத்திலேயே நிறைய #கோடாரிகளை பார்த்துவிட்டோம்.... .. சமீபகாலமாக நாங்களும் திராவிடர்கள் தான் என புவியியல் Geography நாங்களும் இங்குதான் வசிக்கிறோம் என்று ராகவன் போன்ற பார்பனர்கள் பேச முற்ப்பட்டிருப்பதை கவனித்தில் கொண்டால் புரியும்.. வசிப்பிடத்தை மட்டுமே கொண்டு வரையறுக்க முடியாதென்பதும் இனம் சார்ந்தும்..அவர்களின் பழக்கவழக்க பண்பாட்டு கலாச்சாரத்தையும் கணக்கில் கொள்ளவேண்டுமென்று அறியாதவரா.. இந்த கீழ்தஞ்சை கள்ளர் இன பெருமகன் சமஸ்.. .. இந்துத்துவ கொள்கைகளை வளர்த்தெடுப்பதில் சங்பரிவாரைவிட வஹாபிகள் (முஸ்லிம்களில் ஒரு பிரிவினர்) முனைப்போடு செயல்படுகிறார்கள் என்கிறார் அவரது வாதத்தை எளிதில் கடந்து செல்ல முடியாதுதான்.. மற்றபடி அவரின் ஒட்டுமொத்தமாக பார்பனர்களுக்கு வக்காலத்து வாங்கவே அதிகம் முயன்று தோற்று இருக்கிறார்.. .. ச.ம.ஸ்டாலின் அவர்களுக்கு தங்களைப்போல் நிறையபேரை கடந்துதான் வந்திருக்கிறோம்.. #திராவிடம்_அஞ்சாது_தோழனே.. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment